பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மறுபடியும் தன் சர்ச்சை பேச்சில் சிக்கிவிட்டார் திரிபுரா முதல்வர்

மறுபடியும் தன் சர்ச்சை பேச்சில் சிக்கிவிட்டார் திரிபுரா முதல்வர் இவரையும் மதித்து தாகூர் விழாவில் பேச அழைத்திருக்கின்றார்கள் மனிதர் சென்று என்ன சொல்லியிருக்கின்றார் என்றால் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக தன் நோபல் பரிசையே திரும்ப கொடுத்தார் தாகூர் என அளந்துவிட்டிருக்கின்றார் தாகூர் நோபல் பரிசை கொடுக்கவில்லை, ஜாலியன் வாலாபாக் படுகொலையினை மறைக்க தாகூருக்கு வீரகவிஞன் எனும் பட்டம் கொடுக்க முயன்றபொழுது அதை மறுத்தார் காரணம் வாங்கியிருந்தால் வீரவணக்கம் செலுத்தும் நிலை வந்திருக்கும் இதனால் அவர் அந்த விருதை […]

அணுகுண்டை போக்ரானில் சோதித்தது மே 11ம் நாள்

  பாஜக அப்பொழுது ஆட்சிக்கு வந்திருந்தது, பெரும் ஆரவாரத்தோடும் , கடும் எதிர்ப்பார்ப்போடும் ஆட்சிக்கு வந்தார்கள் வாஜ்பாய் பிரதமராய் இருந்தார், கூட்டணி ஆட்சி என்றாலும் இதே விளம்பர அழிச்சாட்டியத்திற்கு குறைவில்லை நாங்கள் பாகிஸ்தானை என்ன செய்யபோகின்றோம் தெரியுமா? என அணுகுண்டை போக்ரானில் சோதித்தார்கள் இதே மே 11ம் நாள் என்னாயிற்று? விளைவுகள் பயங்கரமானவை, கொள்ளிகட்டையினை எடுத்து தலையில் சொரிந்தது போலாயிற்று அதாவது இந்தியா 1974லே அணுகுண்டை வெடிக்க செய்து தன்னை அணுசக்தி நாடாக காட்டிற்று, அப்பொழுது சோவியத் […]

காவேரியாவது மண்ணாவது?

கர்நாடக தேர்தலை நாடே எதிர்பார்க்கின்றது, விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமான தேர்தல் இது மோடி அரசின் ஆட்சியினை எடைபோடும் தேர்தலும் இதுதான் பாஜக, காங்கிரஸ் இருவருக்குமே வாழ்வா சாவா போராட்டம், இந்த தேவகவுடா கோஷ்டியும் தாங்கள் இருப்பதை காட்டியே தீரவேண்டும் இதனால் கடும் போட்டி, பணம் முதல் எல்லா வித வியூகமும் களை கட்டுகின்றன‌ இந்தியா முழுக்க யார் வெல்வார்? என எதிர்பார்க்க,தமிழக கட்சிகளும் எதிர்பார்க்கின்றன? எதற்கு? யார் வென்றாலும் அவர்களுக்கே நாடாளுமன்ற தேர்தலிலும் […]

கன்னட கருத்துகணிப்புகள் காங்கிரசுக்கு சாதகம்

4 ஆண்டுகள் ஆண்டாயிற்று, இன்னும் தங்கள் சாதனையினை சொல்லாமல் ராகுலையும் காங்கிரசையும் மோடி சீண்டிகொண்டே இருப்பதில் பலருக்கு எரிச்சல் முக்கியமாக சிவசேனா இதில் கடும் அதிருப்தியில் இருக்கின்றது ஏன் ராகுலுக்கு அகில இந்திய அளவில் அனுதாபம் தேடி வளர்த்துவிடுகின்றீர்கள்? அவருக்கான பெரும் கூட்டம் கூடியாயிற்று எப்படி சமாளிக்க போகின்றீர்கள் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தாயிற்று மோடி கோஷ்டியோ எதையும் காதில் வாங்காமல் பைத்தியம் பிடித்த குரங்கிற்கு தேள்கொட்டிய கதையாக ராகுலையே சாடிகொண்டிருக்கின்றது கன்னட கருத்துகணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக திரும்பிகொண்டிருக்கின்றது […]

அய்யா இப்படி டீ குடிக்கிறதோட நிறுத்திக்குவோம்

“அய்யா இப்படி டீ குடிக்கிறதோட நிறுத்திக்குவோம் இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் பிடிக்கும் கும்பலென‌ சிலரை அடிச்சே கொல்றாங்களாம். நாம நாடுபிடிக்குற கும்பல், அப்போ மக்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்? மனநோயாளிகளுக்கே அப்படி அடின்னா, அதை விட மிக மோசமான‌ நம்ம நிலை எப்படி இருக்கும்? முடி கூட மிஞ்சாது அதனால் இப்படியே திரும்பிவிடுவோம் சரியா?”  

குஷ்பு வந்தாச்சு

  முன்பெல்லாம் இந்த புராணங்களை படிக்கும்பொழுது உண்ணாமல் தியானம், உறங்காமல் தியானம், தன்னை சுற்றி எறும்பு புற்றுவளர்க்க்கும் வரை தவம் என்றேல்லாம் படிக்கும் பொழுது பகுத்தறிவு உதித்து இதெல்லாம் கட்டுகதை என சொல்ல தோன்றிற்று ஆனால் விடுமுறையில் குஷ்பு படம் பார்த்தால் அதெல்லாம் சாத்தியம் என்றே தோன்றுகின்றது தலைவி படம் தொடங்கிவிட்டால் உணவு வேண்டாம், நீர் வேண்டாம், சுவாசம் வேண்டாம் என ஆழ்நிலை தியானத்தில் இறங்க முடிகின்றது வாட் எ கேர்ள்..ன்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் தலைவி படத்தில் […]

ஈரான் தான் பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டது

அமெரிக்கா தன் ஈரானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை தொடர்ந்து பல விஷயங்கள் வெடிக்கின்றன‌ இதுவரை இஸ்ரேலை நேரடியாக தாக்காத ஈரானிய ஏவுகனைகள் இன்று இஸ்ரேல் சிரிய எல்லையினை தாக்கி இருக்கின்றன‌ அதாகபட்டது நமது தலைகாவேரி குடகு பகுதி பொன்றது சிரியாவின் கோலன் குன்றுகள், இஸ்ரேலின் நீர் ஆதாரமான ஜோர்டான் ஆறு அங்கிருந்துதான் வருகின்றது நிச்சயம் பின்னொருநாளில் சிரியா அதனை முடக்கும் என நீனைத்த இஸ்ரேல் அந்த மோஷே தயான் காலத்திலே அதை ஆக்கிரமித்துகொண்டது அது சிரிய பகுதி […]

நிர்மலா தேவி விசாரணை அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை

நிர்மலா தேவி விசாரணை அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை இந்தியாவில் எந்த கமிஷனுமே முடிவு சொல்லாது, மிக சில கமிஷன்களே சொல்லும் இந்த கமிஷன் அறிக்கை வெளியிட கூடாது என்பதில் பலர் தீவிரமாக இருப்பது புரிகின்றது இது என்னவகை தீர்ப்பு என்பதே தெரியவில்லை , சந்தாணம் தன் அறிக்கையினை கவர்னரிடம் மட்டும் தெரிவிக்க வேண்டுமாம், பத்திரிகைக்கு தர கூடாதாம். இது என்ன கவர்னர் வீட்டு தனியார் டிடெக்டிவ் ரிப்போர்ட்டா? பெரும் மர்மம் இருப்பது புரிகின்றது ஆனானபட்ட ராஜிவ் கொலை […]

பாகபிரிவினை தகறாரோ இருக்குமோ?

என்ன இவர்? ரஜினியால் வாழ்ந்தது லதா, அவரின் தம்பி ராகவேந்தர் அப்படியே அனிருத் அதன் பின் இவர், அந்த சவுந்தர்யா கணவர் இப்படி ரஜினியால் வாழ்வுபெற்றவர்கள் இவர்கள்தான், மற்றவர்களுக்கு வாடகை கூட கிடைக்காது ஆக இவர்களுக்குள் ஏதோ சண்டை என்பதை இப்படியா பொதுவெளியில் சொல்வார் பாகபிரிவினை தகறாரோ இருக்குமோ? ஒரு மாதிரி மனிதர் போலிருக்கின்றது. அம்மா ஐஸ்வர்யா குடும்ப மானத்தை வாங்கும் இந்த நபர் வாயினை மூட சொல்ல கூடாதா?  

அம்மா வழக்குல 100 கோடி அபராதம் கட்டணுமாமே, அதையும் நாமே கட்டிருவோமா?

பங்காளி, அம்மாவுக்கு மணிமண்டபம் கட்டுரோம் சரி. அம்மா வழக்குல 100 கோடி அபராதம் கட்டணுமாமே, அதையும் நாமே கட்டிருவோமா? பங்காளி வேணாம், வேணும்ணா சசிகலா கும்பல் கட்டட்டும்னு திருப்பி விடுவோம் ஆமா பங்காளி அதுவும் சரிதான் பங்காளி, வழக்கமா கலைஞர், ஜெயா ஆட்சியில் ஏதும் சர்ச்சை என்றால் “ஏ ராஜினாமா செய்” என்பார்கள், நமக்கு ஏன் ஒருவரும் சொல்லவில்லை அவர்கள் ஆட்சி இழந்தால் மறுபடியும் ஆட்சி அமைக்கும் பலம் இருந்தது, நமக்கு அப்படியா? ஆமா பங்காளி, ராமன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications