பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராஜஸ்தானில் கடும் மணல் புயல்

ராஜஸ்தானில் கடும் மணல் புயல் வீசுகின்றது, இது அண்டை மாநிலங்களில் எல்லாம் கடும் சேதத்தை ஏற்படுத்தியாயிற்று 100 பேருக்கு மேல் பலி என்கின்றார்கள். அரபு நாட்டு பாலைவனங்களில் அடிக்கடி கோரதாண்டவம் ஆடும் இப்புயல் என்னமோ ராஜஸ்தான் பக்கம் வந்திருக்கின்றது அரேபியர் அனுபவசாலிகள், அவ்வளவு அனுபவமில்லா வட இந்திய‌ மக்கள் சிக்கிகொண்டார்கள். இந்த ராஜஸ்தானில்தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத செல்ல வேண்டுமாம். என்ன செய்யலாம்? எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் போன்றோர் கொண்ட குழுவினை […]

இன்று தியாகராஜ பாகவதரின் பிறந்த நாள்

உலகில் முதலில் கட்டபட்ட அணைகளில் எகிப்து அணைகளும், கல்லணையும் குறிப்பிடதக்கவை இருநாடுகளிலுமே அணையால் விவசாயம் செழித்து கலைகள் வளர தொடங்கின , சிந்தனை பெருகியது. சிந்தனை எப்பொழுது பெருகும்? பசி ஒழிந்து கவலை மறந்தாலொழிய சிந்தனை பெருகாது இங்கு பெருகிற்று இதனால்தான் பிரமீடும், தஞ்சை பெரிய கோவிலும் அதிசயமாக இன்றும் நிற்கின்றன. அந்த அறிவு அப்பொழுதே கிடைத்திருக்கின்றது அப்படிபட்ட சோழநாட்டில் முத்தமிழும் செழித்தது. அது காவேரி கரையில் இசைதமிழாக‌ பாடபட்டது, நாடகங்களிலும் பாடபட்டது காவேரி ஆற்றங்கரையில் நாடகதமிழின் […]

இன்று திப்புவின் நினைவுநாள்.. வீர வணக்கம்

இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள், பின்புதான் சென்னை பக்கம் வந்தார்கள் அப்படியாக வடக்கே இருந்து தேற்கேயும், தெற்கே இருந்து வடக்கேயும் நகர்ந்து நகர்ந்துதான் இந்தியாவினை பிடித்தார்கள் எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள், வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும். தெற்கேயும் ஆற்காடு நவாப் குடும்பசண்டையினை […]

குடியரசு தலைவர் வருகையும்.. காவேரி விவகாரமும்… அதுக்கு மேலேயும் ….

 இருநாள் பயணமாக தமிழகம் வருகின்றார் குடியரசு தலைவர், வேலூர் கல்லூரி விழா, தங்க கோவில் யாக விழா மற்றும் சென்னை பலகலைகழக 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்கின்றார் அதாவது வருவது தங்க கோவிலின் யாக விழாவிற்கு என்பதால் கூடுதலாக சில நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றார் இரு நாட்கள் பயணமாம், ஆனால் ஒரு நாளை ஏன் ஸ்ருமதி ராணிக்கு கொடுக்கவில்லை என தெரியவில்லை குடியரசு தலைவர் விருது வழங்கும் விழாவில் அவருக்கு பதிலாக விருது வழங்கிய இரானிக்கு, குடியரசு தலைவருக்கு […]

கோட்டையில் அன்புமணி கொடியேற்றுவார் : ராமதாஸ்

கோட்டையில் அன்புமணி கொடியேற்றுவார் : ராமதாஸ் ஸ்பான்சர்கள் தாங்கள் பராமரிக்கும் கோட்டையில் விளம்பரம் செய்யலாமாம் ஆக டால்மியா செங்கோட்டையினை தத்தெடுத்திருப்பது போல பாமக ஏதோ ஒரு பழம் கோட்டையினை தத்தெடுத்து கொடியேற்ற போவது புரிகின்றது.  காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது – தமிழிசை அக்கா வந்துட்டாங்க…… அக்கோவ் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு செய்வது அரசியல் என்றால் மத்திய அரசு செய்வதன் பெயர் என்ன?   தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய […]

ஆ.ராசா எழுதிய “2ஜி அவிழும் உண்மைகள்”

இந்த ஆ.ராசா வெளிவந்து “2ஜி அவிழும் உண்மைகள்” என‌ புத்தகம் எல்லாம் எழுதியிருக்கின்றாராம். நீதிமன்றமே இவர் குற்றவாளி இல்லை என சொன்னபின் இவர் எழுத என்ன உண்டு? நீதிபதியின் தீர்ப்பே ஒரு புத்தகம்தானே ஏதோ காந்தியும், நேருவும் சிறையில் இருந்துவந்து எழுதியது போல, அந்தமான் சிறைகொடுமைகளை தியாகிகள் எழுதியது போல எழுதி வைத்திருக்கின்றார் சரி அவர் எழுதட்டும், அவருக்கும் நெஞ்சுக்கு நீதி எழுத ஆசை வந்துவிட்டது ஆனால் வெளியீட்டு விழாவில் என்ன பேசினார் என்றால், இவர் மன்மோகனிடம் […]

நடிகர் விவேக் சொன்னது தவறா?

  தமிழகத்தில் ஒரே ஒரு அறிவாளி நடிகன் உண்டென்றால் அது விவேக் ஒருவர்தான். அவரை மட்டும்தான் சொல்லமுடியும் அவரை ரசிக்கவும், பின் தொடரவும் அறிவு வேண்டும், பல விஷயம் தெரிந்திருக்க வேண்டும் வடிவேலுவின் வெளிச்சமான‌ திறமையில் விவேக்கின் அறிவொளி மங்கலாக தெரிந்திருக்கலாமே தவிர விவேக்கின் ஞானம் கொஞ்சமல்ல‌ அவரளவு உலக அறிவும், சமூக அறிவும் வரலாறும் தெரிந்த ஒருவனை திரையுலகில் காட்டிவிடுங்கள் பார்க்கலாம் அறிவாளிகள் விமர்சிக்கபடுவது தமிழகத்தில் புதிதல்ல‌ என்னய்யா சொல்லிவிட்டார்? சமையலும், வாகனம் ஓட்டுதலும் வாழ்வின் மிக […]

சங்கத்து மகளிர் பிரிவு

தமிழக அரசின் கடனை விட மிக‌ வேகமாக வளரும் நமது குஷ்பு சங்கத்திற்கு இப்பொழுதெல்லாம் பெண் ரசிகைகளும் சேர தொடங்கியாயிற்று அலை அலையாக குவிகின்றார்கள் இப்போதைக்கு சங்கத்து மகளிர் பிரிவின் பொறுப்பாளராக Nirmala Devi என்பவர் நியமிக்கபடுகின்றார் இந்த யார்? அவராக இருக்குமோ என ஒரு சந்தேகம் உங்களில் எழலாம் இவர் அந்த பல்கலைகழக நிர்மலா தேவி அல்ல, அல்லவே அல்ல என்பதை சங்கம் அழுத்தம் திருத்தமாக சொல்லி கொள்கின்றது. அதனால் தாய்குலங்களும், மாதர் குல மாணிக்கங்களும் தயக்கமின்றி சேர்ந்து […]

பாபா ராம்தேவ் சிகிச்சைக்காக லண்டன்

ஆரோக்கியத்திற்கு என் கம்பெனி பொருளும் என் யோகாவுமே பொறுப்பு என மோடி மேல் சத்தியமாக சொல்லிகொண்டிருந்த பாபா ராம்தேவ் சிகிச்சைக்காக லண்டன் சென்றிருக்கின்றாராம் அடேய், இனி எவனாவது யோகா தினம் என குனிந்து நிமிர்ந்து உருண்டுகொண்டிருங்கள், அன்று இருக்கின்றது இப்பொழுது ஆபத்து என்னவென்றால் லண்டன் போன சாமி ஒழுங்காக வந்துவிட வேண்டும் மல்லையா, நிரவ் மோடி வரிசையில் சேர்ந்தால் என்னாகும்? நமக்கே இப்படி என்றால் வங்கிகள் மன‌ நிலை எப்படி இருக்கும்? அட மோடிக்கு எப்படி இருக்கும்? […]

அமெரிக்காவிற்கு தளம் அமைக்க பல நாடுகள் தேவைபட்டன‌

இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்காவிற்கு தளம் அமைக்க பல நாடுகள் தேவைபட்டன‌ சோவியத்தையும் இந்தியாவினையும் நெருங்கவிடாமல் இருக்க பாகிஸ்தான் அவர்களுக்கு மிகவும் தேவைபட்டது, அள்ளிகொடுத்தார்கள் இப்படி உலகெல்லாம் பல நாடுகளில் கால்பதித்தார்கள், அந்நாடுகள் அவற்றை அழகாக பயன்படுத்தின‌ இஸ்ரேல் அதில் கில்லாடி தைவானும், தென்கொரியாவும் , ஜப்பானும் அமெரிக்க உதவியில் எழும்பின. 1975க்கு பின் சீனாவும் அதனை பயன்படுத்தியது குறிப்பாக ஜப்பானிய சோனி, பானாசானிக் , யமஹா , ஹோண்டா எல்லாம் எங்கோ சென்றன‌ தென்கொரியா சாம்சுங், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications