பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஜராத்தில் 5000 விவசாயிகள் சாகும் உத்தரவு வழங்க போராட்டம்

குஜராத்தில் 5000 விவசாயிகள் சாகும் உத்தரவு வழங்க போராட்டம் : செய்தி இந்த செய்தி தமிழக மீடியாக்களில் வரவில்லை, காரணம் இப்பொழுது பினாமி ஆட்சி, பிற்காலத்தில் நேரடி ஆட்சி(!) அது இல்லாவிட்டால் இதே பினாமி ஆட்சி என முடிவில் இருக்கும் பாஜகவின் கரங்களுக்கு மீடியாக்களும் கட்டுபடுகின்றன‌ நிம்மி ஆண்டி விஷயத்திலே அது தெரிகின்றது குஜராத்தில் இந்த விவசாயிகளுக்கு என்ன சிக்கல் என்றால் , நீர் பிரச்சினை கடன் பிரச்சினை அல்ல மாறாக நிலமே பிரச்சினை அவர்களின் நிலங்களை […]

கணித மேதை ராமனுஜம் நினைவு நாள்

சீனிவாச ராமானுஜத்தின் நினைவு நாள் இன்று அவன் வரலாற்றை படியுங்கள், அப்படி ஒரு ஏழை குடும்பத்துக்காரர் அவர். சாப்பாட்டுக்கே வழி இல்லை அச்செய்தி சொல்வதென்ன? நிச்சயமாக பிராமண சூது, பிராமணன் ஆண்டான், சுரண்டினான் என்பதெல்லாம் முழுக்க ஏற்கும் விஷயம் அல்ல, அன்றே ஏழை பிராமணரும் ஏராளம் இருந்திருக்கின்றார்கள் ராமானுஜத்தின் அறிவு அவருக்கு ஏற்றம் கொடுத்தது, அந்த திறமை அவரை வாழவைத்தது. அதே நேரம் பிராமண சமூகத்து கட்டுபெட்டிதனமும் அவரை இறுதிகாலத்தில் பாடாய் படுத்தியிருகின்றது இந்த நாளில் வரும் […]

அபாயம் நிறைந்த அணுவுலைகள்

அதுவரை அணுவினை அழிவு குண்டாக அல்ல, ஆக்கசக்திக்கும் நம்பலாம் என உலகம் நம்பிகொண்டிருந்தது, இப்படி அமைதிக்கான பெரும் சக்தியாக அணுசக்தி இருந்தால் நல்லது என்றும் சில நாடுகள் சொல்லிகொண்டன‌ எல்லாம் இந்த ஏப்ரல் 26, 1986 வரை மட்டும்தான் இன்று ஜென்ம விரோதிகளாக‌ அடித்துகொள்ளும் ரஷ்யாவும் உக்ரைனும், அன்று சோவியத் யூனியன் , பழைய ரங்கராவின் படங்களின் குடும்பம் போல‌ மகா ஒற்றுமை, பொதுவுடமை அல்லது பண்ணைமுறை ஏதோ ஒன்றில் இணைந்திருந்தது. அன்று அவர்கள் பெரும் வல்லரசு, […]

சாமிகள் சூழ் உலகிது

சாமிகள் சூழ் உலகிது இப்பொழுதெல்லாம் எடப்பாடி சாமி என்றொரு சாமி எல்லாம் வந்திருக்கின்றதாம், அதையும் சிலர் வணங்குகின்றார்களாம் நமக்கு எக்காலமும், முக்காலமும் ஒரே சாமி இந்த சாமி, அதனை கும்பிட்டுவிட்டு நாளை தொடங்கலாம் சங்கத்தார் அனைவரும், சங்கத்தின் சட்டவிதிகளுக்கு கட்டுபட்டு வணங்கியாக வேண்டும்.    

ஒரு பெண்கவிஞர் கிடைத்த நாள் இன்று..

மனுஷ்யபுத்திரர்க்கு இன்னும் பிரபலமாக என்ன செய்யலாம் என யோசித்திருகின்றார் மோடியினை பற்றி அவர் என்ன எழுதினாலும் பதில் இல்லை, மோடிக்கு தமிழ் தெரியாது தெரிந்தாலும் இவர் கவிதை புரியாது யாரை பற்றி எழுதினாலும் கண்டுகொள்ளவில்லை இதனால் மனிதர் “கருத்து கஸ்தூரி” பக்கம் சாடிவிட்டார், அந்த அம்மணியும் மனுஷ்யபுத்திரன் போல யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லையே என வருத்தத்தில் இருந்ததால் கடும் உற்சாகம் இருவரும் கவிதையாக எழுதி தள்ளுகின்றார்கள், ஆச்சரியமாக கஸ்தூரியின் கவிதை மனுஷ்யபுத்திரன் கவிதையினை விட நன்றாக இருப்பதாக […]

பல குட்டிசாத்தான்கள் தறிகெட்டு ஓடுகின்றன

மாந்ரீக தொடர்புடையவர்களை கேட்டால் சில விஷயங்களை சொல்வார்கள், அதாவது மந்திரவாதி சில குட்டிசாத்தானை வைத்து விளையாடுவானாம், அவற்றிற்கு வேலை கொடுத்து கொண்டே இருப்பானாம் மந்திரவாதி திடீரென செத்துவிட்டால் குட்டி சாத்தான்களுக்கு வேலை கொடுக்க ஆளிருக்காது. குட்டி சாத்தான்கள் சும்மா இருந்து பழக்கபட்டவை அல்ல என்பதால் அது பாட்டுக்கு எங்காவது சென்று அடிவாங்குமாம், சில நேரம் அதுகளே அவற்றிற்குள் முட்டிகொள்ளுமாம் இப்படி அரசியலில் ஏகபட்ட குட்டிசாத்தான்களை வைத்திருந்தவர் நடராசனும் சசிகலாவும். மந்திரக்கோல் ஜெயா மரித்ததும், இன்னொரு மந்திரவாதி நடராசன் […]

காவேரிக்காக உண்ணாவிரதம் இருக்க தொடங்கிவிட்டார் சரத் குமார்

சென்னை மாநகரத்து மக்கள் தயவு செய்து கவனமாக இருக்கவும், சென்னை அதிர்ந்து உலகமே திரும்பி பார்த்து, டிரம்பே ஓடிவந்து சமரசம் பேசும் பெரும் அச்சுறுத்தல் ஒன்று தொடங்கிவிட்டது மத்திய அரசு இனி அவசர ஆலோசனையில் ஈடுபடலாம், முப்படைகளும் தயாராகலாம் ஆம், சரத்குமார் தன் மாபெரும் கட்சியினருடன் காவேரிக்காக உண்ணாவிரதம் இருக்க தொடங்கிவிட்டார் முன்பு காவேரிக்காக டெல்லி வரை நடப்பேன் என்றார், பின் டெல்லி வெகு தொலைவு, நீர் சென்று சேர்வதற்குள் மோடி அரசே முடிந்து தேர்தல் வந்துவிடும் […]

பத்திரிகை பணி எளிய மக்களின் மேல் மட்டும்தான்

அழகி, உல்லாசம், இன்பம், செக்ஸ் டாக்டர், வெறி என புது புது தமிழ்வார்த்தைகளை எல்லாம் தமிழருக்கு கொடுத்தது தினதந்தி ஆனால் பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் அதன் வழக்கமான அடைமொழிகளை எல்லாம் காணவே இல்லை இதுவே வேறு இடத்தில் நடந்தால் புலனாய்வு, பொயாய்வு என இட்டுகட்டி , ஸ்கூப் அடிக்கும் பத்திரிகைகள் எல்லாம் ராமதாஸ் பகிரங்கமாக நிர்மலா ஏன் பல்கலை கழக விழாவில் விலை உயர்ந்த சூட் அறையில் தங்கினார் என கேட்ட பின்னும் அமைதி காக்கின்றன‌. இதுவே […]

பிரேமானந்தா வரிசையில் ஆஸ்ரம் பாபு என்பவரும் குற்றவாளி என தீர்ப்பாயிற்று

இந்த தேசத்தில் சாமியார்கள் மீதான சர்ச்சைகளுக்கு மட்டும் ஒழுங்காக தீர்ப்பளித்துவிடுகின்றன நீதிமன்றங்கள் பிரேமானந்தா வரிசையில் ஆஸ்ரம் பாபு என்பவரும் குற்றவாளி என தீர்ப்பாயிற்று நித்தியும் சில சர்ச்சையில் சிக்கி இருக்கவேண்டியவர், ஆனால் வீடியோ லீக் ஆனதில் சுதாரித்துகொண்டு சிரித்துகொண்டே இருக்கின்றார் இப்படி பலர் சாமிகளாய் வந்துவிட்டு கொலை செய்து சிக்குகின்றனர், ஆனால் கொலை செய்துவிட்டு சாமியாரானவர்கள் சிக்குவதே இல்லை அதுதான் அனுபவம் என்பது.  

சச்சினிடம் திறமையும் இருந்தது….

சச்சின் மேல் ஆயிரம் விமர்சனங்களை வையுங்கள், கிரிக்கெட் போர்டு காத்தது, சரத்பவார் மராட்டியன் என்பதற்காக விட்டுகொடுக்கவில்லை என என்னமும் சொல்லுங்கள், சொல்ல நிறைய இருக்கின்றது ஆனால் அவரிடம் திறமையும் இருந்தது. அந்த கிரிக்கெட் காலங்கள் இப்பொழுது இருப்பது போல் பல விதிகள் தளர்ந்தது அல்ல, அன்றிருந்த ஆட்டகாரர்களும் சாமான்யம் அல்ல‌ வால்ஷ், அம்ப்ரோஸ் என பெரும் ஜாம்பாவன்களிடையே குழந்தை போல வந்து நின்ற அவரை மறக்க முடியாது, போராடினார் பெரும் சண்டமாருதங்களை எல்லாம் அசால்ட்டாக சமாளித்தார், அன்று […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications