பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உதயநிதி இதிலிருந்து பாடம் படித்தால் அவருக்கு நல்லது

திமுகவில் ஒரு சராசரி நடிகன் ஓவர் பில்டப் கொடுத்து பிம்பமாக உருவாக்கபட்டால், அவனை சிலர் முருங்கை மரத்தின் மீது ஏற்றிவிட்டால் என்னாகும் என்பதகு உதயநிதிக்கு சாட்சியாக அவரது பெரியப்பா மு.க முத்துவே இருக்கின்றார் வேறு எங்கும் உதயநிதி உதாரணம் தேடி அலையவேண்டியதில்லை, அது அவர் குடும்பத்திலே இருக்கின்றது. முக முத்து சராசரி நடிகனாக அதைவிட நல்ல பாடகனாக சினிமா உலகில் நின்றிருப்பார். ஆனால் பெரும் பிம்பங்களும் அவருக்கு திடீரென எழும்பிய ரசிகர் மன்றமே திமுகவின் பல சிக்கல்களுக்கு […]

இரண்டாம் முரசொலிமாறனா நாம வரக்கூடாதாம்

“பாத்தியாண்ணே… இரண்டாம் , மூன்றாம் கலைஞர் வரலமாம், ஆனால் இரண்டாம் முரசொலிமாறனா நாம வரக்கூடாதாம் அந்த கட்சிக்கு நம்ம அப்பா உழைக்கலையாண்ணே? அழுகையா வருதுண்ணே.. இதெல்லாம் என்ன நியாயம்ணே???”

நான் ஏன் குஷ்புவினை ஆதரிக்கின்றேன்?

யாரோ மாரிதாஸாம் “நான் ஏன் மோடியினை ஆதரிக்கின்றேன்?” என புத்தகம் எழுதி ரஜினியிடம் கொடுத்தாராம் , இப்படி பல செய்திகள் வருகின்றன. உடனே அந்த கோஷ்டி மோடியின் பெருமை பாரீர் என குதிக்கின்றன‌ இந்த புத்தகத்தை எழுத வேண்டியது அம்பானி , மல்லையா இன்னபிற தொழிலதிபர்கள் எழுதவேண்டிய தேவையும், தகுதியும் அவர்களுக்குத்தான் இருக்கின்றது, பின் ஏன் மாரிதாஸ் எழுதினார். ஆக யாரும் எதுவும் எழுதலாம் போல‌ இனி சங்கம் பொறுக்குமா? “நான் ஏன் குஷ்புவினை ஆதரிக்கின்றேன்?” என்ற […]

தினமலர் பத்திரிகை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊதுகுழல்

தினமலர் பத்திரிகை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊதுகுழல் என்பது மறுபடியும் நிரூபிக்கபட்டாயிற்று குரங்கணி விபத்தில் உண்மையில் தீவிரமாக செயல்பட்டது மாவட்ட கலெக்டர். அதை போன்றே அரசு மருத்துவகுழுவும் மிக தீவிரமாக பணியாற்றியது மதுரை ராஜாஜி மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் தீவிர பணியாற்றினர், அவர்கள் சேவை வாழ்த்துகுரியது ஆனால் தினமலர் கண்ணுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மட்டும் தெரிந்திருக்கின்றார்கள், தீ பிடித்ததும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தீயில் குதித்து குதித்து காப்பாற்றினார்களாம் நல்ல வேளையாக மோடி விமானத்தை எடுத்துகொள்ளுங்கள் என சொன்னவுடன் ஆர்.எஸ்.எஸ் […]

நாளை (15-3-18) தமிழக பட்ஜெட்

நாளை தமிழக பட்ஜெட் என்கின்றார்கள் 2016ல் 3லட்சம் கோடி எனவும், 2017ல் லட்சம் கோடியாகவும் இருந்த தமிழக அரசின் கடன் 2018ல் எத்தனை கோடி கூடியிருக்கின்றது என்பது இனிதான் தெரியும், நிச்சயம் குறையாது மாநில அரசு கடும் நிதிசிக்கலில் இருக்கின்றது என்கின்றார்கள், ஜிஎஸ்டி சிக்கல் மத்திய அரசின் நிதி குறைப்பு என அது தடுமாறுகின்றது. (பதவியினை காப்பாற்ற மத்திய அரசுக்கு குனிந்து நிற்பது. எம்.எல்.ஏ சம்பளத்தை உயர்த்தி கட்சி எம்.எல்.ஏக்களை குளிரவைப்பது என அரசு செய்த காரியங்களால் […]

மக்கள் நீதி மய்யத்திற்கும் தமிழிசைக்கும் மோதல் முற்றுகின்றது

மக்கள் நீதி மய்யத்திற்கும் தமிழிசைக்கும் மோதல் முற்றுகின்றது அதாவது மக்கள் நீதி மய்ய இணையதளத்தில் தமிழிசை இணைந்துவிட்டார் என கமல் தரப்பு சொல்கின்றது. இது மகிழவேண்டிய விஷயமா? தமிழிசை தங்களோடு இணைந்தால் அதனை வெளியில் சொல்வார்களா? கமலஹாசன் கட்சி சுத்த வெவஸ்தை கெட்ட கட்சிபோல் இருகின்றது ஆனால் தமிழிசையோ இல்லை அவர்கள்தான் அழைப்பு விடுத்தார்கள்,நான் முறைத்துவிட்டேன் என சொல்லிகொண்டிருக்கின்றார் ஆக என்ன நடந்திருக்கலாம் மக்கள் நீதி மய்யத்தை நோட்டம் விட அதன் இணைய தளத்திற்கு தமிழிசை சென்றிருக்கலாம், […]

ரஷ்யா உண்மையில் உலகை மிரட்டத்தான் செய்கின்றது

ரஷ்யாவில் தனக்காக உளவு பார்த்தவர்களை எல்லாம் லண்டனில் மிக நன்றாக கவனித்துகொண்டிருந்தது பிரிட்டன் அவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக பரலோகம் சென்றுகொண்டே இருக்கின்றனர், உபயம் ரஷ்யா இப்பொழுது நேற்று புட்டீனை எதிர்த்த ஒருவர், லண்டனில் இருந்து ரஷ்யாவில் குழப்பம் விளைவித்த ஒருவரும் கொல்லபட்டிருக்கின்றார் உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றான சி.ஐ.ஏ ஸ்தானத்தில் இருக்கும் எம் ஐ 16 எனும் பிரிட்டனின் உளவு அமைப்பின் கண்காணிப்பினை மீறி அடித்து அசத்துகின்றது ரஷ்யா பொதுவாக எல்லா உளவு […]

இன்று மார்க்ஸின் நினைவு நாள்

உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள் அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி […]

சாப்பாடு சரியில்லை என புலம்புகின்றார் கார்த்தி சிதம்பரம்

ஏதோ தான் சுற்றுலா சென்றிருப்பது போலவும் , அங்கு விருந்து சரியில்லை என புலம்புவது போலவும் சாப்பாடு சரியில்லை என புலம்புகின்றார் கார்த்தி சிதம்பரம் செட்டிநாட்டு சமையல் எல்லா இடத்திலுமா கிடைக்கும்? மனிதர் மீது குற்றம் சாட்டபட்டிருக்கின்றது, அதனை சட்டபடி சந்தித்து வெளிவரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார் அவர் இது அவருக்கு மகா சிரமாமான காலம், இப்பொழுது தன் மீதான குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர, செட்டிநாட்டு சாப்பாடு கிடைக்கவில்லை என புலம்புவது சிறுபிள்ளைதனமும் வேடிக்கையுமானது ஒரு […]

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி அல்ல : ரஜினி

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி அல்ல, கட்சியே இன்னும் தொடங்கவில்லை அதனால் எல்லா விஷயங்களிலும் கருத்து சொல்ல முடியாது : ரஜினி அதானே பொண்ணு பார்த்த பின்புதானே பெண்ணின் உயரம், அழகு பற்றி எல்லாம் பேசவேண்டும் இன்னும் பெண்ணே பிறக்கவில்லையே, இனிதான் பெண் பிறந்து வளர்ந்து, பருவமடைந்து அதன் பின் இவர் பார்த்து அழைப்பிதழ் அடிக்க எவ்வளவு காலமாகும், இது தெரியாமல் கருத்து கேட்கின்றார்களாம். கட்சி தொடங்க போகிறேன் என்றார், அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றார், ராமசந்திரன் ஆட்சியினை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications