பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குரங்கணி விவகாரம் : சென்னை டிரெக்கிங் கிளப்பின் பீட்டர்

இந்த குரங்கணி விவகாரம் தொடர்பாக சி.டி.சி அமைப்பின் முக்கியமான நபர் பீட்டர் எனும் பெல்ஜியம் மீது ஆளாளுக்கு ஆட்காட்டி விரலை நீட்டியாயிற்று இந்த பீட்டர் சில ஆண்டுகளுக்கு முன்பே கவனிக்கபட்டார் . வழக்கமாக வெள்ளையர் வந்து மாமல்லபுரத்தில் போட்டோ எடுத்து கேரள போட் ஹவுசில் மல்லாக்க கிடப்பது போல் அல்ல பீட்டர், இங்கு ஏதோ சில நல்ல காரியங்களை செய்ய நினைத்தவர், அவர் இந்தியா வந்து 15 ஆண்டுகள் இருக்கலாம் ஆரம்பத்தில் மலையேற்றத்தை செய்தவர்தான், சி.டி.சி எனும் […]

அந்த சங்கருக்கு ஆழ்ந்த அஞ்சலி

  வீரமும் காதலும் நிரம்பியது தமிழன் வாழ்வு. சங்க இலக்கியம் எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன‌ இந்திய கலாச்சாரம் காதலுக்கு எதிரானதா? நிச்சயம் இல்லை பண்டைய இந்தியா காதலை வாழ்வின் ஒரு அங்கமாகவே வைத்திருந்தது அதனால்தான் அதன் அழியா காவியங்களில் எல்லாம் காதலுகொரு இடமிருந்தது, அது ராமாயணம் ஆனாலும் சரி, சாகுந்தலை போன்ற காவியமானாலும் சரி. காதல் அதில் கலந்திருந்தது மீராவின் காதலும், ஆண்டாளின் காதலும் , பக்தி மிஞ்சிய விஷயங்கள் என‌ கருதபட்டது. சந்தேகமிருப்பின் வைரமுத்துவிடமோ ஜீயரிடமோ […]

திருச்சி சம்பவத்தில் அந்த பைக்கில் சென்ற நபர் மீதும் தவறு உண்டு

திருச்சி சம்பவத்தில் அந்த பைக்கில் சென்ற நபர் மீதும் தவறு உண்டு என சொன்னால் ஆளாளுக்கு பொங்கினார்கள் அப்பெண் கர்பிணி இல்லை என்ற தகவல் வந்திருக்கின்றது. கர்ப்பமாக என மனைவி தன்னிடம் சொன்னதாக அந்த நபர் சொல்லியிருக்கின்றார், இனி அப்பெண் வந்து சொல்லமுடியாது 3 மாத கர்பத்தை எங்கு உறுதிபடுத்தினார்கள்? எந்த மருத்துவமனை என கேட்டால் பதில் இல்லை. இந்த மருத்துவ அறிக்கையிலும் பதில் இல்லை காவலர் மிதித்து தள்ளியது ஏற்க முடியாத செயல் எனினும் ஹெல்மெட் […]

இலங்கையில் முகநூலுக்கு தடை

இலங்கையில் கண்டி கலவரம் பரவ தொடங்கியதும் அது முகநூலால் உலகம் முழுக்க நொடியில் பரவியது. இலங்கைக்கு நெருக்கடி அதிகரித்தன‌ குறிப்பாக வளைகுடா நாடுகள் கொந்தளித்தன. பாலஸ்தீன இஸ்லாமியர் மீதும்,சிரிய இஸ்லாமியர் மீதும் வராத இஸ்லாமிய பாசம் இலங்கையர் மேல் வந்தது கொஞ்சம் உண்மையும் நிறைய வதந்தியுமாய் கலவர செய்திகள் முகநூலில் வந்தன‌ இலங்கை அரசு அட்டகாசமாக முகநூலை தடை செய்தபின் கலவர செய்திகள் பரவுவது நின்றது நாங்கள் முகநூலில் இன உணர்வு புரட்சி செய்வதால் இலங்கை முகநூலை […]

உதய சூரியனை அஸ்தமனமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கின்றது

உதய சூரியனை அஸ்தமனமாக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கின்றது எல்லாம் இருக்கட்டும் , இரண்டாம் கலைஞர் யார்? அவர் என்ன கிழித்தார் என சொல்லிவிட்டு மூன்றாம் கலைஞருக்கு போஸ்டர் அடியுங்கள் தினகரன் புதிய கட்சியால் எங்களுக்கு கவலை இல்லை : ஜெயக்குமார் அதானே, தமிழகத்தை பற்றியே கொஞ்சம் கூட கவலைபடாதவர்கள் தினகரனின் புதிய கட்சியால் மட்டும் கவலைபடுவார்களா என்ன?

பெரியவர், அனுபவசாலி, கிடைத்தற்கரிய மாமனிதர் : மாணிக்கவாசகம் முத்துசாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாழ்க்கையில் ஒரு சில பெரியவர்களை பார்க்கும்பொழுது மரியாதை வரும், மிக உயரத்தில் இருந்து கொண்டு அவர்கள் வாழும் எளிய வாழ்வும், எளிதாய் பழகும் குணத்தை கண்டால் சிலிர்ப்பும் வரும் அவ்வளவு பெரியவர்கள் அமைதியாய் ஆர்பாட்டமின்றி இருக்கையில் நமக்கெல்லாம் எதற்கு ஆட்டம் என யாரோ செருப்பால் அடித்தது போல் சர்வநாடியும் ஒடுங்கும் நாமும் அப்படி வாழவேண்டும் என்ற எண்ணம் உருவாகும் அப்படிபட்ட பெரியவர்களில் ஒருவர் Manickavasagam Muthuswamy அவர்கள். எங்கள் பகுதியின் முதல் மருத்துவர் அவர்தான். தாழ்த்தபட்ட குலத்தில் இருந்து மருத்துவராக […]

எங்க இழுத்துட்டு போறாங்கண்ணு எனக்கே தெரியல்ல‌

படம் என்ன சொல்கின்றது தெரிகின்றதா? சும்மா இந்த படத்தை வெளியிடவில்லை ரஜினி. படம் குறிப்புகளை உணர்த்துகின்றது,  ரஜினி சொல்லவருவது இதுதான் “நான் விருப்பட்டு குதிரை ஏறல்ல‌ , அரசியல்ங்கிற குதிரையில என்ன ஏறவைத்து இழுத்துட்டு போறாங்க. முன்னால போறவன் யாருண்ணு உங்களுக்கே தெரியும். அவன் போக்கில இழுக்கிறான் அல்லவா, இப்படித்தான் சிலர் இரக்கமே இல்லாமல் என்னை இழுத்துட்டு போறாங்க.. விருப்பம் இல்லாம அந்த குதிரையில ஏறிபோறேன்னு இதைவிட எப்படி சொல்லமுடியும்? ரொம்ப பாவங்க நான், எங்க இழுத்துட்டு […]

தாஜ்மகால் வரிசையில் தலைவி

நிலாவினை எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் அழகு, தாஜ்மஹாலை எந்த கோணத்தில் நோக்கினாலும் அழகு அந்த நிலா, தாஜ்மகால் வரிசையில் தலைவி தோகை விரித்த மயிலாக அவர் நிற்கும் அழகு கண் கொள்ளா காட்சி. மயில் தோகை விரித்தால் மழை வரவேண்டும் அல்லவா? வங்ககடலில் புயல் ஏன் உருவானது என இப்பொழுது புரிகின்றதா? இயற்கையினையே தன் கட்டுபாட்டில் இயங்க வைப்பவர் எங்கள் தலைவி. “தேவதை கூந்தல் கருநிற நாகம்,  தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்” (அடேய் Babu Rao , […]

சசிகலா சிறையில் கம்பியூட்டர் தொழில்நுட்பமும் கற்கின்றார் : செய்தி

சிறையில் காளான் வளர்த்தல் உட்பட சில வேலைகளை செய்யும் சசிகலா கூடுதலாக கம்பியூட்டர் தொழில்நுட்பமும் கற்கின்றார் : செய்தி அரசியலில் அவர் வளர்த்த காளான்கள் போதாதா? சிறையில் சென்றும் வளர்க்க வேண்டுமா? சும்மாவே ஒருவரை கண்காணிப்பதில் கில்லாடி சசிகலா, இப்பொழுது தொழில்நுட்பமும் கற்கின்றாராம். இன்னும் 3 வருடத்தில் என்னவெல்லாம் கற்று வெளிவரபோகின்றாரோ அநேகமாக ரோபா போல் வெளிவரலாம், அதன் பின் இருக்கின்றது அதிரடி. சிறை ஒரு சுவாரஸ்யமான மர்மமான அரசியல்வாதியினை தொழில்நுட்ப அறிவோடு அனுப்பி வைக்க போகின்றது.

மராட்டிய விவசாயிகள் போராட்டம் முழுவெற்றி

மராட்டிய விவசாயிகள் போராட்டம் முழுவெற்றி பெற்றிருக்கின்றது, மும்பையில் அவர்கள் பேரணி நுழைந்தபொழுது மக்கள் பேராதரவு கொடுத்து வரவேற்றிருக்கின்றார்கள் அரசு பணிந்து அவர்களின் விவசாயகடன் , மின்சார கட்டணம் எல்லாம் ரத்து செய்திருக்கின்றது தமிழகத்தில் ஏன் விவசாயி பெரிதும் பொங்கவில்லை என்பதன் காரணம் மின் கட்டணம் இலவசம் என்பது. கலைஞர் செய்துவைத்த அட்டகாசமான திட்டம் அது. உண்மையில் விவசாயிகளுக்கு அது மிகபெரும் வரபிரசாதம் இன்றைய விவசாயி யாரும் அன்று சங்ககாலம் போல ஆறு குளத்து பாசானம் செய்யவில்லை, செய்தாலும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications