பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டிராபிக் ராமசாமியின் போராட்ட வாழ்வினை படமாக எடுக்கின்றாராம் எஸ்.ஏ சந்திரசேகர்

ஜெயலலிதா இல்லாததால் குளிர்விட்டு போனவர்களில் ரஜினி, கமல் வரிசையில் எஸ்.ஏ சந்திரசேகரும் வந்துவிட்டார். சினிமாவில் அரசியலும் புரட்சியும் பேசிவிட்டு தியேட்டருக்கு வெளியே மகனை முதல்வராக்குவது பற்றிய சிந்தனையிலே இருப்பவர் எஸ்.ஏ சந்திரசேகர், அவர் இப்பொழுது டிராபிக் ராமசாமியின் போராட்ட வாழ்வினை படமாக எடுக்கின்றாராம் அவரே டிராபிக் ராமசாமி வேடத்தில் நடிப்பாராம். அரசியல் படமென்பதால் அவருக்கு வினோத ஆசை வந்திருக்கின்றது. அதாவது அரசியலில் பிசியாக இருக்கும் நடிகர்களை நடிக்க அழைத்திருக்கின்றார் அதில் தலைவி குஷ்புவினை நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கின்றார், […]

துர்கா ஸ்டாலினின் ‘அவரும் நானும்’ நூல்

முன்பெல்லாம் திமுகவில் அண்ணா, பெரியார், திராவிடம் என நூல் வெளியிடுவார்கள் கலைஞர் தானே எழுதிய இலக்கிய‌ நூலை வெளியிடுவார், நெஞ்சுக்கு நீதி போன்றவை எழுதினாலும் அதிலும் கட்சியும் தானும் கடந்துவந்த பாதையினை ஆவணம் போல் சொல்லியிருப்பாரே தவிர சுயபுகழ்ச்சி இருக்காது அனுதினமும் முரசொலியில் எழுதிகொண்டே இருந்ததால் தனிபட்ட முறையில் அவரை பற்றி எழுத அவசியமும் இல்லை முரசொலி மாறன் போன்றவர்கள் கூட திராவிட கொள்கை புத்தகம்தான் எழுதினார்கள் இப்பொழுது திமுக மாறிவிட்டது, உதயநிதி ஸ்டாலின் கோஷ்டிகளின் அழிச்சாட்டியம் […]

காவேரி மேலாண்மை வாரியம் இப்போதைக்கு இல்லை

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க இப்போதைக்கு முடியாது என பேசியிருக்கின்றார் நிதின் கட்காரி அதுவும் சென்னையிலே பேசியிருக்கின்றார் காவேரி மேலாண்மை வாரியம் 6 வாரத்தில் அமைக்கபட வேண்டும் என்று சொல்லி கதவினை சாத்திகொண்டது உச்சநீதிமன்றம், இன்னும் 4 வாரங்களே மீதமிருக்கின்றன‌ இதில் இவர் இப்படி சொல்வது நீதிமன்ற அவமதிப்பன்றி வேறல்ல, ஒரு அமைச்சர் இப்படி சொல்வது அபத்தமான சட்ட மீறல் காவேரி விவகாரத்தில் காங்கிரஸ் ஏமாற்றியது, எதற்காக என்றால் கன்னட வாக்கு வங்கியினை இழக்க அது விரும்பவில்லை, […]

பிப்ரவரி 2018 ……

உலகம் மகா பரபரபாயிற்று டிரம்ப் எப்பொழுது பிப்ரவரி 28ம் தேதி ஆகும் என காத்துகொண்டிருக்கின்றார். புட்டீன் அணு ஆயுத பட்டனில் கைவைத்துகொண்டிருக்கின்றார் பிரிட்டனும் , பிரான்சும் கடும் ஆலோசனையில் உள்ளது, சீனாவின் ஜின்பெங் ஆலோசனை குழுவினை கூட்டியுள்ளார். வடகொரிய அதிபர் கூட ராக்கெட் சோதனையினை நிறுத்த உத்தவிட்டாயிற்று மகிந்த ராஜபக்சே முதல் நவாஸ் ஷெரிப் வரை எல்லோரும் அவரின் அந்த மகா முக்கிய முடிவினை நோக்கியே பார்த்துகொண்டிருக்கின்றார்கள், சிரியாவில் கூட சண்டை போடும் எல்லோருக்கும் மகா ஆர்வம் அந்த […]

எந்த ராக்கெட் ராஜா?

நெல்லை பகுதிகள் சாதிய கொலைகள், கலவரங்களுக்கு பெயர் பெற்றது. உண்மையில் சாதிவெறியால் கொலை நடக்குமா என்றால் இல்லை யாராவது இருவர் வியாபார விஷயமாக மோதுவார்கள், அவர்களுக்கு கூலிபடையாக சிலர் வருவர் அவர்கள் வெட்டிகொள்வது சாதிகொலை என அறியபட்டு அது கலவரமாகும் கராத்தே செல்வின், வெங்கடேஷ் பண்ணையார், முத்துலிங்கம், ஜாண் பாண்டியன், பசுபதி பாண்டியன், கட்டதுரை போன்ற பிரபல ரவுடிகள் எல்லாம் இப்படித்தான் உருவானார்கள், அவர்கள் தெரிவார்களே தவிர அவர்கள் பின்னால் இருப்பவர்கள் தெரியமாட்டார்கள் அப்படிபட்ட நெல்லையில் நேற்றும் […]

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி

ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? சந்தேகம் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி : : செய்தி அவனவன் ஸ்ரீதேவி குடித்தார் என்பதே என சொல்வதே அவரின் புகழுக்கு கேடு என சொல்லிகொண்டிருக்க சு.சாமி தன் வழக்கமான வேலையினை தொடங்கிவிட்டார் ஸ்ரீதேவிக்கு குடிபழக்கம் இல்லை என சான்றிதழ் கொடுதிருக்கின்றார் சு.சாமி, எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்டால் நான் சந்தித்தபொழுது அவர் குடித்திருக்கவில்லை என்பார் அத்தோடு விட்டால் சு.சாமி இல்லை அல்லவா? அதனால் ஸ்ரீதேவிக்கும் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு உண்டா? அவன் […]

இளமை எனும் பூங்காற்று ….

https://youtu.be/_WVuWL0rkww  ஸ்ரீதேவியின் நடிப்பும் நடனமும் இன்னும் பல முத்திரைகளும் இருக்க, அவரின் “இளமை எனும் பூங்காற்று” பாடலின் நடிப்பு மட்டுமே ஆக சிறந்தது. மறக்கவே முடியாத, அனுதினமும் பார்க்கும் (கேட்கும் என சொல்லவில்லை) பாடல் அது  அந்த காட்சியில் ஸ்ரீதேவி மிக நன்றாய் நடித்திருந்தார், என்றொரு கூட்டம் கிளம்பியிருக்கிறது அதுதான் தமிழன்..

நைஜீரியாவில் இயங்கும் பொக்கோ ஹராம் இயக்கம்

உலகில் ஏராளாமனா தீவிரவாத குழுக்கள் உண்டு, ஆளாளுக்கு ஒரு கொள்கை, சில ஆயுதம் ஏந்துகின்றன‌. ஆயுதம் இல்லாவிட்டால் சீமானின் தொண்டை போன்ற கொடுமைகள் அவரின் தம்பி போன்றோரின் இம்சைகள் என நிரம்பிய உலகிது இதில் பல கொடூரமானவை, சில நியாயமானவை , சில தீவிரவாத இயக்க கொள்கைகள் வெறும் கனவு, சில இயக்கம் மகா காமெடி வில்லன் ரகம் அதிலொன்று நைஜீரியாவில் இயங்கும் பொக்கோ ஹராம் இயக்கம் பூ எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் வண்டுகள் பறப்பதும், கச்சா […]

கலப்பு திருமணங்களை அங்கீகரிக்க சட்டம் கொண்டுவந்த மாநிலம்

இதனை உஷா ராஜேந்தர் சொல்லியிருந்தால் எவ்வளவு செலவு அனாலும் பரவாயில்லை என ராம்ஜெத்மலானியினை ஜாமீனுக்கு வாதாட‌ தயாராக இருக்க சொல்லலாம்.. தமிழகத்தில் பகுத்தறிவு ஊன்றபட்டு வளர்க்கபட்டு அது மரமாயிற்று என்றார்கள், பெரியார் மண் இது என்றார்கள், இந்தியாவில் கலப்பு திருமணங்களை அங்கீகரிக்க சட்டம் கொண்டுவந்த மாநிலம் இது என்றேல்லாம் ஏக பெருமை பேசும் தமிழ்நாடு இது அப்படிபட்ட மாநிலத்தில் ஒரு மாபெரும் கொடுமை நடந்திருக்கின்றது, நம்புங்கள் அப்படி ஒரு செய்தி இதுவரை ஆப்கானினும், பாகிஸ்தானின் பலுசிஸ்தான், வர்சிஸ்தானிலும்தான் […]

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள்

சிரியா போரினை உற்று கவனியுங்கள். அந்த அழிவுகளை பாருங்கள் காஷ்மீரில் ஏன் இந்தியா மூன்றாம் நாட்டு தலையீட்டை ஏற்கவிலை என்பதும், பாகிஸ்தான் ஏன் அப்படி வேண்டும் என அடம்பிடிப்பதும் புரியும் மூன்றாம் நாட்டை அனுமதித்தால், நான்காம் நாடு ரகசியமாக வரும், பின் கூடவே ஆயுதமும் வரும். பின் என்ன மாபெரும் அழிவுதான் காஷ்மீரில் அந்த அழிவினை கூடுமானவரை தவிர்த்தே இந்தியா தக்கவைத்து வருகின்றது, இதனால் இந்திய ராணுவம் சந்திக்கும் இழப்பும் அதிகம் எப்படியாவது மூன்றாம் நாடு அதில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications