பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாளை தலைவி கோலாலம்பூர் வருகின்றார்

நாளை தலைவி கோலாலம்பூர் வருகின்றாராம், சங்கத்து சார்பில் வரவேற்கலாம் என்றால் ஒரு தகவலும் இல்லை அவர் அலுவலகமும் சரி, அவரின் அல்லக்கைகளும் சரி ஒன்றுமே சொல்வதில்லை, ஏதோ பிரிட்டிஷ் மகாராணியின் பாதுகாவலர்கள் போல பாவ்லா காட்டுகின்றார்கள். இவர்களால் குஷ்பு வார்டு கவுன்சிலர் கூட ஆகமுடியாது. அந்த அலுவலகத்தின் 4 வோட்டு வேண்டுமானால் கொடுக்கும் சம்பளத்திற்காக கிடைக்கலாம். ரஜினி பாணியில் சொல்லிவிடலாம் “அந்த அலுவலகம் இருக்கும் வரை குஷ்புவிற்கு ஆண்டவனாலும் 10 வோட்டுக்கு மேல் வாங்க வைக்க முடியாது”. […]

ரஜினி எம்ஜிஆரை போலவே மகா நல்லவர் : நடிகை லதா

ரஜினி எம்ஜிஆரை போலவே மகா நல்லவர் : நடிகை லதா இந்த அம்மணிக்கு ஒருகாலத்தில் அவர்பின்னால் சுற்றியவர்கள் எல்லாம் நல்லவர்கள் போல.. இந்த லதா என்பவர் ரஜினி அன்று ராமசந்திரனால் விரட்டபடும்பொழுது சத்தமே இல்லை ரஜினி ஜெயாவினை எதிர்த்தபொழுதும் சத்தமில்லை பின் எத்தனையோ ரஜினி சர்சை வந்தபொழுதும் லதாவிடம் இருந்தும் ஒரு பேச்சுமில்லை லதா- ரஜினி- ராமசந்திரன்- கிண்டி ரோடு எல்லாம் 30 ஆண்டுகால சர்ச்சைகள் அன்றெல்லாம் அமைதிகாத்த லதா இன்று ரஜினி இரண்டாம் ராமன், ரஜினி […]

காவேரி பிரச்சினையில் ரஜினி என்ன செய்தார்?

காவேரி பிரச்சினையில் ரஜினி என்ன செய்தார்? நீங்கள் என்ன செய்தீர்கள்? ம்ம் போராடினோம், கடுமையாக போராடினோம், வழக்கு தொடுத்தோம் நீர் வந்ததா? கன்னடன் விடவில்லை அது அல்ல விஷயம் 15 ஆண்டுகாலம் மத்திய அமைச்சர்கள், ஏராளமான எம்பிக்கள் இருந்தபொழுது என்ன செய்தீர்கள்? ம்ம் கேட்டுகொண்டே இருந்தோம், இலங்கை பிரச்சினையில் ரஜினி என்ன செய்தார்? நீங்கள் என்ன முடிவு கொண்டு வந்தீர்கள் ம்ம்ம்… சரி மீத்தேன் சிக்கலில் ரஜினி நிலை என்ன? இப்பொழுது நீங்கள் விரட்டிவிட்டீர்களா? ம்ம்.. விடு.. […]

அம்மக்களுக்கு உண்மை விளங்கட்டும் , மராட்டியத்தில் அமைதி நிலவட்டும்

புனேவில் ஏற்பட்ட கலவரமும், மும்பை ஏன் பந்தில் சிக்கி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்ற காரணத்தை நோக்கினால் பெரும் அச்சம் ஏற்படுகின்றது அதாவது 200 ஆண்டுகளுக்கு முன் ஜாதிகொடுமையால் பலர் பிரிட்டிசார் படையில் சேர்ந்திருக்கின்றனர், அந்த வலிமையில் பிரிட்டானியார் கோரேகான் எனும் இடத்தில் அந்த அரசனை தோற்கடித்திருக்கின்றனர் அங்கு ஒரு வெற்றித்தூண் இருக்கின்றது, நிச்சயம் அது ஆங்கிலேயர் கட்டிய வெற்றிதூண். ஆனால் பின்னாளில் தாழ்த்தபட்ட மக்கள் அடித்து பெற்ற வெற்றி என்பது போல் மாற்றபட்டுவிட்டது அங்கு அம்பேத்கர் […]

இந்த காட்சிதான் இப்பொழுது தமிழகத்தில் நடக்கின்றது …

ரஜினிக்கு எதிராக சில்லறை கட்சிகள் பொங்குகின்றன, பெரிய கட்சிகள் ஏன் பொங்கவில்லை என்ற காரணம் எளிதானது இந்த சில்லறைகள் எல்லாம் பெரும் கட்சி அனுமதியின்றி வாய்திறக்காது அதனால் சங்கி மங்கி ஸ்டைலில் ஆள் வைத்து அழுதுகொண்டிருக்கின்றார்கள் வடிவேலு சொல்வது போல “எரிமலை என்னைக்கிடா அழுதிச்சி? எனக்கு பதிலா இவன் அழுவான் டேய் வாடா வாடா.. நீ போடா போடா சங்கி மங்கி குவாங்கோ….” இந்த காட்சிதான் இப்பொழுது தமிழகத்தில் நடக்கின்றது  

உலகம் புரியாதவனாக இருக்கின்றான் தமிழன்…

சுதந்திரம் வாங்கி கொடுத்து முதலில் ஆண்ட காங்கிரஸ், திராவிட தமிழனை வாழ வைக்க வந்த திமுக, ஊழலில்லா ஆட்சி என வந்த அதிமுக‌ இது போக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் சாதிவாரியாக தமிழனுக்கு உழைக்க ஏகபட்ட கட்சிகள், அது போக கடல்கடந்த தமிழனுக்காகவும் தொண்டை புடைக்க கத்தும் கட்சிகள் மதவாரியாக, ஏரியா வாரியாக உழைக்க இன்னும் பல கட்சிகள் அமைப்புகள் தேசிய கட்சியான பாஜக, இதுபோக நடிகர்கள் ஓடி வந்து நடத்தும் கட்சிகள் என இந்த தமிழனுக்கு […]

மலேசியாவில் தமிழனுக்கு அரசு பதவி, அமைச்சர் பதவி இருக்குண்ணே….

தமிழன் உலகமெல்லாம் கொடிகட்டி பறக்குறாண்ணே நினைச்சா சந்தோஷமா இருக்கு அப்படியா எங்கடா? மலேசியாவில் தமிழனுக்கு அரசு பதவி, அமைச்சர் பதவி இருக்குண்ணே, சிங்கப்பூரில் பிரதமர் பதவி கொடுத்தாங்கணே. அப்படியா வேற யாரெல்லாம்டா? அண்ணே அமெரிக்காவில அமிர்தராஜ் பிரதர்ஸ்ல இருந்து இப்போ கூகிள் அதிகாரி சுந்தர்பிச்சை வரை தமிழர்ணே , மொரிஷியஸ், பிஜி, கயானா, ரியூனியன் ஐலண்ட், தென்னாப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்னு உலகம் முழுக்க நம்ம தமிழன் பெரிய பதவில இருக்காண்ணே. இலங்கை எதிர்கட்சி தலைவர் கூட தமிழர்தான் […]

வேங்கை மங்கை ஜான்சிராணி பிறந்த நாள்

சுதந்திர போராட்டத்தில் அந்த பெண்மணி அபூர்வமானவர்ள், தமிழச்சிகளுக்குரிய வீரம் அவளிடம் குவிந்திருந்தது அவள் வெள்ளையனை எதிர்த்து வெற்றிமேல் வெற்றிபெற்ற பொழுது இந்த ஜான்சிராணி எல்லாம் பிறந்திருக்கவேயில்லை ஜோன் ஆப் ஆர்க், ராணி மங்கம்மா போன்ற தீரபெண்மணி வரிசையில் வந்தவர் அந்த வேலுநாச்சியார். அவளுக்கு 10 மொழிகள் பேச தெரிந்திருந்தது, நிர்வாகத்திலும் வீரத்திலும் பெரும் நுணுக்கம் கொண்டிருந்தார். வாள்வீச்சு முதல் எல்லா கலைகளும் அவளுக்கு அத்துபடி. இந்திய சுதந்திரபோராட்டத்தில் முதல் பெண் போராளி அவளே. அவளின் போராட்ட வாழ்வு […]

ரஜினியினை விமர்சிக்கும் திமுகவினர் ஒரு விஷயம் மறக்கின்றனர்

ரஜினியினை விமர்சிக்கும் திமுகவினர் ஒரு விஷயம் மறக்கின்றனர் திமுக என்பது அடிக்கடி பல்டி எல்லாம் அடிக்கும் கட்சி, “ஏய் குலுகபட்டரே..” என ராஜாஜியினை எதிர்ப்பார்கள் பின் அவரோடு கூட்டணி என்பார்கள் இந்திராவினை எதிர்ப்பார்கள், கடுமையான வசவுகளை வீசுவார்கள், “விதவை பென்சன் வேண்டுமா?” என்பார்கள் பின் அவரோடு கூட்டணி வைப்பார்கள் இது திமுக நிலைப்பாடு என்றல்ல அரசியல் அப்படித்தான் எம்ஜிஆருக்கு பின் தமிழக வோட்டு நமக்கு என்ற திமுகவின் 1987 கணக்கு பொய்த்தது, அது 2017லும் நடந்திருக்கின்றது. ஆம் […]

ஒரே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள்: ரஜினிக்கு குவியும் ஆதரவு

கலைஞரை சந்தித்தார் அழகிரி, இன்று மாலை சந்திக்கின்றார் ரஜினி சுறுசுறுப்பில் கலைஞர் தேனீ. தன் நாட்களில் ஒரு நிமிடம் கூட அவர் சும்மா இருந்ததே இல்லை. கட்சி, அரசியல், கூட்டம், எழுத்து, குடும்பம், வாய்ப்பு கிடைத்தால் பிராமண கலாய்ப்பு என படுபிசியாக இருந்தவர் இப்பொழுது அவரால் முடியவில்லை, நாற்காலியில் அமர்ந்துவிட்டார் , பேசவோ எழுதவோ கூட முடிவதில்லை ஆனாலும் உயிரோடு இருக்கும் வரை முடிந்தமட்டும் மக்களுக்கு ஏதாவது செய்தியாக சொல்லிகொண்டே இருப்பேன் முடியாவிட்டால் செய்தியாக வந்துகொண்டே இருப்பேன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications