பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பண்டைத் தமிழ் இலக்கிய தழுவல் திரைப்படங்கள்…

காதல் கோட்டை என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, அந்த நேரத்தில் டைரக்டர் அகத்தியன் கொண்டாடபட்டார் அதன் பின் ஆளையே காணவில்லை அவர் மகள் விஜயலட்சுமிதான் வந்து இளித்துகொண்டிருக்கின்றார் நிச்சயம் காதல் கோட்டை எனும் படம் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் கதையின் காதல் தழுவல். அதன் பின் பண்டைய இலக்கியங்களை அகத்தியன் காப்பியடிக்க தடையாய் இருந்தது சாட்சாத் மணிரத்னம் ஆம், சத்யவான் சாவித்திரி கதையினை ரோஜா என்றும், சீதை கதையினை ராவணன் என்றும், துரியோதனன் கர்னன் நட்பினை தளபதி என எடுத்தபின் […]

ரஜினி அரசியலுக்கு வந்தாயிற்று….

ராதாபுரம் தொகுதியில் 500 வோட்டு கூட வாங்கமுடியாத உதயகுமார் ரஜினி எங்களுக்கு தேவையில்லை என புலம்புவது பெரும் கொடுமை இப்படி தனிமைபட்டுத்தான் கூடங்குளம் போராட்டம் வீணாய் போனது, இன்னும் நாசமாய் போகும் திட்டம் எல்லாம் அன்னார் கையில் இருக்கும் போல‌ ரஜினி யாருக்கு தேவையில்லை என்பதை தமிழகம் முடிவு செய்யவேண்டுமே தவிர உதயகுமார் அல்ல‌ராதாபுரம் தொகுதியில் 500 வோட்டு கூட வாங்கமுடியாத உதயகுமார் ரஜினி எங்களுக்கு தேவையில்லை என புலம்புவது பெரும் கொடுமை இப்படி தனிமைபட்டுத்தான் கூடங்குளம் […]

காலம் நிச்சயம் கைகொடுக்கும், வாழ்த்துக்கள் ரஜினி சார் …

எதற்கும் கால நேரம் முக்கியம் என்பார்கள், நேரம் பார்த்துத்தான் சில காரியங்களை செய்யமுடியும், ரஜினி அப்படி நேரம் பார்த்து வந்திருக்கின்றார் “அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்” பருவத்தால் அன்றிப் பழா” என்றார் அவ்வையார் அதில் அர்த்தமில்லாமல் இல்லை, வள்ளுவனும் பல இடங்களில் சொல்லியிருக்கின்றான் இன்று ரஜினிக்கு வயது 67 ஆயிற்று என்பவர்கள் ராமசந்திரன் எப்பொழுது கட்சி தொடங்கினார் என்பதை மறைகின்றார்கள், அவர் கட்சி தொடங்கிய […]

பெரும் தொண்டு செய்தவள் ராணி மங்கம்மா

தென் தமிழ்நாட்டுக்கு பெரும் தொண்டு செய்தவள் ராணி மங்கம்மா, புதிது புதிதான சாலைகள், குளங்கள் என உருவாக்கி தென் தமிழகத்தை மாற்றியவர் அந்த சாலைகளின் வழிதான் சாத்தூர், சிவகாசி, விருதுநகர் எல்லாம் வியாபார தொழில் மையங்களாக மாறின, ஆனால் அவளுக்கொர் நினைவு இல்லம் இல்லை திருச்சியில் இருந்த அவள் மாளிகை அரசு அலுவலகமாயிற்று, மதுரையில் இருந்த அவள் மாளிகை காந்தி மியூசியம் ஆயிற்று இப்படி தமிழ்நாட்டுக்கு உழைத்த எத்தனையோ அரசர்கள், அரசிகள் அடையாளம் அற்று போயினர் ஆங்கிலேயர்களிலும் […]

கடல் அது போக்கில் இயங்கிகொண்டிருக்கின்றது

அந்த கடலில் சில திமிங்கலங்கள் இருந்தன, சில சுறாக்களும் இருந்தன, எல்லா வகை மீன்களும் நண்டுகளும் இன்னும் பொடி நெத்திலி கூட்டமும் இருந்தது அந்த கடல் தாங்களால் மட்டுமே காப்பாற்றபடுவதாக அவை நம்பிகொண்டிருந்தன‌ அந்த கடலுக்கு புதிதாக ஒரு சுறா வரலாமா? என தள்ளியிருந்து யோசித்துகொண்டே இருந்தது, அதை சுற்றி இருந்த மீன்கள் அதனை உள்ளே தள்ள நேரம் பார்த்துகொண்டே இருந்தார்கள் அவ்வப்போது வேகம் காட்டுவதும், திடீரென ஆழ்கடலில் தியானத்தில் இருப்பது போலவும் அந்த சுறா போக்கு […]

ஆண்டு 2017 எப்படி இருந்தது?

இந்த 2017 உலகளவில் எப்படி இருந்தது என்றால், பல போர்களை தவிர்த்த ஆண்டாகவே இருந்தது. அவ்வகையில் உலகிற்கு நல்ல ஆண்டு அமெரிக்க வடகொரிய யுத்தம், இந்திய சீன யுத்தம் என உலகையே அச்சுறுத்திய விஷயங்கள் வெறும் பரபரப்போடு நின்றதுவிட்ட நல்ல விஷயம் அரேபியாவினை அச்சுறுத்திய ஹிட்லருக்கு பின் அகோர கொலைகாரர்களான ஐஎஸ் இயக்கம் ஒடுக்கபட்டதும் இந்த வருடம்தான் இந்த வருடத்தின் மிக கொடூர துயரங்களை அனுபவங்களை பெற்றவர்கள் சிரியர், ஏமானியர் மற்றும் ரொகைன்யா மக்கள் யூதர்களுக்கு அவர்களின் […]

அரேபிய விருமாண்டி மாவீரன் சதாம் உசேன் : 03

தானாக‌ ஆப்கானிஸ்தானில் போரிட்டுகொண்டிருந்த பின்லேடனுக்கு, அவர்களின் தலையீடும்,பின்னர் செய்த ஆர்ப்பாட்டங்களும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது, பிரபாகரனுக்கு இந்தியா மீது வந்த அதே கோபம், கொஞ்ச காலம் அமெரிக்காவின் ஆசிய நிலையங்ளை தாக்கினார், பெரும் சேதங்கள் எனினும் அதிரவைக்கும் தாக்குதல் அல்ல. ஒரு அடி, மறக்கவே முடியாத பலத்த அடியாக இருக்கவேண்டும்,தழும்பாக பார்த்து பார்த்து அழ வைக்க வேண்டும், அடிக்கடி ராமேஸ்வர மீணவர்களை இலங்கையர் அடிப்பதுபோல அடிக்க முடியாது. ஒரு முறை தான் முடியும், செய்வதை திருந்த செய்யவேண்டும். […]

ஜுமான்ஜி : பட விமர்சனம்

பொதுவாக ஆங்கில படம் பார்ப்பதில்லை. அவர்கள் வாய்க்குள்ளே வைத்து விஜய் போல முணங்குவார்கள், ஒரு மண்ணும் புரியாது, விமர்சனம் எழுதினால் அவர்களுக்கும் புரியாது. கல்லூரி காலத்தில் ஓடி ஓடி பார்த்ததெல்லாம் ஆங்கில அறிவு வளரும் என சொல்லி வேறு அறிவினை வளர்த்த விஷயம். இப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட படங்களை தவிர வேறு படங்களை பார்பதில்லை, ஆங்கிலமும் புரியாது. புரிந்தாலும் விஷயம் புரியாது இப்படியான நிலையில் jumanji என்றொரு படம் வந்திருக்கின்றது , மகள் ஆசைபட்டாள் என சென்றாயிற்று, என்ன […]

முத்தலாக் ஒன்றும் ஒரு நொடிக்குள் சொல்லி….

முத்தலாக் ஒன்றும் ஒரு நொடிக்குள் சொல்லி உடனே விவாகரத்து வழங்கும் விஷயம் அல்ல. அதற்கும் கால இடைவெளி உண்டு மூன்று தலாக்குகளுக்கு இடையில் இஸ்லாமிய முறைபடி சில மாத இடைவெளிகள் வேண்டும், அப்பெண் கருவுற்றாளா? அதன் எதிர்காலம் என்ன? இவர்கள் இந்த இடைவெளியில் இணைய வாய்ப்பு உள்ளதா என பல விஷயங்களுக்காக காத்திருக்க வேண்டும் இன்றைய இந்திய நீதிமன்றங்களும் இதனைத்தான் சொல்கின்றன, கேட்டவுடன் விவாகரத்து யாருக்கும் கிடைப்பதில்லை கிட்டதட்ட 1 வருடம் இழுத்தடித்து இனி வாய்ப்பே இல்லை […]

எப்படிபட்ட அழகு? எப்படிபட்ட திறமையான நடிப்பு?

2017ம் வருடத்தை சந்தோஷமாக முடிப்பது எப்படி என சிந்தித்த மலேசிய டிவிக்கு அழகான திட்டம் கிடைத்திருக்கின்றது, சின்னதம்பி படம் ஓடவிட்டுவிட்டார்கள், இதனை விட பெரும் மகிழ்ச்சி எங்கு உண்டு? கோவிலை கண்டபின்பு எந்த பக்தனாவது வணங்காமல் போகமுடியுமா? ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தாயிற்று எப்படிபட்ட அழகு? எப்படிபட்ட திறமையான நடிப்பு? குஷ்புவிற்கே தேசிய விருது, பத்மஸிரி, பதம்பூஷன், தாதா சாகிப் பால்கே போன்ற விருதுகள் கிடைக்கா தேசத்தில் இந்த ஞானபீட விருது யாருக்கு கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications