பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சில நேரங்களில் பெரும் சோகம் மனதை கவ்வுகின்றது

தேர்தல் முடிவு போரடித்துவிட்டது, சுவாரஸ்யமே இல்லை. மசூசூதனன் கோஷ்டி அடிதடி செய்கின்றதாம். உண்மையில் அது பன்னீருக்கும் ஓபிஎஸ்க்கும் பாஜக‌ அடிக்க வேண்டிய அடி. இவ்வளவு செய்தும் வெற்றிபெற முடியவில்லை என்றால் சக்தி அவ்வளவுதான் திமுக தரப்ப்பு இன்னும் வாய்திறக்கவில்லை. ராமசந்திரன் கட்சி தொடங்கி திண்டுக்கல்லில் வென்றபொழுது இரண்டாம் இடத்தை காமராஜர் கட்சிதான் பிடித்திருந்தது, மூன்றாம் இடமே திமுகவிற்கு இருந்தது கலைஞர் அதிர்ந்தார் அதன் பின் என்னவெல்லாமோ செய்து கட்சியினை நிமிர்த்தினார், அதெல்லாம் இனி திரும்புமா என்பதை காலம்தான் […]

மாவோ செய்த புரட்சியினை நான் செய்கிறேன் : சீமான்

‘சீனாவில் மாவோ செய்த புரட்சியினைத்தான் நான் இங்கு என் தம்பிகளுடன் களத்தில் செய்கின்றேன், இது தெரிந்துதான் கடந்த தேர்தல் முடிவிலே கம்யூனிஸ்ட் கட்சி கூட எங்களை அவர்களோடு இணைய அழைத்தது அய்யா அருணன் கூட அழைத்திருந்தார் இனி அவர்களுடன் இணையலாமா என தம்பிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யபடும், இப்படி டெப்பாசிட்டும் போயி, அதுக்கும் மேலே பைன் எல்லாம் போடும் அளவு வொட்டு வாங்குனா எப்படி ஹிஹிஹிஹிஹி”

தமிழிசைக்கே சிரிப்பு வந்துவிட்டது

“நாம நம்பின மாதிரியே 200 வோட்டு கூட வாங்கவில்லை, இப்போழுது போய் எப்படி தமிழகத்தில் காவிகொடி பறக்கும், பாஜக ஆட்சி அமைக்கும் என சொல்லமுடியும்? ஆனால் அப்படி சொல்லுங்கள் என டெல்லியிலிருந்து ஒரே போன்கால், இதை கேட்டு தமிழிசைக்கே சிரிப்பு வந்துவிட்டது தமாசு… தமாசு..”  

ஆயிரம் சமாதானம் காரணம் சொன்னாலும் ஒரு விஷயம் மகா உண்மை

ஆயிரம் சமாதானம் காரணம் சொன்னாலும் ஒரு விஷயம் மகா உண்மை உண்மையில் பெரும்பான்மை தமிழர்களுக்கு என்ன காரணத்தினாலோ கலைஞர் திமுகவின் மேல் பெரும் அபிமானமில்லை, அது காமராஜரை தோற்கடித்த விதமா இல்லை வேறு வகையான விஷயமா என இன்றுவரை பதில் இல்லை கலைஞரின் திமுகவினை எதிர்த்தார் என்பதற்காக பின் ராமசந்திரனை விழுந்து விழுந்து ஆதரித்தார்கள், பின் ஜெயா என அது தொடர்ந்தது, ஜெயா மீது ஊழல் வழக்குகள் வந்தாலும் கலைஞர் பின் தமிழகம் திரளவில்லை இது கலைஞருக்கு […]

தினகரன் ஆர்கே நகரில் ஜெயித்துக் கொண்டிருக்கின்றார்…

நினைத்தது போலவே, எல்லோரும் பயந்தது போலவே தினகரன் ஆர்,கே நகரில் ஜெயித்துகொண்டிருக்கின்றார் ஆக நாங்கள்தான் அதிமுகவினை நடத்தியவர்கள், எப்படி வாக்குகளை வாங்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என செவிட்டில் அடித்து நிரூபித்திருக்கின்றது சசிகலா கோஷ்டி இரட்டை இலை இல்லாவிட்டாலும் எங்களால் வெல்லமுடியும் என யார் முகத்தில் எல்லாமோ கரிபூசுகின்றது அக்கோஷ்டி ஜெயாவிற்கு பின் அவர் தொகுதியினை கூட விடமாட்டோம் என வந்து நிற்கின்றார்கள் சசிகலா அணியினர் இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். […]

காலத்தில் வந்த கலகக்காரன் அவர்.

காலத்தில் வந்த கலகக்காரன் அவர். கால சூழலுக்கு தக்கவாறே அறிஞர்கள் தோன்றுவார்கள், அக்கால சூழ்நிலைக்கு தக்க அறிவுரைகளை அல்லது போராட்டங்களை நடத்துவார்கள். இயேசு கிறிஸ்து இன்று போதித்துகொண்டிருந்தால் நிச்சயம் யூத மதத்தின் காட்டுமிராண்டிதனத்தை சாடமாட்டார், அவர்கள் அதிலிருந்து நிறைய‌ மீண்டு வந்தாயிற்று . ஆனால் பாலஸ்தீன் மீதான அதன் கொடூரத்தை நிச்சயம் அவர் சாடுவார். புத்தர் இன்றுவந்தால் மாட்டுகறி தின்னவேண்டாம் எனும் கூட்டத்திலா சேர்வார்? தீண்டாமை போன்ற பாகுபாடுகளை நிச்சயம் கண்டிப்பார், இலங்கையில் அட்டகாசம் செய்யும் புத்தமத்தை […]

நாட்டில் நடக்கும் காமெடிகள் இடையே இவனுக வேற.

நாட்டில் நடக்கும் காமெடிகள் இடையே இவனுக வேற. எப்படி எல்லாம் இந்த பெரியாரை திட்டினோம்?, அவர் தமிழருக்கு துரோகமிழைத்தார் என எப்படி எல்லாம் சொன்னோம்? நாயக்கர்கள் தமிழினின துரொகிகள் என எப்படி எல்லாம் வசைபாடினோம் என கொஞ்சமும் வெட்கமின்றி அஞ்சலி என கிளம்புகின்றார்கள் அவர்கள் முழக்கங்களில் நடுவில் “கொஞ்சம் பக்கத்த காணோம்” ஒரு மாதிரியான கோஷ்டி இது, நாளையே இவர்களை அழைத்து “ஒரு பெரும் கொடுமை சொல்லட்டுமா? பிரபாகரனுடன் சேர்ந்து தமிழருக்கு உழைத்தானே ஜெயவர்த்தனே அவனை சிங்களம் […]

கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு

சென்னையில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு , கனிமொழியினை முத்தமிட்டு வாழ்த்தினார் கலைஞர், தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார் கலைஞர் : செய்தி “பாத்தீங்களா மோடி சார் , நீங்கள் சென்றபொழுது காணாமல் மாதிரி, அவருக்கு நலமில்லாது போல் இருந்துகொண்டவர், இன்று மகள் என்றவுன் எப்படி முத்தமிடுகின்றார் பார்த்தீர்களா? ஆமாம்,நான் தொட்டு பேசியபொழுதும் அமைதியாக அல்லவா இருந்தார்? நானும் மனிதர் அவ்வளவுதான் நம்பிவிட்டேன், என்னா வில்லத்தனம்????? மோடிசார் அவர் இந்திராகாந்திக்கே பெப்பே காட்டியவர், நீங்கள் பல்பு வாங்கியதில் ஆச்சரியம் […]

ராமசந்திரன் நினைவுநாள், ஆர்.கே நகர் தேர்தல் முடிவு தெரியும் நாள்

எமக்கு நன்றாக நினைவிருக்கின்றது, அன்று கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஓலைவெடி வெடித்துகொண்டிருந்தபொழுது பக்கத்து வீட்டு பெரியவர் ஓடிவந்து பிடுங்கினார் எம்ஜிஆர் செத்துட்டார்ல, உனக்கு வெடி கேக்குதா? என சொல்லிவிட்டு பிடுங்கி சென்றுவிட்டார், தெருவில் பார்த்தால் சிலர் மொட்டைபோட்டு அழுதுகொண்டிருந்தார்கள், அவர்களும் வந்து மீதி இருந்த மத்தாப்புகளை பறித்துகொண்டார்கள் மிகசிறு வயது என்பதால் ஓஹோ செத்துபோனவர் இவர்களுக்கு நெருங்கிய சொந்தம்போல , பாவம் என நினைத்துவிட்டு வெடிபோடாமல் அந்த பண்டிகையினை அதாவது கிறிஸ்மஸ் பண்டிகையினை முடித்தாகிவிட்டது நாளை ராமசந்திரன் நினைவுநாள், […]

ஸ்டாலின் முதல்வர் ஆவார், ராகுல் பிரதமர் ஆவார் : குஷ்பு பேட்டி

ஸ்டாலின் முதல்வர் ஆவார், ராகுல் பிரதமர் ஆவார் : குஷ்பு பேட்டி இதுதான் பெருந்தன்மை என்பது, ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணியின்றி முதல்வராக முடியாது, அப்படி ஆகும் பட்சத்தில் எங்கள் தலைவிக்கு சபாநாயகர் பொறுப்பு வழங்கபட்டாக வேண்டும் ராகுல் பிரதமரானால் தலைவி மத்திய அமைச்சர் ஆக பொறுப்பேற்று தீரவேண்டும் இந்த இரு பதவிகளில் எதனை தலைவி ஏற்பார் என்பதை காலம் முடிவு செய்யும் என்பதால் இப்போதைக்கு தலைவி என்ன ஆவார் என்பதை சங்கம் சொல்ல முடியாது.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications