பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பணம் கொடுப்பதை தடுக்க திடீர் சோதனை நடத்துவோம்: தேர்தல் அதிகாரி பேட்டி

பணம் கொடுப்பதை தடுக்க திடீர் சோதனை நடத்துவோம்: தேர்தல் அதிகாரி பேட்டி அவர்கள் என்ன குழாயில் நீர் வருவது போலவா எப்பொழுதும் கொடுத்துகொண்டிருப்பார்கள்? அவர்களே திடீர் என்றுதான் கொடுப்பார்கள், அதனை இவர் திடீர் என சென்று தடுப்பாராம். இணையம் முதல் இன்னும் பல இணைப்புகள் வரை பணம் கொடுக்க ஏகபட்ட வழிகள் இருக்கின்றன, கேஷ்லெஸ் இன்டியா என்பது தேர்தலில் பணம் கொடுக்கும் வகையிலும் வந்தாயிற்று வோட்டுக்கு இணையத்தில் “பிட் காய்ன்” கொடுக்கும் அளவிற்கு அவர்கள் சென்றாயிற்று, இதில் […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 14

பிரான்ஸ் நாட்டின் மன்னனான நெப்போலியனை கிட்டதட்ட 12 நாடுகள் இணைந்துதான் வீழ்த்தின, அதுவும் அவன் படைபலம் குறைந்த நேரத்தில், அந்த அளவு பலமிக்கவனாக இருந்தான் நெப்போலியன், தோற்றானே தவிர திருப்பி அடிக்கவேண்டும் என்ற வெறி இருந்துகொண்டே இருந்தது லீப்ஸிக்கில் தோற்றபின் அல்லது விரட்டபட்ட பின் ஏப்ரல் 6, 1814ல் நெப்போலியன் பதவியிறக்கம் செய்யபட்டார். லூயி எனும் பழைய வாரிசை மன்னர் ஆக்கியது கூட்டுபடையும் பிரான்ஸும் நெப்போலியனை எல்பா எனும் தீவிற்கு கடத்தும்படி ஒப்பந்தமும் எழுதபட்டது. எல்பா என்பது […]

திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அதாவது கவர்ணர் மாநில சுயாட்சியினை மீறுகின்றாராம், இது ஸ்டாலினுக்கும் திருமாவிற்கும் பொறுக்காதாம் நிச்சயமாக இங்கு நடப்பது பழனிச்சாமி ஆட்சி என்றுதான் நம்பபடுகின்றது, எங்கள் சுயாட்சியில் நீங்கள் எப்படி தலையிடமுடியும் என அவர்தான் பொங்க வேண்டும் ஆனால் அவரோ மகா அமைதி ஆட்சியிலே இல்லாமல் மாநில சுயாட்சி என திருமாவும் ஸ்டாலினும் போராடுகின்றார்களாம். பழனிச்சாமி செய்ய வேண்டிய போராட்டத்தை இவர்கள் ஏன் செய்கின்றார்கள்? ஒருவேளை இருவருமே பழனிச்சாமியின் […]

நானும் தேடிகொண்டே இருக்கின்றேன் 17 வருடமாக…

அது கல்லூரி பருவகாலம், 1990களின் கிரிக்கெட்டை தவிர ஒரு மண்ணாங்கட்டி விளையாட்டும் தெரியாத சராசரி இந்திய‌ இளைஞர்களில் ஒருவனாகிவிட்டபடியால் அதனை விளையாடியே ஆகவேண்டிய கட்டாயம். ஆனாலும் சர்வகிராம போட்டிகளில் ஒரு போர் கூட அடித்தவனோ அல்லது ஒரு கேட்ச் எடுத்தவனோ அல்ல. கிரிக்கெட்டின் பெரும் சுவாரஸ்யமே அடுத்தவன் விளையாடுவதை பார்ப்பது, அதுவும் சச்சின், ஜடேஜா போன்றவர்கள் பின்னி எடுத்தகாலம், ஆஸ்திரேலியாவின் வார்ன்,ஸ்டீவ் வா,மெக்ரத். பாகிஸ்தானின் இன்சமாம்,முஷ்டாக் என பல ஜாம்பவான்களை ரசித்தகாலம். பாலா சினிமா போல தனியாக […]

கோல மயில் கோலாலம்பூர் வருகின்றது

மலேசியாவில் அடுத்தமாதம் நட்சத்திர கலைவிழா நடக்கபோகின்றதாம், தலைவி வருவதாக அறிவிப்பும் செய்தாயிற்று விமான நிலையம் முதல் அரங்கம் வரை பெரும் வரவேற்பு பேனர் வைக்கலாம் என்றால் இங்கு அனுமதிக்கமாட்டார்கள், அதெல்லாம் வாய்ப்பே இல்லை ஆனானபட்ட மன்மோகன் சிங் மோடி வந்தால் கூட பத்தோடு பதினொன்றுதான் மோடி என்ன டிரம்ப் வந்தாலே கூட ஒரு பரபரப்பும் இருக்காது இந்த சிக்கல் இல்லாவிட்டால் கோலாலம்பூர் இரட்டை கோபுரம் அளவிற்கு பெரும் பேனர் வைத்து அசத்திவிடலாம் ஆனால் வாய்பில்லை இதில் தலைவிக்கு […]

இந்தியா : வடக்கு தெற்கு…

காவல்துறை அதிகாரி சுட்டுகொல்லபட்டிருக்கின்றார், நிச்சயம் தமிழக காவல்துறை கொதித்துகொண்டிருக்கும் . அது அமைதியாக விட்டுவிடாது. அதன் கோபங்களை எங்கு காட்டவேண்டுமோ அங்கு காட்டி தமிழக போலீஸ் என்றால் என்ன? என நிச்சயம் நிரூபிக்கும் கிட்டதட்ட 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் தமிழகத்தில் வேலை செய்கின்றதாக சொல்கின்றது ஆய்வு என்னதான் ஊழலும் சில அட்டகாசங்களும் மிக்க மாநிலமாக தமிழகம் இருந்தாலும் அங்கும் வாழ வழியிருக்கின்றது, பெரும் சிக்கல் என ஏதுமில்லை வெள்ளையன் போட்டுவைத்த அஸ்திவாரம் அது, காமராஜர் அதற்கு […]

தினகரன் வென்றால் நிச்சயம் அது சாதாரண விஷயம் அல்ல‌

தினகரன் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கட்டும் ஆனால் ஆர்.கே நகரில் தன்னால் முடிந்தமட்டும் போராடுகின்றார். கடுமையான போராட்டம் ஆனால் திமுக என்ன செய்கின்றது என்றால் சத்தமே இல்லை, மு.க ஸ்டாலின் புதிதாக ஒரு போராட்டத்தில் இறங்குகின்றாராம் அதாவது ஆளுநர் மாவட்டம் ரீதியாக ஆய்வு செய்வதை எதிர்ப்பாராம், மாநில சுயாட்சிக்கு குறுக்கே ஆளுநர் வந்தால் விடமாட்டாராம் ஆட்சியே இல்லை, இதில் என்ன மாநில சுயாட்சி கோஷம் இப்பொழுது வேண்டியிருக்கின்றது? இது தினகரனோ பழனிச்சாமியோ செய்ய வேண்டிய போராட்டம், இவர் எதற்கு? […]

ஜார்ஜ் வாஷிங்டன், அமெரிக்கர்களின் மிக பெரும் கவுரவம்

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர் ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டன் பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என சொன்னவர், பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார் அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது வரலாறு. அதாவது […]

மனிதருக்கு ஆசை எங்கு வந்துவிட்டது பார்த்தீர்களா?

மனிதருக்கு ஆசை எங்கு வந்துவிட்டது பார்த்தீர்களா? ராமசந்திரன் போலவே போஸ் கொடுக்கின்றாராம், அந்த தொப்பி கண்ணாடி பல்செட் மிஸ்ஸிங் பழனிச்சாமி இப்படி போஸ் கொடுப்பதோடு நிறுத்துவது நல்லது, மீறி அவரை போல் நடிக்க போகின்றேன், கிழவியினை தூக்கி ஆட போகின்றேன் , ராமசந்திரன் போல‌ உதட்டை கடிக்க போகின்றேன் என கிளம்பினால் என்னாகும்? தமிழகம் இன்னொரு பவர் ஸ்டாரை பார்க்கும் துர்பாக்கிய நிலை வரும். ( இவர் இப்படி ராமசந்திரன் சிலைகளையே சுற்றிகொண்டிருக்க, ஆர்.கே நகரில் இந்த […]

திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பெண் ஒருவர் பலி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பெண் ஒருவர் பலி இன்னும் கொஞ்ச நேரத்தில், பக்தி முற்றினால் இப்படித்தான் கூட்டம் சேரும். அதனை காசாக்க தரம் கெட்ட கட்டங்களை கட்டுவார்கள், அது உயிர்பலி வாங்கும். தெய்வம் இருந்தால் காத்திருக்க வேண்டும், கோயில் என்பது மோசடி. இதனால்தான் கடவுள் இல்லை என நாங்கள் சொல்கின்றோம் என வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுவாதிகள் கிளம்பி வருவார்கள் அவர்களிடம் திராவிட ஆட்சியில் பஸ் நிலையம் இடிந்து 5 பேர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications