பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாம என்னைக்கு சொன்னத செஞ்சோம்?

“நாம என்னைக்கு சொன்னத செஞ்சோம்? காஷ்மீர் 370 சட்டத்த ரத்து செஞ்சோமா இல்ல ராமர் கோவிலைத்தான் கட்டினோமா இல்ல பாகிஸ்தானோட சண்டைக்கு போனோமா? இல்ல பசுமாட்டைத்தான் காப்பாத்திட்டோமா? கருப்பு பணத்தை முழுக்க ஒழிச்சோமா, ஆளுக்கு 15 லட்சம் கொடுத்தோமா? ஒண்ணுமில்ல‌ இப்ப கூட பாருங்க குஜராத் தேர்தலுக்காக ஜிஎஸ்டி குறைச்சிருக்கோம், இனி பார்லிமெண்ட் தேர்தல் வரும்போது இன்னும் குறைப்போம் நாம அப்படித்தான் பில்டிங் ஸ்ட்ராங்கு..பேஸ்மெண்ட் வீக்கு இது தெரியாம நம்மள பார்த்து எல்லோரும் பயபடுறாங்க. So Funny” […]

சர்ச்சுக்குள் இது இந்து தேசம் என பாடவேண்டும்

ஒரு கிறிஸ்தவ கூட்டத்திற்கு செல்லவேண்டும், சென்றால் பாடவேண்டும். அவர்கள் ஆதிகால கிறிஸ்தவசபை ஆதிகாலம் என்றால் 1950கள் அப்பொழுது உள்ள தமிழ்பாடல்கள்தான் இங்கு பாடபடுகின்றன, பெர்க்மான்ஸ் இம்சைகள் எல்லாம் இல்லை ஒரு புத்தகத்தை கொடுத்து உங்களுக்க்கு தெரிந்த பாடலை தெரிந்துவாருங்கள் என கொடுத்தார்கள், பாடலை பாடுவது சிக்கல் அல்ல அதன் அர்த்தத்தையும் சொல்லவேண்டும் காரணம் அங்கு தமிழ்பேசுவார்களே தவிர, ஆழபொருள் தெரிந்தவர்கள் இல்லை என்பதால் பாடலை விளக்கியும் சொல்லவேண்டும் அதில் அழகான பாடல்கள் இருந்தன, சமஸ்கிருதம் கலந்த அக்கால […]

ரகோத்தமன் இந்த ரைடுகளை பற்றி…

இந்திய அளவில் புகழ்பெற்றவர் ரகோத்தமன். ராஜிவ் கொலைவழக்கினை விசாரித்து மிக துல்லியமான முடிவினை கொடுத்தது அவர்தான் அவர் கரங்கள் இன்னும் சுதந்திரமாக செயல்பட்டிருக்குமானால் ராஜிவ் கொலையில் இருந்து வைகோ, சந்திராசாமி உட்பட பலர் தப்பியிருக்க முடியாது திமுகவே தீரா சிக்கலில் மாட்டியிருக்கும் அப்படிபட்ட ரகோத்தமன் இந்த ரைடுகளை பற்றி மிக அழகான கருத்துக்களை சொல்லியிருக்கின்றார் “ஜெயா சாகும்பொழுது அருகிலே இருந்தது வெங்கைய நாயுடு, பன்னீரை முதல்வராக்கும் அளவிற்கு அங்கு மிக நெருக்கமாக இருந்தவர் பாஜக அப்பொழுது அதிமுகவோடு […]

நாம் கணித்ததும் சில நேரங்களில் நடக்கத்தான் செய்கின்றது

நீங்கள் எம்மை பின் தொடர்பவர் என்றால் சமீபத்தில் நாம் ஒரு விஷயம் சொன்னதை நினைவுபடுத்தி கொள்ளுங்கள் மெர்சல் படத்திற்கு பாஜக பொங்கியதை தொடர்ந்து, சிம்பு அவர்களை வம்புக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபடலாம் அதன் மூலம் அவர் ஒரு பரபரப்பினை தேடிகொள்ளலாம் என சொல்லியிருந்தோம் நம்பிய சில நடிகைகளை சிம்பு ஏமாற்றி இருக்கலாம், ஆனால் நம்மை போல அவர் அல்ட்ராசிட்டியில் நம்பிக்கை கொண்ட யாரையும் அவர் ஏமாற்ற மாட்டார் ஆம், மோடியின் பணமதிப்பு நீக்க பிரச்சினையினை விமர்சித்து அவர் […]

அட்லிக்கு குருநாதர் அந்த திருமுருகன் என்பவர்தான்

“மாணிக்க தொட்டில்” எனும் ஜெமினி கணேசன் படம் ஓடிகொண்டிருகின்றது, சிவகுமார் அக்கால சூர்யா போல திருதிருவென முழித்துகொண்டிருக்கின்றார் படத்தின் கதை 5 பெண்களை பெற்று படாதபாடு படும் குடும்பம், எங்கோ இடிக்கின்றது அல்லவா? சந்தேகமில்லை, இந்த கதைதான் பின்னாளில் மெட்டி ஒலி என சில மாற்றங்களுடன் தமிழகம் கொண்டாடிய மிகபெரும் சின்னதிரை தொடரானது. ஆக அட்லிக்கு குருநாதர் அந்த திருமுருகன் என்பவர்தான். ரெய்டில் அள்ளி செல்வது நகையும், ஆவணமாக இருக்காது ஜெயா சாவு மர்ம ஆதாரமும், இன்னும் […]

மன்மதன் ரதி கும்பலுக்கு வலுத்த‌ கண்டனங்கள்

யானைக்கு கொஞ்சம் சிந்தனை உண்டு என்பார்கள், ஆனால் அந்த யானை மிகபெரும் அறிவாளியாக இருந்திருகின்றது ஏய் பாரதி , உன் பாடல் பிற்காலத்தில் எப்படி எல்லாம் அவமானபடும் தெரியுமா? கள்ளகாதலுக்கு எல்லாம் உன் பாடலை பிண்ணணியாக போடுவார்கள் “தாங்க முடியுமா? இந்த தமிழருக்கா பாடல் எழுதினாய், சாவு” என பாரதியாரை மிதித்து கொன்றிருக்கின்றது யானையாவது ஒரு முறை அவரை மிதித்தது, இந்த லட்சுமி எனும் சன்னிலியோன் வகையறாவில் அவரை முகத்தில் துப்பி துப்பி மிதிக்கின்றார்கள் இது வன்மையாக […]

கண்ணதாசனின் “மேய்பனும் ஏய்பனும்” எனும் கட்டுரை

வாய்ப்பிருந்தால் கண்ணதாசனின் “மேய்பனும் ஏய்பனும்” எனும் கட்டுரையினை படித்துபாருங்கள் இந்த சொத்துகுவிப்புகளை அன்றே கணித்து சொன்ன அறிஞன் அவர் மிக மிக பிரமாதமான கட்டுரை அது, இணையத்தில் அது இல்லை என்பதால் பதிவேற்றமுடியவில்லை அதன் சுருக்கம் இதுதான் நாட்டின் பெரும் விடுதலை நோக்கி கிளம்பிய படை, போர்பரணி பாடி கிளம்பிய படை வழியில் தங்கசுரங்கத்தை பார்த்துவிடுகின்றது இனி என்ன போர்? தங்கத்தை கொடுத்தே வெற்றியினை அடையலாம் என மல்லாக்க கிடக்கின்றது போர்கருவிகளை வீசிவிட்டு எல்லோரும் நகை பூணுகின்றார்கள், […]

மன்னார்குடி மலைவிழுங்கிகள்

சசிகலா சிறையில், கட்சி அதாளபாதளத்தில் கிடக்கின்றது, தினகரன் மீது பல வழக்குகள் நடக்கின்றன‌ இந்நிலையில் எங்களை என்ன செய்துவிடமுடியும் என தினகரன் சவால்விடுவது அவர்கள் மேல் யாருக்கும் அபிமானத்தை கொண்டுவராது ஜெயாடிவி இப்பொழுதெல்லாம் ஏதோ சிரிய எல்லையில் நடக்கும் சண்டையினை அல் ஜசீரா ஓளிபரப்பு செய்வது போல் இந்த ரெய்டுகளை சொல்கின்றது சில நேரம் அந்நாளைய ரேடியோக்கள் போல அமரகீதம் பாடுகின்றது விரைவில் ஐநா சபையில் புகார் அளித்தாலும் அளிக்கலாம் போல‌ அம்மா சி.ஆ சரஸ்வதி நீர் […]

இன்று திப்புவின் பிறந்தநாள்

இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள். எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள், வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும். இந்தியாவில் அவர்கள் சந்தித்த ஒரு பெரும் சவால் மாவீரன் ஹைதர் அலியும், அவரின் மகன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானும், உண்மையில் ஹைதர் அலி சாதாரண பணியாளர்தான், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications