பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஷ்பு ரசிகர்கள் கொஞ்சம் அச்சத்திலே உள்ளனர்

சென்னை கடும் மழை அச்சமூட்டும் விஷயம்தான், குஷ்பு அங்கிருப்பதால் உலகெல்லாம் உள்ள ரசிகர்கள் கொஞ்சம் அச்சத்திலே உள்ளனர் ஆனால் எவ்வளவு வெள்ளம் வந்தாலும், ரசிக கண்மணிகள் பாகுபலி பிரபாஸ் போல நின்றுகொள்வார்கள், அவர்கள் மேல் கால் வைத்து தலைவி அட்டகாசமாக வெள்ளத்தை கடந்து செல்லலாம் என்ற திட்டம் Sadhu Sadhath அவர்களால் கொடுக்கபட்டு சங்கத்தால் பரிசீலிக்கபடுகின்றது ஒருவேளை நிலமை சிக்கலானால் அது நடைமுறைபடுத்தபடும் என சங்கத்து சார்பில் தெரிவிக்கபடுகின்றது  

சென்னையில் மழை தொடங்கிவிட்டது

சென்னையில் மழை தொடங்கிவிட்டது, மக்கள் குழுக்களாக பிரிந்து ஒருவேளை பெருவெள்ளம் வந்துவிட்டால் எதிர்கொள்வது எப்படி என கிளம்பிவிட்டார்கள் ஒரு தலைவன் இருந்து நடத்துவதாக தெரியவில்லை, மாறாக மக்கள் குழுக்களாக அதனை செய்கின்றார்கள், 2015 வெள்ள அனுபவ எச்சரிக்கை அவர்களை அதனை செய்ய வைக்கின்றது உண்மையில் மகா ஆச்சரியமான விஷயம் இது, இந்நகரத்து யதார்த்தத்தை புரிந்துகொண்டார்கள், நமக்கு நாமே என கிளம்பிவிட்டார்கள் மனிதநேயம், திட்டமிடல், தங்களை தற்காத்து கொள்ளும் துணிச்சல், மத இனங்களை கடந்து இயற்கை சீற்றத்தில் எப்படி […]

இந்தியா வந்தார் இத்தாலி பிரதமர் இன்னும் பிற…

இந்தியா வந்தார் இத்தாலி பிரதமர், இந்தியா இத்தாலி இடையே 6 ஒப்பந்தம் கையெழுத்தானது இதனையே காங்கிரஸ் அரசு செய்தால் எல்லாம் இத்தாலி மாபியா சோனியா அட்டகாசம், இந்தியாவினை இத்தாலிக்கு வித்தாயிற்று, அது எப்படி இத்தாலியுடன் 6 ஒப்பந்தம்? என குதிப்பார்கள் இது ஊழல், இந்தியாவினை இத்தாலிக்கு விற்கும் செயல், இது இத்தாலிகாரி சோனியாவின் திட்டம் என்றெல்லாம் கதறுவார்கள் இதோ பாஜக அரசு அதனையே செய்கின்றது , ஏதும் ஒரு சத்தம் வருமா? ஒரு முணகல் வருமா? வராது […]

இந்திராவின் இந்தியா ‍ 03

அந்த குழப்பான காலகட்டத்தில் சி.ஐ.ஏ தலமை செயலகமானது பாகிஸ்தான், பின்லேடனுக்கு வகுப்பு எடுத்துகொண்டே, இந்தியாவையும் குறிபார்த்தனர், இந்திரா அவர்களின் பெரும் எதிரியானார். இந்நிலையில் பொற்கோயில் சம்பவத்தால் சீக்கியர்கள் நொந்து போயினர், அது அவர்களின் ஆத்மா, அப்பொழுது ஒரு வதந்தி அல்லது தகவல் பரப்பபட்டது, கவனியுங்கள் லண்டனிலிருந்தும் அமெரிகாவிலிருந்தும் வந்து பொற்கோயிலில் பேசியவர்கள் பரப்பிய வதந்தி. அதாவது இந்திரா பெரும் ராணுவ தாக்குதலுக்கு திட்டமிட்டு இருப்பதாகவும் , யுத்தத்தை சாக்காக வைத்து பஞ்ஞாபியரை அழிக்க போவதாகவும் வதந்தி இறக்கை […]

இந்திராவின் இந்தியா 02

அவர் பிரதமராகும் பொழுது இந்தியாவில் ஆங்காங்கு மாநில தேசியங்கள் வலுப்பெற்றன, அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது ஒரு கூட்டாட்சி அமைப்பின் உச்சதலைவருக்கு தெரியாத விஷயமால‌, சமாளித்தார். தமிழகத்தில் திராவிடம், மும்பையில் மராட்டிய கோஷ்ம் என பல வகையான குரல்கள் உயர்ந்து கேட்டகாலம், காஷ்மீர் கேட்கவே வேண்டாம். இந்த வரிசையில் பஞ்சாப்பும் சேர்ந்துகொண்டது. டெல்லி தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழர்களை அடக்கிஒடுக்குவதில் அதீத அக்கறை காட்டுகின்றது, என்றேல்லாம் பல குற்றச்சாட்டுகள் உண்டு, கொஞ்சம் பஞ்சாப்,காஷ்மீர்,வங்கம் பக்கம் சென்று வந்தோமானால் […]

இந்திராவின் இந்தியா ‍- 01

நாளை அன்னை இந்திராவின நினைவுநாள், அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம் அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம் உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியபெண்களை பட்டியலிடும் ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியபெண்ணை மட்டும்தான் சொல்லும் அதுதான் இந்திராகாந்தி. இந்தியாவில் அவருக்கு முன்னும் பிரதமர்கள் இருந்தார்கள், இன்னும் வருவார்கள் ஆனால் அழிக்கமுடியாத முத்திரை பத்தித்தவர் அவர் ஒருவர்தான். மோதிலால்,ஜவர்லால்,மவுண்பேட்டன்,காந்தி,பட்டேல்,விஜயலட்சுமி பண்டிட் என சுற்றி, […]

பேய் என பெய்யட்டும் மழை

கமலஹாசன் தேவர் மகன் என்றாலோ, சண்டியர் என படம் எடுத்தால் குதிக்கும் கிருஷ்ணசாமியினை தேவர் ஜெயந்தி அல்ட்ராசிட்டிகளில் காணவே முடியாது மிஸ்டர் கி.சாமி? தமிழகத்தில் இருக்கின்றீரா இல்லையா? ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வர உள்ளது, திமுக ஒரு ஊழல் கட்சி : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்னும் வராத தீர்ப்பை விடுங்கள், வந்த தீர்ப்பு உங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா குற்றவாளி என்றும், நீங்கள் கும்பிட்ட சசிகலா அடுத்த குற்றவாளி என்றும் சொல்லிவிட்டதே அய்யா.. தீர்பளிக்கபட்ட அதிமுக ஊழக் […]

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் அதனை விட மகா முக்கியமான விஷயம் திருச்சி விமான நிலையத்திற்கு சந்தண கடத்தல் வீரப்பன் பெயரையோ அல்லது பூலன் தேவி பெயரையோ சூட்டுவது காரணம், அப்படிபட்ட மகா கொள்ளைகாரர்கள் அங்குதான் இருக்கின்றார்கள், மிக பெரும் கொள்ளைகள் அங்குதான் நடக்கின்றன.  

குஷ்பூ எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்

தலைவி எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார் என்பது இன்னும் வெளியிடபடவில்லை தமிழிசை போன்ற வெளிகட்சியினர், சில உட்கட்சியினர் இன்னும் ஏராளமான எதிரிகளை கொண்ட தலைவி குஷ்பு தங்கியிருக்கும் மருத்துவமனை ரகசியமாக‌ இருப்பது நல்லது என சங்கம் திருப்தி கொள்கின்றது ஒருவேளை அந்த மருத்துவமனை பெயர் அறிவிக்கபட்டால், திரளும் கூட்டத்தினை கட்டுபடுத்தி தகுந்த பாதுகாப்பினை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என எச்சரிக்கின்றோம். தேவைபட்டால் வெளிநாட்டு மருத்துவம் அளிக்கவும் சங்கம் கோரிக்கை வைக்கின்றது. தலைவி நலம்பெற்று திரும்பும் வரை, […]

ராஜராஜ சோழன்

எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன் கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன் ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும். அந்த ராஜ ராஜன் இதில்தான் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications