பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபாவளி இந்தியாவின் நம்பர் ஒன் பண்டிகை, ஆயிரம் தேர்தல் வந்தாலும் தீபாவளிக்கு போட்டி தீபாவளி மட்டுமே, பல வகையான காரணங்களை சொல்வார்கள், அதனில் முதலானது நரகாசுர வதம். இன்னொன்று ராவணனை வதைத்த ராமபிரான் அயோத்தி திரும்பியபொழுது மக்கள் தீப ஓளியேற்றி மகிழ்ந்தார்கள் என்பதும் இந்துசமய நண்பர்களின் நம்பிக்கை. மிகபழமையான ஆனால் தற்போது சுருங்கிவிட்ட சமண மதத்தவருக்கு, அந்நாளில்தான் மகாவீரருக்கு அறிவொளி ஞானம் கிடைத்தது, அதனால் தீபமேற்றி கொண்டாடவேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை, அவர்களும் கொண்டாடுவார்கள். இன்னும் ஒரு தீபாவளி […]

தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் நினைவு நாள்

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும். குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர். இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும். அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.ஒட்டுமொத்த […]

நிகழ்ச்சியின் மகுடம் அவர்தான், அவரேதான்

Actress Khushboo Talks About Victory | Magudam Awards | News18 Tamil Nadu   நியூஸ் 18, பெண்களில் சாதித்தோரை அழைத்து நிகழ்ச்சி நடத்தியிருக்கின்றது. ஜெயா செத்துவிட்டதாலும் சசிகலா சிறையில் இருப்பதாலும் அவரை அழைக்கவில்லை இன்னும் மெடிக்கிள் மிராக்கிளாக விளங்கும் உஷா ராஜேந்தரையும் அழைக்கவில்லை இதுதவிர மற்ற சாதனை பெண்களை அழைத்திருக்கின்றார்கள், அதில் தலைவி தவிர்க்க முடியாதவர் என்பதால் அவரும் கவுரவிக்கபட்டிருக்கின்றார் நிகழ்ச்சியின் மகுடம் அவர்தான், அவரேதான் தன் நெடிய போராட்டத்தை சில நொடிகளில் […]

கொஞ்சபேர் கிளம்பியிருக்கின்றான், தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்று…

கொஞ்சபேர் கிளம்பியிருக்கின்றான், தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல, அதனை கொண்டாட கூடாது. இது ஒரு மாதிரியான வியாதி, தமிழனுக்கு மதமில்லை அவன் விஜயதசமி கொண்டாட கூடாது, அவன் அதனை செய்ய கூடாது , தீபாவளி கொண்டாட கூடாது என ஏராளம் தமிழனுக்கு மதமில்லை என யாராவது சொல்லான் ஆனால் அது சுத்த மோசடி அகத்தியர் என்பவர்தான் தமிழ் வளர்த்தார் அவர் சிவனை வழிபட்ட சித்தர் என்பதில் என்ன சந்தேகம்? தமிழக ஞான மரபில் அசைக்க முடியா இடம் […]

தீராத விளையாட்டு பிள்ளை ஹாலிவுட் ஹார்வி வெய்ன்ஸ்டீன்

இந்த பாவனா விவகாரம் கேரளாவினை புரட்டிவிட்டு தமிழகத்தில் லேசான புயலாக கடந்தது நினைவிருக்கலாம் பாவனா வாய் திறந்தபின் ஆளாளுக்கு என்னை கையினை பிடித்து இழுத்தார்கள் என தொடங்கினார்கள், இப்பொழுது கூட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்னமோ சொல்லியிருந்தார் இந்த என்னை கையை பிடித்து இழுத்தார்கள் எனும் புயல் இப்பொழுது மையம் கொண்டிருக்கும் இடம் ஹாலிவுட் அங்கும் ஒரு தயாரிப்பாளர் தீராத விளையாட்டு பிள்ளையாக இருந்திருக்கின்றார், நெற்றிகண் ரஜினியாக, மன்மத லீலை கமலஹாசனாக ஆடி தீர்த்திருக்கின்றார் அவர் பெயர் […]

சீன விண்வெளி நிலையம் பூமியில் விழுகின்றது .. அச்சத்தில் விஞ்ஞானிகள்

சீன விண்வெளி நிலையம் பூமியில் விழுகின்றது அச்சத்தில் விஞ்ஞானிகள் அதாகபடட்டது சீனாவின் டியாங்கோக் 1 எனும் விண் கலம் கட்டுபாட்டை இழந்து சுற்றுகின்றதாம் , எப்பொழுதும் பூமியில் விழலாமாம் விண்வெளி உலகில் இது புதிதல்ல முன்பு ரஷ்யாவின் வோஸ்டாக் விண் நிலையம் ஒன்றும், அமெரிக்காவின் ஸ்கை லேப் எனும் விண் கலமும் இப்படி உலகை மிரட்டியது கொஞ்சமல்ல‌ ஆனால் ஆபத்தில்லாமல் பூமியில் விழுந்தது சீனா விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துகின்றது, இந்த விண்கலத்தை அடுத்து இன்னுமோர் விண் நிலையத்தை […]

எதற்கு விடுதலை? விஜயினை இன‌ முதல்வராக்கவா?

உலகின் அறிவான இனம் என 3J என ஒரு காலத்தில் சொல்வார்கள், Jews, Japanese , Jaffna (யாழ்பாணம்) அதில் நாங்களும் ஒன்று என மார்தட்டிகொண்டிருந்தது யாழ்பாணம் அதில் கொஞ்சம் உண்மையும் அன்று இருந்தது, கல்வியில் அவர்கள் சிறந்து விளங்கினார்கள், உலகெல்லாம் பெரும் பதவியில் அமர்ந்தார்கள், இன்றும் உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஈழதமிழர் உண்டு நினைத்தால் பணம் கொடுத்தே இஸ்ரேலிய லேண்ட் பேங்க் பாணியில் அவர்கள் ஈழம் வாங்கியிருக்கலாம், சாத்தியம் இருந்தது. ஆனால் ஏனோ செய்யவில்லை அப்படிபட்ட பெரும் […]

துரோகிகளால் கட்டப்பட்டதா தாஜ்மகால்?

துரோகிகளால் கட்டப்பட்டதா தாஜ்மகால், பாஜக எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை இந்த ஈழபுலிகள் தொடங்கி வைத்த துரோகி எனும் வார்த்தை, சீமானிடம் வந்து இப்பொழுது வட இந்தியாவிற்கும் சென்றுவிட்டது யாருக்கு யார் துரோகம் செய்தார் என பாஜக எம்.எல்.ஏ சொல்லவில்லை ஒருவேளை இவரின் முப்பாட்டி யாரையேனும் ஷாஜகான் தாஜ்மகால் ஆசைகாட்டி மோசம் செய்திருப்பாரோ.. சே சே இந்த தமிழ் பத்திரிகைகளை படித்து புத்தி அப்படியே சிந்திக்கின்றது. அப்படி எல்லாம் இருக்க முடியாது. எனினும் தாஜ்மஹாலுக்கு உரிய காவலை பலபடுத்துவது […]

ஏண்டா உன்னை டெங்கு கொசு கட்டிக்கல‌?

அடிக்கடி நம்மை கண்காணித்து கொண்டும் அடிக்கடி கேள்விகள் கேட்டும் கொண்டிருந்த அந்த தும்பிகளில் ஒன்று சீறியது “அண்ணே, கட்டபொம்மன் வழிப்பறி வந்தேறி கொள்ளைக்காரன், அவன பத்தி எழுதினது தப்புண்ணே அப்படியா? அவர் எங்கே கொள்ளையடித்தான் அண்ணே திருவைகுண்டம் நெல்குடோனை எல்லாம் கொள்ளையடித்தான், கொள்ளக்கார பய அதான் வெள்ளையன் தூக்குல போட்டான் ஏண்டா திருவைகுண்டம் லண்டனிலா இருக்கு? இல்லண்ணே நம்ம நெல்லை பக்கம் அத கொள்ளையடிச்சி யாருக்கு கொடுத்தான் நம்ம பாஞ்சாலகுறிச்சி மக்களுக்குண்ணே கட்டபொம்மன் அடிச்சது கொள்ளைண்ணா ஈழத்துல […]

என்ன பெரிய தீப ஒளி பண்டிகை?

என்ன பெரிய தீப ஒளி பண்டிகை? கோடி தீபம் எரிந்தாலும் இந்த முகத்தின் ஒளி வருமா? வரவே வராது ஆக தீபாவளி கொண்டாடும் இந்தியாவின் ஒளியும் அழகும் மிகுந்த ஒரே தீபம் இந்த முகம்.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications