பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நியாயமான , தைரியமிக்க ஸ்டாலினின் கேள்விகளுக்கு வாழ்த்துக்கள்

ஸ்டாலின் கடல் அலை போல தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றார். ஜெயலலிதா மர்மம் தொடர்பான விஷயத்தை அவர் இனி விடுவதில்லை என்றே தெரிகின்றது. அட்டகாசமான பார்மிற்கு வந்துவிட்டார். சீனிவாசன் முதல் ஆளுநர் வரை அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை உண்மையில் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் எழும் கேள்விகள் அவை. மருத்துவமனையில் இருந்தது ஒரு முதல்வர், அவரை சந்திக்க சென்றது ஆளுநர். அந்த ஆளுநர் தான் ஜெயாவினை பார்த்ததாக சொல்லியிருந்தார். இப்பொழுது அமைச்சரும் தினகரனும் ஜெயாவினை யாரும் பார்க்கவேயில்லை […]

கதரை பயன்படுத்துங்கள் : முதல்வர் பழனிச்சாமி

கதரை பயன்படுத்துங்கள் : முதல்வர் பழனிச்சாமி காந்தி பிறந்தநாள் என்றால் இவருக்கு கதர் நினைவுக்கு வருகின்றது, சுதேசி கொள்கையாம் எங்கே? இந்திய தயாரிப்பு காரில் செல்லட்டும் பார்க்கலாம், அப்படி ஒரு கார் இல்லையென்றால் இந்திய தயாரிப்பு மாட்டுவண்டியில் செல்வாரா? இவர்கள் பயன்படுத்தும் ஒரே இந்திய தயாரிப்பு ரூபாய் நோட்டு மட்டுமே… காந்தி மதுவிலக்கு வேண்டுமென்றார், அதனை ஏன் பழனிச்சாமி செய்யவில்லை?

மாபெரும் தலைவர்களின் மரண ரகசியம்

நேதாஜி, லால்பகதூர் சாஸ்திரி போன்ற மாபெரும் தலைவர்களின் மரண ரகசியமே இன்னும் வெளிவராத நாட்டில் அதனை தெரிந்துகொள்ள யாருக்கும் ஆசையில்லை, கேள்வியுமில்லை ஆனால் ஜெயா சாவுக்கு நீதிவேண்டுமாம் ஜெயா செத்தது மர்மமே, ஆனால் ஜெயா தான் மர்மமாக சாகும் சூழலை நிச்சயம் அவரேதான் ஏற்படுத்தினார். ஜெயா வழக்கு விசாரணையில் முதல் குற்றவாளி அந்த மரித்துபோன ஜெயலலிதாதாவே தான். ஜெயா விசாரணை சுத்த அரசியல். அது முடிவு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆக போவது ஒன்றுமேயில்லை. தான் இப்படித்தான் சாவோம் […]

பாரத முனிவர் லால் பகதூர் சாஸ்திரி

இந்த அக்டோபர் 2ம் தேதியன்று தேசம் காந்தியினை வணங்கும், காமராஜரை நினைத்து கண்ணீர் சிந்தும். ஆனால் இந்த வரிசையில் வணங்கவேண்டிய பாரத முனிவர் ஒருவர் உண்டு அவர் வாழ்க்கையும், அவர் மரணமும் ஏன் அவர் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் இந்த நாட்டிற்கானது. லால் பகதூர் சாஸ்திரி. இந்திய வரலாற்றில் எளிமைக்கும் நாட்டுபற்றிற்கும் தியாகத்திற்கும் பெரும் எடுத்துகாட்டனா மனிதர். அவர் வாழ்வினை படித்தால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், அந்த மனிதனை தேடிபிடித்து கட்டி அழ தோன்றும். அப்படி ஒரு […]

ஏராளமான விஷயங்கள் அந்த திராவிட கோஷத்தில் உண்டு

திராவிடத்தை காக்க வந்தவரும், இந்தியா என ஒன்று இல்லை என ஒருகாலத்தில் சொன்னவரும், இந்து மதம் ஒழிக்கபடவேண்டியது என சொன்னவருமான அண்ணா எழுதிய நாடகம் “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” அதனை காண சென்றது இந்தியாவில் திராவிடன் இணையமுடியாது என சொன்ன பெரியார், இந்து மதத்தின் விரோதியான பெரியார் அந்த கணேசனின் நடிப்பில் சிவாஜியினை கண்டதாக அவனுக்கு சிவாஜி என்றே பெயரிட்டாராம் அந்த பெரியார். திராவிட நாடு மதமற்றது, இந்துக்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்றவர்களும் அந்த […]

குஷ்பூ தமிழக காங்கிரசின் கடைசி மற்றும் ஒரே நம்பிக்கை

எவனோ தலை குழம்பிய கிறுக்கன், சாலையோரத்தில் வேலையற்று இருப்பவன், குதர்க்க சிந்தனையில் சீழ்பிடித்த சிறுபுத்திக்காரன் கிளப்பிவிட்டிருக்கின்றான் ஒரு வதந்தியினை அதாவது தலைவி குஷ்பூ காங்கிரசில் இருந்து விலகி விட்டதாக பெரும் பரபரப்பினை கிளப்பிவிட்டிருக்கின்றான் தலைவி தமிழக காங்கிரசின் கடைசி மற்றும் ஒரே நம்பிக்கை. அவர் இல்லாத காங்கிரஸ் கவுன்சிலர் பதவிக்கு கூட வராது என்பது உலகறிந்த உண்மை. இது காங்கிரசுக்கும் நன்றாக தெரியும். ஆளைவிட்டால் போதும் என தலையினை பிய்த்து கொண்டிருக்கும் மோடியே, அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு […]

ஜெயா மரணத்தில் சசிகலா சர்ச்சையானவர் …..

ஜெயா மரணத்தில் சசிகலா சர்ச்சையானவர் என்றொரு கோஷ்டியும், இல்லை இல்லை டெல்லியின் நடவடிக்கைகளும் மர்மமானவை என இன்னொரு கோஷ்டியும் சொல்லிகொண்டிருக்கின்றது சசிகலாவின் பலம் ஜெயலலிதா, ஜெயலலிதா இல்லாவிட்டால் சசிகலா வெறும் மண்பொம்மை என்பது சசிகலாவிற்கு தெரியாததல்ல, ஜெயாவின் மரணத்தை சசிகலா நிச்சயம் விரும்பமாட்டார். டெல்லிக்கும் அதிமுகவிற்கும் உள்ள ரகசிய இழைகள் புரிந்துகொள்ளமுடியாதவை. ராஜிவ்காந்திதான் ஜெயா தமிழக அரசியல் சக்தியாக மாற முழு உதவி செய்தவர். பாஜகவிற்கும் ஜெயாவிற்கும் இடையில் நிறைய புரிந்துணர்வு உண்டு ஆக விசாரணையின் முடிவிலே […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 05

நாட்டில் குழப்பம் நடக்கும்பொழுது அந்நிய நாடுகள் அதனை பயன்படுத்தி படையெடுக்கும், நெப்போலியன் காலத்திலும் அதுதான் நடந்தது. பிரிட்டன் டூலன் நகரை பிரிட்டனிடமிருந்து மீட்டாலும், ஐரோப்பிய நாடுகள் பிரான்சின் மீது எப்பொழுது பாயலாம் என குறித்துகொண்டிருந்தன, நெப்போலியன் அப்பொழுது வெறும் கமாண்டர், பத்தோடு ஒன்று என்பதால் அவனை ஐரோப்பாவில் யாருக்கும் தெரியாது. குழப்பமான நிலையில் இருந்த‌ பிடித்துவிடலாம் என அவர்கள் திட்டமிட்டுகொண்டே இருந்தார்கள். நெப்போலியனுக்கோ ஜோசப்பின் கிறுக்கு உச்சத்தில் இருந்தது, கவிதை எழுதினான் அவளோடு சேர்ந்த் ரோஜா செடி […]

சிவாஜி மணி மண்டப திறப்பு விழா

எகிப்தின் கர்ணல் நாசர் அவரை சிறந்த நடிகன் என்றபின்புதான் இந்தியா சிவாஜி கணேசனை நோக்கிற்று. ராமசந்திரனுக்கு பாரத் விருது கொடுத்து அந்த விருதையே டெல்லி கேவலபடுத்தியபொழுதும், சிவாஜிக்கு ஒன்றுமில்லை பிரான்ஸ் அரசாங்கம் செவாலியே பட்டம் கொடுத்தபின்புதான் இந்திய அரசு பால்கே விருதே வழங்கிற்று. அந்த மனிதனுக்கு புறக்கணிப்பு என்பது அவன் வாழ்வு முழுக்க நடந்துகொண்டே இருந்தது. அவனை ஏன் அப்படி பழிதீர்த்தார்கள் என இன்றுவரை தெரியாது. இன்று தமிழக முதல்வரும் அவர் மணி மண்டப திறப்பு விழாவிற்கு […]

அதுதான் சிவாஜியின் வெற்றி

முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகன் நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார். அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு காட்டிற்று, தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது. எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications