பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடி “புதிய மியன்மார்” பிறக்க வைத்துவிட்டார்

“மியன்மாரில் நடப்பது இனபடுகொலை அல்ல, அவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் மேல் நடத்தபடும் நடவடிக்கையினை உலகம் மிகைபடுத்துகின்றது” : ஆங்சன் சூகி உலக இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ரொஹிங்கியா விவகாரத்தை கையில் எடுத்து கண்டிக்க தொடங்கிவிட்டன, இஸ்லாமிய நாடுகளில் ஓரளவு வலுவான நாடான (பாகிஸ்தானை விடுங்கள், அது ஒரு அடிமை) துருக்கி அதிபர் போனில் சூகியிடம் கண்டிக்கும்பொழுதுதான் அம்மணி இப்படி பேசியிருக்கின்றார். எந்த ஆங்க்சன் சூகி? பர்மாவில் மக்களாட்சி வேண்டும் என போராடி, பல வருடங்கள் சிறையிலிருந்து பெரும் […]

மோடியின் பச்சை பொய்…

இந்திய பிரதமர்களிலே இப்படி ஒரு பச்சை பொய்யினை பகிரங்கமாக சொல்லும் பிரதமரை பாரதம் கண்டிருக்கின்றதா? பழைய இந்தியா கண்டதேயில்லை, புதிய இந்தியா கண்டுகொண்டிருக்கின்றது. மிஸ்டர் மோடி, செவ்வாய் கிரகத்தில் இப்படி பேசினால் கூட ஒரு லாஜிக், அண்டை நாட்டில் போய் இப்படி சொன்னால் உலகம் சிரிக்காதா?  

குஷ்பூ ஏன் அமைதியானார்

கொட்டாத அருவினையும், ஒளிவிடாத நட்சதிரத்தினையும் காய்ந்துவிட்ட வயலினையும், தோகையில்லா மயிலினையும், கூவாத குயிலையும் , சீறாத சிங்கத்தையும் காண்பது ஒருவித கொடுமை. அப்படி கொஞ்ச நாட்களாக அமைதியாகிவிட்ட குஷ்பூவினையும் நோக்கவேண்டியிருக்கின்றது. என்ன ஆனதோ தெரியவில்லை. முதலில் டிவிட்டரில் இருந்து விலகினார், அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தனிமைபடுத்துகின்றார். இப்பொழுது தமிழகமே கொந்தளிக்கும் விவகாரங்களில் அவர் இன்னும் ஒன்றும் சொல்லவில்லை. அவரின் இயல்பு இது அல்ல. தேனீ போல மகா சுறுசுறுப்பாக வலம் வந்த அவர், இப்படி அமைதியாவது சாத்தியமில்லை. […]

சோவின் துக்ளக் …

சோ ராமசாமி பொங்க வேண்டிய இடத்தில் பொங்குவார், அமைதி காக்க வேண்டிய இடத்தில் அமைதிகாப்பார். போலி திராவிட குரல்களை கண்டிப்பாரேயன்றி, மிசா போன்ற தேசிய கொடுமைகளை அவர்போல் துணிச்சலாக கண்டித்தது யாருமில்லை அந்த சோவின் துக்ளக் இன்றொரு கீழ்த்தரமான சிந்தனையுள்ள சிலரிடம் சிக்கவிட்டது. சிங்கத்தின் இடத்தினை நரியோ, ஓநாயோ நிரப்ப முடியாது, கழுகின் இடத்தினை நெருப்புகோழி எட்டாது. சோ ராமசாமி இடத்தினை இந்த குருமூர்த்தியோ , எஸ்.வீ சேகரோ அருகில் கூட சென்று பார்க்க முடியாது. கலைஞர் […]

ஜெயா சமாதி முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயா சமாதி முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டின் தலைவிதியினை மாற்றி, அதனை ஒரு அடிமை மாநிலமாக மாற்றியதில் அதிமுகவின் பங்கு மிக பிரதானம். அது திமுகழகத்தை பலவீனபடுத்தவும், தேசிய கட்சியினை வளர்க்கவும் அது உருவாக்கபட்டது. ஆனால் விபரீத திருப்பமாக தேசிய கட்சியினை அழித்து அது வளர்ந்தது. அதனால் தமிழகம் தேசிய கட்சி மாநிலமாகவும் இல்லாமல், முழு திராவிட மாநிலமாகவும் இல்லாமல் ஒரு பைத்தியக்கார மாநில அளவிற்கு சென்றது. தமிழகத்திற்காக ஒரு துரும்பினையும் கிள்ளி போட்ட கட்சி அல்ல […]

மியன்மாரின் ரோஹிங்யா விவகாரம்

மியன்மாரின் ரோஹிங்யா விவகாரம் பற்றி எரிகின்றது, பெரும் கொடூரமான தாக்குதல்களும் விரட்டல்களும் அந்த மக்கள் மேல் நிகழ்த்தபடுகின்றன‌ மகா கொடூரமாக அவர்கள் குடியுரிமையற்றவர்கள் என சொல்லி திமிராக நிற்கின்றது மியன்மார் அரசு. இந்த உலகில் இதனை கண்டித்து ஒரு குரல் கேட்கின்றதா இல்லை, கேட்கவும் கேட்காது. இதுதான் உலக யதார்த்தம் நேற்று மியன்மார் சென்ற மோடி கூட ஒரு மூச்சும் அது பற்றிவிடவில்லை, மிக சமத்தாக சுற்றிவிட்டு வந்துவிட்டார். உள்நாட்டிலே இஸ்லாமியரின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத மோடி, […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 2

நெப்போலியனுக்கு 20 வயதாயிருக்கும் பொழுது, அதாவது அவன் ராணுவத்தில் இருக்கும்பொழுதுதான் பிரென்ஞ் புரட்சி வெடித்தது. அமெரிக்க விடுதலைக்கு பிரான்ஸ் உதவி செய்தது ஒன்றும் ரகசியமல்ல, மக்களாட்சி அங்கு மலரவேண்டும் என்பதை விட பிரிட்டன் ஒழியவேண்டும் என்ற எண்ணத்தில் பிரான்ஸ் அமெரிக்கர்களுக்கு உதவியது. அமெரிக்கா விடுதலை அடைந்த 10ம் வருடத்தில் பிரான்ஸ் மக்களுக்கும் மக்களாட்சி ஆசைவந்தது, மன்னனின் கொடுங்கோல் ஆட்சியும் ஒரு காரணம். மன்னன் மக்களை அடக்கி பார்த்தாலும், கில்லட்டின் எல்ல்லாம் வைத்து மிரட்டி பார்த்தாலும் மக்கள் அசையவில்லை, […]

“ஜாக்டோ ஜியோ” சங்கத்தார்

கழுத்திலும், காதிலிலும், விரலிலும்  மின்னும் நகையும் , அக்கால முதுமக்கள் தாழி போல பெரும் வயிறும் கொண்ட இவர்கள்தான் ஏழை ஆசிரிய பெருமக்கள் அடங்கிய “ஜாக்டோ ஜியோ” சங்கத்தாராம் இவர்களுக்கு எல்லாம் அந்த “பொம்பள”தான் சரி.     வேலூர் சி.எம்.சி மருத்துவமனையும் அக்கல்லூரியும் இனி தேசதுரோக சக்தியாகவும் , அந்நிய நாடுகளினால் இந்தியாவில் குழப்பம் விளைவிக்கும் மருத்துவமனையாகவும் விரைவில் பக்தர்களால் அறிவிக்கபடும் என்பது மட்டும் புரிகின்றது. இனி வேலூர் சி.எம்.சியில் சிகிச்சைபெறும் எல்லோரும் தேசதுரோகிகள் என […]

திமுகவிற்கு சமூக பொறுப்பு வந்துவிட்டதாம்…

“நீட் தேர்வில் திமுக பெரும் எதிர்ப்புகாட்டவில்லை என சொன்னால், உனக்கு என்ன வேண்டும்? திமுக களமிறங்கி போராட வேண்டுமா? தமிழகம் பற்றி எரியவேண்டுமா? அதனையா எதிர்ப்பார்க்கின்றாய் சமூக பொறுப்பு இல்லாதவனே, அந்த கொடுமை எல்லாம் நாங்கள் செய்யமாட்டோம், நியாயபடி வெல்வோம், எல்லாம் எம் தளபதிக்கு தெரியும்” என பலர் பாடமெடுக்கின்றார்கள். திமுக வரலாறு என்ன? குலகல்வி திட்டம் என ராஜாஜியின் கல்வி திட்டத்தை எதிர்த்து நீதிமன்றமா சென்றது? குட்டிகரணம் அடித்து தமிழகத்தை ஸ்தம்பிக்க செய்யவில்லை? ராஜாஜியினையே விரட்டவில்லையா? […]

தமிழிசைக்கு கொலை மிரட்டல் : செய்தி

தமிழிசைக்கு கொலை மிரட்டல் : செய்தி தமிழிசைக்கா மிரட்டல்? தமிழிசையின் காமெடியினை ரசிக்க முடியாத அளவிற்கா தமிழகத்தில் நகைச்சுவை உணர்வு கெட்டு போயிற்று. இவரின் காமெடியினை கூட ரசிக்க முடியாமல் கொலை மிரட்டல் விடுவித்தவர்கள் நிச்சயம் மனநிலை பாதிக்கபட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும். எனினும் அந்த மனநிலை பாதிக்கபட்ட சைக்கோக்களிடம் இருந்து தமிழிசையினை காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது ஜெயலலிதா […]