பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஷ்புவே நமஹ ! : 7

குஷ்பு ஏன் திமுக வில் இணைந்தார்? சிக்கலான வழக்குகளை சந்தித்து மீண்ட ஒரே தமிழ்திரை நட்சத்திரம் இன்றுவரை குஷ்பூ ஒருவர்தான்.. தமிழகத்தை பல கண்கள் கவனித்துகொண்டே இருக்கும், யாராவது சீர்த்திருத்த கருத்தோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லா கருத்தையோ பேசிகொண்டு மக்கள் அபிமானத்தை பெற்றும் இருந்தால் அக்கண்கள் குறிவைக்கும். அவர்களை ஏதாவது ஒரு விதத்தில் சிக்கவைத்து கதறவைத்து அவர்களை பொதுவாழ்க்கையிலிருந்தே அப்புறபடுத்தி அடையாளமில்லால் ஆக்கும் கொடூர கண்கள் அவை. அவர்கள் யார்? என்ன செய்கின்றார்கள் என தெரியாது. […]

இங்கும் அங்கும் …

இதுதான் மோடி இந்தியா வளம்பெற உலகெல்லாம் நடையாய் நடந்ததில் கிழிந்த செருப்பு, இன்னமும் மோடி இந்த கிழ்ந்த செருப்பைத்தான் வைத்திருக்கின்றார். இதனை தூர எறியாமல் தனக்கு தந்தால் உபயோகமாக இருக்குமென்று உ.பி முதல்வர் யோகி கடிதம் எழுதியிருப்பதாகவும் சில பாஜகவினர் சொல்லிகொண்டிருக்கின்றனர். ரஜினி திருநாவுக்கரசர் சந்திப்பு மோடி சந்தித்தே சிக்காத ரஜினி திருநாவுக்கரசருக்கு மசிந்துவிடுவாரா? காங்கிரசில் இருந்து ஒருவர் சந்தித்தால், பாஜகவில் இருந்து ஒருவர் ரஜினியினை சந்திக்கவேண்டும் என்பது விதி அடுத்து தமிழிசை திடீரென ரஜினியினை சந்திக்கலாம். […]

பல முகமுடிகள் கிழியலாம்

உலகில் எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. அலெக்ஸாண்டர் கால சமாதான பேச்சுக்கள் முதல், ஜெர்மனி இணைப்பு, அமெரிக்க ரஷ்ய அணுகுண்டு பேச்சுவார்த்தை, இப்பொழுது நடக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன் பேச்சு, இந்திய பாகிஸ்தான் பேச்சுக்கள், மிக சிக்கலான ஈரான் மேற்குலக பேச்சு, அமெரிக்க வடகொரிய பேச்சு, சிரிய அமைதி பேச்சு என ஏராளம் ஆனால் இந்த பன்னீரும் எடப்பாடியும் பேசுவது போல ஒரு நாடும் பேசவில்லை. பேசினார்கள், பேசுகின்றார்கள், இன்னும் பேசுவார்கள் எனும் அளவில் பேசிகொண்டே இருக்கின்றாகள், இன்னும் முடிவு […]

பிரியங்கா சோப்ரா தேசியகொடி வண்ணத்தில் துப்பட்டா அணிந்ததால் சர்ச்சை

நடிகை பிரியங்கா சோப்ரா தேசியகொடி வண்ணத்தில் துப்பட்டா அணிந்ததால் சர்ச்சை , தேச பக்தர்கள் கொந்தளிப்பு : செய்தி ஆனால் முன்பு மோடி இதே தேசியகொடி வண்ணத்தில் துப்பட்டா அணிந்திருந்தபொழுது இவர்களிடம் எல்லாம் சத்தமே இல்லை, அதுவும் மோடி அந்த கொடிவர்ணத்திற்கு சில அவமரியாதை செய்தபொழுது எல்லா வாய்களும் அமைதி ஆக இவர்களின் தேசபக்தி பிரியங்கா சோப்ராவினை பார்த்தால்தான் பொங்கும். பார்த்தால் தேசபக்தி பொங்குவது போலவா பிரியங்கா இருக்கின்றார்? இவர்களிடம் ஏதோ கோளாறு போல‌     […]

ஜெ. மரணம் குறித்து விசாரணை : எடப்பாடி பழனிசாமி

ஜெ. மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் எந்த விசாரணை ஆணயம் தன் முடிவினை அறிவித்தது? ஒன்றுமேயில்லை. இதில் ஜெயலலிதா மரணத்தில் மட்டும் உண்மை வந்துவிடுமா? எல்லாம் நாடகம். அந்த அப்பல்லோ நாடகம் நடக்கும் பொழுது பார்த்துகொண்டிருந்தவர்கள் இன்று அடுத்த நாடகத்தில் இறங்கிவிட்டார்கள். அன்புமணி போன்ற சிலர் சொல்வது போல சிபிஐ விசாரணைதான் சிறந்தது, அதனைத்தான் செய்யவேண்டும் ஆனால் மோடியில் கால், வால் என அதிமுக இருக்கும்பொழுது அதெல்லாம் சாத்தியமில்லை. சரி இந்த […]

மயிலை பார்த்து வான்கோழி அல்ல, காகம் ஆடினால்….

மயிலை பார்த்து வான்கோழி அல்ல, காகம் ஆடினால் எப்படி இருக்கும் அப்படி ஒரு பேட்டியினை கொடுத்திருக்கின்றார் தமிழிசை. ஒரு ரேடியோ நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கின்றார்கள். அங்கு சென்று கட்சி பற்றியோ, மோடி சாதனை பற்றியோ பேசியிருக்கலாம். அப்படி ஏதும் இருந்தால்தானே பேச அதனால் அம்மையார் தடாலடி விஷயங்களில் இறங்கிவிட்டார் அதாவது குஷ்பூ கொசுதொல்லை போன்றவர் என பேசியிருக்கின்றார். இதற்கு முதலில் சிரிக்கவேண்டும். அதன் பின் தமிழிசையிடம் சில கேள்விகளை கேட்க வேண்டும். எங்கிருந்தோ தமிழகம் வந்து, மக்கள் மனதை […]

பார்சிலோனாவில் மர்ம நபர்கள் தாக்குதல், 13 பேர் பலி

பார்சிலோனாவில் மர்ம நபர்கள் தாக்குதல், 13 பேர் பலி இப்பொழுதெல்லாம் ஐரோப்பாவில் தீவிரவாதிகள் தாக்குதல் மாறிவிட்டது. கடும் பாதுகாப்புகள் காரணமாக அவர்களால் பெரும் ஆயுதங்களோடு தாக்கமுடியவில்லை. அதனால் கிடைத்த வாகனத்தில் ஏறி கூட்டத்தில் பாய்ந்துவிடுகின்றார்கள். மொத்தமாக முடிந்தவரை நசுக்குவதுதான் திட்டம் ஆனால் காவல்துறை உடனே வாகனத்தை முடக்கிவிடுவதாலும், இன்னும் பல காரணங்களாலும் பலத்த சேதமில்லை. சில இடங்களில் நடந்த இந்த தாக்குதல் ஸ்பெயினிலும் தொடங்கியிருக்கின்றது. நிச்சயம் இந்தியா இம்மாதிரி சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுகொள்ளவேண்டும். இங்கு மக்கள் […]

கேரளாவில் சன்னிலியோனை பார்க்க பெரும் கூட்டம்

சன்னிலியோனை பார்க்க பெரும் கூட்டம் கேரளாவில் திரண்டது, சன்னிக்கு இவ்வளவு ஆதரவா என மக்கள் வியப்பபு இதிலென்ன வியப்பு? ஷகிலாவே கேரளத்தை ஒரு காலத்தில் கலக்கிகொண்டிருந்தார். அப்படிபட்ட கேரளாவில் சன்னிக்கு ஆதரவு இல்லை என்றால்தான் ஆச்சரியம். ஷகிலாவினை கொண்டாடி தீர்த்த கேரளம் , வழக்கம் போல சன்னிக்கு சிகப்பு கம்பளம் விரித்திருக்கின்றது அவ்வளவுதான் விரைவில் ஷகிலாவும் சன்னியும் இணையும் மலையாள படங்கள் வரலாம் “இணைந்த கைகள் நாம் ஆனால் இருவருக்கேதான் எதிர்காலம்” என்ற டைட்டில் சாங் ஒலிக்க […]

குஷ்புவிற்கு ஒரு நியாயம்… மோடிக்கு ஒரு நியாயமா?

ஆச்சரியமாக மோடி ஆட்சியில் இந்த திராவிட சிகாமணிகளுக்கு இந்து தெய்வத்தை பற்றிய திடீர் அக்கறை வந்திருக்கின்றது அதாகபட்டது பல பெண்கள் இந்து கடவுள் படத்தினை டாட்டூ குத்தியிருக்கின்றார்களாம், அது பெரும் தவறாம் முன்பு குஷ்பூ அணிந்த சேலையில் இந்துகடவுள் படம் இருந்து அதற்கு இந்துத்வ காலர்கள் சூலம் ஏந்தி கிளம்பியதை சுட்டி காட்டுகின்றார்களாம். ஆனால் இதே பகுத்தறிவு சுடர்கள், குஷ்பூ கற்பு சர்ச்சையில் சிக்கியபொழுது பெரியார் அன்றே சொன்ன கற்பு பற்றிய செய்திகளை சொல்லி குஷ்பூவிற்கு துணை […]