பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழக பத்திரிகைகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை

இந்த தமிழக பத்திரிகைகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை, சொல்பவன் சொல்லட்டும் பதிவிடுபவர்கள் கொஞ்சம் யோசித்து பத்திரிகையில் பதிவிட கூடாதா? ஒரு பொறுப்பு வேண்டாமா இந்த வாட்சப் வதந்திதான் காமராஜர் அப்துல் கலாமினை மிதித்தார், தன்னை சந்திக்க தமிழகம் வந்த ஹிட்லரை அவமானபடுத்தினார் என அள்ளிவிடுகின்றன. இன்னும் பல விஷயங்கள் பகீர் ரகம். வாட்சப் வாந்திகள் அந்த ரகம், விட்டுவிடலாம் ஆனால் பெரும் பொறுப்பு கொண்ட ஊடகங்கள் அப்படி செய்யலாமா? இதோ வாஞ்சிநாதனின் பேரன் பேட்டிகொடுத்திருகின்றான், அதாவது வாஞ்சிநாதன் […]

தினகரனை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கின்றது

முதலில் ராஜாஜி சொன்னார், அதன் பின் நேரு, அதன் பின் இந்திரா, கொஞ்சநாளில் கோடாரி காம்பு ராமசந்திரன், இடையில் குமாரமங்கலம், அடுத்து ராஜிவ், ராஜிவின் தமிழக அடிப்பொடிகள், அதற்கடுத்து வைகோ , பெரும்பலத்துடன் இருந்த ஜெயலலிதா என எத்தனையோ பேர் சொன்னதுதான் “திமுகவினை அழிப்பேன்..” இப்படி சொன்ன பெரும் ஜாம்பவான்கள் எல்லாம் மண்ணை கவ்வி மண்ணாகிவிட்டபின் இப்பொழுது தினகரனும் சொல்கின்றாராம். திமுகவினை அழிக்க கிளம்பியவர்கள்தான் அழிந்தார்களே தவிர திமுக அப்படியே இருக்கின்றது பெரும் புயலும், பெரும் படையும், […]

சுதந்திர நாளை மகிழ்ச்சிக்குரிய நாளாக கொண்டாட முடிகிறதா? கி.வீரமணி ++

சுதந்திர நாளை மகிழ்ச்சிக்குரிய நாளாக கொண்டாட முடிகிறதா? கி.வீரமணி இந்தியர்களால் முடியும், பெரியார் சொத்துக்களுக்கு காவலர்களாய் இருப்பவர்களால் நிச்சயம் முடியாது. எங்கே? இந்த சொத்துக்களை எல்லாம் அரசு எடுத்துவிட்டால் என்னாவது எனும் கவலை இருக்கும் வரை இவரால் எப்படி சுதந்திர தினத்தை கொண்டாட முடியும்? மிஸ்டர் வீரமணி, இதுவரை பெரியாரின் சொத்துக்களை நீங்கள் சுதந்திரமாய் ஆண்டுகொண்டுதானே இந்த சுதந்திரநாட்டில் இருக்கின்றீர்கள்? வேறு என்னதான் உங்கள் பிரச்சினை? இந்த sarahah.com தளத்தில் நுழைந்துவிட்டோம் என சொன்னாலும் சொன்னோம், நிறைய மொட்டை கடிதங்கள் […]

வீடு திரும்பினார் கலைஞர் .. மற்றும் சில …

வீடு திரும்பினார் கலைஞர் அவர் வீட்டிற்கு திரும்பியதில் பலருக்கு உயிரே போயிருக்கும் நாங்கள் கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்: முதல்வர் பழனிசாமி பேச்சு ஆமாம், கொல்லைபுறமாக எல்லாம் வரவில்லை மாறாக சுரங்கம் தோண்டி திடீரென பொத்துகொண்டு வந்தவர்கள் சென்னை கிண்டியில் 10 கோடி வாடகை பாக்கியால் ரஜினி மனைவி லதா நடத்திய பள்ளிக்கு பூட்டு : செய்தி ரஜினி அரசியலுக்கு வந்தால் எவ்வளவு பெரும் ஆபத்து என இப்பொழுதுதான் புரிகின்றது, கணவன் கோடிகளில் புரண்டும் […]

வெல்ல பிறந்தவன் : 09

பாபிலோனை நோக்கி வந்தான் அலெக்ஸாண்டர், பாபிலோன் எனும் பெருமைமிகு நகரத்தை கைபற்றும் வேகம் அவனிடம் இருந்தது. டார்சியசோ மிகபெரும் படையினை திரட்டிவைத்திருந்தான், கடந்த முறைபோல் அல்ல, இம்முறை அவனின் தயாரிப்பு கடுமையாக இருந்தது முதலில் திறந்த களத்தினை தேர்ந்தெடுத்தான், அதில் தன் தேர்படை நகர புல் எல்லாம் வெட்டி, கற்களை எல்லாம் அகற்றி ஒரு மைதானம் போல ஆக்கியிருந்தான், அந்த களமிருந்த‌ டைக்கிரீஸ் ஆற்று கரையில் அவன் படை ஆர்பரித்து நின்றது முண்ணணியில் தேர்படை அதனை அடுத்து […]

நம் தாயின் மணிக்கொடி கம்பீரமாய் பறக்கட்டும் – சுதந்திர தினம்

“தாயின் மணிக்கொடி பாரீர்,  அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்” 200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு கட்டத்தில் மாபெரும் தலைவனின் உயிர்பலியோடுஅது நின்றது, […]

தினகரன் ஆவேசம், பரபரப்பு பேச்சு

பன்னீர் செல்வம், முதல்வர் பழனிச்சாமி மீது தினகரன் ஆவேசம், பரபரப்பு பேச்சு. குட்டியினை பிரிந்த தாய் யானை போல ஒரு மாதிரியாகிவிட்டார் தினகரன். என்னவெல்லாமோ அரற்றுகின்றார், முதல் மரியாதை படத்தில் ஒரு காட்சி உண்டு. பேரன் தன்னிடம் வருவதை மகள் தடுக்கும்பொழுது சிவாஜி உருக்கமாக சொல்வார். “என்னமோ ஒரு புள்ளைய பெத்துட்டாளாம் ஆட்டம் போடுறா.. எல்லாம் இப்போதான் கொஞ்ச நாளாத்தான்… அதுக்கு முன்னாடி நாந்தான்.. இங்கதான் (நெஞ்சினை தட்டிகொள்வார்), இந்த நெஞ்சிலதான் போட்டு வளத்தேன்….” சிவாஜியின் அந்த […]

நேற்று பாகிஸ்தானிய நண்பர்களுக்கு சுதந்திர நாள்.

நேற்று பாகிஸ்தானிய நண்பர்களுக்கு சுதந்திர நாள். அந்நண்பர்களை நோக்கி சொல்லலாம், நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், 200 ஆண்டுகாலம் போராடும்பொழுது லாகூரின் , கராச்சியின் உடன்பிறப்புக்களாக போராடும் பொழுது இந்திய விடுதலைக்கு என்றுதானே போராடினீர்கள்? பாகிஸ்தான் என்ற கனவு விளைந்தது சுதந்திரத்தின் சமீபத்தில்தானே? சொல்லிகொடுத்தவன் வெள்ளையந்தானே? இன்று என்ன கண்டுகொண்டீர்கள்? பொருளாதார ரீதியாக தோற்றுவிட்டீர்கள், ஆப்கானிய தீவிரவாதம் உங்களை அரித்துகொண்டிருக்கின்றது. ஒரு மாயவலையில் சிக்கி இருக்கின்றீர்கள். அந்நிய சக்திகளின் ஆயுதங்களில் நீங்கள் அவற்றை மறைக்க முயல்கின்றீர்கள். உங்கள் நாட்டை […]

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜாஜி, காமராஜர், அண்ணா காலம் வரை தமிழக முதல்வர் கொடியேற்ற அனுமதி இல்லை கலைஞர் வந்தபின் இதுசம்பந்தமாக‌ சில கேள்விகளை கேட்டார். பதில் இல்லை. ஒரு மாநில முதல்வர் இந்நாட்டின் கொடியினை சுதந்திர நாளில் ஏற்றமுடியவில்லை என்றால் அந்த பதவிக்கு என்ன மரியாதை என கேட்ட அவரின் கேள்விக்கு செவிடாக இருந்தது டெல்லி. தேசிய கொடியினை நீங்கள் ஏற்றுங்கள், மாநில கொடியினை நாங்கள் ஏற்றுகின்றோம் என சொல்லிவிட்டு ஒரு கொடியும் […]

பழையகாலத்து நடிகர் சன்முக சுந்தரம்

பழையகாலத்து நடிகர் அவர், கண்ணதாசனின் கறுப்புபணம் படத்திலே நடித்திருந்தவர் சன்முக சுந்தரம். அவரின் அக்கா சந்திரகாந்தாவும் பிரபல நடிகை, சிவாஜி கணேசனின் கர்ணன் படத்திலே சல்லியனாக நடித்திருந்தார், பாலசந்தரின் நிறைய படங்களில் நடித்திருந்தார் சுந்தரம். மிக அருமையான யதார்த்த நடிகர். இக்காலம் வரை நடித்துகொண்டுதான் இருந்தார். “வயசாயிடுச்சில்ல…” எனும் அவரின் பிரபலமான வார்த்தையுடன் அவரின் மரணத்தை நோக்க முடிகின்றது. நல்ல கலைஞனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். அவரின் முன்னாள் மனைவி ராம்பிரபாவும், நடிகர் சரத்பாபுவும் அவரின் அஞ்சலிக்கு வருவார்களா […]