பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குடியரசுத் தலைவர் தேர்தல் : மீரா குமார் நல்ல தேர்வு

ஒரு வழியாக மீரா குமாரை எதிர்வேட்பாளராக எதிர்கட்சிகள் அறிவித்திருக்கின்றன, முக ஸ்டாலினும் ஆதரிப்பதாக சொல்லியிருக்கின்றார் குடியரசு தலைவர் தேர்தல் முறை கொஞ்சம் குழப்பமான விஷயம், பாஜக பக்கம் காற்று சுழன்றடிக்கின்றது ஆயினும் எதிர்கட்சிகளும் மல்லுகட்டுகின்றன‌ மீரா குமார் நல்ல தேர்வு, கலைஞருக்கு அவர் மீது நல்ல அபிமானம் இருந்ததும் நினைவுக்கு வருகின்றது. குடியரசு தேர்தல் விவகாரம் அதிமுகவின் முகதிரையினை கிழித்திருப்பதுதான் காமெடி. மொத்தமாக எல்லா அணியும் பாஜக் காலில் விழுந்து கிடக்கின்றது, அடித்து கொண்டவர்கள் எல்லாம் ஒன்றாக […]

சிறு குறுச் செய்திகள்..

ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல்: முதல்வர் பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை முன்மொழிந்தனர் அதாவது பாஜகவின் தமிழக கிளைச்செயலாளர்கள் இருவர் முன்மொழிந்திருக்கின்றனர், இதிலென்ன அதிசயம் இவர்கள் ஆட்சியினை காப்பாற்றிகொள்ள தமிழிசையினை கூட முதல்வராக முன்மொழிய தயாராக இருப்பவர்கள், இதில் ராம்நாத் கோவிந்தனை முன்மொழிந்ததா ஆச்சரியம்? இனி தமிழக பாஜக வரிசை பொன்னார், தமிழிசை என்பதை தாண்டி பன்னீர், பழனிச்சாமி, தம்பிதுரை தினகரன் என நீளும்.. மிஸ்டர் பன்னீர் செல்வம், அம்மா மரணத்திற்கு நீதிவிசாரணை கோரும் உங்கள் தர்மயுத்தம் என்னாயிற்று? […]

விஜய் இனி “தளபதி” என அழைக்கபடுவாராம்

விஜய் இனி “தளபதி” என அழைக்கபடுவாராம் இதுதான் ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிப்பது என்பது, படம் சிக்கலில்லாமல் வர விழுந்து கிடப்பது அரசியல் மீது பெரும் கனவுள்ளவர் சந்திரசேகர், ஒரு காலத்தில் மகனை முதல்வராக அமர்த்தியே தீரவேண்டும் என்ற முடிவு அவருக்கு அன்றே இருந்தது, அந்த தீ அவர் மனதில் என்றும் உண்டு தன் மகன்/ மகள் முதல்வரானது தெரியாமல் செத்த‌ காஞ்சி நடராஜன், கோபால மேனன், திருக்குவளை முத்துவேலர், மைசூர் ஜெயராம் வரசையில் நாம் சேர […]

கருணா, சசிகலா, கருணைக்கொலை, கிரிக்கெட்…

சசிகலா கூறும் நபருக்குத்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பேன்: கருணாஸ் பேட்டி அதாவது சிறையில் இருக்கும் குற்றவாளி இந்திய குடியரசு தலைவர் தேர்தலை நிர்ணயிப்பாராம். அது என்ன ஜெயில் கைதிகளுக்கான சங்க தேர்தலா? அல்லது குற்றவாளிகளுக்கான அமைப்பு தேர்தலா? சசிகலா எனும் குற்றவாளி சொல்லி இவர் வாக்களித்து ஒரு குடியரசு தலைவர் அமர்ந்தால் அது இத்தேசத்தின் எவ்வளவு பெரும் அவமானம்? சிறைகைதி சொல்லி இவர் செலுத்தும் வோட்டு செல்லாது என இந்திய ஆணையம் அதிரடியாக அறிவிக்க வேண்டும்.. […]

ஈராக்கில் மசூதியினை தகர்த்தது ஐ.எஸ் இயக்கம்

ஈராக்கில் மசூதியினை தகர்த்தது ஐ.எஸ் இயக்கம் அதாவது ரமலான் என்றாலும், நோன்பு என்றாலும் அது உண்மையான இஸ்லாமியருக்கு, இஸ்லாமியர் பெயரில் இருக்கும் கொலைகாரர்கக்கு அல்ல‌ ஐ.எஸ் இயக்கம் ஷியா இஸ்லாமியர்களை அழிக்க வந்திருக்கும் சன்னி இயக்கம், ஹிட்லர் கொண்டிருந்த யூத அழிப்பிற்கு கொஞ்சமும் குறையாத வன்மம் இது அப்படி ஷியாக்களின் பள்ளிவாசல்கள் புனிதமான ரமலான் மாதத்தில் தகர்கபட்டிருக்கின்றது, ஐ.எஸ் இயக்கமோ இது அமெரிக்க தாக்குதல் என்கின்றது எப்படியோ பாபர் மசூதியினை இந்தியாவில் இடித்த கும்பல் போல, உலகில் […]

உதயகுமார் அந்த கும்பலோடு கைகோர்த்தது தெரிகின்றது

ரஜினியை எதிர்த்துப் பேசியதால் தன்னை தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தியதாகக் கூறியிருக்கிறார் சுப உதயகுமாரன். எல்லா மனிதனும் கோபத்தின் உச்சியில் தவறாக கொந்தளிப்பார், உதயகுமாரும் அதற்கு விதிவிலக்கு அல்ல‌ ரஜினிக்கு என்றுமே எதிர்ப்பு உண்டு, எம்ஜிஆர், ஜெயா,ராமதாஸ், சீமான், பாரதிராஜா என அந்த வரிசை பெரிது அப்படி ரஜினியினை எதிர்த்தது காரணமானால் இவர்கள் எல்லோரையும் எதிர்த்துவிட்டுத்தான் உதயகுமார் பக்கம் வந்திருப்பார்கள் சீமானையும், பாரதிராஜாவினையும், ராமதாசையும் விட்டுவிட்டு இவரை ஏன் சீண்ட போகின்றார்கள் இவரால் ரஜினிக்கு எந்த பாதிப்பும் இல்லை, இவர் […]

பார்த்தாலே நமக்கு “மெர்சலாகின்றது” … இன்னும் பிற….

இதனை பார்த்தாலே நமக்கு “மெர்சலாகின்றது” முன்பு பைரவா எனும் இம்சையினை ஜல்லிகட்டு போராட்டம் வந்து காப்பாற்றியது, அந்த பெரும் ஆர்ப்பாட்டத்தில் பைரவா படத்தின் தோல்வி மறக்கபட்டது, விஜயும் சத்தமில்லாமல் ஆர்ப்பாட்டக்காரர் நடுவில் அமர்ந்து ஜல்லிகட்டு வேண்டும் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார், எல்லாம் சுபம் இந்த மெர்சலுக்கும் ஒரு போராட்டம் வந்து மானம் காக்கமலா போய்விடும்? ஏற்கனவே தமிழகம் ஒரு மாதிரி மெரசலில் தான் இருக்கின்றது, அதிமுக அதனை விட மெரசலில் இருக்கின்றது, அரசியல் அழுத்தில் மெர்சல், சசிகலா […]

மலேசியா உணவு விஷயங்களுக்கு மிக சிறந்த நாடு

மலேசியா உணவு விஷயங்களுக்கு மிக சிறந்த நாடு, எல்லா வகை உணவும் எப்பொழுதும் எங்கும் கிடைத்துகொண்டே இருக்கும் மலேசியர்களுடன் நோன்பு திறப்பில் கலந்துகொள்வது வாழ்வின் மகிழ்வான தருணங்களில் ஒன்று, உணவு மட்டுமல்ல‌ புன்னகையும் அன்பும் மனமார உள்ளன்போடு பரிமாறுவார்கள். அப்படி இன்றைய நாள் ஆசீர்வாதிக்கபட்ட நாள் பெரும் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள், எல்லா நாட்டு உணவுகளும் கொட்டி கிடந்தன, இஸ்லாம் அனுமதித்த எல்லா உணவுபொருளிலும் என்னெல்லாம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்திருந்தார்கள். ஆடு முதல் கீரை வரை […]

ராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகள்…

ராஜிவ் பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என இந்த பழ.நெடுமாறன் அவிழ்த்துவிடுகின்றார் நடந்தது என்ன? இந்திய அமைதி ஒப்பந்ததை எல்லா குழுக்களும் ஏற்றன, பிரபாகரன் ஏற்கவில்லை, இந்திய ராணுவ‌ ஹெலிகாப்டரில் திருச்சி வந்து பின் சென்னை வந்து ராமசந்திரனை சந்த்தித்து ஒப்பந்ததை எதிர்க்க சொன்னார் பிரபாகரன், ராமசந்திரன் கைவிரித்தார் டெல்லிக்கு சென்றார் பிரபாகரன், ராஜிவினை சந்தித்தார். அங்கு நடந்த விஷயம் பல இழுபறி, பெரும் இழுப்பு, சுருக்கமாக இப்படி சொல்லிவிடலாம் தனி ஈழம் எனும் கோரிக்கையிலிருந்து இறங்கிவர […]