பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நம்மாழ்வார் என்ன போதித்தார்?

பிளாஸ்டிக் அரிசி சர்ச்சையில் நம்மாழ்வாரையும் சிலர் இழுத்து பேசுவதுதான் மிக பெரும் கொடுமை பிளாஸ்டிக் அரிசி நடப்பில் இல்லாவிட்டால் நல்லது, வதந்தி எனில் அது வந்த மூலத்தை தேடலாம், பிளாஸ்டிக் அரிசியினை எக்காலமும் இங்கு கொண்டுவரும்படி விழிப்பாய் இருக்கலாம், அது ஒன்றும் தவறில்லை நம்மாழ்வார் என்ன போதித்தார்? அன்றைய பயித்தொழில் இயற்கை சார்ந்திருந்தது, மனித குலம் பெருக பெருக வயல்களும், விளைநிலங்களும் பெருகின, அதாவது இயற்கை இவ்வளவுதான் விளைவிக்க முடியும் என்ற உச்சவரம்பு உண்டு, அதனை மீறி […]

தமிழகத்தின் விடிவு எப்போது?

உ பிரதேசத்தை தொடர்ந்து நேற்று மஹாராஷ்ட்ராவும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விட்டன. உ,பி செய்த மொத்த தள்ளுபடி 36000 கோடி ரூபாய். தமிழகத்தில் வறட்சியால் விவசாய கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொன்டோர் 400 பேர். தமிழக விவசாயிகள் பல முனை போராட்டங்களை டெல்லி வரையில் நடத்தி எந்த முடிவும் கிடைக்காத நிலையில் இன்னமும் தொடர்ந்து போராடுகிறார்கள்.  கடுமையான வறட்சி நிலவுவதும் விவசாயத் தொழிலே அழிவின் விளிம்பில் நிற்பதும் நம்மால் பார்க்க முடிகிறது. ஏன் […]

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது

இரு நாட்களுக்கு முன்பு, ஒரு தொப்புள் கொடி உறவு என சொல்லிகொள்ளும் இலங்கையர் ஒருவர் புன்னகை பூக்க சொன்னார், “எப்படி பார்த்தீயளே, இந்தியாவினை விரட்டி போட்டோம், இனி கிண்ணம் எங்கட நாட்டுக்குத்தான், கோப்பை கிடைக்காமல் போனாலும் உங்கள ஜெயிச்சு போட்டோம் பாத்தியளே” என கடும் உற்சாகத்தில் சொன்னார் “பொறுத்து பாரும், கடைசியில் உங்களை அடித்து விரட்டிவிட்டு கோப்பையினை வென்று காட்டுவோம்” என சொல்லிவிட்டு வந்தேன். சொன்னபடி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. அவரிடம் போட்ட சவாலில் பாதி வென்றாகிவிட்டது, […]

ஜெயா சொத்து.. ஓபிஎஸ் குமுறல்

அண்ணாமலை பல்கலைகழகம் இன்னும் சில விவகாரங்களில் குழப்பம் வந்தவுடன் அரசு ஓடி சென்று கையகபடுத்தியது, எம்ஏஎம் செட்டியார் சொத்து விவகாரத்தில் கூட அரசின் கரங்கள் உண்டு. குழப்பமான சொத்துக்களை அரசு ஏற்றுகொள்வது ஒன்றும் புதிதல்ல‌ அப்படியான தமிழக அரசு, போயஸ் கார்டனில் வெட்டு குத்து என நிலமை எல்லை மீறி செல்லும்பொழுது அதனை அரசுடமை ஆக்கினால்தான் என்ன? அதிமுக ஜெயா சொத்துக்கு ஒரு நீதி? செட்டியார் சொத்துக்களுக்கு ஒரு நீதியா? எதற்கு பொறுக்கவேண்டும்? முன்னாள் முதல்வரின் வாரிசில்லா […]

ஒரு சலசலப்பு ஓடிகொண்டிருக்கின்றது, எடப்பாடிதான் தொடங்கினார்

ஒரு சலசலப்பு ஓடிகொண்டிருக்கின்றது, எடப்பாடிதான் தொடங்கினார், அதாவது ஸ்டாலின் அதிமுக அரசினை கவிழ்க்க சதி செய்கின்றார் என்பது அது. அதிமுக ஆட்சியினை கவிழ்க்க மிரட்டல் சதி செய்வது யாரென்றால் அது உலகிற்கே தெரியும், சாட்சாத் அவர்கள்தான் இனியொரு காலம் அவர்களுக்கு வாய்க்காது, அதனால் பன்னீரோ, எடப்பாடியோ, தினகரனோ ஆளாளுக்கு தங்களுக்கு எது ஆதாயமோ அதற்காக ஆட்சி கவிழ்ப்பு , அது இது என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் இவர்களில் யாருக்கும் ஆட்சி கவிழ விருப்பமேயில்லை, அதனை கவிழவிடமாட்டார்கள்,, மாறாக இப்படி […]

பொள்ளாச்சி குஷ்பூவால் அழகாச்சி…

அழகான கனவிலே வாழ்ந்தவன் பாரதி, அவனி கற்பனையும் எதிர்பார்ப்பும் அவனுக்கு அவ்வப்போவது மகிழ்வினை கொடுத்தன, பெரும் பராரியாக வாழ்ந்த அவன் , தன் ஏக்கத்தை எல்லாம் கவிதையாகவே வடித்து வைத்தான், தனது அபிமான ஓய்விடம் எப்படி இருக்க வேண்டும் என அவன் எழுதியது இப்படித்தான் காணி நிலம் வேண்டும்-பராசக்தி காணி நிலம் வேண்டும்;-அங்கு, தூணில் அழகியதாய்-நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணி நிலத்திடையே-ஓர் மாளிகை கட்டித் தரவேணும்;-அங்கு, கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல […]

இப்பொழுது உண்மை புரிகின்றது…

தமிழகத்தில் கடும் வறட்சி, காவேரி டெல்டா பொய்த்துவிட்டது, கொஞ்சமும் விளைச்சல் இல்லை மற்ற பகுதியில் நிலத்தடிநீர் 1000 அடிக்கு கீழ் சென்றுவிட்டது, குடிக்கவே நீருக்கு பஞ்சம் இப்படியான நிலையில் பெரும் உணவு பஞ்சம் எற்பட்டிருக்க வேண்டும், ஆனால் அப்படி செய்திகள் இல்லை, பெரும் குழப்பம் ஏற்படுத்திய கேள்வி அது இப்பொழுது உண்மை புரிகின்றது, பிளாஸ்டிக் அரிசியும், சோப்பு நுரை பாலும் புரண்டோடும் தமிழகத்தில் எப்படி உணவுபஞ்சம் வரும்??? விவசாய வீழ்ச்சி உணவு தட்டுப்பாடு எனும் உண்மைதான் பிளாஸ்டி […]

பிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் எம்.பியாக‌ நுழைந்தார் முதல் சீக்கிய பெண்மணி

பிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் எம்.பியாக‌ நுழைந்தார் முதல் சீக்கிய பெண்மணி , கூடவே 12 இந்திய வம்சாவளியினர் எம்.பி.க் களாக தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர். பெரும் ஜனநாயக நாடு என்றும், உலகிற்கே மக்களாட்சியின் மகத்துவத்தை சொன்னதாக சொல்லும் பிரிட்டனில் இப்பொழுதுதான் இந்திய வம்சம் எம்.பி ஆகியிருக்கின்றதாம் ஆனால் இந்திய வம்சாவளிக்கும், தமிழருக்கும் என்றோ பெரும் பொறுப்புக்களையும், அமைச்சர் பதவிகளையும் அள்ளி கொடுத்த நாடு மலேசியா, இன்னும் குறையாமல் கொடுத்துகொண்டிருக்கின்றது அவ்வளவு அற்புதமான ஜனநாயக நாடு மலேசியா, இந்த […]

ஈரானில் ஐஎஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் உலகை அதிர வைக்கின்றது

ஈரானில் ஐஎஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் உலகை அதிர வைக்கின்றது, அதனை விட அச்சம் அவர்கள் தாக்குதலுக்கு முன்பாக வெளியிட்ட காணோளி இப்பொது உலாவருகின்றது ஈரானையும், சவுதியினையும் தாக்குவோம் என அவர்கள் அறிவித்திருந்தார்கள் ஈரான் தாக்குதலில் பர்தா அணிந்த பெண் வேடத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் எதிர்பாரா தாக்குதல் நடத்தினர் சவுதியில் எம்மாதிரி தாக்குவார்கள் என தெரியாமல் சவுதி தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது வித்தியாசனமான நாடு சவுதி, அங்கு பணியாற்ற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் சவுதியினை விமர்சித்தால் பல வருடம் உள்ளே […]

சிலரை உடனே நாடுகடத்த வேண்டும்

சிலரை உடனே நாடுகடத்த வேண்டும், வைகோவினை போல சிக்கல் வந்தால் ஆளில்லாத தீவிற்காவது கடத்தவேண்டும் காரணம் அபபடிபட்டவர்கள் கிள்ப்பிவிடும் புரட்டுகள் அப்படி அதாவது நாடார் புகழ்பாடும் ஒருவர், திருவனந்தபுரம் என்றால் என்ன தெரியுமா? திரு+அனந்தபத்மநாபன்+புரம் என அர்த்தம், அனந்த பத்மநாபன் என்பது ஒரு நாடார், அது நாடாருக்கான ஊர் என குதித்துகொண்டிருக்கின்றார் அட பரிதாபமே.. அனந்தம் என்றால் சாய்ந்திருத்தல் அல்லது படுத்திருத்தல் என பொருள், அனந்த நிலை. பத்மநாபன் என்றால் என்ன? பத்மம் என்றால் தாமரை, நாபி […]