பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வம்புக்கு இழுப்பதில் பல வகை உண்டு : குஷ்பு vs தமிழிசை

வம்புக்கு இழுப்பதில் பல வகை உண்டு, டிரம்ப் வம்பிழுப்பது, பாகிஸ்தான் வம்பிழுப்பது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் களத்தில் வம்பிழுப்பது ஒருவகை, கிராமத்து கிழவிகள் திண்ணையில் அமர்ந்துகொண்டு வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது இன்னொரு வகை தமிழிசை வம்பிழுப்பது கடைசி வகை இப்பொழுது அவரின் வம்பிழுப்பு எல்லோரையும் சீண்டிவிட்டு குஷ்பூ மீது சென்றிருக்கின்றது, ரஜினி அரசியல் குறித்து தமிழிசை ஏதோ சொல்ல அது குஷ்பூவின் டிவிட் வரை சென்றிருக்கின்றது வார்த்தைகள் எண்ணங்களை வெளிபடுத்தும் என குஷ்பூவினை தமிழிசை சாடியிருக்கின்றார், சொல்லியிருப்பது […]

இத்தேசம் ஒருநாளும் எம்மை கைவிடவே விடாது

புலிகளை யாரும் தமிழரின் மொத்த பிரதிநிதியாக ஏற்கவில்லை, அவர்களாக துப்பாக்கி முனையில் அடக்கி நாங்கள் ஈழதமிழர்களின் ஒரே அதிகாரம் என்றார்கள் அப்படி இங்கு சிலர் தான் மட்டுமே தமிழரின் நலனை குத்தகைக்கு எடுத்திருக்கின்றேன், நான் மட்டுமே தமிழினத்தை நேசிக்கின்றேன் , நான் மட்டுமே தமிழகம் காப்பேன் என் அனுமதி எல்லாவற்றிற்கும் முக்கியம் என சொல்லி கொண்டிருக்கின்றார்க‌ள் ஈழபுலிகளின் பாசிச பாணியினை இங்கும் கொண்டுவர பார்க்கின்றார்கள், யாராவது கொஞ்சம் பணமும் ஆயுதமும் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் இங்கும் முள்ளிவாய்க்காலை உருவாக்க […]

யார் இவரோ, யார் இவரோ ….

உணர்ச்சி உள்ளே வந்தால் அறிவு வெளியே செல்லும், ஆசை வந்தால் வெட்கம் வெளியேறும், ஆனால் பணத்தாசை உள்ளே வந்தால் மானமும் உணர்ச்சியும் அறிவும் மொத்தமாக‌ வெளிசெல்லும் அப்படி சில தமிழக ஊடகங்களுக்கு அறிவு,மானம், உணர்ச்சி எல்லாம் சென்றுவிட்டன, அதாவது இவர்கள் சில சந்திப்புகளை நடத்துவதும் அதனை ஒளிபரப்புவதும் வணிக நோக்கமன்றி வேறல்ல‌ அவர்கள் தொழில், ஆனால் சமூகம் பார்க்கும் ஊடகங்களில் நல்லவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள், வழிகாட்டிகள் சிந்தனையாளர்களை அழைத்தால் சிக்கல் இல்லை ஆனால் கொலைகாரனை, நாட்டு எதிரியினை, […]

“வருங்கால முதல்வரே” என ரஜினிக்கு போயஸ் கார்டனில் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு

“வருங்கால முதல்வரே” என ரஜினிக்கு போயஸ் கார்டனில் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு இதிலென்ன பரபரப்பு? அடிக்கடி இப்படி நோட்டீஸ்களை தமிழகம் கண்டிருக்கின்றது ஆனால் முதல்வர் என்ன? எங்கள் பிரதமரே, குடியரசு தலைவரே என்றெல்லாம் நோட்டீஸ் அடித்தாலும் நெளிந்து கொடுக்கின்ற ரகமா ரஜினி? நெவர் அந்த பாபாவே நீங்கள்தான் என்றாலும் அவர் அசரமாட்டார் பின் என்ன செய்யலாம் குஷ்பூ ரசிகர் மன்றம் சார்பாக, “வருங்கால கவுண்சிலரே” , “வருங்கால பஞ்சாயத்து தலைவா”, “வருங்கால நகரசுத்த தொழிலாளி””வருங்கால கொசுமருந்து” என […]

ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தபின் சீமான் முழக்கம்

ஆதித்தனாரின் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம், ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தபின் சீமான் முழக்கம் தந்திடிவிக்கு விசுவாசமாக இப்படி ஆதித்தனார் சிலைக்கு மாலை கூட போடாவிட்டால் எப்படி? ஆதித்தனார் கனவு என்ன? கொள்கை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும், அவரின் முடிவு என்ன? “நாம் தமிழர்” கட்சியினை திமுகவோடு சேர்த்து திமுகவின் அமைச்சரவையில் சபாநாயகர் ஆனார் ஓஹோ..அந்த திமுக அரசின் சபாநாயகர் பதவிக்கா கனவு காணுகின்றீர் ஐயா?? நிச்சயம் நிறைவேறும்… தினதந்தி நடத்தியவரே திமுகவில் சங்கமித்தார் என்பதால் தினப்பொய் […]

ரஜினி, குஷ்பு : பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்…

ரஜினிக்கு பாதுகாப்ப்உ கேட்ட டிஜிபி அலுவலகத்தில் இந்து அமைப்புக்கள் மனு முன்பு குஷ்பூவிற்கும் ரஜினிக்கு போன்றே அமைப்புக்களால் கடுமையான அச்சுறுத்தல் இருந்தது, ஒரு பாதுகாப்பும் அளிக்கபடவில்லை, வற்புறுத்தியும் வழங்கபடவில்லை அச்சுறுத்தல், வீட்டில் கல் எறிதல் என கடும் அராஜகம் நடந்த பொழுதும் பாதுகாப்பு கொடுக்கபடவில்லை இப்பொழுது ரஜினிக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்கின்றார்கள் ரஜினி இதுவரை எந்த அரசியல் பொறுப்பிலும் இல்லை ஆனால் குஷ்பூ காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் என்பது கவனத்திற்குரியது ரஜினி […]

ஏழு அரசியல் காமெடி துணுக்ஸ்….

அரசுக்கு தேவையில்லாத செலவு ஏற்படுவதால், வைகோ சொந்த ஜாமீனிலேயே போகலாம்.. ஒரு தேச துரோக இந்திய சட்டத்தை மதிக்காத இவரின் வழக்கறிஞர் பட்டத்தை பறித்திருக்க வேண்டும், ஆனால் இப்படி தலையினை தட்டி சொல்லி அனுப்பியிருக்கின்றார்கள் என்றால், என்ன அர்த்தம்?? ஏதோ சிரிப்பு வக்கீல் என்று அர்த்தம்.. கோவாலு.. உன்னையும் நம்பி ஒருத்தன் ஒரு பெரும் கொலையும் செய்து, விடுதலை போராட்டம் நடத்தினான் பாரு, அவன் எப்படி உருப்படுவான்? அப்படித்தான் சாவான் தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது: […]

கலைஞருக்கான காலமும் கிட்டதட்ட முடிந்துவிட்டது

ஆண்டவனோ, இயற்கையோ எல்லோருக்கும் குறிப்பிட்ட காலத்தைத்தான் கொடுக்கும், அதனை மீற யாராலும் முடியாது, யாராக இருந்தாலும் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். கலைஞருக்கான காலமும் கிட்டதட்ட முடிந்துவிட்டது, என்று அவரின் எழுத்து வரவில்லையோ அன்றே உலகிற்கு தெரிந்த விஷயம் அது, தன் சுண்டுவிரல் அசைக்க முடிந்தாலும் எழுதுகின்ற வகை அவர் இந்த புகைபடத்தினை ஏறெடுத்து பார்க்க முடியவில்லை, வழக்கமான கலைஞரின் முகம் இது அல்ல, அவரை ஏன் இப்படி எல்லாம் இம்சைபடுத்த வேண்டும்? அம்மனிதன் ஏறாத மேடையோ அவரை கொண்டாடாத, […]

என்றோ எழுதியது, இன்றும் சீமான், பாரதிராஜாவிற்கு பொருந்துகின்றது

என்றோ எழுதியது, இன்றும் சீமான், பாரதிராஜாவிற்கு பொருந்துகின்றது, ரஜினி ரசிகர்கள் இருப்பின் கவனத்தில் கொள்ளலாம், எப்பொழுதோ எழுதியது எப்பொழுதும் இந்த கும்பலின் அழிச்சாட்டியத்திற்கு பொருந்துகின்றது, அவர்கள் அப்படித்தான் அதாகபட்டது, இது தமிழ்நாடு தமிழன் முதல்வராகவேண்டும், மற்ற இனம் எல்லாம் வாழட்டும் தமிழன் ஆளட்டும் என்பது சீமானின் தற்போதைய கொள்கை, இதற்கு சில சீடர்கள் சரி ஆனால் சிங்களனும் இலங்கையில் அதனைத்தான் சொன்னான், இது சிங்கள பூமி, மலையக தமிழன்,ஈழ தமிழன், மூர்ஸ் எனப்படும் இஸ்லாமிய தமிழன் என […]

வாக்கு வங்கிகாக பிந்த்ரன் வாலேயினை வளர்த்துவிட்டு…

வாக்கு வங்கிகாக பிந்த்ரன் வாலேயினை வளர்த்துவிட்டு பஞ்சாபில் பேரழிவினை ஏற்படுத்தி அதனால் செத்தும் போனார் இந்திரா அவர் செய்த மாபெரும் தவறு அது, அடுத்த தவறு ஈழத்தில் செய்தது, பாம்புகளுக்கு பால்வார்த்தது நிச்சயமாக சீக்கியரிடம் தப்பியிருந்தால் ஒரு ஈழத்தவரால் இந்திரா கொல்லபட்டிருப்பார் பின் அது அவர் மகன் தலையில் விடிந்தது, பிரபாகரனுக்கு முன்பே ராஜிவினை குடும்பத்தோடு கொல்ல தேடியவர் உமா மகேஸ்வரன் எனும் ஈழபோராளி பஞ்சாப் போல ரத்த ஆறு ஓடியிருக்க வேண்டிய தமிழகம் மக்களின் தேசிய […]