பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழக அரசு மின்சாரம் வாங்கியதற்காக செலுத்தவேண்டிய தொகை பாக்கி….

திருவள்ளுர் மாவட்டம், வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு தமிழக அரசு செலுத்தவேண்டிய தொகை பாக்கி உள்ளதாகவும், தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1,156 கோடி செலுத்தவேண்டி உள்ளதால், வல்லூர் அனல்மின்நிலைய நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிவிட்டு மின்சாரத்தை நிறுத்தியதாகவும் ஒரு செய்தி ஜெயா சொத்துமதிப்பு எத்தனாயிரம் கோடி?, கணக்கில் வராத சொத்துக்கள் எத்தனை ஆயிரம் கோடி?, கூவத்தூரில் செலவழிக்கபட்டது எத்தனை ஆயிரம் கோடி…… அதிமுக அமைச்சர்கள் வீட்டில் நடந்த சோதனையில் ஏராளமான நூறு கோடிகள் கைபற்றபட்டது, ஆர்கே நகரில் அதிமுக பல […]

தமிழகமெங்கும் கடுமையான மின்வெட்டு : செய்தி

மின் உற்பத்தி பாதிப்பு, தமிழகமெங்கும் கடுமையான மின்வெட்டு : செய்தி இப்பொழுதிருக்கும் அமைச்சர்கள் வித்தியாசமானவர்கள் அல்லவா? வீடு வீடாக பேட்டரி வழங்குதல் போன்ற திட்டங்களில் இறங்கலாம். அதற்கும் மேலாக மின் உற்பத்தி டர்பன்களை கையால் சுழற்றும் திட்டமும் இருக்கலாம் சென்னையில் எந்த மின்வெட்டானும் ராமசந்திரன் சமாதி ஏரியா மட்டும் இருளில் மூழ்காது, ஏனென்றால் அவரும், ஜெயாவும் விழித்திருந்து அண்ணாயிச கொள்கைகளை படிக்கின்றார்கள் அல்லவா? கல்லறைகளுக்கு இருக்கும் மின்வசதி அங்கு மக்களுக்கு இல்லை. கூடன்குளம், கல்பாக்கம் என பல […]

அருணாசல பிரதேசத்தின் ஊர்களுக்கு சீனமொழியில் பெயர்….

சீனா அருணாசல பிரதேசத்தின் ஊர்களுக்கு சீனமொழியில் பெயர் வைத்துவிட்டதாம், தமிழகத்தில் பலர் பொங்கிகொண்டிருக்கின்றார்கள் அவர்களின் நாட்டுபற்று வாழ்த்துகுரியது எனினும் அவர்களின் சொந்த ஊர் பெயர்களை வெள்ளையன் குதறிவைத்துவிட்டு போனதை அப்படியே வைத்திருக்கின்றார்கள் டிரிச்சி, தஞ்சூர், டுடுகுரின், ஊட்டி, என பல ஏராளமான ஊர்கள் வெள்ளையன் அழைக்க தொடங்கிய ஊர்பெயர்கள் அப்படியே நீடிக்கின்றன, அவன் சுருக்கியும், இன்சியல் வைத்தும், வெட்டியும், நறுக்கியும் அழைத்த பெயர்களில்தான் இன்றும் தமிழக நகரங்களும் ஊர்களும் அழைக்கபட்டு கொண்டிருக்கின்றன.. அவன் வாயில் அவ்வளவுதான் நுழையும், […]

திரையுலகினர் வேலைநிறுத்த்த‌ போராட்டம் : விஷால் அறிவிப்பு

திருட்டு விசிடியினை ஒழிக்காவிட்டால் மே 30முதல் திரையுலகினர் வேலைநிறுத்த்த‌ போராட்டம் : விஷால் அறிவிப்பு அந்த வேலையினை ஒரேடியாக நிறுத்தி தொலைந்தால் என்ன?, ஏன் போராட்டத்திற்கு மட்டும் வேலையினை நிறுத்தவேண்டும் மிஸ்டர் விஷால், கமலஹாசன் இப்பொழுதெல்ல்லாம் உங்கள் அருகிலேதானே இருக்கின்றார், திருட்டு விசிடி சவாலை எதிர்கொள்ள அவரிடம் இல்லாத ஐடியாக்களா? அந்த அனுபவத்தை கொஞ்சம் கேட்டால்தான் என்ன? நீங்கள் கேட்கவே மாட்டீர்கள், கேட்டால் உங்கள் கெத்து என்னாகும்?, எப்படியும் போகட்டும்.. இந்த திருட்டுவிசிடி செய்யும் வேலையினைத்தான் ஜெராக்ஸ் […]

ஹாஜி மஸ்தான் பாத்திரத்தில் ரஜினி நடிக்கின்றார் : செய்தி

மும்பை தாதா ஹாஜி மஸ்தான் பாத்திரத்தில் ரஜினி நடிக்கின்றார் : செய்தி ரஜினியினை அந்த மஸ்தான் வேடத்தில் நடிக்க சிவசேனா + பாஜக கும்பல்கள் விடுமா? அதனை மீறி நடிக்கும் அளவிற்கு ரஜினிகாந்த் அவ்வளவு தைரியசாலியா? முன்பே திப்புசுல்தான் வேட சர்ச்சையில் ரஜினி தப்பிஓடிய வரலாறு உண்டு.. இப்பொழுது யாரேனும் ஒரு காவி உறுமினாலே ரஜினி ஓடிவிடமாட்டாரா?

ஏப்ரல் 26, கதிரியக்க அழிவு சரித்திரம்.

ஏப்ரல் 26, கதிரியக்க அழிவு சரித்திரம். இன்று ஜென்மவிரோதிகளாக‌ அடித்துகொள்ளும் ரஷ்யாவும் உக்ரைனும், அன்று சோவியத் யூனியன் , பழைய ரங்கராவின் படங்களின் குடும்பம் போல‌ மகா ஒற்றுமை, பொதுவுடமை அல்லது பண்ணைமுறை ஏதோ ஒன்றில் இணைந்திருந்தது. அன்று அவர்கள் பெரும் வல்லரசு, வல்லரசு என்றால் நிச்சயம் அணுகுண்டு வேண்டும். அணுகுண்டு வேண்டுமென்றால் அணுவுலை வேண்டும். 1955 களிலே ஏகபட்ட அணுவுலைகளை அமைத்திருந்தது ரஷ்யா, 1958ல் அவர்களின் முதல் அணுவுலை விபத்து நிகழ்ந்தது, 1974ல் ஷென்ஸ்கோவ், 1983ல் […]

ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும், நான்கு ஹீரோக்கள் எதற்கு??” : ஜோதிகா கேள்வி

“சினிமாவில் இயக்குநர்கள் ஒரு ஹீரோவுக்கு நான்கு ஹீரோயின்கள் வைத்தால் நான்கு காதலிகள் வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று இளைஞர்கள் நினைப்பார்கள். ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும், நான்கு ஹீரோக்கள் எதற்கு??” : ஜோதிகா கேள்வி அம்மணி ஏதோ ஒரு சில சூர்யா படங்களால் பாதிக்கபட்டிருப்பது தெரிகின்றது, சிங்கம் வரிசை படமாக இருக்கலாமோ? நேரடியாக கணவனிடம் கேட்க முடியாத விஷயங்களை, இயக்குனர்களிடம் கேட்டு கோபத்தை குறைத்திருக்கலாம் 🙂 என்ன இருந்தாலும் தமிழகத்து மருமகள் அல்லவா? பொங்கிவிட்டார்.

தினகரன் இன்று இயேசுநாதரைப் போல புனிதராகியுள்ளார் – நாஞ்சில் சம்பத்

நேற்று நள்ளிரவில் பன்னீர் அணியும், எடப்பாடி அணியும் பேச்சுவார்த்தை நடத்தின, இன்றிரவும் பேச்சுவார்த்தை நடக்கும் : செய்தி பாஷா படத்து கடத்தல் கேங் போல நள்ளிரவில் மீட் செய்திருக்கின்றார்கள், பொதுவாக மாபியா குழுக்கள் அப்படித்தான் சந்தித்துகொள்ளும் இவர்களும் அப்படியே சந்திக்கின்றார்கள், ஒருவேளை நள்ளிரவு 12 மணிக்குத்தான் அம்மா ஆன்மா பஞ்சாயத்து பேச வருமோ? ஏதும் சுடுகாட்டு அருகில் சந்திப்பார்கள் போல..    கலிங்க போரிலே அசோகர் வென்றார், மனம் மாறினார் என்றுதான் வரலாறு சொல்லும் ஆனால் அந்த […]

தமிழகத்து ஐன்ஸ்டீன் ராமானுஜம்

தமிழகத்து ஐன்ஸ்டீன் கணிதம் எல்லோருக்கும் புரியாது, அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனி திறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம். அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள். ஏழை குடும்பம், கணிதம் […]

நிலக்கரி ஊழல் வழக்கினை பதிந்த சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது வழக்குபதிவு

நிலக்கரி ஊழல் வழக்கினை பதிந்த சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது வழக்குபதிவு ஆக சிபிஐ அதிகாரிகள் மீதே பெரும் குற்றசாட்டுகள் உள்ள நிலையில், அவர்கள் தொடுத்த வழக்கு எப்படி உண்மையாயிருக்கும் என கேள்விகள் எழ தொடங்கியாயிற்று.. இன்று வரை நீதிபதி ஷைனி கேட்டுகொண்டிருக்கும் ஆதாரத்தை இந்நநொடி வரை சிபிஐயினால் கொடுக்கமுடியவில்லை அடிப்படை ஆதாரம் இல்லாமலா வழக்கு தொடுத்தீர்கள் என நேரடியாகவே சீறியவர் நீதிபதி ஷைனி, அவர் குமாரசாமி ரகமல்ல, குன்ஹா ரகம், மிக நேர்மையாளர் அன்றே […]