பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழக நிகழ்வுகளும் பா.ஜ.க-வும்

கவர்னர் யோசிக்காமல் அன்றே முடிவு எடுத்திருந்தால் இன்றைக்கு தமிழகத்தின் நிலை என்ன? பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாருக்கு இப்பொழுது யாரோ நல்ல ஆலோசகர் கிடைத்துவிட்டார்கள், மனிதர் பொறுப்பாக் பேச தொடங்கியிருக்கின்றார், கொஞ்ச காலமக அவரிடம் மாறுதல் தெரிகின்றது தமிழிசைக்கு அப்படி யாரும் சிக்கவில்லையா? அல்லது சிக்கியவர்களை தன் போல மாற்றிவிட்டாரா? என்பதும் தெரியவில்லை பொன்னார் அப்படியே இருக்கின்றார், தமிழிசை மாறவே இல்லை, மாறவும் மாட்டார். தமிழக நிகழ்வுகளுக்கும், பா.ஜ.க-விற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” – அருண் ஜெட்லி முன்பு அமெரிக்க […]

வைகோ மைண்ட் வாய்ஸ்….

“எப்படியோ நமது மருமகன் டெக்ஸ்டைல்ஸ் வாங்கியது முதல், நாம் கண்டெய்னர் வாங்கியது வரை எல்லாமே வருமானத்துக்கு அதிகம் தான். நம் மீது வழக்கு போட்டிருந்தால் என்ன ஆயிருக்கும்? ஆனாலும் நம்மீது ஒரு வழக்கும் இல்லை, நம்மை கண்டு கொள்ளாதவரை நமக்கு லாபம் கலைஞரிடம் இருந்திருந்தால் இவ்வளவு கிடைத்திருக்குமா?  

சசிகலா அம்மையாரே ….

சசிகலா அம்மையாரே நீங்கள் இவ்வளவு பணம் சேர்த்தது யாருக்காக? நிச்சயம் தேர்தலுக்க்காக. வோட்டுக்கு 5 ஆயிரம் வரை கொடுக்க நீங்கள் மன்னார்குடியிலிருந்தா கொண்டுவரமுடியும்? இங்குதான் சுரண்டமுடியும் அப்படி மக்களுக்காக சுரண்டி, தேர்தலில் மக்களுக்கே கொடுத்தீர்கள் மக்களுக்கு 5 ஆயிரம் என்றால், அதன் மேலுள்ள நிர்வாகி எவ்வளவு சுரண்டியிருப்பான், அதற்கு மேல் உள்ளவன் எவ்வளவு அமுக்கியிருப்பான்? வோட்டுக்கு 15 ஆயிரம் கணக்காகின்றது அதன் பின் தேர்தல் செலவு, பெட்ரோல் செலவு, பிரியாணி செலவு, விந்தியா செலவு, நமீதா செலவு […]

தி.மு.க என்ற கட்சியே இருக்க கூடாது : சசி ஆவேச பேச்சு

தி.மு.க என்ற கட்சியே இருக்க கூடாது : சசி ஆவேச பேச்சு ஏம்மா..உனக்கு ஏதாவது வரலாறு தெரியுமா? எழுதபடிக்கவாவது தெரியுமா? ஆனானபட்ட இந்திரா முதல் எத்தனை பேர் அப்படி மல்லுகட்டி இறுதியில் தோற்றார்கள் தெரியுமா? ஏன் உங்கள் “அழகுகுரு” எம்ஜிஆரால் கூட அதனை செய்ய‌ முடியவில்லையே எத்தனை பெரும் புயல்களை கடந்து நிற்கும் அந்த ஆலமரத்தினை இந்த சொகுசு காரின் மின்விசிறிகாற்று சாய்த்துவிட முடியுமா? அல்லது நீங்கள் ஊதி அது சரிந்துவிடுமா? ஏதோ வோட்டு வாங்க இப்படி […]

1995களில் தமிழகம் அரண்டு போயிருந்தது…

1995களில் தமிழகம் அரண்டு போயிருந்தது, யாராலும் கேள்வி கேட்க முடியா காலங்கள் அவை வளர்ப்பு மகன் திருமணம், கங்கை அமரன், பாலு ஜூவல்லர்ஸ்க்கு மொட்டை , ஜெயலலிதாவிடம் சசிகலாவினை சேர்த்த சந்திரலேகா மீதே ஆசிட் வீச்சு, தமிழகம் முழுக்க வளைப்பு என அக்கும்பலின் ஆக்டோபஸ் கரங்கள் நீண்ட நிலை இந்த நிலையில்தான் முதல்வரானார் கலைஞர், அவர் நேரடியாக காவல்துறையினை ஏவி ஜெயா கும்பலை பிடிக்கவில்லை. கலைஞர் எப்பொழுதும் எது சாத்தியமோ? எது யதார்த்தமோ? அதனைத்தான் செய்வார் அப்படித்தான் […]

சுத்த பைத்தியக்கார கட்சியாக இருக்கும் போலிருக்கின்றது

 சசிகலா வழக்கில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பார் : தம்பிதுரை இதுதான் அதிர்ச்சியில் மூளை கலங்கி பைத்தியம் ஆவது என்பது இனி எங்கு சென்று முறையிடுவார்? ஐநா சபையிலா? “என் போக்கில நாட்டுமருந்து கடையும், வீடியோ கடையும் வச்சிருந்தேன்.. என்ன முதல்வராக்குரேன்னு சவால் விட்டு, ஆசைகாட்டி , கடைசியில இப்படி பெங்களூர் ஜெயில்ல அடச்சிட்டீங்களே நட்டு மாமா ஏன் இப்படி செஞ்சீங்க நட்டு மாமா… இன்னொருக்கா […]

கலைஞர் உத்தமரா? ஜெயா மட்டும் ஊழல் செய்தாரா?

கலைஞர் உத்தமரா? ஜெயா மட்டும் ஊழல் செய்தாரா? அவர்கள் மீது மட்டும் தண்டனையா? என சிலபேர் கிளம்பியிருக்கின்றான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பாருங்கள் ஜெயா . சிறுதாவூர், ஐதரபாத், கொடநாடு என மாளிகைகளை கட்டினார். கொடைக்கானலில் ஜெயாவால் ஒரு ஹோட்டல் கட்டபட்டு பின் சிக்கலானது, ஆக இன்னும் தெரியாத மாளிகைகள் எத்தனையோ??? கலைஞர் மிக பொறுப்ப்பாக அன்று வள்ளுவர் கோட்டம் முதல் பின்னாளில் புதிய சட்டமன்ற கட்டிடத்தையும், அண்ணா நூலகத்தையும் கட்டினார். இதில் எது பொது […]

மச்சான்…சிங்கத்த சாய்ச்சிட்டாங்க மச்சான்….

 உடன்பிறப்பே நான் என் அனுபவங்களை எழுதியது எல்லாம் நெஞ்சுக்கு நீதி, இதோ என் அனுபவத்தில் பார்க்கின்றேன் கண்ணுக்கு நீதி. 1991 முதல் 1996 வரை இவர்கள் ஆடிய ஆட்டங்கள், தமிழ்நாட்டை சுரண்டிய சுரண்டல்கள் இன்னும் ஏராளமான சொல்லணா முறைகேடுகளில் தமிழகம் சிக்கியிருந்த பொழுதுதான், இனி தமிழ்நாட்டை மீட்டே தீரவேண்டும் என கழகம், மறைந்த மூப்பனார்,அன்பு தம்பி ரஜினிகாந்த், சிதம்பரம், சோ ராமசாமி எல்லோரும் இணைந்து செயலாற்றி, தமிழக மக்கள் ஒத்துழைப்போடு ஆட்சியினை நம்மிடம் ஒப்படைத்தார்கள். நாம்தான் நல்லாட்சி […]

தீர்ப்புக்கு பிறகு ….

என் மனைவி சசிகலா முதல்வாரகும் நாளில்தான் போயஸ்கார்டனில் கால் வைப்பேன் என சபதமிட்டார் நடராஜன் இனி போயஸ் கார்டணிலிருந்து மொத்தமும் காலியாக போகின்றது, 10 ஆண்டுகளுக்கு இனி சசிகலா முதல்வர் கனவு காணமுடியாது 10ம் வருடம் முடியும்பொழுது போயஸ் கார்டன் வீடே எப்படி இருக்கும் என சொல்லமுடியாது எல்லா அட்டகாசங்களுக்கும் ஒரு முடிவு உண்டு, எல்லா அக்கிரமங்களுக்கும் ஓர் எல்லையுண்டு ஆண்டவன் அப்படித்தான் இந்த உலகை படைத்திருக்கின்றான். என்றோ இதே சு.சாமி தொடுத்த வழக்கு மிக சரியாக […]

ரிசார்ட் எம் எல் ஏ-க்கள் ஓட்டை காலணா….

ஏதோ ஒரு படத்தில் ஓட்டை காலணாவினை வைத்துகொண்டு கவுண்டரை மிரட்டுவார் செந்தில், அந்த காலணாவிற்காக செந்திலுக்காக சொத்துக்களை இழப்பார் கவுண்டமணி பின்னர் அந்த காலணா செல்லாது என்ற நிலை வந்தவுடன், கவுண்டரின் ரியாக்க்ஷணும், செந்தில் வாங்கும் அடியும் நல்ல காமெடி. ரிசார்ட்டில் இருக்கும் எம் எல் ஏக்கள் நிலை கிட்டதட்ட ஓட்டை காலணா செந்தில் நிலையிலும், சசிகலா நிலை கவுண்டமணி நிலையிலும் இருக்கின்றது அப்படியாக ரிசார்ட்டில் இருப்பவர்களுக்கு இந்த பாலும் பழமும், தேனும் தினைமாவும் உபசரிப்பெல்லாம் தீர்ப்பு […]