பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜல்லிக்கட்டை முன் வைத்து விபரீத கோரிக்கைகள் , நிகழ்வுகள் ….

பல கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டம் : செய்தி எந்த மாணவன் ஒழுங்காக வகுப்பில் இருக்க ஆசைபடுவான்? வாய்ப்பு கிடைத்தால் அப்படியே பேராசிரியரை நொறுக்கி எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு அவர்கள் “போராட்ட” குணம் உண்டு. ஜல்லிகட்டுக்கென்ன ஒருவேளை தவறான சிகிச்சையால் நயந்தாராவின் தலைமுடி ஒன்று உதிர்ந்தால் கூட அதனை கண்டித்து பெரும் போராட்டம் நடத்த அவர்கள் தயார் ஒரு வாய்ப்புவேண்டும் அவ்வளவுதான் சரி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சென்ற பெரும்பான்மையான‌ மாணவர்களும் எங்கிருப்பார்கள்? பைரவா […]

இனி சசிகலா கும்பல் நிம்மதியாக தூங்கபோவதில்லை

  தீபாவிற்கு தமிழகம் முழுக்க ஆதரவு, பல இடங்களில் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் போலிசார் தவிப்பு இக்கூட்டத்தில் அதிமுகவினர் மட்டும் பங்கெடுத்ததாக சொல்லமுடியாது, சசிகலா மீதான வெறுப்பால் எல்லா கட்சி தமிழர்களும் திரண்டிருக்கலாம் என்பதே உண்மை என்ன இருந்தாலும் சசிகலாவினை எதிர்க்க தீபா பின்னால்தான் திரளவேண்டுமா? ஏன்? பல விஷயங்கள் புரியாத தமிழகம் இது, அப்படியே இதனையும் புதிரில் வைத்துவிடலாம் ஆனால் மிக பெரும் கூட்டம் கூடுகின்றது, தீபா பேரவைகள் யாரும் கட்டளை இடாமலே உருவாகின்றன, தன்னிச்சையாக […]

முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு DNA டெஸ்ட் செய்ததாக தெரியவில்லை…

அலங்கா நல்லூரில் அழிச்சாட்டியம் செய்யும் தமிழக அரசின் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு எந்த “நாம் தமிழர்” மருத்துவ சிகாமணிகளும் DNA டெஸ்ட் செய்ததாக தெரியவில்லை. அடுத்த முதல்வர் சசிகலாவிற்காவது ஒரு டெஸ்ட் எடுக்க கூடாதா பாய்ஸ்? முள்ளிவாய்க்கால் நினைவகத்தை தஞ்சாவூரில் திறந்த நடராஜனும் இப்பொழுது மகா அமைதி, இவருக்கும் யாரும் DNA டெஸ்ட் எடுத்ததாக தெரியவில்லை நெடுமாறன், கொளத்தூர் மணி போன்றவர்களை காணவில்லை, அவரை கண்டுபிடிக்கவும் முயற்சி இல்லை. தமிழர்களுக்கா ராஜபக்சேவினை கண்டிக்க மத்தியபிரதேசம் வரை பஸ்ஸில் […]

தீபா அரசியல் பிரவேசம்…

  இன்று அறிவிப்பினை வெளியிடுவார் தீபா என ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு சசிகலாவிற்கும் தீபாவிற்கும் நடப்பது கட்சியினை கைபற்றும் போட்டி ஒருபுறம் என்றாலும், ஜெயாவின் நடை, உடை பாவனையினை கைபற்றுவது யார் என்பது இன்னொரு புறம் நடக்கின்றது ஜெயாவின் பேச்சு என சசிகலா மாற, ஜெயாவின் அதிராமல் பேசுதல் எனும் பாணியினை தீபா கையில் எடுத்தார் இப்பொழுது ஜெயா போலவே தீபா கோட் போட்டவுடன் மகா அவசரமாக ஜெயா போலவே சசிகலா கொண்டை போட்டு கொண்டிருக்கின்றார். இவர்கள் இப்படி […]

இதுதாண்டா தமிழ் நாடு….

ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வால் பயனில்லை – ஏமாற்று வேலை! ராமதாசு ஆம் பயனே இல்லை, இவர் மகன் பதவிக்கு வராத வரை எதுவுமே இவருக்கு பயன் இல்லை இவர் மகனுக்கு மட்டும் ஒரு பதவி கொடுத்துவிட்டால் அதன் பின் இவர் பார்வையில் எல்லாமே பயனுள்ள வேலை… ஜெயாவின் வளர்ப்புமகன் பெரும் கோடிகளோடு சுற்றுகின்றார், அவரின் வேலைக்காரி கட்சியினையே எடுத்துகொண்டார் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சசிகலா வாழ்க என கிளம்புகின்றார் கலைஞரின் மகன் இன்று கட்சி […]

பீட்டாவிற்கு டாட்டா..

“விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் மீது குறி வைப்பது மலிவானது.விலங்குகள் மீது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கருணை காட்டுவது கட்டாயம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. எனவே, விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி. அவற்றை துன்புறுத்துவது இந்தியத்தன்மை அல்ல. அந்த அரசியல் சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மதித்துத்தான் விலங்குகளுக்கு சேவை புரிந்து வருகிறோம்” இப்படி தடை கோரிக்கை வைத்த ஸ்டாலினுக்கு பீட்டா பதில் சொல்லியிருக்கின்றதாம் தமிழர்களின் கலாச்சாரத்தை தடுக்கும் பீட்டாவினை தடை செய்ய வேண்டும் […]

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கிற்று

அந்த ராமச்சந்திரனுக்கு நூற்றாண்டு விழா தொடங்கிற்று இதுதான் அவரின் பிறந்தநாள் என நிச்சயமாக ஏதுமில்லை, எப்படியோ பின்னாளில் இந்நாளாக போயிற்று,அவரின் பிறந்த வருடத்தில் கூட சர்ர்சை உண்டு, அப்படியானால் நூற்றாண்டு என்றோ முடிந்திருக்கும் இலங்கையின் கண்டியில் மலையாள போஸ்ட்மேன் கோபாலமேனனுக்கு மகனாக பிறந்தார் ராமச்சந்திரன், அந்த கோபால மேனன் சாகமல் இருந்தால் விதி மாறியிருக்கும், தந்தை மரணத்திற்கு பின் கும்பகோணம் குடிபெயர்ந்தார்கள். கடும் வறுமை, செல்வத்தை அளிக்காத இறைவன் ராமச்சந்திரனுக்கு கொடுத்த பெரும் வரம் நல்ல நிறமும், […]

சசிகலாவிற்கு ஆதரவாக எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா…

எம்ஜிஆர் கட்சி உடைந்துபோக கூடாது, சசிகலாவிற்கு ஆதரவாக எம்ஜிஆரின் வளர்ப்புமகள் சுதா பேட்டி இப்படி ஒரு வளர்ப்பு மகள் எம்ஜிஆருக்கு உண்டு என்பதே சசிகலா தயவில்தான் உலகிற்கு தெரிகின்றது சுதா என்பவர் எம்ஜிஆர் ஆசையினை வெளிபடுத்தினாரா? இல்லை சசிகலா ஆசையினை வெளிபடுத்தினாரா என சொல்ல தேவையில்லை எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் வாய்திறந்துவிட்டார், ஜெயாவின் வளர்ப்பு மகனை காணவில்லை இந்த வளர்ப்புக்கள் இரண்டும் இணைந்து எம்ஜிஆர் மற்றும் ஜெயா கனவினை ஆளுக்கொரு பக்கம் இருந்து வளர்த்தால்தான் என்ன? என்பது […]

நாளை எம்ஜிஆர் பிறந்த நாள் !

நாளை எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடுபவனே உண்மையான “தமிழின துரோகி” தமிழகத்திற்கு எம்ஜிஆர் ஆற்றியிருக்கும் துரோகம் அப்படியானது, மக்கள் தனக்கு தந்த மகுடத்தில் ஜெயாவிற்கு அறிந்தே பங்குகொடுத்தது அவர். ஜெயாவின் குணம் அறிந்தும், பிடிவாதம் அறிந்தும், ஜெயாவினை கட்சியில் விட்டு தீரா தமிழக சாபத்தை உண்டாக்கியவர் அவர். அந்த பங்குதான் இன்று சசிகலா,பன்னீர் என வந்து நிற்கின்றது தமிழகம் அடிமை மாநிலம் ஆக முதல் காரணகர்த்தா இவரே.. தமிழனின் சகல உரிமைகளும் பறிபோக பார்த்துகொண்டிருந்ததும் , ஒன்றையும் […]

நாடாளும் நாடார்…

நாட்டிலும் உலகிலும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்க இவர்களுக்கு வந்திருக்கும் சிக்கல் இப்படி நாடார் நாடார் பெண்ணை மட்டும் திருமணம் செய்ய வேண்டும், நாடாரோடு மட்டும் உறவு கொள்ளவேண்டுமாம் அப்படியானால் நாடார் தெருவில் , நாடார் நாட்டில், எல்லா பழக்க வழக்கமும் நாடாரோடு என்றால் அவர்கள் வாழவேண்டிய இடம் செவ்வாய்கிரகமோ அல்லது வியாழன் கிரகத்திலோ அன்றி பூமியில் அல்ல‌ ஒரு பருக்கை அரிசி முதல், விழுங்கும் மீன், ஆடு வரை அந்நிய சாதி துணையின்றி இவர்களுக்கு கிடைக்காது, உடுத்தும் […]