பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டிரம்பும் மிரட்டுகின்றார்…

புகைந்து கொண்டிருந்த விஷயம் டிரம்ப் மூலமாக அமெரிக்காவில் வெடித்திருக்கின்றது அதாகபட்டது முன்பு போர்டு கார் முதல் தாம்சன் டிவி வரை அமெரிக்காவில்தான் தயாரிக்கபட்டது, உலெக்ல்லாம் அவை சக்கை போடு போட்டன, இதுமாதிரியான பெரும் தொழில்கள் அமெரிக்கர்களை வாழவைத்தன‌ இன்று இவை எல்லாம் ஜப்பான், சீனா, தைவான், கொரியா கையில் சிக்கிவிட்டன, அமெரிக்கா ராக்கெட், ஆயுத விற்பனை, எண்ணெய் சந்தையினை கட்டுபடுத்துதல் போன்ற பெரு முதலாளி தொழிலினை செய்வதால் உள்ளூர வேலையிழந்த அடிமட்ட தொழிலாளர்கள் வெறுப்பு இருந்தது டிரம்ப் […]

பாரதியார் பிறந்த தினம்…

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..” என தமிழக நிலமைகளை பார்த்து அழுதுவிட்டு, எங்கள் நெல்லை சீமையின் அறிவு சுடரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வோம் பாரதி பிறந்தநாள் இன்று, மன்னியுங்கள் பாரதி, கொஞ்சம் உங்கள் வரிகளை மாற்றுகின்றோம் “செந்தமிழ்நாடென்னும் பொதினிலே தேள் வந்து கொட்டுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ரத்த கண்ணீர் வடிகின்றது கண்களிலே..”    

முன்னாள் விமானபடை தளபதி கைது…

ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் என முன்னாள் விமானபடை தளபதி கைது செய்யபட்டிருக்கின்றார் அப்படியானால் அந்நாளைய பாதுகாப்பு அமைச்சர் என்ன கிழித்துகொண்டிருந்தார்?, அவர் அனுமதியின்றி ராணுவம் எப்படி ஹெலிகாப்டர் வாங்கியது என்ற கேள்வி எழும் சரி ஆயுத தரகன் யார்? அவனுக்கு என்ன கமிஷன் என எழும்? நிச்சயம் பெரும் பிரச்சினை, போபர்ஸ் போல புயலடிக்கும் விஷயம்தான், மிக சீரியசான பிரச்சினைதான் ஏன்? இருவிஷயம் தான் சாத்தியம் ஒன்று ரூபாய் நோட்டு சர்ச்சை இருக்கும் பொழுது இதனை இழுத்தால் […]

ஞாயிறு ஸ்கூப்ஸ்… தமிழக எதார்த்தம் அப்படி….

மிக வலுவான வார்தா புயல் சென்னை அருகே நாளை கரையினை கடக்கின்றது, இன்று மாலை முதல் கன மழை பெய்யும், கடலில் கடும் சீற்றம் இருக்கலாம் : வானிலை அறிக்கை இந்த புயலில் இருந்து சென்னை மக்களை காக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றதோ தெரியவில்லை, அமைச்சர் உதயகுமார் மட்டும் பட்டும் படாமலும் ஏதோ சொல்கின்றார், அது ஏதோ மின்விசிறி கண்ட்ரோலை மாற்ற சொல்வது போல் இருக்கின்றது பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை என ஏதும் இல்லை அரசும் அதன் […]

மன்னார்குடியினை மன்னர் குடி ஆக்க…

கட்சிக்காக ஒரு முட்டு சந்தில் கூட பேசாதவரை, ஒரு பிட் நோட்டீஸ் கூட சுவரில் ஒட்டாத ஒருவரை ஒரு வார்டு கவுன்சிலராகவோ, வட்ட செயலாளராக கூட இல்லாத ஒருவரை, இதுவரை ஒரு வார்த்தை கூட மேடைகளில் பேச தெரியாத ஒருவரை , பொதுமக்கள் சார்பாக ஒரு கோரிக்கை கூட வைக்காத ஒருவரை அக்கட்சியின் சீனியர்கள் எல்லாம் வருந்தி வருந்தி தலைவராகுங்கள், கட்சியினை வழிநடத்துங்கள் என அழைக்கின்றார்களாம் யாரையாவது ஒரு பெண்மணியின் புகழ்பாடிகொண்டு, அவர் காலில் தலைவியே என […]

தென்கொரிய முன்னுதாரணம்….

தென்கொரியாவின் சர்ச்சைகுள்ளான அதிபர் பாராளுனம்றத்தால் பதவி பறிக்கபட்டிருக்கின்றார் தென்கொரியாவின் பெண் அதிபர் தன் தோழியோடு சேர்ந்து பெரும் ஊழலில் ஈடுபட்டார் என சர்ச்சை வெடித்தது, கொஞ்சம் இறங்கிவந்த அதிபர் தோழியினை கைது செய்ய அனுமதித்தார் உன் ஆட்சியில் அவளுக்கு எப்படி நீதிவழங்குவாய் என தெரியாதா? நீயும் பதவி இறங்கு என தென்கொரியா கொந்தளித்தது, பெரும் ஆர்பாட்டம் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த காவல், ராணுவம் மறுத்துவிட்டது, சிக்கல் அதிகாமாக தென்கொரிய பாராளுமன்றமே அதிபரை விரட்டியிருகின்றது, இனி […]

சசிகலாவிற்கு ஆதரவாக …..

சசிகலாவிற்கு ஆதரவாக பல பத்திரிகைகள் வரிந்து கட்டி எழுதுகின்றன, சில பத்திரிகைகள் அனைத்து பக்கத்திலும் சசிகலா செய்தி வருமாறு பார்த்துகொள்கின்றன‌ அன்னை தெரசாவிற்கு பின் இந்தியா கண்ட தியாக பிம்பம் எனும் அளவிற்கு சில பத்திரிகை அழிச்சாட்டியம் தாளவில்லை ஒன்று புரிகின்றது இன்றைய டிஜிட்டல் காலத்திலே, இந்த முகநூல் காலத்திலும் இப்படி எல்லாம் எழுதி ஒரு தலைவரை உருவாகக் நினைக்கும் பத்திரிகைகள்.. அந்த காலத்தில் எப்படி எல்லாம் எழுதி அறவே தகுதி இல்லாதவர்களை எல்லாம் பெரிய தலைவர்களாக, […]

விடுமுறை என்றால் என்ன செய்யலாம்? மீன் குழம்புதான்

மலேசிய சுல்தான் பிறந்தநாள், முகமது நபி பிறந்த நாள் என நீண்ட விடுமுறை. வருடத்திற்கொருமுறை பிறக்கும் இயேசுகிறிஸ்து விரைவில் பிறக்க இருப்பதால் எங்கும் செல்ல விருப்பமில்லை விடுமுறை என்றால் என்ன செய்யலாம்? மீன் குழம்புதான் அதுவும் கொடுவா மீன் என்றொரு வகை இருக்கின்றது, குழம்பு வைத்து, இலையில் ஊற்றிவிட்டால் ஏழு உலகினை மறக்க செய்யும், அரசியல் முதல் உலகம் வரை எல்லாம் எல்லாம் மறக்கும் அதனை வாயில் வைத்தாலே முப்பது முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதம் நமக்கே கிடைத்திருப்பது […]

கவுதமிக்கு சின்ன ஜெயலலிதா ஆகும் ஆசை இருக்கலாம்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என பல சர்ச்சைகள், அது எப்படி நடந்தது என விளக்கம் வேண்டுமாம், கவுதமிக்கு சின்ன ஜெயலலிதா ஆகும் ஆசை இருக்கலாம், தப்பில்லை யாரும் ஆசைபடலாம் இது மக்களாட்சி காலமாக இருக்கலாம், ஆனால் ராஜபாதுகாப்பு என்பது அப்படியே தொடர்கிறது. அவ்வளவு உயரத்தில் இருந்தவர், நிச்சயம் எல்லா விஷயத்திலும் எவ்வளவு கவனமாக இருந்திருப்பார்? தனக்கு விசுவாசமாக இல்லாதவர்களையா சமையல் முதல் வாயில் காப்பாளன், டிரைவர் வரை அனுமதித்திருப்பார்? எத்தனை உளவுகள், எத்தனை ரகசிய கண்காணிப்புகள் இருந்திருக்கும்? […]

இன்று தமிழக சட்டசபை கூடுகின்றது

இன்று தமிழக சட்டசபை கூடுகின்றது இதயதெய்வம், புரட்சி தலைவி…, என பெரும் பாயிரம் பல்லவிகளை பாடி அரைமணிநேரம் அதனையே பாடும் பெரும் சங்கீத அவஸ்தைகள் இனி இருக்காது, ஆனாலும் பழக்க தோஷம் என்ன செய்ய போகின்றார்களோ? இதுவே பழைய கலைஞராக இருந்திருந்தால் அவர் சட்டசபையில் செய்யும் அழிச்சாட்டியத்திற்கு பன்னீர் செல்வம் அம்மா சமாதியில் அழுதுவிட்டு ஓடியே விடுவார் காமராஜர், எம்ஜிஆர் எல்லாம் கலைஞரிடம் பட்ட பாடுகள் கொஞ்சமல்ல, தலைமேல் கைவைத்து அமரவிடும் சாமார்த்தியமும் வாதாடும் திறனும் கலைஞருக்கு […]