பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவேரி எனும்பொழுது வராத ஒற்றுமை…

காவேரி எனும்பொழுது வராத ஒற்றுமை, அணுவுலை எனும்பொழுது வராத ஒற்றுமை மீத்தேனுக்கு வராத ஒற்றுமை, கங்கை கரை திருவள்ளுவர் சிலை பிரச்சினைக்கு வராத ஒற்றுமை, முல்லை பெரியாருக்கு வராத ஒற்றுமை ஜல்லிகட்டுக்கு வராத ஒற்றுமை மீணவன் சுட்டுகொலை என்றால் வராத ஒற்றுமை, சேது சமுத்திர திட்டத்தில் வராத ஒற்றுமை தமிழக பெரும் தொழிற்சாலைகள் முடங்கும் போது வராத ஒற்றுமை மின்சாரமோ, குடிநீரோ, சாலை பிரச்சினைகளில் வராத ஒற்றுமை கேரளா, கன்னடம் போன்ற மாநிலங்கள் அழிச்சாட்டியம் செய்யும் பொழுது […]

கரன்சி பிரச்சினையினை கண்டித்து பல கட்சிகள் ஆர்ப்பாட்டம்

   மத்திய அரசின் கரன்சி பிரச்சினையினை கண்டித்து பல கட்சிகள் ஆர்ப்பாட்டம் இன்று திமுகவும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தபோகின்றதாம் அவர்கள் பெரும் போராட்ட குணம் படைத்தவர்கள். இந்தி ஆட்சிமொழி என்றால் அதன் ஆணை நகலை எரிப்பார்கள், இந்தியில் தார் பூசுவார்கள். மிசா காலத்திலே பெரும் போராட்டம் நடத்தியவர்கள் முன்பு ஈழ ஆதரவு போராட்டமென்றால் (1991க்கு முன்பு) மத்திய அரசு கொடும்பாவி கொளுத்துவார்கள், இன்னும் என்னவெல்லாமோ செய்வார்கள் ஆயிரம் கட்சிகள் தமிழகத்தில் போராடினாலும், திமுகவினரின் போராட்ட வரலாறே தனி […]

ஜெய மோகன் கேள்வி பதில்…

தானே கேள்விகேட்டு தானே பதில் எழுதும் வித்தையினை கலைஞருக்கு பின் ஜெயமோகன் சத்தமின்றி செய்துகொண்டிருக்கின்றார் ஒருவர் கேட்கின்றாராம், ” அய்யனே இந்த ஆத்திக நாத்திகம் பற்றி விளக்குவீராக‌..ஏபிநாகராஜன் படத்திற்கு பதில் சொல்லியே திராவிடம் வளர்ந்ததா?.” (இப்படி ஒரு அபத்தமான கேள்வியினை திராவிட கழக வரலாறு அறிந்தவன், பெரியாரின் போராட்டத்தை அறிந்தவன் கேட்கவே மாட்டான் கேட்டவன் ஒரு பைத்தியம் என்றால் அதற்கு பதிலளித்திருக்கும் ஜெயமோகன் என்ன ரகம் என நீங்களே முடிவு செய்யுங்கள் நிச்சயமாக இம்மாதிரி கேள்விகள் ஜெயமோகனை […]

அம்பானி மளிகை கடையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றலாமாம்

ஏதோ அம்பானி மளிகை கடையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றலாமாம் மண்டையினை மறைத்தாலும் கொண்டையினை மறைக்க தெரியாத இந்த மோடியின் கொள்கைகளை என்ன சொல்வது இனி வங்கிகள் எதற்கும்? ரிசர்வ் வங்கி எதற்கு? எல்லா பண பரிவர்த்தனைகளையும் அம்பானியே பார்த்துகொள்வாரா? நிதி அமைச்சகம் எதற்கு? இதற்கு மேலும் மோடிக்கு வக்கலாத்து வாங்க முடியாது, எப்படியும் ஒழியட்டும் மோடி தேசத்தை காப்பாரோ இல்லையோ, இனி அவரை யாரும் காப்பாற்ற முடியாது டாலருக்கு நிகரான மதிப்பு 70ஐ நெருங்கிற்று மோடியும் இந்தியாவும் […]

சிம்பு இங்குள்ள சல்மான் கான், சல்மான் அங்குள்ள சிம்பு

மும்பை ரஜினி விழாவில் அழைக்கபடாமல் வந்து மொத்த நிகழ்ச்சியினையும் குழப்பிய சல்மான்கான் மீது பெரும் சந்தேக பார்வைகள் விழுகின்றன‌ அவ்வளவு பெரும் நடிகர், அழைக்காமல் எப்படி வந்தார். வந்து என்ன சொல்ல நினைக்கின்றார்? மும்பை நடிகர்களின் மறைமுக சதியா? தெற்கத்திய நடிகர்கள் அந்நாள்முதல் அவர்களுக்கு மும்பையில் வெறுப்பானவர்களா என ஏக சர்ச்சை கமலும், சிரஞ்சீவியும் மும்பையில் ஜொலிக்கமுடியாமல் திருப்பி அனுப்பபட்ட அக்கால காட்சிகளும் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன, ஹேமமாலினி, ஸீரிதேவி என நடிகைகள் மின்னிய மும்பை உலகில், […]

சில்லரைச் செய்திகள்….

ரூபாய் நோட்டு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்ட நாள் முதலே காய்கறிகள் வாங்க பணமில்லை: ஜெயா பச்சன் ஆமாம், கொஞ்சநாளைக்கு முன்பு அமித்தபச்சன் ஒரு விவசாயி என உத்திர பிரதேசத்தில் ஒரு அறிக்கை கொடுத்தார்கள், அப்படிபட்ட ஏழை விவசாயியின் மனைவி சொன்னால் நிச்சயம் அர்த்தம் இருக்கும் மருத்துவமனையில் உடல் நலம் தேறிவரும் எனக்கு நீங்கள் வழங்கியிருக்கும் தேர்தல் வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை அளித்துள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இன்னும் உடல்நலம் தேறி, பணிக்கு வர இன்னும் […]

மேட்டூர் நகராட்சி ஆணையாளரை பார்த்து குரைத்த நாய் அடித்துக்கொலை

மேட்டூர் நகராட்சி ஆணையாளரை பார்த்து குரைத்த நாய் அடித்துக்கொலை அதாகபட்டது அன்னார் வாக்கிங் செல்லும் பொழுது அவரை பார்த்து நாய் குரைத்துவிட்டதாம், அது ஐந்தறிவு விலங்கல்லவா? சாட்சாத் டிரம்ப் வந்தாலும் குரைக்கும், மோடி வந்தாலும் குரைக்கும் அப்படி இவரை பார்த்து குரைத்துவிட்டதாம், நான் ஆணையாளர் என அவர் குரைத்து சொன்னாலும் நாய்க்கு எப்படி புரியும்? மனிதர் உடனே நகராட்சி ஊழியர்களை அழைத்து கை காட்டியிருக்கின்றார், அடித்து கொன்றுவிட்டார்கள் விஷயம் பற்றி எரிகின்றது, நமது பத்திரிகைகள் புள்ளி கிடைத்தால் […]

நளினி புத்தகம் என்றால் யார் வெளியிடுவார்?

சிறையில் பிரியங்காவுடன் நடந்த சந்திப்பு பற்றி நளினி புத்தகம் எழுதியிருக்கின்றார் நளினி புத்தகம் என்றால் யார் வெளியிடுவார்? அவர்களேதான் வரும் 24-ஆம் தேதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள்கட்சித் தலைவர் திருமாவளவன், சீமான் ஆகியோரால் இந்தப் புத்தகம் வெளியாகவிருக்கிறது. இருகட்டும் அதில் நளினி பிரியங்காவிடம் தன் நிலையினை விளக்கி சொன்னாராம், தானும் தன் கணவனும் குற்றமற்றவர் என நிரூபித்து வாதாடினாராம் கேட்டுகொண்டிருந்திராம் பிரியங்கா நாங்கள் மட்டுமல்ல, இன்னும் பலர் நிரபராதி (வைகோவாக இருக்குமோ) என […]

அய்யோ மெல்ல திராவிடம் இனி சாகும் …

தேசியவாதமும், ஆன்மீகமும் கலந்த மண் தமிழகம். பெரியார் எனும் ஒரு போராளியினால் அது தனித்துவிடபட்டிருந்தது, அரசியலுக்காய் அவரின் சீடர்கள் தடுமாறி போக மறுபடியும் தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றது. கலைஞர் எனும் பெரும் சூறாவளியும், சினிமா மோகமுமே திராவிட கட்சிகள் பலம்பெற முதல் காரணம். ஒய்ந்துவிட்ட கலைஞரும், விடைபெறும் சினிமா மாயையும் கொண்டது தற்போதைய தமிழக சூழல், அதில் தேசிய கட்சிகள் பலம்பெறுவதில் ஆச்சரிய‌மில்லை. அய்யோ மெல்ல திராவிடம் இனி சாகும் இடைத்தேர்தல் முடிவு அதனைத்தான் சொல்கின்றது. […]

வாய்புலிகளின் நரித்தனம்…

மாவீரர் தினத்தையொட்டி பாரிஸில் புலிஆதரவுக்குழுக்களிடையே வாள்வெட்டு தமிழகத்தில் ஐரோப்பா அளவிற்கு வசூலில்லை அதனால் பெரும் சிக்கல் இல்லை, இன்னொன்று இயக்கத்திற்கு இங்கு தடையும் உள்ளது இல்லை என்றால் வைகோ, சைமன், பெ.மணியரசன் என ஆளாளுக்கு வசூல் பிரச்சினையில் இறங்கி இங்கு வாய்வெட்டு, வாள்வெட்டு , குண்டு வீசுதல் வரை செல்லலாம் எத்தனை பேருக்கு மாவீரர் என அடையாளமிட்டு மாலைபோட்டவர் பிரபாகரன், அவருக்கு எவனாவது மாலைபோட்டு விளக்கு வைத்து மாவீரர் தின அஞ்சலி என சொல்கின்றானா? இல்லை. இதுதான் […]