பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அக்பர்

  தோற்றம் : 15-10-1542         ::   மறைவு 27-10-1605 இந்தியாவினை எத்தனயோ அரசர்கள் ஆண்டனர், அவற்றில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் குறிப்பிடதக்கவர் அக்பர், மகா அக்பர். பாபரின் பேரன், எப்படியோ அனாதையாக திரிந்திருக்கவேண்டியவனை வளர்த்து அரசனாக்கினார் தாய் மாமன் பைரம்கான். அக்காலத்தில் அப்படிபட்ட ராஜவிசுவாசிகள் இருந்திருக்கின்றார்கள், இக்காலத்தில் அப்படியெல்லாம் இல்லை, கொஞ்சம் அசந்தாலே தூக்கி கடாசிவிட்டு அமர்ந்துகொள்வார்கள் அதனை காக்க சிரிய அதிபர் போல விடாபிடியோ அல்லது கலைஞர் போல மனதால் […]

மலேசியாவில் தீபாவளி…

மலேசியாவில் தீபாவளி  : மக்கள் எண்ணங்கள், வாழ்த்துக்கள் : காணொளி தீபாவளி நெருங்கிவிட்டது, இந்தியாவின் நம்பர் 1 கொண்டாட்டம் அது, தமிழகத்திலும் தயாரிப்புகள் தீவிரமாக இருக்கலாம் அதிமுகவினரை தவிர. மலேசியாவில் தீபாவளிக்கு தேசிய விடுமுறை, இந்தியர்கள் கொண்டாடும் பண்டிகை என்பதால் தமிழ், தெலுங்கு, சீக்கிய, மலையாள மக்கள் கலந்த இந்திய சமூகத்திற்கு அப்படி அங்கீகாரம் அளித்திருக்கின்றார்கள். இதில் தமிழ் சமூகம் பெரிய எண்ணிக்கை அதனால் தீபாவளி தயாரிப்பிற்கு பின்னி எடுக்கின்றது. பொதுவாக குறைந்தது 1 வாரம் கொண்டாடுவார்கள், […]

வருண் : இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா??

வருண் காந்தி பற்றி ஏராளமான செய்திகள் வருகின்றன, இந்திராவின் பேரன் அவர், இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகி இருக்ககூடிய அவரின் விதி இப்படி வீடியோ வடிவில் வந்திருக்கின்றது. இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி, 1971 முதல் 1980 வரையான காலகட்டங்களில் இந்தியாவினை ஆட்டிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி. வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கட்டாய கருக்கலைப்பு திட்டம், சில துப்பாக்கி சூடுகளுக்கு காரணம், டெல்லியினை ஆட்டிவைத்த சில சம்பவங்கள் என ஏராளமான திகில் கதைகள் உண்டு. காங்கிரஸ் […]

நான் ஏன் கலைஞரை பற்றி எழுதுகிறேன்?

நீ ஏன் கலைஞரை பற்றி எழுதுகின்றாய், திமுக காரனாய் மாறிவிட்டாயா? எவ்வளவு கொடுத்தார்கள்? என்றெல்லாம் பல கேள்விகள். திமுக எனும் கட்சியோ, அதன் கொள்கைகளோ (அப்படி ஒன்று இருந்தால்) ஒரு நாளும் எம்மை ஈர்த்ததில்லை, தமிழகத்தின் பல குழப்பங்களுக்கு அவர்கள் தான் காரணம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் சில விஷயங்களை ரசிப்பது போல, கலைஞரை ரசிக்க முடிகின்றது. லாராவோ, டெண்டுல்கரோ அந்நாளைய வாசிம் அக்ரமையும், வாக்கர் யூனுஸையும் அற்புதமாக சமாளிக்கும்பொழுது கை தட்டுவோமே அப்படி தட்ட […]

மருதிருவருக்கு “வீர வணக்கம்”…

தெற்கே நடந்த சுதந்திரபோரில் மருது சகோதரர்களின் போராட்டம் குறிப்பிடதக்க வீர போராட்டம். வேலுநாச்சியார் தளபதிகளாகவும், ஊமைதுரையின் நண்பர்களாகவும் மானமிக்க போராட்டத்தினை அவர்கள் நடத்தி வெள்ளையனுக்கு சவால் விட்டவர்கள் மிக சிறந்த வீரர்கள், வெள்ளையனே சொன்னது போல “இவர்கள் நம்மிடம் சேர்ந்துவிட்டால் இந்த இந்தியாவினையே பிடிக்கலாமே, முடிந்தவரை நம்பக்கம் இழுக்க நினைப்போம்” ஆனால் மானமிக்க அவர்கள் இறுதிவரை மண்டியிடவில்லை. வரலாற்றின் ரகசிய பக்கங்கள் அதனை சொல்கின்றன, வெள்ளையன் காட்டிய தந்திரங்களில் ஒன்று தளபதிகளுக்கு ஆசையூட்டுவது, அடுத்த நிலையில் இருப்பவர்களை […]

சுஜாதாவின் தமிழ் அவரோடு சென்றுவிட்டது…

                                                        சுஜாதா : கோபி நாத்  :: நேர்காணல்  மலேசியாவில் சில தமிழறிஞர்களை கண்டிருக்கின்றேன், ஓலை சுவடி முதல் தமிழ் பண்டைய இலக்கியம் வரை வைத்திருப்பார்கள் பெரும்பால புத்தகம் கழக வெளியீடு, கழகம் என்றால் திராவிட கழகம் அல்ல, […]

பெர்முடா மர்ம முக்கோண கடலின் மர்மம் விடுவிப்பு

பெர்முடா மர்ம முக்கோண கடலின் மர்மம் விடுவிப்பு : செய்தி நன்றாக படித்து பார்த்தால் ஒரு மர்மமும் விடுபடவில்லை, வழக்கமாக வரும் அனுமானங்களில் ஒன்று வந்திருக்கின்றது. 100001 வது அனுமானகமாக, அதாவது அறுங்கோண வடிவில் மேகங்கள் வருவதால் அப்பகுதியில் மர்ம சக்தி நிலவுகின்றதாம். சரி உலகில் எங்கும் இல்லா வகையில் அங்குமட்டும் அறுங்கோணம் எப்படி வருகின்றது, இதுவரை காணாமல் போன கப்பல்கள் எங்கு சென்றன, இன்னொரு ஆளில்லா விமானத்தை அனுப்பி சோதிக்கலாம் அல்லவா? என்றல்லாம் நாம் கேட்க […]

தியாக பிறப்பொன்று பிறந்த நாள்…

தனக்காக வாழ்பவர் மத்தியில் பிறர்க்காக வாழ்பவர் பலர், அதில் எனக்காக வாழ்பவர் என் தாய்க்கு பின் என் மனைவி, அதாவது பாகம்பிரியாள் அன்னாருக்கு இன்று பிறந்தநாள், என்னையும் ஒருத்தி கட்டி அழவேண்டும் என்பதற்க்காகவே தியாக பிறப்பொன்று பிறந்த நாள். காரணம் என்னோடு வாழ்வதென்பது உலகின் மிக கடினமான காரியம், அதுவும் மனைவியாக வாழ்வதென்பது மிக மிக கொடுமையான விஷம் உதாரணம், அழகிய கார்கள் அணிவகுத்துவரும்பொழுது அதானை காட்டி பார்த்தீர்களா என்பாள், இந்த 100 கார்களுக்கு எவ்வளவு பெட்ரோல் […]

இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள்…

சில வித்தியாசமான தகவல்கள் முகநூல் முழுக்க வலம் வருகின்றது, அதாவது இந்திய ராணுவ பலம் பற்றிய தகவல்கள். அதிலும் சில விழுந்து விழுந்து சிரிக்க கூடியவை, கொஞ்சமேனும் யோசிக்காலம் படித்ததில் பிடித்தது என பகிர்ந்துவிடுகின்றார்கள், அதில் பலபேர் வாவ் என பாராட்டி வேறு மோடி படத்தினை பார்த்து மகிழ்கின்றார்கள் இல்லாத பலத்தினை இருப்பதாக செய்திபரப்புவதும் வதந்தியே, அப்படி ராணுவ வதந்தியில் இந்த செய்திகள் வரும். அப்படி என்ன என்கின்றீர்களா? பிரம்மோஸ் ஏவுகனைபோன்று அமெரிக்காவிடமே இல்லை, சீனாவிடமும் இல்லை […]

கிறிஸ்தவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான்…

கிறிஸ்துதாஸ் காந்தி எனும் அரை கிறிஸ்தவரை போட்டு தாக்கிகொண்டிருக்கின்றார்கள், அம்மனிதரும் கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கின்றார். சில விஷயங்களை ஒப்புகொண்டே ஆகவேண்டும், அதில் யோசிக்க ஒன்றுமே இல்லை இந்தியா இந்து சகோதாரர்கள் 80% நிரம்பி இருப்பதால், சர்வ நிச்சயமாக அது இந்து நாடே. இந்துநாடுதான் எல்லா நாட்டிலும் பெரும்பான்மையானோர் பின்பற்றும் சமயம் தேசிய சமயமாக அங்கீகரிக்கபடும் உலகில் இந்நாடும் இந்துநாடு என்றுதான் அறியபடவேண்டும், அதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. அதிலும் இந்நாடு எல்லா மதத்தவருக்கும் சம உரிமை […]