பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காரியத்தில் படு சமத்து

தமிழிசை அக்கா காமெடியாக பேசிகொண்டிருந்தாலும் காரியத்தில் படு சமத்தாக இருந்திருகின்றார் சோபியாவிடம் வம்பிழுத்தது, துப்பாக்கி சூட்டு நேரத்தில் தத்துவம் பேசியது என தூத்துகுடி கடலே பொங்கும் அளவுக்கு அந்த பகுதியினை கோபமூட்டி வைத்திருந்தார் அக்கா ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க மிக அமைதியாக கொடியேற்றம், கட்சி கூட்டம் என சுற்றி வந்திருக்கின்றார், எதிர்ப்பு ஏதுமில்லை என்பதை கண்டுகொண்டே பின்பே களத்திற்கு வந்திருக்கின்றார் தென் பக்கம் இருக்கும் நாடார் வாக்கு மற்றும் அதிதீவிர இந்துக்களின் வாக்கு வங்கி அவருக்கு […]

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணிக்கு 34 இடங்கள் – டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு ஓரளவு சரியாக இருக்கலாம், 25 முதல் 30 இடங்கள் அக்கூட்டணிக்கு கிடைக்கும் என்றே கருதபடுகின்றது காங்கிரசுடன் திமுக இணைந்து நிற்கும் பொழுதெல்லாம் அக்கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பெருவெற்றி பெற்றிருகின்றது அதுவும் ராமசந்திரன், ஜெயா போன்ற சக்திகள் இருந்த காலத்திலே பெருவெற்றி பெற்றிருக்கின்றது என்பது வரலாறு அந்த தரவுகளின் படியும், இப்பொழுது இருக்கும் சூழலிலும் அது நிச்சயம் சாத்தியமே.. இதுவரை அப்படித்தான் இருந்திருக்கின்றது..

கடன்பட்டான் நெஞ்சம் போல

இந்த தேர்தலை நிதானமாக எதிர்கொள்கின்றது திமுக, ஆம் அவர்களுக்கு இப்பொழுது எம்பிக்கள் என யாருமில்லை, இனி கிடைப்பது அவர்களுக்கு லாபம் 10 தொகுதி கிடைத்தாலும் அவர்களுக்கு மகிழ்ச்சி, ஆம் ஒன்றுமே இல்லாமல் இப்பொழுது இருப்பதை விட சில கிடைத்தாலும் மகிழ்ச்சி காங்கிரஸின் நிலையும் அப்படியே சிக்கல் அதிமுகவுக்கும் தினகரனுக்கும் இருக்கின்றது. 37 என்ற மாபெரும் எண்ணிக்கையுடன் வலம் வந்த கட்சி அதிமுக, அதை பறிகொடுக்க போகின்றார்கள் பரிதாபம் தினகரன் என்பவர் வெல்லவில்லை என்றால் சந்தி சிரித்துவிடும் , […]

சுயநல கூட்டம்

தேர்தல் களைகட்ட தொடங்கியிருக்கின்றது, மக்களின் மனவோட்டம் பற்றியும் கணிப்புகள் வரதொடங்கியிருக்கின்றன‌ பெருவாரி மக்கள் இத்தேர்தலில் தனக்கு வேண்டிய கட்சியோ நபரோ வெற்றிபெற்றால் தனக்கு என்ன கிடைக்கும் அல்லது தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை தவிர வேறு சிந்தனையில் இருப்பதாக தெரியவில்லை அப்படி பழக்கபட்டுவிட்டது இச்சமூகம் இது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் , இந்நாட்டை வழிநடத்த சரியான தலமை எது? என்பதைபற்றியோ யார் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு நல்லது என்பது பற்றியோ சிந்திக்க யாரும் தயாராக இல்லை எல்லோர் நோக்கமும் […]

இந்த தேர்தலில் பல சுவாரஸ்யங்கள்

இந்த தேர்தலில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன‌ ஆண்டிபட்டி இடைதேர்தலில் திமுக வேட்பாளர் மகாராசனும் அதிமுக வேட்பாளர் லோகிராசனும் சகோதரர்களாம் இவர்களின் அன்னை யாருக்கு வாக்களிப்பார்? தினகரனுக்காக இருக்கலாம் எந்த விருதுநகரில் மாணிக் தாகூர் என்பவரிடம் வைகோ தோற்றாரோ அந்த மாணிக் தாகூருக்காக அங்கு பிரச்சாரம் செய்ய செல்கின்றார் வைகோ இது போக அங்கிள் சைமன் காமெடி வேறு, ஒரு ஆடியோவில் தும்பி ஒரு வேட்பாளரை நிறுத்துகின்றது அங்கிள் கண்டிக்கின்றார் ஒரு கட்டத்தில் களமாடுவது யார் என்பதில் தும்பி […]

தேர்தல் துளிகள் 18/03/2019 (3)

அர்ரே பழ்னிசாமி நம்பிள் ராம்சந்தரோட காவல்காரன் படம் பார்த்தான் உடனே நம்பிள் காவல்காரன்னு பேர் வச்சிட்டான், தேங்க்ஸ் பையா அடடே, இது தெரிஞ்சா மாட்டுக்கார வேலன் சிடி கொடுத்திருப்பேனே அச்சா, அப்டியும் இருக்கா? உடனே நம்ப யோகிக்கு சிடி அனுப்பி வைங்க மேன், அவரும் பெயரை மாத்துவார்.. உன் தந்தை தெய்வம் தானய்யா…. எந்நாளும் உம்மோடும் எம்மோடும் அவர் மனம் வாழட்டும் “தாய் இல்லாத நேரம்தான் நீங்க தாய் கழகத்துக்கு வருவீங்கண்ணு அப்பா அடிக்கடி சொல்லுவாருங்க…”

தேர்தல் துளிகள் 18/03/2019 (2)

இருபக்கமுமே பாராளுமன்ற தேர்தலை பற்றி சொல்ல விஷயமே இல்லை அதிமுக எம்பிக்கள் என்ன செய்தார்கள் என திமுக தரப்பு கேட்டால் எதிர்கோஷ்டி ஒரே வார்த்தையில் இவர்களை அடக்கிவிட முடியும் ஆம் ஒற்றை வார்த்தை போதும் 10 வருடம் மன்மோகன்சிங் ஆட்சியில் திமுக இருந்தது, ஆனால் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த அந்த மன்மோகன்சிங் ஏன் வரவில்லை? எவ்வளவுக்கு பாதிக்கபட்டிருந்தால் அவர் வராமல் இருந்திருப்பார்? இந்த கேள்விக்கு காங்கிரசிடமே பதில் இல்லை எனும்பொழுது திமுகவிடம் எப்படி இருக்கும்? பாஜகவில் வாரிசு […]

தேமுதிக வேட்பாளர் பட்டியல்

இன்று பிரேமலதாவின் பிறந்தநாளையொட்டி தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கபடுகின்றது “எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலைஅட்டில் புகாதான் அரும்பணி; – அட்டதனைஉண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்கொண்டானைக் கொல்லும் படை” கணவன் சொல்லுக்கு அஞ்சாது ‘அடி’ என்று எதிர்த்து நிற்பவள் எமன், காலையில் சமையல் அறைக்குப் போகாதவள் கொடிய‌ நோய், கணவனுக்கு சமைத்த உணவைத் தராதவள் வீட்டிலிருக்கும் பிசாசு; இந்தப் குணத்தை கொண்ட பெண்டீர் கணவனுக்கான கொலைகருவி ஆவார்.

ஹவாலா பணம்?

இந்த தேர்தல் வந்தாலும் வந்தது, ஹவாலா பணம் உட்பட பல தொழில்களில் இருப்பவர்களுக்கு ஏக சிக்கல். தேர்தல் கமிஷன் பிடிப்பதெல்லாம் பெரும்பாலும் அந்த பணமே மற்றபடி நம் அரசியல்வாதிகளாவது சிக்குகின்றதாவது? “உங்கள் வீட்டு முன்னால் இருக்கும் மரத்தடியினை தோண்டுங்கள், மண்பானையில் ஆயிரம் ரூபாய் இருக்கும் எங்களுக்கு வாக்கு செலுத்திவிட்டு வந்தால் அடுத்த புதையல் இருக்குமிடம் சொல்வோம்” என்று இப்பொழுதே புன்னகைகின்றார்களாம் சில கட்சியினர் அதாவது பணம் எல்லாம் ஏற்கனவே சென்றாயிற்று இது போக மளிகை ஜவுளி வியாபாரிகளை […]

ஒரு நபரைச் சரியாகப் பார்த்தால்

எப்படி ஒரு மலரில் வாசம் இருப்பதையும், எள்ளில் எண்ணை இருப்பதையும், கட்டைக்குள் நெருப்பிருப்பதையும், பாலில் கொழுப்புச்சத்துக்கள் உள்ளதையும், கரும்பினுள் இனிப்பிருப்பதையும் உணர முடிகிறதோ, அது போலவே ஒரு நபரைச் சரியாகப் பார்த்தால் அவனுக்குள் பரமாத்மா இருப்பதையும் உணர முடியும்.

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications