பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சரத் பவார் கணிப்பு

பாஜக வெற்றி பெறலாம்; 2-வது முறையாக மோடி பிரதமராக வரமாட்டார்: சரத் பவார் கணிப்பு அனுபவம் வாய்ந்த சரத்பவாரின் கணிப்பிலும் உண்மை இல்லாமலில்லை மிக பெரிய போராட்டத்தை மகா ஒற்றுமையுடன் நடத்தாமல் எதிர்கட்சிகளால் பாஜகவினை வீழ்த்தமுடியாது மோடி ஆட்சி நல்லதா கெட்டதா? மோடி நன்றாக ஆண்டாரா இல்லையா என்பதல்ல விஷயம், பாஜகவினை வீழ்த்த இன்னொருவர் இப்பொழுது பலத்தோடு இல்லை என்பதுதான் விஷயம் எதிர்கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து இல்லை சரத்பவார் மிக சரியாக கணித்திருக்கின்றார்

காங்கிரசின் போராட்டமும் வெல்லட்டும்

மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சோனியா குடும்பம் சென்றிருக்கின்றது மதவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தினை, அந்த புனிதமான இடத்திற்கு சென்று ஆசிவாங்கி தொடங்குகின்றார் ராகுல் பிரச்சாரத்திற்கு முன்பு ராகுலும் பிரியங்காவும் சோனியாவும் மன்மோகன்சிங்கும் காந்தி ஆன்மா வாழும் ஆசிரமத்திற்கு சென்றிருப்பது பலத்த வரவேற்பினை பெற்றிருக்கின்றது மகாத்மாவின் போராட்டம் வென்றது போல காங்கிரசின் போராட்டமும் வெல்லட்டும்

இதற்கெல்லாம் அஞ்சுபவரா அங்கிள் சைமன்?

தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை – மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை இதற்கெல்லாம் அஞ்சுபவரா அங்கிள் சைமன்? “ஒரு சின்னமும் வேண்டாம், எல்லா கட்சிக்கும் எல்லா சின்னமும் அழியவேண்டும். அந்த கட்சிக்கார பயல் எல்லாம் சின்னம் இல்லாமல் போட்டியிடுவானா? நாம் தமிழர் கட்சி எந்த சின்னத்திலும் போட்டியிடும்” என முன்பே சொன்னவர் செந்தமிழன் ஆக இரட்டை மெழுகுவர்த்தியினை கரைத்துவிட்டார்கள் அன்னார் விடுவாரா? ” இரட்டை துடைப்பம்”, “இரட்டை ஆமை” […]

தேர்தல் துளிகள் 12/03/2019 (1)

” அங்க உங்கள விட்டா யாரு இருக்கா?” அட போடா கிறுக்கு பயலே.. என்ன கொண்டாடின அளவுக்கா உன்ன தமிழ்நாட்டு பய கொண்டாடிட்டான்? எப்படி எல்லாம் என்ன இந்த தமிழ்நாடு கொண்டாடிச்சின்னு உனக்கு தெரியுமா? எம்ஜிஆரை விட எனக்கு ரசிகன் அதிகம்ப்பூ.. எனக்கு தேர் என்ன? 60 பவுணுல சங்கிலி என்ன? எப்படி எல்லாம் இருந்தேன் தெரியுமா? வீட்டை விட்டு நான் வெளியே வந்தா, கன்னியாகுமரி வரை அதே கூட்டம் இருக்குமே , எனக்காக கலையாம இருக்குமே, […]

முகநூல் டிவிட்டரில் எல்லாம் அரசியல் பேச கூடாதாம்

தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்களாம், இனி முகநூல் டிவிட்டரில் எல்லாம் அரசியல் பேச கூடாதாம், பல வித எச்சரிக்கைகள் இந்திராவின் மிசா காலங்களில் அரசியல் கூட்டங்களுக்கு தடை என்றபொழுது கல்யாண வீடுகளும், காது குத்து வீடுகளும் அரசியல் மேடைகளாயின‌ இன்னும் என்னென்ன வழியில் எல்லாமோ தமிழகத்தில் அரசியல் பேசி ஆனானபட்ட இந்திராவுக்கே தலைசுற்ற வைத்த தமிழகம் இது மோடி ஆண்ட கதை என பழங்கதையினை சொன்னால் அது அரசியலா ஆகும்? வரலாற்று கதைதான் ஆகும் தமிழகம் இதற்கெல்லாம் அஞ்சாது […]

தேர்தல் துளிகள் 10/03/2019

அன்புமணி, பிரேமலதா வரிசையில் பத்திரிகையாளர்களிடம் சிக்க வேண்டியவர் வைகோ மிகபெரும் குற்றசாட்டுகளை திமுகமேல் சாட்டியவரும், ஏன் அடியெல்லாம் கூட வாங்கியவர் அவர்தான் ஆனால் அவரை யாராவது பேட்டி எடுப்பார்களா? குறுக்கு கேள்வி கேட்பார்களா என்றால் இல்லை ஏன் என்றால் அப்படித்தான். அதுதான் பத்திரிகை அரசியல் என்ன விட்டு அம்மா கட்சி கூட போகாத விஜி………” “இந்த விஜயகாந்த எல்லோரும் தெருவுல போட்டு அடிச்சாங்க, அப்பவும் அவருக்கு நான் இருக்கேன்னோ, என் கூட கூட்டணி வைக்கணும்னோ தோணலியே ஏன்? […]

வியாபார தொடர்ச்சி” எனும் “Business Continuity”

பெரும் பணமுதலைகள் ஒரு தொழிலில் பணம் கொட்டும் பொழுது ஏகபட்ட கேள்விகளை கேட்கின்றார்கள் அப்படி ஒரு கூட்டத்தில் பங்குபெறும் பொழுது எழும்பிய கேள்விகள் ஏராளம் திடீரென எதிர்பாரா நெருக்கடி உதாரணம் வெள்ளம், குண்டுவெடிப்பு, நோய் , கலவரம் இல்லை பூமி அதிர்ச்சி இது போன்ற சிக்கல் வந்தால் அதாவது இந்த அலுவலகம் இருக்கும் இடத்திற்கு ஆபத்து வந்தால் வியாபாரத்தை எங்கு தொடர்வீர்கள்? உங்கள் “வியாபார தொடர்ச்சி” எனும் “Business Continuity” எங்கு நடக்கும்? எந்த சூழலிலும் உங்கள் […]

தேர்தல் துளி – 05/03/2019

ஈழபோரை தடுக்காத , பிரபாகரனை சாகவிட்ட‌ சோனியாவும் ராகுலும் சென்னை வரலாம் ஆனால் சிங்கள கடற்படையின் துப்பாக்கி சூட்டை தடுத்திருக்கும் மோடி சென்னைக்கு வரகூடாது இதெல்லாம் வைகோவின் நியாயங்கள் “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்… நீ பேச வேண்டும்.. நாள்தோறும் பொழுதோறும் உறவாட வேண்டும்.. உறவாட வேண்டும் “பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்உனக்காக வேண்டும். சாமி உன்முகம் பார்த்து பசியாற வேண்டும்” ஆயிரத்து ஐநூறு வீரர்களை இழந்து, ஏராளமானோர் காயபட்டு லங்கையிலிருந்து திரும்பிய […]

விரைவாக வாரும்

சுவர் இல்லாமல் சித்திரமில்லை, நீர் நிலையாய் நிற்க நாங்கள் எல்லாம் வரைந்து மகிழ்ந்தோம் கல் இல்லாமல் சிலை இல்லை, உம்மை நொறுக்கி அடித்து உடைத்து அழகிய சிற்பம் வடித்தோம் மரம் இல்லாவிட்டால் பறவைகள் எங்கு தங்கும்? நீர் நீட்டிய கிளைகளில் மகிழ்ந்து ஆரவாரமாக மகிழ்ந்தோம் நீர் களத்தில் இருந்தவரை அந்திமாலை பறவை கூட்டமாக எவ்வளவு ஆரவாரமாக நாங்களெல்லாம் இருந்தோம் இப்பொழுதெல்லாம் நீங்கள் கனத்த அமைதி, அதனால் வற்றிவிட்ட நதிகரையில் இருப்பது போல் ஒரு வெறுமை மனதில் அமர்கின்றது […]

தேர்தல் துளி – 27/02/2019 (1)

போர் வாள் “கலைஞரால், `போர் வாள்’ என்றழைக்கப்பட்டவர் வைகோ. தொண்டர்களால், ‘தளபதி’ என்று அழைக்கப்பட்டவன் நான். தற்போது தளபதியும் போர்வாளும் ஒரே மேடையில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தைக் காக்கவே” : முக ஸ்டாலின் அதே கலைஞர் வைகோ வெளியேறியபொழுது “வாள் துருபிடித்துவிட்டது அதனால் வீசிவிட்டோம்” என சொன்னது ஸ்டாலினுக்கு மறந்திருக்கலாம், தமிழகத்திற்கு மறக்காது துருபிடித்த வாளினை வைத்துகொண்டா போருக்கு செல்வார் தளபதி? நான் தேர்தலில் போட்டியிடுவேன்; தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்: தமிழிசை தகவல் அக்கோவ் , நல்லா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications