பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காஞ்சிக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?

சீன அதிபரின் வருகையினை தொடர்ந்து காஞ்சிக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு? உண்டா இல்லையா என ஏகபட்ட விவாதங்கள் காஞ்சியினை தலைநகராக கொண்டு பல்லவர்கள் ஆளும்பொழுது அத்தேசம் புத்த மத தேசமாக முதலில் இருந்தது, அந்நாளைய யதார்த்தபடி முதலில் பல்லவர்கள் புத்தர்களே கிருஷ்ணா நதி முதல் தமிழக புதுக்கோட்டை வரை அவர்களின் அரசு இருந்திருக்கின்றது பல்லவர்கள் மணிபல்லவ தீவினை சேர்ந்ததால் பல்லவர் என்றும் பாரசீக பாஹல்லவர்களின் வாரிசு என்றும் பல தியரி உண்டு, எனினும் அவர்கள் பாரசீக வாரிசுகள் […]

தமிழ் இலக்கிய உலகம் எனும் கூட்டத்தில் நோபல் பரிசு குழு கல் எறிந்துவிட்டது

தமிழ் இலக்கிய உலகம் எனும் கூட்டத்தில் நோபல் பரிசு குழு கல் எறிந்துவிட்டது ஆம் இரு வருடத்திற்கான நோபல் பரிசை அறிவித்துவிட்டார்கள், இனி தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் எல்லாம் ஆளாளுக்கு எல்லா வகை தாண்டவம் மற்றும் கராத்தே குங்பூ ஆட்டம் எல்லாம் ஆடுவார்கள் இந்த ஜெயமோகன் முதல் மனுஷ் வரை அப்படி சாடுவார்கள், இந்த சாரு என்பவர் எல்லாம் பாட்சா ரஜினி அளவுக்கு பொங்கி பொங்கி ஆடுவார் தமிழகத்தில் எத்தனை ஆயிரம் இலக்கியவாதிகள் இருக்கின்றார்கள் என்பதை தமிழர் அறிந்து […]

சாய் பல்லவி சார்பாக வரவேற்கின்றோம்

மாமல்லபுரத்துக்கு வரும் உலகின் பெரும் தலைவர்களின் ஒருவரான, சீனாவின் நிரந்தர தலைவாரன ஜின் பெங்கை இந்தியாவின் நடமாடும் மயிலும் சிற்பமுமான எங்கள் தலைவி சாய் பல்லவி சார்பாக வரவேற்கின்றோம் சீன பட்டை விட, சீன கல்கண்டை விட சீரிளமை மிகுந்த தலைவி பெயரால் உம்மை வரவேற்கின்றோம் இதைவிட பெரும் வரவேற்பு இந்தியாவில் வேறு எந்த நாட்டு தலைவருக்கும் கிடைக்காது என்பதால் , “ஏ சீன பொதுவுடமையின் தலைமகனான ஜின் பெங்கே நீ வரலாற்றில் கொடுத்து கொடுத்து வைத்தவனாகின்றாய்… […]

திமுக முகத்தில் கப்பல் கப்பலாக கரியினை பூசியிருக்கின்றது டெல்லி

இதே மாமல்லபுரம் அருகே உள்ளது திருவிடந்தை, அங்குதான் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சர்வதேச ஆயுத கண்காட்சி நடந்தது, உலக நாடுகளின் முன்னணி நிறுவணம் எல்லாம் கலந்துகொண்ட மிகபெரிய கண்காட்சி அது அதில் தலைமையேற்று சிறப்புரை ஆற்ற வந்த மோடியினை இப்படி எல்லாம் சொல்லி விரட்டி, கருப்பு கொடி , கருப்பு பலூன் எல்லாம் பறக்கவிட்டு கடும் அழிச்சாட்டியம் செய்தது திமுக‌ எப்படி சொல்லி விரட்டியது? “‘ரஃபேல் விமான பேர ஊழல் மோடியே திரும்ப போ”, “களவாணி […]

மகா நுட்பமான திட்டம் தீட்டபட்டிருக்கலாம்

இயக்குநர் வெற்றிமாறன் நக்சல் மற்றும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் அவர் மேல் விசாரணை தேவை என இந்துமகா சபை புகார் அளித்துள்ளது இப்படம் சமூக அமைதியினை கெடுக்கும் நோக்குடன் எடுக்கபட்டிருப்பதாக அவை புகார் அளித்திருக்கின்றன‌ வெற்றிமாறன் மேல் இந்துமகா சபை சந்தேகத்தை கிளப்பும் நேரம் எமக்கும் ஒரு சந்தேகம் வருகின்றது எமக்கு ஏற்படும் சந்தேகம் என்னவென்றால் இந்துமகா சபைக்கும் தனுஷூக்கும் ரகசிய தொடர்பு இருக்கலாம், படம் இன்னும் பிய்த்து கொண்டு ஓட ஏதோ மகா நுட்பமான […]

சீன அதிபரை அதிமுக அரசு ஏன் விழுந்து விழுது வரவேற்கின்றது?

சீன அதிபரை அதிமுக அரசு ஏன் விழுந்து விழுது வரவேற்கின்றது என்பது தெரியவில்லை ஆனால் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது தூத்துகுடி மாவட்டம் உடன்குடியில் ஒரு அணல் மின் நிலையம் அமைக்க அதிமுக ஆட்சி முடிவு செய்தது ஒப்பந்தத்தை பெற சீன கம்பெனி வந்தது அவர்கள் உலகெல்லாம் தொழில் செய்பவர்கள் இங்கும் வந்தனர், தமிழ்நாட்டில் இரு பட்ஜெட்டை பார்த்து குழம்பி இது என்ன இருபட்ஜெட் என கேட்டனர். ஒன்று அணல் மின் நிலையத்துக்கு நாங்கள் கொடுக்கும் தொகை […]

மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞர் வடிவேலு

எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எத்தனை தலைமுறை மாறினாலும் சீனனுக்குள் ஒரு சூதாடி உறங்குவது போல‌ எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான்கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது, அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது அவன் அதனை கொண்டாடுகின்றான்.மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.அவர் நகைச்சுவைகாட்சிகள் நடிப்பதை விட்டு பல‌ ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட இன்றும் பல டிவி சேனல்கள் அவரால்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன‌குறிப்பாக ஆதித்த்யா சேனல் […]

மனோரமாவிற்கு ஈடாகுமா?

ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள் சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார். அவரின் அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து நின்று […]

திமுகவில் இருந்து நீக்கபட்டார் ராமசந்திரன்

1972ல் இதே நாளில்தான் திமுகவில் இருந்து நீக்கபட்டார் ராமசந்திரன்கருணாநிதிக்கு எதிரான அஸ்திரமாக ராமசந்திரன் இந்திராவினால் ஏவபட்ட நாள் இது, தன் வாழ்வின் மிகபெரும் பிழையாக கருணாநிதி அந்த காரியத்தை செய்த நாள் இதுபாகிஸ்தானை பிரிய விட்டிருக்க கூடாது எனும் இந்தியாவின் பெரும் தவறு போல நிச்சயம் ராமசந்திரனையும் நீக்கி இருக்க கூடாதுஇதயகனி என்றார்கள், முகம் காட்டினால் போதும் என்றார்கள் இப்படி எல்லாம் அவரை வளர்த்துவிட்டு நுனி கிளையில் இருந்து அடிகிளையினை வெட்டினார்கள்.கட்சி உடைந்ததில் இருவருக்கும் சமபங்கு உண்டு, […]

வைகைபுயல் வடிவேலுக்கு பிறந்த நாள்

இன்று அந்த வைகைபுயல் வடிவேலுக்கு பிறந்த நாள் சும்மா சொல்லகூடாது தங்கவேல் , சுருளிராஜன் மற்றும் நாகேஷின் கலவை நிறைந்த அற்புத நகைச்சுவை நடிகன் அவன், மூன்று ஜாம்பவான்களை ஒரே ஆளாக நம் கண்முன் நிறுத்தியவன் காலம் அவனுக்கு வழிவிட்டது, தமிழ் உலகம் அவனை கொண்டாடியது. மகா உச்சத்துக்கு எழும்பினான், எல்லா தரப்பு மக்களும் அவனை கொண்டாடினர் எதையுமே உருப்பட விடாத திமுக அவன் வாழ்விலும் குறுக்கிட்டது அவன் சிக்கினான், விஜயகாந்த்துக்கு எதிராக அவனை கொம்பு சீவிவிட்டார்கள் […]