பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலகம் சொல்லும் உண்மைகளை நாம் சொல்லிவிட வேண்டும்

நாம் மோடி ஆதரவாளர் அல்ல, சங்கியும் அல்ல ஆயினும் சில உண்மைகளை அதாவது உலகம் சொல்லும் உண்மைகளை நாம் சொல்லிவிட வேண்டும் தமிழக பத்திரிகைகளும் டிவிக்களும் சொல்ல தயங்கும் அல்லது மறைக்கும் விஷயத்தை உங்களிடம் சொல்கின்றோம், விசாரித்து பாருங்கள் தெளிவு கிடைக்கும் விஷயம் காஷ்மீர் சம்பந்தமானது இந்த 70 வருட இந்திய வரலாற்றில் மராட்டிய அதிகாரி, தமிழக அதிகாரி, பீகாரிய அதிகாரி ஆளுநர் இப்படி எங்காவது கேள்விபட்டதுண்டா இன்னும் விளக்குகின்றோம் பஞ்சாபியரும், பீகாரியும், மராட்டியரும், தமிழகத்தில் கலெக்டர் […]

மனுஷ் அல்ல மாரிதாஸ் சென்றாலும் அவர்கள் வரவேற்று பேசுவார்கள்

பியுஷ் மனுஷ் திமுக அலுவலகம் போய் இருந்தா உயிரோட வந்து இருப்பாரா என பல கேள்விகள் திமுக பற்றி நன்கு அறிந்ததால் சொல்கின்றோம், மனுஷ் அல்ல மாரிதாஸ் சென்றாலும் அவர்கள் வரவேற்று பேசுவார்கள் பழைய தலமை என்றால் அவரை சந்தித்த கொஞ்ச நேரத்தில் மாரிதாஸ் அறிவாலத்து கழக கண்மணிகளில் ஒருவராகியிருப்பார் ஆம் கலைஞரை சந்தித்தால் கண்ணீரோடு கதறி இனி நான் திமுக உடன்பிறப்பு என உருகியிருப்பார் மாரிதாஸ், அப்படி ஆக்கிவிடுவார் கருணாநிதி தன்னை மிக கடுமையாக எதிர்த்த […]

ரஷ்யாவும் ஆதரித்துவிட்டது

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவினை ஆதரித்துவிட்ட நிலையில் ரஷ்யாவும் ஆதரித்துவிட்டது மோடி விரைவில் ரஷ்யா செல்ல உள்ள நிலையில் ரஷ்யாவின் சில அறிவிப்புகள் இந்தியாவுக்கு சாதமாக உள்ளது உலக அரங்கில் யுத்தம் என்றால் அமெரிக்கா பதுங்கும் ஆனால் ரஷ்யா நேருக்கு நேர் வரும் ஆனால் உலக அரங்கு ராஜதந்திரம் என்றால் அமெரிக்கா நேரடியாக வரும் ரஷ்யா பின்னால் இருந்து ஆடும் இதனால் காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலை கணிக்கமுடியாதபடி இருந்தது, இப்பொழுது அவர்களும் சிம்லா, லாகூர் ஒப்பந்தபடி […]

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்

கலைகளுக்கும் தமிழுக்கும் பெயர் பெற்ற தென்னகத்தில் அதற்கு அடையாளமாய் பலர் உண்டு அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் அதன் பின்புதான் நாடக கம்பெனி நடிகன் தமிழ் திரையுலகம் பேசா படங்களிலிருந்து, பேசும் படங்கள் வந்த காலத்தில் அவர் நாடக கம்பெனியில் இருந்து சினிமாவிற்கு வந்தார். அக்காலத்தில் எம்ஜிஆர், கலைஞர் அறிமுகமான காலமது, அப்பொழுதுதான் […]

நாகர்கோவில் சுடலை முத்து கிருஷ்ணனை போல இன்னொரு கலைஞன் வரமுடியாது

கலைவாணரை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது ஆனாலும் அவரின் சுபாவம் மறுபடி மறுபடி நினைவுக்கு வருகின்றது அவர் கார் விபத்துகுள்ளாகி சரிகின்றது, சாவகாசமாக எழும்புகிறார் கலைவாணர், சுற்றி பார்க்கின்றார். காரிலிருந்து விழுந்த ஆரஞ்சு பழம் சிதறிகிடக்கின்றது, டிரைவரை எழுப்பி அவருக்கு 2 சுளை கொடுத்துவிட்டு சாலையோரமாக அமர்ந்து பழம் சாப்பிடுகின்றார் பின்னால் வந்த வாகனம் ஒன்று நிற்கின்றது, அலறி அடித்து ஓடி உதவ வந்தவர் என்ன ஆயிற்று என கேட்கின்றனர், பதற்றமே இன்றி சொல்கிறார் கலைவாணர் “அது ஒண்ணுமில்லீங்க..காரை […]

ஆம்பிளைங்கதான் பொறுமைசாலிக, கோபமே வராது

அந்த படம் நினைவில்லை ஆனால் காட்சி நினைவிருக்கின்றது கலைவாணர் தன் காதலியிடம் பேசுவார், காதலியும் பதில் சொல்லும் இந்த பாரு, ஆம்பிளைக்குதான் பொறுமை அதிகம், பொம்பிளைங்க எல்லாம் கோவக்காரிங்க‌ எவன் சொன்னான்? பெண்கள்தான் பொறுமைக்காரங்க கோபமே வராது இல்லடி ஆம்பிளைங்கதான் பொறுமைசாலிக, கோபமே வராது போய்யா சும்மா சொல்லிட்டு, பொம்பிளைங்கதான் பொறுமைசாலிகண்ணு உலகத்துக்கே தெரியுமே” அப்படியா என சொல்லிவிட்டு காதலியினை முத்தமிட செல்வார் என்ன்.எஸ.கே அந்தம்மா “என்னாய்யா யாருண்ணு நினைச்சே, கிட்ட வந்தே கொன்னுபுடுவேன். எவ்வளவு நாளா […]

அக்காவிடம் ஏதோ மாறுதல்

என்னது அடுத்த கட்சியா? இப்படி வார்த்தைகளை கோர்த்தால் எங்கிருந்து இங்கு தாமரை மலரும்? அதெல்லாம் சரி அக்காவிடம் ஏதோ மாறுதல் தெரிகின்றதே என்ன? அக்கா எண்ணெய் வைத்து தலைவாரியிருக்கின்றது, நன்றாகத்தான் இருக்கின்றது பதஞ்சலி எண்ணெயாக இருக்கலாம் அப்படித்தானே அக்கா?.

பிறப்பில் எல்லோரும் சமம் அல்லவா?

முன்பொருமுறை காஞ்சி மகா பெரியவரிடம் பகுத்தறிவில் மூழ்கி முத்தெடுத்த ஒருவர் கேட்டார் “பிறப்பில் எல்லோரும் சமம் அல்லவா? அறிவும் திறமையுமே ஒருவனை முன்னேற்றும். இந்த விதி, பூர்வ ஜென்ம புண்ணியம், கர்மா என ஏன் வீணாக சொல்கின்றார்கள?” பெரியவர் அவரை ஒரு மருத்துவமனைக்கு சென்று பார்க்க சொன்னார் அங்கே ஏழைக்கு பிறந்த குழந்தை பாயில் வெறுமையாக கிடந்தது, பணக்காரனுக்கு பிறந்த குழந்தை நகையூட்டி பட்டு தொட்டிலில் உறங்கிகொண்டிருந்தது அவனிடம் பெரியவர் சொன்னார், “பிறப்பால் எல்லோரும் சமம் என்றால் […]

அய்யய்யோ

அய்யய்யோ பாஜக வந்தாயிற்று இனி மதகலவரம் வரும் என்றார்கள், ஒரு கலவரமும் வரவில்லை நாடு அமைதியாய் இருக்கின்றது அய்யய்யோ இனி ராமர் கோவிலை கட்டிவிட்டு மதுரா மசூதி இடிப்பார்கள் இந்தியா எரியும் என்றார்கள் ஒன்றும் ஆகவில்லை அய்யய்யோ இனி கிறிஸ்தவன் பைபிள் வாசிக்கமுடியாது பாஜக ஒழித்துவிடும் என்றார்கள், வேளாங்கண்ணி திருவிழா வழக்கம் போல் நடக்கின்றது, தினகரனின் பேத்தி கூட போதிக்கின்றார் எந்த ஆலயத்துக்கும், மசூதிக்கும் அவர்கள் வழிபாட்டுக்கும் துளி அளவேனும் சிக்கல் இந்த ஆட்சியால் வந்ததாக தெரியவில்லை, […]

அண்ணா நாமம் வாழ்க..

“பாருங்க..நம்ம நடிப்பு கம்பெனில நல்ல நடிகர்களாகத்தான் உருவாக்கிட்டு வந்திருக்கேன், என்ன நம்பி கொடுத்த நாடக கம்பெனிய நான் வீணாக்கல‌ ஆமா அம்மு, நம்மள மாதிரியே நல்ல வேஷம் கட்டுறாங்க, உலகம் சுற்றும் வாலிபன்ல என்னை பார்த்த மாதிரியே இருக்கு, கெட்டிக்காரி நீ. ஆமாங்க அந்த அண்ணா உங்களுக்கு சொல்லிகொடுத்தாரு, அந்த வித்தைய நீங்க எனக்கு சொல்லி கொடுத்தீங்க, நான் இவங்களுக்கு சொல்லிகொடுத்தேன், பாவம் சசிகலாதான் பெர்பார்ம் பண்ணமுடியாம போயிட்டாங்க‌ நல்ல நடிகர்கள உருவாக்க காரணமா இருந்த அந்த […]