பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காலம் மாறியும் ப.சி நிலைப்பார்

என்ன இருந்தாலும் ப.சிதம்பரம் தனி வரலாறு கொண்டவர், தனிபெரும் குடும்பத்தின் பெரும் வாரிசு, பெரும் பாரம்பரியமும் கல்வியும் கொண்டவர் ஒரு அரசனுக்கு நிகராக கொண்டாடபட்ட வம்சம் அவர் காமராஜரின் சீடர், மிக சிறிய வயதிலே அரசியலுக்கு வந்தவர் இன்றுவரை மதிக்கபடும் பண்பாளர். காமராஜர், இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என பல தலைமுறை காங்கிரசாரோடு இணைந்து வரும் தலைவர் அவர், அனுபவமும் அறிவும் அதிகம் இந்தியா முழுக்க காங்கிரஸின் முகமாக அறியபடும் தமிழர், இந்த மோடி எழுச்சி […]

அமித்ஷாவின் முதல் குரல் உலக கவனிப்பை பெற்றிருப்பது நிஜம்

காஷ்மீர் விவகாரத்தில் ஒரு விஷயம் கவனிக்கதக்கது, அது அக்சாய்சின் பகுதியினை கொஞ்சமும் விட்டுகொடுக்கமுடியாது என அமித்ஷா முழங்கியிருப்பது அக்சாய் சின் என்பது ஒரு முக்கியமான இடம், இந்தியாவினையும் மத்திய ஆசியாவினையும் இணைக்கும் காரகோரம், பாமீர் முடிச்சு என கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் பட்டுச்சாலை காலத்திலே அதன் அவசியம் இருந்ததென்றாலும் மங்கோலிய பேரரசு வலுவாக இருக்கும் வரை அதை தொடும் தைரியம் யாருக்குமில்லை பின்னாளில் சீக்கியர்கள் அதை கட்டுபாட்டில் வைத்திருந்தனர், பின்பு சீனருடன் சேர்ந்து வந்து சீக்கியரை […]

ஆதரவு தருவீர்கள் என நம்புகிறோம்

ஒருவழியாக சங்கம் தனக்கு பிடித்தமான சமையல் மற்றும் பல்வேறு வகையான உணவுகள் தேடலில் இறங்கி விட்டது அதை உங்களுக்கு தருமாறு youtube சேனல் ஒன்றும் சங்கம் தொடங்கி இருக்கிறது அதை சப்ஸ்கிரைப் செய்து சங்கத்தோடு தொடர்ந்து இருக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம் நாசி கண்டார் எனும் பிரசித்தி பெற்ற பெற்ற உணவு பற்றி நாங்கள் கொடுத்த வீடியோ இதோ இன்னும் ஏகப்பட்ட கிழக்காசிய உணவு வகைகள் உங்களை வந்து சேரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறோம்

நமக்கு நல்லநேரம் பங்கு..”

“ஏன்யா நம்ம 2 பேரையும் அர்ஜூனன் கிருஷ்ணன்னு ஏன் ஒரு பயலும் சொல்லவே மாட்டேங்குறாங்க, நாமளும் எவ்வளவு சாகசம் பண்ணிட்டு இருக்கோம் பங்கு, நல்ல வேளையா அந்த ஆளு இல்ல, இருந்திருந்தா நம்ம இரண்டு பேரையும் ஜெயத்ரதன்- சிசுபாலன் , ராவணன்- கும்பகர்ணன், ஹிட்லர்- முசோலினி என கலாய்ச்சிருப்பார்யா, நல்ல வேளை தப்பிச்சோம்.. ஆமா பங்கு இப்பொல்லாம் திமுகவுல அப்படி கலாய்க்க யாருமில்ல, நமக்கு நல்லநேரம் பங்கு..”

மலேசியாவில் ஒரு நல்ல விஷயம் உண்டு

மலேசியாவில் ஒரு நல்ல விஷயம் உண்டு, அதாவது பண்டிகைகள் ஞாயிற்றுகிழமை வந்தால் அந்த விடுமுறையினை திங்களுக்கு மாற்றிவிடுவார்கள் ஞாயிற்றுகிழமை வரும் விடுமுறை வழக்கமான விடுமுறையினை இழக்க வைக்க கூடாது என்பதாலும் மக்கள் உரிமைபடி அவர்களுக்கான விடுமுறையினை கொடுத்தே தீரவேண்டும் என்பதும் அரசின் கொள்கை இது எவ்வளவு நாட்டில் நடைமுறையில் இருக்கின்றதோ தெரியாது, நல்லவர் பழனிச்சாமி காதுக்கு இதை தமிழக குடிகள் கொண்டு சென்றால் நல்லது. மக்கள் விரும்பும் ஆட்சியினை அவர்கள் மகிழ மகிழ கொடுத்துகொண்டிருப்பவர் பழனிச்சாமி, நிச்சயம் […]

ஒரு விஷயம் மறைக்கின்றார்கள்

இஸ்லாமியர்களை காக்க வந்திருப்பதாக சொல்லிகொள்ளும் கட்சி திமுக , இன்று பக்ரீத் வாழ்த்துக்களை சொல்லி கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஒரு விஷயம் மறைக்கின்றார்கள் அதாவது திமுகவின் முக முத்துவின் புகழ்பெற்ற இஸ்லாமிய பாடலான “நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா” எனும் அற்புதமான பாடல் உண்டு. முக முத்து எனும் அற்புதமான பாடகன் அக்காலத்தில் பாடிய அழகான பாடல், கண்ணதாசனின் கிருஷ்ண கானம் பாடலுக்கு ஈடானது. ஆனால் ஒரு திமுகவினராவது அப்பாடலை நினைவு கூர்வார்களா என்றால், அந்த பாடல் […]

விசித்திரமானவர்கள் அவர்கள்..

ரஜினியினை திமுக அன்பர்கள் கடுமையாக விமர்சிக்கின்றார்கள், ஆனால் அதே ரஜினியிடம் 1997ல் திமுக தொங்கிகொண்டிருந்தது என்பதை மட்டும் மறந்துவிடுகின்றார்கள் விசித்திரமானவர்கள் அவர்கள்..

மோடி பக்ரீத் வாழ்த்து

சமூகத்தில் அமைதியும் ஒற்றுமையும் வளரட்டும் : மோடி பக்ரீத் வாழ்த்து அந்த அமைதியும் ஒற்றுமையும் மோடி கையில்தான் இருக்கின்றது, பாபர் மசூதியினை மீண்டும் கட்டி கொடுத்தல் மாட்டுகறி சர்ச்சையிலிருந்து இஸ்லாமியரை காத்து அமைதியினை ஏற்படுத்துதல் எல்லாம் அவர் கையில் உள்ள விஷயங்கள் இந்நாட்டு இஸ்லாமியருக்கு தங்களால் ஆபத்து இல்லை என நிரூபிக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கே உள்ளது

தண்டனை மிக கடுமையாக இருத்தல் வேண்டும்

மதபண்டிகைகள் என்பது சமூகம் வேறுபாடுகளை கடந்து ஒன்றாக கொண்டாட ஒரு வாய்ப்பு அது சகோதரத்துவத்தையும் வளப்பத்தையும் கொண்டு வரும், பல மத மக்கள் உள்ள இடங்களில் அவர்களின் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதும் அவர்களின் மகிழ்வில் பங்குபெறுவதும் ஒற்றுமையினையும் அமைதியினையும் வளர்க்கும் ஒரு வாய்ப்பு விடுமுறைகள் என அரசுகள் அறிவிப்பது அதனால்தான், இல்லையென்றால் இந்த சமூகத்து மக்களுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்க அதிக நேரமாகாது எல்லா மக்களும் எல்லா கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ளவேண்டும் ஒற்றுமையினை வளர்க்க வேண்டும் […]

மிகசிறந்த நடிப்புக்கு நியாயமான விருது

நடிகையர் திலகம் படத்தினை பார்த்தவர்களுக்கு தெரியும் அந்த நடிப்புக்காக கீர்த்தி சுரேஷ் என்பவருக்கு விருது கொடுக்காவிட்டால்தான் ஆச்சரியம் அந்த சாவித்திரியினை அப்படியே கண்முன் நிறுத்தியிருந்தார் கீர்த்தி வெகுளித்தனம் , பிடிவாதம், வெற்றி, தோல்வி , துரோகத்தின் வலி என எல்லா உணர்ச்சிகளையும் கொட்டி கொடுத்திருந்தார் அவர் குறிப்பாக அந்த துரோகத்தின் உச்சத்தில் அவர் கத்தும்பொழுடு கன்னமும் உதடும் அப்படி துடித்தல்லவா? அந்த காட்சிக்கு எத்தனை விருது கொடுத்தாலும் தகும்.. சர்க்கரை வியாதி என சொன்னபின்பும் தட்டு நிறைய […]