பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சித்தார்த்தா போராடியிருக்கவேண்டுமே தவிர செத்திருக்க கூடாது

நிச்சயம் சித்தார்த்தா போராடியிருக்கவேண்டுமே தவிர செத்திருக்க கூடாது வருமானவரி இலாகாவுடன் ஆயிரம் மோதல் சிக்கல் இருக்கட்டும், ஜெயா போன்றவர்கள் வழக்கையே 18 வருடமாக இழுத்த நாடு இது, அத்வாணிக்கு பாபர்மசூதி இடிப்பில் இன்னும் தண்டனையே அறிவிக்கபடவில்லை அப்படிபட்ட நாட்டில் இப்படியான தற்கொலைகள் எல்லாம் ஏற்றுகொள்ள முடியாதது வெற்றிமேல் வெற்றிபெற்று வரலாற்றில் நிலைத்தவன், தான் நினைத்ததை எல்லாம் நடத்திமுடித்தவன் யாருமில்லை அலெக்ஸாண்டரின் கல்லறையினை உலகம் தேடுகின்றது, ஐரோப்பாவினை வெல்ல கிளம்பிய நெப்போலியன் எலும்பாக திரும்பி வந்தான் உலகை ஆட்டிவைத்த […]

கொஞ்சமும் பக்தியே இல்லை

பைபிளில் கடவுள் மோசே மூலம் கொடுத்த மகத்தான கட்டளையினை பாதிரிகள் நிறைவேற்றிய காட்சி இதில் ஈஈஈ என இளிப்பு வேறு ,கொஞ்சமும் பக்தியே இல்லை

கத்தோலிக்கம் அப்படி மாறிற்று

முதலில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது தோமா வழியில் மலபாரில் கிறிஸ்தவம் பரவும்பொழுதும் சரி, பிரான்ஸிஸ் சேவியர் வழியில் தமிழகத்தில் பரவும்பொழுதும் சரி , கிறிஸ்தவம் அதன் சாயலில் ஒழுங்காக இருந்தது வீரமாமுனிவர் கூட இம்மாதிரி விஷயங்களில் இறங்கவில்லை சிக்கல் ராபர்ட் தே நோபிலி என்பவர் காலத்தில் தொடங்கியது, இவர்தான் இந்த கூத்துகளுக்கு முதல் காரணம் என்ன செய்தார் இந்த அரைகிறுக்கர்? அன்று பிராமணருக்கு இந்துமதத்தில் தனிமரியாதை இருப்பதை கண்டார், அவரின் குறுக்கு புத்தி விபரீதமாக யோசித்தது தானும் […]

மாமன்னனாக திப்பு கண்ணில் தெரிவான்

திப்பு மதவெறியனாக இருந்திருந்தால் சிந்து பஞ்சாப் மாகாணங்களை போல மைசூர் இஸ்லாமிய பகுதியாக மாறியிருக்கும் குறைந்தபட்சம் ஐதரபாத் போல இஸ்லாமிய அடையாளமாக மாறியிருக்கும் அவன் கட்டாயமதமாற்றம் எதுவும் செய்யவில்லை, அப்படி செய்தால் தன் ஆட்சி நிலைக்காது என அஞ்சினான், ஐதர் அலி சொல்லிகொடுத்த பாடம் அது மைசூரின் வழி வழி மன்னர் அல்ல அவர்கள், உடையார்களின் ஆட்சி சீரழியும்பொழுது வேலைக்காரனான ஐதர் அதை தாங்கினான் மாபெரும் உயரத்துக்கு அதை எழுப்பினான், திப்புவும் அப்படியே உருவானான் கடைசிவரை இந்துமதத்து […]

முத்தலாக்

பெரியாரிய கொள்கைகளுக்காக பாராளுமன்றம் சென்ற தமிழக சிங்கம் எதுவும் முத்தலாக் விஷயத்தில் பெரும் வரவேற்பினை செய்ததாக தெரியவில்லை திடீரென மனைவியினை நோக்கி தலாக் என சொல்லி விரட்டினால் அவள் என்ன செய்வாள்? எப்படி வாழ்வாள்? ஒரே நொடியில் பெண்களின் வாழ்க்கையினை நிர்கதி ஆக்கிவிடும் விவகாரமது முத்தலாக் என்பது இந்துக்களின் பொட்டுகட்டி விடும் சடங்கினை போல மகா கொடுமையானது அந்த சம்பிரதாயத்தை வேறறுத்தது திராவிட சித்தாந்தம் என முழங்கியவர்கள் முத்தலாக் பற்றி முணுமுணுப்பதோடு சரி அவர்களை விடுங்கள் , […]

ஆடி அமாவாசை

இறந்தவரை நினைவு கூறல் என்பது உலகெங்குமுள்ள‌ எல்லா மதங்களிலும் இனங்களிலும் உள்ள உலக வழக்கம் அது செவ்விந்தியர், மாயன் தொடங்கி ஜப்பானிய இனம் வரை உண்டு, அது யூத இனத்தில் உண்டு அது கிறிஸ்துவத்தில் கலந்து ஐரோப்பாவில் நவம்பர் 2 என குறிக்கபட்டது சீனர் போன்ற கிழக்காசிய இனம் 6 மாதத்துக்கு ஒருமுறை அனுசரிக்கும், அன்று முன்னோருக்கு படையல் மட்டுமல்ல சில ஸ்பெஷல் காகிதங்களை எரித்து அந்த புகையினை மேல் அனுப்பி முன்னோருக்கு பணம் அனுப்பும் முறை […]

பலன்பெற்ற பயிர்கள் எல்லாம் வாடுகின்றன..

காபி டே எனப்படும் செயின் ஷாப் கடைகளை நிறுவிய‌ சித்தார்த் என்பவர் தற்கொலை செய்துகொண்டார் என்கின்றன செய்திகள் வழக்கம் போல மோடி ஆட்சியில் தொழில் நசிந்துவிட்டது, கடன் வாங்கி செத்தோர் அதிகமாகிவிட்டனர் என்ற குரல் கேட்க ஆரம்பித்தாயிற்று இந்தியாவில் திடீர் பணபுழக்கம் வந்தது 1990களுக்கு பின்பு, அது அசுரவேகம் எடுத்தது மன்மோகன் சிங் ஆட்சியில் இது தொழில் முதலீட்டில் குவிந்த பணமா? இல்லை அரசு மறைமுகமாக அனுமதித்து வெளிநாட்டினர் கொட்டிய முறையற்ற பணமா எனும் சர்ச்சை அன்றே […]

“தேசம் போச்சி.. தேசம் போச்சி”

தேசம் காந்திகொலை, பாபர் மசூதி இடிப்பு போன்ற கொடுங்காலங்களுக்கு திரும்பியது போன்றே தெரிகின்றது ராமனின் பெயரை சொல்ல சொல்லி ஒரு சிறுவனை அடித்து கொன்றிருக்கின்றார்கள், அருகே சோகமாக அமர்ந்திருக்கின்றார் தந்தை தசரதனுக்காவது மகன் திரும்ப வந்தான், இவருக்கு அவன் மகன் வருவானா? ராமனின் பெயரை சொல்லி தசரதனின் சோகத்தினை அடுத்தவருக்கு கொடுக்கும் கும்பலை அனுமதிக்கமுடியாது. இந்த சிறுவன் இந்தியனாய் பிறந்தது சரி ஆனால் இந்துவாய் பிறக்கவில்லை அதனால் வாழ தகுதியற்றவன் என்ற தீர்ப்பினை எழுதும் அதிகாரம் யார் […]

ஆச்சரியபட என்ன இருக்கின்றது?

திப்பு சுல்தானின் புகழை ஒழித்துகட்ட இந்த கோஷ்டி கிளம்பியிருப்பது சரியல்ல, அது கண்டிக்கதக்கது வீர சிவாஜிபோலவே மாவீரன் திப்பு திப்புவின் திறமையும் அவனின் ஆற்றலும் போரும் மத சகிப்புதன்மையும் அளப்பறியது அவனின் மைசூர் சமஸ்தானம் அன்று இன்றைக்கு ஜெர்மனிக்கு நிகரான பொருளாதர பலம் கொண்டிருந்தது முதன் முதலில் ஏவுகனை தயாரித்தது அவனே, அது இன்றும் அமெரிக்காவில் உண்டு நெப்போலியன் மதித்து போற்றிய மாவீரன் திப்புசுல்தான், உலகில் எந்த வீரனுக்கும் அந்த பெருமை இல்லை மத சகிப்புதன்மைக்கும் திப்பு […]