பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆணவத்தின் உச்சம்

இந்த மத்திய அரசின் போக்கு ஒரு மாதிரி இருக்கின்றது, கிடைத்திருக்கும் பெரும்பான்மையினை கொண்டு தேசத்தை வளர்ப்பார்கள் என நினைத்தால் எதெல்லாம் தேசத்துக்கு ஆபத்தோ அதை எல்லாம் செய்கின்றார்கள் அமித்ஷா காஷ்மீர் பற்றி பேசியிருப்பதெல்லாம் ஆணவத்தின் உச்சம் இந்திய வரலாறு என்ன சொல்கின்றது, பிரிட்டனுக்கு உட்பட்ட இந்தியாவுக்கே சுதந்திரம் கிடைத்தது அந்த பகுதி மட்டுமே உண்மையான அங்கீகாரம் கொண்டது கோவா போர்த்துகீசியரிடமும் புதுச்சேரி போன்றவை பிரான்ஸிடமும் இருந்தன, அதை சுதந்திர இந்தியா போர் தொடுத்து சேர்த்தது ஒரு வகையான […]

தென்னக‌ கல்வி கொள்கையில் மாற்றம் அவசியமே இல்லை

புதிய கல்வி கொள்கை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் முதலில் ஆரம்ப கல்வியே இல்லா வட இந்தியாவில் தொடக்க கல்வியினை கொடுக்கட்டும், அவர்கள் ஓரளவு கற்றபின் அதாவது அவர்களும் கற்று சிந்திக்க ஆரம்பித்த பின் கல்வி கொள்கைகளை மாற்றலாம் அவர்கள் அடிப்படை கல்வி பெறும் வரை இங்கு தென்னக‌ கல்வி கொள்கையில் மாற்றம் அவசியமே இல்லை

இந்தி தேவையே இல்லாத ஆணி

இந்திய விஞ்ஞானிகளின் வரலாற்றை ஆழ கவனித்து பார்த்தால் ஒன்று தெரியும் அது விக்ரம் சாராபாய் முதல் இன்றைய இஸ்ரோ சிவன் வரையிலான பட்டியல் ஏன் சர்சிவி ராமன் காலத்தில் இருந்து கூட பார்க்கலாம், அதில் தவான், கலாம், டெசி தாமஸ் என ஏகபட்ட பேர் வருவார்கள் யு.ஆர் ராவ் போன்ற வேதியலாளர்கள், அணுசக்தி துறை சிதம்பரம் போல ஏகபட்டோர் உண்டு இவர்கள் யாரும் இந்தியில் படிக்கவில்லை, இந்தியில் படித்தோர் யாரும் பிரபல விஞ்ஞானிகளாக வரவுமில்லை இன்றைய இந்தியாவின் […]

பலத்த என்டெர்டெயின்ட் கிடைக்கும்

பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜாண்சன் என்பவர் நியமிக்கபட்டிருக்கின்றார் மனிதன் ஐரோப்பாவின் டிரம்ப் என்ற நிலையில் பெயர் எடுத்தவர், அதுவும் பிரிட்டனின் பிரதமரானவுடன் அழிச்சாட்டியங்களை ஆரம்பித்துவிட்டார். ஈரானுடன் முறுகல் இருக்கும் நிலையில் சில போர்கப்பல்களை அனுப்பியிருக்கின்றார், பிரிட்டனின் பாதுகாப்பு கவுன்சிலிங் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி அந்த முடிவினை எடுத்திருக்கின்றார் ஜாண்சன். அட நம்மை மாதிரி ஒருவர் இருக்கின்றாரே, சரி இவரை இழுத்து போட்டு ஈரானை அடிக்கலாம் என நமுட்டு சிரிப்போடு டிரம்ப் இவரை அழைத்தாலும் அதெல்லாம் முடியாது என் […]

மோடி அரசு அதில் சறுக்குகின்றது

நம் எல்லோருக்கும் நாடுதான் முக்கியம், நிச்சயம் அதுதான் முக்கியம் ஆனால் இந்த அரசு செய்யும் பல விஷயங்கள் சரியாக படவில்லை, ஒருமாதிரி செல்கின்றார்கள். ஆட்சி அவர்கள் கையில் கிடைத்துவிட்டால் இந்நாட்டை என்னவும் செய்யலாம் என நினைத்துவிட்டார்கள் போல.. சமஸ்கிருதம் என்பதை மிக உன்னத மொழி போல கொண்டாட தொட்ங்கியிருப்தெல்லாம் சரியானதல்ல‌ சமஸ்கிருதம் என்பதெல்லாம் மூத்த மொழி அல்ல, ஏதோ அரசு காரியங்களுக்கான ரகசிய மொழியாக பாவிக்கபட்டு பின் கடவுள் மொழியாக மாறி என்னவோ ஆகிவிட்டது ஒரு காலத்தில் […]

மகா கேவலமானது உலக அரசியல்

இந்திய அரசிலை விட , தமிழக அரசியலை விட மகா கேவலமானது உலக அரசியல் அமெரிக்காவுக்கு பிச்சைக்காரன் கோலத்தில் சென்றார் இம்ரான் கான், அங்கு பாவ அறிக்கையும் வெளியிட்டார் நிச்சயம் பாகிஸ்தானை இயக்கியது அமெரிக்கா, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராக பாகிஸ்தானில் அமெரிக்க உருவாக்கிய இயக்கங்களே பின்னாளில் அமெரிக்கா மேல் பாய்ந்தன‌ ஆனால் முழு பாவத்தையும் இம்ராகானே ஏற்றுகொண்டார் அமெரிக்கா ஒரு நல்ல நாடென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? அயோக்கியனே வெளியே போ, உன் நாட்டில் இருக்கும் தீவிரவாதிகளை […]

ரம் ஊற்றிய தோசை ?

தோசைமாவு அரைப்பது எப்படி என பாடம் கேட்டான் ஒருவன், நாமும் அகத்திய முனிவன் தொல்காப்பியனுக்கு போதித்தது போல போதித்தோம் அரியியினை உளுந்தை இவ்வளவு அளவு ஊற வை, கொஞ்சம் வெந்தயம் சேர்த்துகொள் என சொல்லிவிட்டு சென்றால் அரிசி உளுந்து, வெந்தயம் அவன் தேடி கண்டுபிடித்த நுட்பமான ஜவ்வரிசி எல்லாம் கலந்து ஒன்றாக ஊற வைத்திருகின்றான் யார் அய்யா நீ என நோக்கினால், அண்ணாச்சி இனி என்ன செய்ய வேண்டும் என மிக கவனமாக கேட்டான் ஒரு வோட்காவோ,ரம்மோ […]

உன் நிழலில் இருந்து ஆயிரம் கலாம்கள் இங்கு வருவார்கள்

எழுதிகொண்டே சாக வேண்டும் என ஆசைபடுவான் எழுத்தாளன், நடித்துகொண்டே சாக வேண்டும் என்பான் நல்ல நடிகன் உழும்பொழுதே சாக வேண்டும் என்பான் விவசாயி , நான் செத்தாலும் தொழிற்சாலை இயங்க வேண்டும் என்பான் முதலாளி பாடம் நடத்திகொண்டே சாக வேண்டும் என்பான் ஆசிரியன் ஆம், அந்த மனிதன் விஞ்ஞானியாயிருந்தான் கொஞ்சம் கண் அசைத்திருந்தால் அமெரிக்காவின் தனியார் நிறுவணங்களோ நாசாவோ தங்க தொட்டிலில் டாலராய் கொட்டி தாலாட்டியிருக்கும் ஆனால் நாட்டுக்காக வாழ்ந்த், மாணவர்களிடம் பேசி கொண்டே செத்தான் அல்லவா […]

அக்னி அஞ்சலி செலுத்துகின்றோம்

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, சாஸ்திரியினை கண்டதில்லை அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம் இன்று கலாமிற்கு நினைவு நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் நினைவு நாள். அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில […]

நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம்

அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர், நமது தலைமுறைகக்கு அப்துல் கலாம். இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டவர், அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா…..நெருங்குடா பாப்போம் என சவாவே விட்டவர். ஒரு பின் தங்கிய தீவுபகுதி,பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, […]