பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஏதாவது புரியுமா?

வங்கிகளே தடுமாறி கொண்டிருக்கின்றன, வங்கி இணைப்புகள் எனும் பெயரிலும் இன்னும் பல விவகாரங்களிலும் அதன் பணியாளர்களின் எதிர்காலம் சிக்கலில்தான் இருக்கின்றது விஷய்ம் அது அல்ல, ஸ்டேட் பேங்க் ஆப் இன்டியாவில் 10% இட ஒதுக்கீட்டில் தாழ்த்தபட்டவருக்கு அநியாயம் நிகழ்ந்துவிட்டது என்ற கூக்குரல் விஷயம் நடந்திருப்பது மேற்கு வங்க மாநிலம், அங்கு ஆண்டு கொண்டிருப்பது மம்தா அவர் யாருக்கு நண்பர் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. மம்தாவே கனத்த அமைதி என்பது வேறுவிஷயம், என்ன இருந்தாலும் அம்மணி பானர்ஜி அல்லவா? […]

விழியால் மொழி சொன்ன அற்புத நடிகை

தமிழகத்தில் எத்தனையோ நடிகைகள் வந்தார்கள், சிலர் தடம் பதித்தார்கள், சிலர் கோபுரம் ஏறினார்கள், சிலர் ஆறா வடுக்களை ரசிகர்கள் மனதில் விட்டு சென்றார்கள் அந்த ஆறா வடுக்களில் ஒன்றுதான் நடிகை ஶ்ரீவித்யா அமைதியான முகம், அதில் துருவென்று வரும் அந்த அற்புத கண்கள், புன்னகை சிந்தும் உதடு என மிக அற்புதமான அழகு அவர். குறிப்பாக அந்த கண்கள், அது மட்டுமே ஆயிரம் கதைகளை அட்டகாசமாக பேசும் சினிமாவில் வாயினை விட கண்களால் அதிகம் பேசியவர் அந்த […]

ஆக செக்க சிவக்கின்றது வானம்..

திராவிட கம்பெனி சேல்ஸ் & மார்கெட்டிங் மேனேஜர் Devi Somasundaram என சொல்லாத விகடனை வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வளவு நாளும் இல்லாமல் இப்பொழுது ஏன் விகடன் குதிக்கின்றது? ஒருவேளை இது தயாநிதி மாறன் கோஷ்டியின் வேலையாக இருக்குமோ? ஆக செக்க சிவக்கின்றது வானம்..

என்ன படம் அது?

ஏதோ சமுத்திரகனியின் புதியபடமாம், மனிதர் கள்ளில் ஏதும் வெளிநாட்டு சரக்கு கலந்து குடித்தாரா இல்லை பெத்தடின் போட்டுவிட்டு வந்து பேசினாரா என்பது புரியவே இல்லை கிராம தெய்வங்களை ஊருக்கு வெளியே வைத்துவிட்டு தமிழன் வடக்கத்திய தெய்வங்களை வைத்திருக்கின்றானாம் அன்னாருக்கு கவலை மிஸ்டர் கனி , அரேபியாவில் இருந்தும் பாலஸ்தீனத்தில் இருந்தும் வாடிகனில் இருந்தும் தெய்வங்கள் வந்திருக்கின்றதே அது பற்றி ஒரு வார்த்தை ஏன் சொல்லவில்லை? புத்தனே நேபாள நாட்டுக்காரன். சிறு தெய்வ வழிபாட்டுக்கும் பெரும் ஆலய வழிபாட்டுக்கும் […]

திமுக தலமை அங்கு ஓடிசென்று அஞ்சலி

திமுகவின் உமா மகேஸ்வரியின் கொலையாளிகளை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை திமுக தலமை அங்கு ஓடிசென்று அஞ்சலி செலுத்துவது மிகவும் சரி ஆனால் தா.கிருட்டினன் எனும் திமுககாரர் முன்பொரு முறை கொல்லபட்டபோது என்ன நடந்தது என்பது உலகம் அறிந்தது தா.கிருட்டினனுக்கு ஒரு நீதி, உமா மகேஸ்வரிக்கொரு நீதி

நீரே கவனித்து கொள்ளும் வரதரே

“அத்தி வரதரே நாமே உம்மை தரிசிக்க ஓடோடி வந்தோம் ஆனால் அங்கொருவர் உம்மை காணவராது அமித்ஷா அலுவலகம், நிர்மலா சீத்தாரமன் அலுவலகம் என டெல்லியில் ஓடிகொண்டிருக்கின்றார் அய்யனே ஆசீர்வாதத்தை எமக்கு அளித்துவிட்டு அவரை நீரே கவனித்து கொள்ளும் வரதரே”

லசித் மலிங்கா நாளையுடன் ஓய்வு பெறுகின்றார்

லசித் மலிங்கா நாளையுடன் ஓய்வு பெறுகின்றார் இலங்கையில் எத்தனை பந்துவீச்சாளர் வந்தாலும் அந்த அற்புதமான பவுலரை மறக்க முடியாது அவர் சமிந்தா வாஸ் மிக துல்லியமான பந்துவீச்சினை அவரிடம்தான் காணமுடியும். ஒரு மில்லிமீட்டர் கூட பிசகாத பந்துவீச்சு அது அவர் கால்ராசிகாரரும் கூட, அவர் களமிறங்கிய பின்பே இலங்கை அணிக்கு யாரெல்லாமோ வந்தார்கள், அந்த அணி உலகின் மிகசிறந்த அணியாக இருந்தது ஆட்டத்தின் தொடக்க ஓவரை வாஸ்தான் வீசுவார், அவர் அதிக உயரமுமல்ல ஆஜானபாகுவான தோற்றமும் அல்ல‌ […]

கலைஞர் செத்தாலும் விடுவதாக இல்லை

அந்த கலைஞர் செத்தாலும் விடுவதாக இல்லை நெல்லையில் அன்று நடந்த போலீஸ் தடியடிக்கும் 17 பேர் சாவுக்கும் கலைஞரே காரணம் என கிளம்பிவிட்டார்கள். அதில் நடந்தது என்ன? 1995களில் கலைஞரை எதிர்த்து ஏகபட்ட சாதி சங்கங்கள் உருவாயின அல்லது உருவாக்கபட்டன‌ அப்படி உருவாக்கபட்டவர்தான் கிருஷ்ணசாமி, ஆரம்பத்தில் சில தேர்தல் முடிவுகளை கூட அவர் நிர்மானிக்கும் சக்தியாய் இருந்தார், மறுக்க முடியாது. அப்படிபட்ட கிருஷ்ணசாமி என்பவர் திடீரென தான் தலித் மக்களை காக்க வந்தவன் என்றார், மாஞ்சோலை மக்களுக்கு […]

அவர் எழுப்பியிருக்கும் குரல் நியாயமானது

பாராளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதங்களை சொன்னவர் அண்ணா, அவரின் கேள்விகள் அன்றெல்லாம் பலத்த அதிர்வுகளை கொடுத்தன‌ அவர் கேட்ட கேள்விகள் இப்படித்தான் இருந்தன‌ மாநிலத்தின் குறைவான வருமானங்களை தரகூடிய மிக சிறிய துறைகள்தான் மாநில நிதிக்கு ஆதாரம். துறைமுகம், சுரங்கம், விமான நிலையம், போக்குவரத்து உட்பட 14 மகா முக்கிய நிர்வாகம் மத்திய அரசிடமே உள்ளது இதில் இருந்து மாநிலங்களுக்குரிய நிதியினை சரியாக தருவதுமில்லை, இது திருத்தபட வேண்டும் அந்நாளில் மாபெரும் அதிர்வுகளை அந்த வாதம் ஏற்படுத்தியது அண்ணா […]