பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜூலியன் அசாஞ்ச்சே

இந்த ஜூலியன் அசாஞ்ச்சே எப்படி கைது செய்யபட்டார் என்பதுதான் சுவாரஸ்யம் அமெரிக்காவுடன் உரசலில் இருந்த அன்னாருக்கு ஈக்வெடார் நாடு அடைக்கலம் வழங்கி லண்டனில் இருந்த ஈக்வெடார் தூதரகத்தில் அடைக்கலம் வழங்கி இருந்தது இது சுயநல உலகம், ஒருவரால் பயனில்லை என்றால் யாரும் யாரையும் தேடமாட்டார்கள் அப்படி ஈக்வெடார் அதிபருக்கும் ஏதோ அசாஞ்சேயிடம் தேவைபட்டிருக்கின்றது, அரசியல்வாதி என்றால் அப்படித்தான் இதனால் அசாஞ்ச்சே அடிக்கடி ஈக்வெடார் ஜனாதிபதியிடம் பேசியிருகின்றார் இந்த ஈக்வெடார் அதிபர் தமிழிசை போல வெள்ளைமனம் படைத்தவர் போல, […]

பாகிஸ்தான் பாஜகவுக்கு மிக பெரும் அனுகூலமான விஷயம்

இந்த பாகிஸ்தான் என்பது அமெரிக்காவுக்கு மிக நன்மையான விஷயமோ இல்லையோ பாஜகவுக்கு மிக பெரும் அனுகூலமான விஷயம் ராமருக்கு பின் அவர்களுக்கு பிடித்தமான விஷயம் பாகிஸ்தான் 1947 முதல் பாகிஸ்தானிய எல்லை மாறவே இல்லை, அதுவும் 1972ல் அதன் கிழக்கு எல்லையினை இந்தியா திருத்தி எழுதியது அதுவும் காங்கிரஸ் ஆட்சி இங்கு பாகிஸ்தானால் வரகூடிய ஆபத்துக்களை தடுக்க வலுவான அஸ்திவாரம் அன்றே போடபட்டாயிறு , ஏவுகனை முதல் அணுகுண்டு வரை செய்தாயிற்று பாதுகாப்புக்கான கருவிகளை கோர ராணுவமும் […]

வருத்தம் தெரிவித்த சீமான்

நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த சீமான் அதாவது தும்பிகள் லாரன்ஸை தொடர்ந்து வம்பிழுக்க, லாரன்ஸ் தானும் அரசியலுக்கு வரவா? சைமன் தயாரா என கேட்டுவிட்டார் லாரன்ஸ் தன் அடுத்தபடமான ” காஞ்சனா 3″ படத்திற்கும் அதன் விளம்பரத்திற்கும் தும்பிகளைத்தான் நம்பி இருக்கின்றார் என்பதை உணர்ந்த சைமன் அவசரமாக வருத்தம் தெரிவித்துவிட்டார் ஏண்டா தும்பிகளா? லாரன்ஸுக்கு கூடவா உங்கள் அண்ணன் அஞ்சுவார்? “டேய் இந்த ஓவியா , டாப்சி, லெட்சுமிராய் கூட ஆடிட்டு இந்த பக்கம் […]

இது என்ன தெரிகின்றதா?

இது என்ன தெரிகின்றதா? இலங்கையில் சிங்கள புத்தாண்டை ஒட்டி இலங்கை ராணுவத்தினர் இந்து ஆலயங்களுக்கு சென்றிருக்கின்றனர் அங்கிருந்த தமிழ்பெண்கள் அவர்களுக்கு குங்குமம் பூசி ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கின்றனர் எந்த ராணுவத்தை ஈழதமிழ்பெண்கள் வரவேற்றிருக்கின்றனர்? அங்கிள் சைமன் சொன்னபடி 2 லட்சம் தமிழரை கொன்று பல்லாயிரம் தமிழச்சிகளை மானபங்க படுத்திய ராணுவத்தைத்தான் இப்படி வரவேற்றிருக்கின்றனர் சைமன் குற்றசாட்டெல்லாம் எவ்வளவு பெரும் பொய் என்பதை உணருங்கள் இவர்கள் கட்டிவிடும் கதை எல்லாம் உண்மை என்றால் இப்படி எல்லாம் நடக்குமா? இந்த […]

கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன்

ஆயிரம் புத்தகங்களை எழுதுவதை விட பல்லாயிரம் வார்த்தைளைவிட வலிமையானதும் நிலைத்து நிற்பதும் காட்சி படுத்துதல் எனும் அழுத்தம். அது கொடுக்கும் அழுத்தத்தை வேறு எதுவாலும் கொடுக்க முடியாது அந்த மனிதன் இடத்தில் யார் இருந்தாலும் ஒன்று சமுக விரோதி ஆகியிருப்பார்கள் இல்லை அழிந்து போயிருப்பார்கள் ஆனால் வலி எல்லாம் தாங்கி வளர்ந்து நின்றான் அவன். வளர்ச்சி என்றால் அபார வளர்ச்சி, இன்றும் மனிததன்மையுள்ள மானிடநேயமிக்க கலைஞனுக்கு அவனே எடுத்துகாட்டு. ஆயிரம் எழுத்தாளர்கள் எழுதவேண்டிய காரியத்தை , தொழிலாளி […]

தென்னகத்திற்கு பல நன்மைகள் கிடைக்கட்டும்

கனிமொழி டிவிட்டரில் பனங்காட்டு படத்தை வைத்துவிட்டார், பெரியார் படத்தை எடுத்துவிட்டார் என்பதெல்லாம் புகாரே அல்ல‌ அம்மணி இப்பொழுது தூத்துகுடி பக்கம் மிக பெரும் போராட்டத்தை நடத்துகின்றது, நிச்சயம் வெல்வார் பனைமரம் என்பது தமிழக குறிப்பாக தென் தமிழக அடையாளம் இதுவரை தென்னகம் மிக முக்கிய அரசியல்வாதியினை பெறவில்லை, தென்னகத்தின் மந்த நிலைக்கும் பின்னடைவுக்கும் அதுவும் காரணம் கனிமொழி தென் தமிழகத்தின் மாபெரும் அரசியல் அடையாளமாக உருவானால் அது வாழ்த்துகுரியது அவர் அப்படி பெரும் பிம்பமாக உருவாகி வரட்டும், […]

27ம் வெள்ளிவிழாவில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

கையெழுத்து பத்திரிகை நடத்தினார் கலைஞர், அதனை அருகிருந்தே பார்த்து உதவி வளர்ந்தார் முரசொலிமாறன் பின்னாளில் முரசொலி என கலைஞரே எழுதி அதனை தலைச்சுமையாக சுமந்து விற்றகாலங்களிலும் உடனிருந்தார் முரசொலிமாறன் சினிமாவில் கலைஞர் எழுத்துபுரட்சி செய்தகாலங்களில் கலைஞருக்கு அருகிலே இருந்து முரசொலி உட்பட பல விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தார் மாறன் முரசொலி அரசியல் இதழானது, ஆனால் எல்லா விஷயங்களையும் கொடுக்கும் பத்திரிகை கொடுக்க ஆசைபட்ட மாறன் பத்திரிகை உலகிற்கும் வந்தார், பல பத்திரிகைகளை நடத்தினார் அவர் குறிப்பிட்டு சொல்ல […]

அவரையாவது சிலுவையில் அறையாமல் அந்த இனம் இருக்கட்டும்

ஓய்வுநாளில் மனிதன் ஓய்ந்திருக்க வேண்டும் என்பது கடவுள் கொடுத்த கட்டளை அதன்படி யூதர்கள் இன்றும் சனிகிழமை அதிகம் நடக்க கூட மாட்டார்கள், இன்றும் இஸ்ரேலில் கட்ட லிப்டுகளில் கூட சனிகிழமை தானே நின்று செல்லும் லிப்டுகள் உண்டு ஆம் பட்டனை தொட்டால் வேலையாம் அப்படி ஓய்வுநாளை மிக நுணுக்கமாக அனுசரிக்கின்றார்கள் இந்த கிறிஸ்தவமும் இருக்கின்றதே, இம்சைபிடித்தது. ஓய்வு நாளிலும் காலையில் எழு சர்ச்சுக்கு போ, மதியம் வரை விழுந்து கிட என பெரும் அழிச்சாட்டியம் செய்கின்றது கர்தரின் […]

அம்பேத்கர்

இந்தியாவின் ஜாதிய கொடுமைகள் தெரியவேண்டுமானால் அம்பேத்கரின் வாழ்க்கையினை ஒருமுறை படியுங்கள், காந்திக்கு சற்றும் குறையாத மாமனிதன் அவர் என்றான் ஒரு மேல்நாட்டு அறிஞர், முக்கால உண்மை ஒன்று உண்டென்றால் அந்த மனிதனின் வார்த்தைகள்தான். தலைவலியும்,காய்ச்சலும் மட்டுமல்ல ஜாதி ஒடுக்குமுறையும் அதில் பாதிக்கபட்டவனுக்குத்தான் தெரியும், அவர் அப்படித்தான் பாதிக்கபட்டார், அதனால்தான் அந்த சிக்கல்களை அவரால் பேசமுடிந்தது,போராடமுடிந்தது, முடிவில் சாதி இல்லா புத்தமதத்தில் இணையவும் வைத்தது. அவர் வாழ்ந்த காலம் அப்படி, மகா கொடுமையானது. அந்த கொடுமையான காலத்திலும் அவர் […]

காலண்டர் தோன்றிய விஷயங்கள்

இந்த புத்தாண்டு விஷயமாக பல விஷயங்களை படிக்க முடிந்தது, அதில் காலண்டர் தோன்றிய விஷயங்களும் இருந்தன‌ தொன்மையான நாட்காட்டிகள் கொண்ட நாடுகளில் இந்தியாவும் சீனாவும் ஒன்று, அப்படியே கிரேக்கமும் ஒன்று கிழக்கையும் மேற்கையும் முதலில் இணைத்தவன் அலெக்ஸாண்டர், இந்திய அறிவார்ந்த விஷயங்களை பெற்றும் கொண்டார்கள், இந்திய தொடர்பு ஏற்பட்டபின் கிரேக்கர்களின் கணிதம் உட்பட பல அறிவுகள் மாற்றம் பெற்றன பல இந்திய நடைமுறைகளும், வார்த்தைகளும் ஐரோப்பாவிற்கு சென்றது ரோமர்கள் எழும்பி கிரேக்கர்களை ஒடுக்கி வல்லரசான பின் ரோமர் […]