பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பேதை செங்கொடிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

ஒரு படத்தில் நாகேஷ் குனிந்து நிற்பார், அவர் யார் முன்னால் குனிந்து நிற்பாரோ அந்த பணக்காரர் கேட்பார், என்னப்பா இப்படி குனியிறே நாகேஷ் சொல்வார் “இன்னும் குனிவேன், தரை தடுக்குதே” இந்த அங்கிள் சைமன் கும்பல் எப்படிபட்டது என்றால் சாட்சாத் அந்த நாகேஷ் காட்சியினை விட காமெடியாக தரையில் குழிதோண்டி குனியும் கும்பல் இதோ பாருங்கள், செங்கொடிக்கு அஞ்சலியாம். அவர்கள் கட்சியே யாருக்காவது அஞ்சலி செலுத்துவது அதன் படி செய்கின்றார்கள் ஆனால் செங்கொடி எதற்காக செத்தாள் ராஜிவ் […]

ஸ்டாலின் தன் எதிரியினை கூட அடையாளம் காணவில்லை

இதுதான் சறுக்கல் என்பது திமுக அகில இந்திய கட்சி அல்ல, இந்தியா முழுக்க இருந்து பாஜகவினை விரட்ட அதனால் நிச்சயம் முடியாது, மாநில கட்சியான திமுக அகில இந்திய அளவில் பாஜகவினை விரட்டும் என்பதெல்லாம் பாகிஸ்தான் ஆசிய விளையாட்டு போட்டியில் சீனாவினை வெல்லும் என்பது போன்ற கனவு சரி தமிழக அளவில் பாஜகவினை எதிர்க்க போகிறோம் என்றால் இங்கே பாஜக 2% வாக்கு கூட இல்லாமல் இருக்கின்றது, அது தமிழிசை நாக்கிலும் எச்.ராசா வம்பிலும் வாழ்கின்றது தமிழகத்தில் […]

“அணையினை திறக்காதே மூழ்கி சாவு” என சொன்னால்தான் புத்திவரும்

உலகெல்லாம் கடந்த இரு வாரங்களாக எதிர்பார்த்த செய்தி வந்தே விட்டது, அவர்கள் நிச்சயம் சொல்வார்கள் என்றே உலகம் எதிர்பார்த்தது, இதோ சொல்லிவிட்டார்கள் தமிழகத்திற்கான ஒரு ஆண்டு நீரை 3 மாதத்தில் தந்து விட்டோம் என கன்னடம் சொல்லிவிட்டது எப்படிபட்ட அபாணடம் இது, மழைவெள்ளம் என்பது எப்படி கணக்கில் வரும்? அணையினை திறக்காவிட்டால் கேரள நிலைக்கு கன்னடம் ஆகியிருக்கும் அதை தவிர்க்க திறந்துவிட்டு தமிழக கணக்கில் காட்டுகின்றார்களாம் அவர்களுக்கு இன்னும் தமிழனை பற்றி தெரியவில்லை அடுத்தமுறை காவேரியில் வெள்ளம் […]

தந்தைக்கு பின்னர் பதவி மகனுக்கு

பெரியார் சுயம்பாக உருவானார், பெரியாரின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் தன்னால் பெரும் இடம் பெற‌ முடியும் என நிரூபித்தார் அண்ணா அண்ணாவிற்கு பின்னரான போட்டியில் பெரும் ஜாம்பவான்களை சரித்து காட்டி முதலிடம் பெற்றார் கலைஞர் கொள்கையோ, கோட்பாடோ இல்லாவிட்டாலும் தன்னாலும் அரசியலில் வெல்லமுடியும் என காட்டியவர் ராமசந்திரன் அரசியலுக்கு வந்த சில ஆண்டுகளிலே அதிரடியாக கட்சியினை கைபற்றி தலைவி என அமர்ந்தவர் ஜெயா குறிப்பிட தகுந்த வெற்றிகள் என்பது இதுதான், சாதனை என்பதும் இதுதான் தந்தைக்கு பின்னர் பதவி […]

அழகிரி என்பவர் தலைவன் இல்லா குட்டி சாத்தான்

குட்டி சாத்தான்களுக்கு எப்பொழுதும் வேலை கொடுத்து கொண்டே இருக்க வேண்டுமாம், இல்லை என்றால் அதன் அட்டகாசம் பெருகிவிடுமாம் இதனால் மந்திரவாதி அதற்கொரு வேலையினை கட்டளை இட்டுகொண்டே இருப்பானாம், இல்லை என்றால் அது மந்திரவாதியின் காதை திருகுமாம், தலையில் ஏறி இருந்து கடிக்குமாம், இன்னும் ஏக அழிச்சாட்டியம் செய்யுமாம் இது மந்திரத்திற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும் தனக்கு அப்படி அட்டகாசம் செய்துகொண்டிருந்த அழகிரிக்கு வேலை மேல் வேலை கொடுத்து திசை திருப்பி விட்டிருந்தார் கலைஞர் ஆனால் தனக்கு தேவையான […]

திமுக தலைவராகிவிட்டார் ஸ்டாலின்

திமுக தலைவராகிவிட்டார் ஸ்டாலின், ஆனால் உண்மையான சவால்கள் இனிதான் அவருக்கு காத்திருக்கின்றன‌ சுகமாக அமர்ந்து உத்தரவிடும் பதவி அல்ல அது , முள் இருக்கை கட்சி, எதிர்கட்சி, மாநில கட்சிகளை நசுக்க விரும்பும் பலமிக்க டெல்லி, அழகிரி, இந்த முகநூல் திமுக இம்சைகள், இது போக ஏக சவால்களை இனிதான் அவர் எதிர்கொள்ள வேண்டும் தந்தை போல் எல்லா சவாலையும் அவர் வெல்ல வாழ்த்துக்கள் திமுக தலைவர் வந்துவிட்டார் நல்லது ஆனால் தளபதி என்பதே அதன் பிரதான […]

தமிழ் சமூகத்தை வைரமுத்து என்னதான் சொன்னார் சொல்லிவிட்டார்

“வேட்டி கட்டிய விலங்குகளாகத் திரிந்த ஒடுக்கப்பட்ட மக்கள்” என முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தை வைரமுத்து சொல்லிவிட்டாராம் உடனே டேய் எம் சாதி விலங்கா? என பலர் கொந்தளிக்கின்றார்கள் சூத்திரன் என வைக்கபட்ட பிரிவில் இன்றைய ஆண்ட சாதி என சொல்லிகொள்பவர்களும் , இன்று ஒடுக்கபட்டோர் என சொல்லி கொள்பவர்கள் எல்லோருமே அடக்கம் இன்னொன்று சட்டை அணிவது தமிழர் வழக்கம் அல்ல, அது பிற்காலத்தில் வந்தது, வேட்டி அணிந்து மாரில் சந்தணம் பூசி நகைகள் அணிந்து திரிவது […]

தீன் மூர்த்தி பவன் பிரச்சினை

தீன் மூர்த்தி பவன் பிரச்சினையினை மன்மோகன் சிங் கிளப்பியதிலிருந்து டெல்லி அரசியல் சூடுபிடிகின்றது அதாவது நேரு வசித்த அந்த வீட்டினை மத்திய அரசு செப்பனிட போகின்றது, அதில் நேருவின் அடையாளங்கள் காக்கபட வேண்டும் என காங்கிரஸ் போர்கொடி தூக்குகின்றது ஒரு சிலர் ஒருபடி மேலேபோய் அது நேருவின் குடும்ப சொத்து என்றே சொல்ல தொடங்கியாயிற்று முதலில் இந்த தீன் மூர்த்தி என்றால் என்ன? தீன் மூர்த்தி பவன் என்றால் என்ன என பார்க்கலாம் அப்பொழுது முதல் உலகப்போர் […]

என்ன அமித்ஜி கலைஞர் அஞ்சலிக்கு செல்லவில்லையாமே ஏன்?

என்ன அமித்ஜி கலைஞர் அஞ்சலிக்கு செல்லவில்லையாமே ஏன்? அட போங்க மோடி ஜி, அவரை புகழ்ந்து எழுதி தருவாங்க அதை சொல்லணும், நம்ம ஆட்களும் உருகுவாங்க, அப்புறம் கலைஞரை புகழ்ந்து அவங்க‌ பேசுவாங்க, நான் கை தட்டிட்டே இருக்கணும் அதுக்கென்ன ஜி? அதில் என்ன சிக்கல்? அதில்தான் ஜி சிக்கல், சும்மாவே திமுககாரங்க குசும்பங்க, அந்த துரைமுருகனை எல்லாம் நம்ப முடியாது, எல்லாம் முடிஞ்ச அப்புறமா பாருங்க உங்க கட்சிகாரங்களே எங்களை பாராட்டுறாங்க, இவ்வளவு சிறப்பு வாய்ந்த […]

போப்பாண்டவர் வட அயர்லாந்திற்கு சென்றிருக்கின்றார்

போப்பாண்டவர் வட அயர்லாந்திற்கு சென்றிருக்கின்றார், அது என்ன வட அயர்லாந்து முன்பு பிரிட்டனில் இருந்த பகுதி அது, ஆங்கிலிக்கன் சபை ஆதிக்கம் நிறைந்த பிரிட்டனில் இருந்து அந்த கத்தோலிக்க நாடு பிரிந்தது அந்த கத்தோலிக்க நாட்டிற்குத்தான் கத்தோலிக்க சபை தலைவரான போப் சென்றிருக்கின்றார், அவர் சென்றது விஷயம் அல்ல, அங்கு அவர் சொல்லி இருப்பதுதான் விஷயம் சிறுவர்கள் மேல் காம சேட்டை புரியும் பாதிரிகள் பற்றி மிக வருந்தி இருக்கின்றார், அதற்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டிருக்கின்றார் கத்தோலிக்க […]