பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஏற்கனவே ஹெச். ராசா மனநோயாளி

இது புலிகள் காலத்தில் அவர்களுக்காக பதுக்கியது என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும் ஆனால் இந்த நபர் என்ன சொல்கின்றார்? கிறிஸ்தவர்கள் வன்முறையில் இறங்க பதுக்கினார் என்கின்றார். ஏன் இந்த வெறி? உண்மையில் ஜெயா, கலைஞர் காலத்தில் பதுக்கபட்டவை எங்கள் அரசு மீட்கின்றது என்றல்லவா இவர் சொல்லி இருக்க வேண்டும்? காங்கிரஸ் செய்யாததை பாஜக செய்கின்றது என்றாவது சொல்ல வேண்டும் இந்த அட்மின் எத்தனை முறை அடிவாங்கினாலும், ராசா பெயரை கெடுப்பதிலே இருக்கின்றார் ஏற்கனவே ராசா மனநோயாளி என்ற நிலையில், […]

“இரும்பு முதல்வர்” பழனிச்சாமி வாழ்க..

இந்த போலி பாஸ்போர்ட் கும்பல் பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது இக்கும்பலோடு தொடர்புடையவர் பாதிரி ஜெகத் கஸ்பர். இவர்தான் அக்கும்பலோடு பிரபாகரன் பிறந்த நாளில் கேக் வெட்டுதல், மரம் நடுதல் என ஏக அலப்பறைகளை செய்தவர் அவரும் ஐரோப்பா முதல் பலநாடுகளில் தொடர்புடையவர் இக்கும்பல் முழுக்க முழுக்க புலி ஆதரவு தொடர்புடையவர்கள் என்பதால் , அவர் எப்படி தப்பித்தார் என தெரியவில்லை இச்சம்பவம் நடக்கும் என நினைத்தாரோ என்னமோ பாதிரி தூத்துகுடி கலவரத்திற்கு நீதி வேண்டும் […]

அங்கிள் கன்டாவில் பேசிய பேச்சின் ஒரு பகுதி

அங்கிள் கன்டாவில் பேசிய பேச்சின் ஒரு பகுதி “உங்களுக்கு தெரியுமா சொந்தங்களே, எங்க தமிழ்நாட்டுல சில பயலுக மீச வச்சிருப்பான். சிலருக்கு துடைப்பகட்ட மாதிரி இருக்கும், சிலருக்கு பஞ்சு மாதிர் காது வரை இருக்கும் சில சில்லறைபயலுக முறுக்கிவிட்டிருப்பான் அவனுகள பார்த்து நான் எங்க ஊர்ல கேப்பேன், ஏண்டா இது என்னடா மீசை? வீரம்னு சொல்லுவான் இதெல்லாம் வீரமாடா? ஈழத்துல என் அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பி காட்டுறாங்களே அது வீரம்டா. இனம் மீட்க ஆசை வைங்கடா, […]

அவசர நிலைமைக்கால கொடுமைகளை மறக்கமுடியுமா?

சோ ராமசாமி தன் போக்கில் எமர்ஜென்ஸியினை கலாய்த்துகொண்டிருந்தார், பத்திரிகை தடை இருந்த காலத்திலும் மகா ரகசியமாக ஆனால் ஆர்வமாக அவரின் துக்ளக் தேடபட்டு மக்களால் வாங்கபட்டது அதுவும் அத்வாணி, வாஜ்பாய் கைதுசெய்யபட்டபின் சோ ராமசாமியின் தாக்கம் அதிகமாக இருந்தது கலைஞரோ அட்டகாசமாக ஆடிகொண்டிருந்தார். ஸ்டாலின் உட்பட எல்லோரும் சிறைபட்டிருந்தனர். அந்த மிசா சட்டபடி கைது செய்யபட்டோர் எங்கிருக்கின்றனர், இருக்கின்றார்களா இல்லையா என்பது கூட தெரிவிக்கபடாது திமுக சார்பாக கைது செய்யபட்டோர் விவரம் கலைஞரிடம் இருந்தது ஆனால் முரசொலியில் […]

தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயற்சி : வாலிபர் கைது

தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயற்சி : வாலிபர் கைது தமிழிசை ஒரு சுவாரஸ்யமான அரசியல்வாதி, கொஞ்சமும் தயக்கமின்றி, அச்சமின்றி சொல்ல கூடியவர். விமர்சனங்களுக்கு அஞ்சுபவரும் அல்ல‌ சுறாக்களும், கடல் பாம்புகளும், திமிங்கலங்களும் , ஆமைககளும் ஏன் ஆமைகறிகளும் , ஆக்டோபஸ்களும் நிறைந்த கடலின் கரையில் இருந்து கொண்டு ஒவ்வொன்றையும் சாடும் தவளை அவர். அடிக்க வேண்டியவர்கள் அந்த சுறாக்களை, திமிங்கலங்களை, கடல் பாம்புகளை, கொடும் கொம்பன் சுறாக்களை அடிக்கலாம் அதைவிட்டு விட்டு அவைகள் அப்படித்தான் ஆனால் […]

அஞ்சாமல் திமுக தொடர்ந்து போராடும் : ஸ்டாலின்

ஏம்பா மகனே, இந்த 8 வழிச்சாலைக்கு அடித்தளமிட்டது கருணாநிதி, கையெழுத்திட்டது ஸ்டாலின் 4 லட்சம் விவசாயிகளை நடுவீதியில் நிறுத்தியது “விவசாய துரோக‌” திமுக ஆட்சின்னு ஒரு பயலும் கிளம்பலியா? ஆச்சரியமா இருக்கு அவனுகளுக்கும் சொல்றதுக்கு ஆசைதான், ஆனா ஏற்கனவே அவனுக சொன்ன பொய் எல்லாம் கிழிஞ்சி அவனவன் தலை தெறிக்க ஓடும்பொழுது இப்படி பொய் சொல்ல முடியுமா?   மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் ஆய்வு செய்தால் பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் திமுக தொடர்ந்து போராடும் […]

விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் : பழனிசாமி

விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் : பழனிசாமி தமிழிசையும், எச்.ராசாவும் தான் இப்படி பேசிகொண்டிருப்பார்கள் என்றால் பழனிச்சாமியும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டார் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் உறவு உள்ளது என்பதை இதை விட தெளிவாக நீரூபிக்கமுடியாது, சகவாச தோஷம் என்பது பழனிச்சாமியினையும் ஒட்டிகொண்டது விரைவில் விவசாயிகளே தாமாக 8 வழிச்சாலை அமைத்துகொடுத்தார்கள் என சொல்வார் பாருங்கள், அதனை கேட்க “எதையும் தாங்கும் இதயத்துடன்” தயாராக இருப்போம்

பாஜகவின் பலத்தை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ளவே முடியாது : தமிழிசை

தலைவர் வழிகாட்டிட்டார், இனி மெக்கா போயிட்டு மசூதி முன்னால நின்னுட்டு வந்தா போதும்…   பாஜகவின் பலத்தை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ளவே முடியாது : தமிழிசை ஆம், எதிரி கண்ணுக்கு தெரிந்தால் எதிர்கொள்ளலாம். தெரியாத வைரஸை மருந்து தெளித்துத்தான் விரட்ட முடியும்   காவேரி விவகாரத்தில் எங்கள் பொறுமையினை மத்திய அரசு சோதிக்கின்றது : குமாரசாமி இப்படி கோபபடவேண்டியவர் பழனிச்சாமி, அவரே மகா அமைதியாக இருக்க ஆச்சரியமாக குமாரசாமி பொங்கிகொண்டிருக்கின்றார் 8 வழிச்சாலையில் நிலமிழக்கும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்ட […]

ஸ்டாலின் சும்மாதான் திருவரங்கம் பக்கம் சென்றார்

ஸ்டாலின் சும்மாதான் திருவரங்கம் பக்கம் சென்றார், அதற்குள் நீ என்னவெல்லாமொ எழுதிவிட்டாய், அவர் நெற்றி குங்குமத்தை அழித்த பொற்காட்சி கண்டாயா? ஏ ஆரிய அடிவருடி , இத்தோடு நிறுத்திகொள் என பல உபிக்கள் சீறுகின்றன‌ எதற்காக சென்றாராம்? ஒரு பொது நிகழ்ச்சிக்காம் அதாவது கோவிலில் வாழும் ஏழைகளுக்கு உதவி அளிக்க சென்றாராம் , தமிழகத்து பிச்சைக்காரர்களை எல்லாம் திமுக ஒழித்துவிட்டதால் பார்ப்பன அட்டகாசத்தில் கொஞ்சம் பிச்சைக்காரர்கள் திருவரங்க கோவிலில் மட்டும் இருக்கின்றார்களாம் மிக சரியாக அவர் அங்குதான் […]

சஞ்சயின் எதிர்பாரா மரணம், இந்திய அரசியலை புரட்டிபோட்ட சம்பவம்

கட்சியின் எந்த பதவியிலும், அரசின் எந்த பதவியிலும் இல்லாத ஒருவன் தன் குடும்ப அரசியல் பலத்தால் பெரும் நாட்டையே ஆட்டி வைக்கலாம் என இந்தியாவிற்கு புது இலக்கணம் எழுதியவர் சஞ்சய் காந்தி இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி, 1971 முதல் 1980 வரையான காலகட்டங்களில் இந்தியாவினை ஆட்டிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி. இந்த தேசம் அவரை கண்டு மிரண்டிருக்கின்றது, மனிதர் அனாசயமாக மிரட்டி ஆண்டிருக்கின்றார் வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கட்டாய கருக்கலைப்பு திட்டம், சில துப்பாக்கி […]