பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தீப்பொறி ஆறுமுகத்தையும் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள்

இங்குள்ள எதிர்கட்சிகள் எல்லாம் ஒழுங்காக காய் நகர்த்தி இருந்தால் கன்னட தேர்தலோடு தமிழகத்திலும் தேர்தல் நடந்திருக்கும் அதை செய்வார்கள், இந்த ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என பார்த்தால் இந்த சிவி சன்முகம் என்பவர் தலையினை வழிப்பாரா? மீசையினை எடுப்பாரா என கேட்டுகொண்டிருக்கின்றார்கள் அண்ணாவும், கலைஞரும் உருவாக வேண்டிய நேரத்தில் வெற்றிகொண்டானையும், தீப்பொறி ஆறுமுகத்தையும் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள் சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் – ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை பின்னே? எல்லா கட்சிக்காரனும் ரஜினியின் படம் […]

கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கின்றது பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை

கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கின்றது பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை என பல கேள்விகள் எழும் விலையினை குறைக்க அரசுக்கும் விருப்பமே, எந்த அரசும் விலையினை ஏற்றி வைக்க விரும்பாது, சிக்கல் எங்கிருக்கின்றது? இந்திய ஆயில் நிறுவணங்களின் பணியாட்களின் சம்பளத்திலும், சலுகையிலும் இருக்க்கின்றது. அவ்வளவு சம்பளம் இந்த விலைக்கு பெட்ரோல் விற்றால்தான் அவர்கள் சம்பளமே கொடுக்கமுடியும், இதுபோக பென்சன் , ஓய்வுநிதி பல்க் கமிஷன் அது இது என பல விஷயங்கள் பெட்ரோல் விலை குறைத்து விற்கபடும் […]

எதிர்க்க வேண்டியதும் , ஒழித்துகட்ட வேண்டியதும் அதிமுக எனும் கட்சி

நீங்கள் என்ன சொன்னாலும் சரி, தமிழகத்தில் செய்ய வேண்டியது பிராமண எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு எல்லாம் அல்ல‌ எதிர்க்க வேண்டியதும் , ஒழித்துகட்ட வேண்டியதும் அதிமுக எனும் கட்சி அதற்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது. எதற்காக அது இயங்குகின்றது என்பது அவர்களுக்கே தெரியாது அதுவே இம்மாநிலத்தின் பெரும் சாபக்கேடு, அந்த சாக்கடையில் இருந்து பல கொசுக்கள் வந்துகொண்டே இருக்கும் நேற்று கூட ஒரு டெங்கி கொசுவும், மலேரியா கொசுவும் பரிவட்டத்தோடு நின்றது, பார்க்க சகிக்கவில்லை ஆக […]

பிராமண எதிர்ப்பு, நாத்திகம் இனி எடுபடாத விஷயங்கள்…

பிராமண எதிப்பு , பிராமண ஒழிப்பு, பிராமண ஆதிக்க தகர்ப்பு என என்னவெல்லாமோ சொல்லி கொண்டிருக்கின்றார்கள் ஒருவேளை திராவிட நாடு அடைந்திருந்தால் ஹிட்லரின் கொடுமைகள் இங்கும் நடந்திருக்கும் போல‌ இவர்களிடம் தனி நாடு சிக்கினால் உடனே எல்லா பிராமணரையும் விரட்டிவிடுவார்களா? இவர்கள் உருவாக்கும் சித்திரத்தை கண்டால் சாதிக்கொரு நாடு கொடுக்காமல் பிரச்சினை தீராது போல‌ இலங்கையில் என்ன சிக்கல்? பெரும்பான்மை சிங்களனுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது தவறாம், திறமை அடிப்படையில் யாழ்பாணத்தானுக்கு கல்வி, வேலை என கொடுக்க […]

கல், சாராயம் , மண் விற்க ஒரு அரசு…

அனுமதியில்லாத இறக்குமதி மணலை விற்றால் 2 ஆண்டு சிறை: தமிழக அரசு உத்தரவு ஆமாம் பழனிச்சாமி அரசும் அவர் சகாக்களும் மட்டுமே இங்கு மணல் விற்கும், அதையே எல்லோரும் வாங்க வேண்டும் அரசே மதுவிற்கும் அதையே எல்லோரும் குடிக்க வேண்டும், மீறி வேறு மது குடித்தால் அது கள்ளசாராயம் அப்படி வேறு மணல் வந்தால் அது கள்ள மணல், அரசு சும்மா விடாது, பின் எப்படி கட்சிக்காரர் பிழைக்க, இவர்கள் கல்லா கட்ட? அதனால் மண் , […]

நவீன இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் விருப்பம் : : மோடி

நவீன இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் விருப்பம் : : மோடி விருப்பம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றது, ஆனால் செயல் அதள பாதாளத்தில் கிடக்கின்றது நவீன இந்தியாவிற்கு ஆசைபட்டுவிட்டு பசுமாடு , சாணம், சாமியார் யோகி, திரிபுரா காமெடியன் என கட்சியில் இருந்தால் என்னாகும்? இவர் விரும்புவது கிழக்கே விடியல் ஆனால் ஓடுவது மேற்கு நோக்கி…    

ராக்கெட் ராஜா என்பவர் கைது செய்யபட்டார் என செய்திகள் வருகின்றன‌

ராக்கெட் ராஜா என்பவர் கைது செய்யபட்டார் என செய்திகள் வருகின்றன‌ தென்னகத்தில் சாதிவெறி அதிகம், அதனை வைத்து சில ரவுடிகளை உருவாக்கி காரியம் சாதிப்போர் அதிகம் இது 1980களில் நெல்லையில் தொடங்கியது, தொடங்கி வைத்தது யாரென்றால் அரசியல்வாதிகள், அதன் பின்பு தொழிலதிபர்கள் செல்வின், ஜாண் பாண்டியன், முத்துலிங்கம் என தென்னகத்தை மிரட்டிய ரவுடிகள் எல்லாம் இப்படித்தான் உருவானார்கள். வெங்கடேச பண்ணையாரும், பசுபதி பசுபதி பாண்டியனும் தங்கள் சொந்த பகையினை சாதியில் புகுத்தி ரத்த ஆறு ஓட வைத்தார்கள் […]

மோடி சவாலை எதிர்கொள்கின்றார்.. அதில் வெல்ல வேண்டும் …

பிரிட்டன் வெளியேறும்பொழுது இந்த தேசத்தை முதலில் இரண்டாக பிளந்தார்கள், அத்தோடு இந்தியா இன்னும் உடையும் என்றார்கள் இத்தேசம் நின்றது, நேரு மிகபெரும் தலைவனாக அறியபட்டார் நேருவினை குறிவைத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தூண்டிவிட்டார்கள் , இங்கு திமுகவும் பாகிஸ்தான் சீன போர்களும் நேருவினை பலவீனபடுத்தின‌ நேரு காலமானதும் இந்தியா உடையும் என்றார்கள், சாஸ்திரி அட்டகாசமாக தேசத்தை நிறுத்தினார் ஆனால் அவரும் மர்மமாக இறந்தார், இத்தோடு இந்தியா காலி என்றார்கள் இந்திரா மிக உறுதியாய் இந்திய அடையாளமானார், தேசம் நின்றது. […]

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி ஆமாம், பாஜக மத்தியில் ஆளும்பொழுது வன்முறைக்கு இடம் அளிக்க கூடாது மற்ற கட்சிகள் ஆளும்பொழுது மசூதி இடிக்கலாம், மும்பையில் கொளுத்தலாம், குஜராத்தில் வெட்டலாம் ஆனால் பாஜக ஆளும்பொழுது மட்டும் வன்முறைக்கு இடமளிக்கவே கூடாது அடேய் பிஜேபிஸ் மோடி பற்றி ஏதும் சொன்னால் “நமஸ்தே ஜி”, “தேங்க்ஸ் ஜி”, “பாரத் ஜி” “சூப்பர் ஜி” என ஜிலேபி விற்றுகொண்டிருந்தால் ஒரு கவுன்சிலர் இடம் கூட வெல்ல மாட்டீர்கள் ஏன் […]

ஃபீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம்

ஃபீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம் சூரியனை அடைவேன் என அதைநோக்கி பறந்து தன் இறகு எல்லாம் விழுந்து பூமியில் விழுமாம் அந்த பறவை சூரிய வெப்பத்தில் இறகுகள் எரிய வீழ்ந்து கிடக்குமாம், அந்த சாம்பலிலே தவம் இருக்குமாம் பின் மறுபடி இறக்கை கிடைத்தபின் பறக்குமாம் இறுதிவரை அது சூரியனை நெருங்கவும் முடியாது, அதனை வெல்லவும் முடியாது அந்த கற்பனை பறவை பற்றி மேல்நாட்டு இலக்கியம் இப்படித்தான் சொல்கின்றது உதய சூரியனை நோக்கி பறந்தே தன் அரசியல் […]