பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வைகோ சரியான மனநிலையில்தான் பேசுகின்றாரா? : தமிழிசை சந்தேகம்

வைகோ சரியான மனநிலையில்தான் பேசுகின்றாரா? : தமிழிசை சந்தேகம் மேடம் அந்த மனுஷன் முக்கால் லூசு, பாஜகவுடன் முன்பு கூட்டணி வைத்ததால் முழு லூசாக மாறிவிட்டார் இதற்கு மேலுமா சந்தேகம்? உங்களுக்கு அவர் மேல் சந்தேகம் தான், ஆனால் உங்கள் கோஷ்டி சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட 100% உறுதி செய்யபட்ட விஷயம் கொண்டது. என்னடா தமிழ்நாடு இது? எச்.ராசாவிற்கு நீதிபதி மனநிலை சோதனை செய்திர்களா என்கின்றார், இங்கே அக்கா வைகோவிற்கு மனநிலை சரியில்லை என்கின்றது இன்னும் யார் யாரெல்லாம் […]

ரகுமான் தேசிய விருதுகளை புறக்கணிக்க வேண்டும் என கிளம்பாதது ஆச்சரியம்

ஏ.ஆர் ரகுமானுக்கு இரு தேசிய விருதுகள் அறிவிக்கபட்டிருக்கின்றன‌ இந்த பாரதிராஜா கும்பலோ இல்லை மவுனவிரதம் இருந்த நடிகர்கூட்டமோ காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ரகுமான் தேசிய விருதுகளை புறக்கணிக்க வேண்டும் என கிளம்பாதது ஆச்சரியம் ஆனால் சொல்லமாட்டார்கள் காரணம் அவர்கள் அப்படி சொன்னால் அவர்கள் பத்ம விருதுகளை புறக்கணிக்க தயாரா என ரகுமான் தரப்பில் சீறலாம் இதனால் ரகுமானுக்கு இப்ப்போதைக்கு சிக்கல் இல்லை எனினும் மோடியினை விரட்டிய கூட்டம் விரைவில் ரகுமான் நிம்மதியினை கெடுக்க கிளம்பினாலும் கிளம்பலாம்

இம்ரான்கானை குறிவைத்து அடிக்கின்றார்கள்

பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள் உண்டு, வோட்டு வங்கியில் சிறுபான்மையும் முக்கியம் அல்லவா? இது இம்ரான்கானையும் விடவில்லை, பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பழமையான சிவன்கோவில் பாதுகாக்கபட வேண்டும் என இம்ரான் சொல்லபோக அங்கு உடனே “பாகிஸ்தானின் பரம‌சிவனே” என அல்லக்கைகள் போஸ்டர் அடித்துவிட்டன‌ உதயநிதிக்கு வாய்த்த அல்லக்கைகள் போல பாகிஸ்தானிலும் இருக்கின்றன‌ விஷயம் பற்றி எரிகின்றது, இந்து கடவுளை கேவலபடுத்துகின்றார் இம்ரான் என சர்ச்சை வெடிக்கின்றன‌ தமிழகத்தில் சினிமாவில் ரஜினி, கமல் என பலரும் சிவன் வேடத்தை போட்டுவிட்டதால் […]

தமிழிசைக்கு இப்பொழுது ஏன் நினைவு வந்தது

அது 1977ம் வருடம் ராமசந்திரன் ஆட்சிக்கு வந்திருந்தார். நெருக்கடி நிலை இன்ன்பிற செயல்களால் இந்திய மக்களின் அபிமானத்தை இழந்திருந்த அவர் அதை மீட்டெடுக்க மாநிலமெங்கும் சுற்றுபயணம் செய்தார் அப்படித்தான் 20.10.1977ல் மதுரைக்கும் வந்தார். மிசா கொடுமையில் பெரும் சிக்கலை சந்தித்த திமுக , சிட்டிபாபு , சாத்தூர் பாலகிருஷ்ணன் போன்றோரை இழந்திருந்த திமுக அந்த வடுக்களின் நினைவாய் கருப்புகொடி போராட்டம் அறிவித்தது கலைஞர் முரசொலியில் இப்படி எழுதியிருந்தார் “ஒரு கையால் மிசாவில் பட்ட அடிகளினால் ஏற்பட்ட காயத்தை […]

சென்டிமென்ட் வேலை செய்கின்றது

பனாமா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் அரசியல் வாழ்க்கைக்கு ஆயுள்கால தடை விதித்திருக்கின்றது பாகிஸ்தானிய உச்சநீதிமன்றம் பெரும் எதிரி என்றாலும் பங்காளி நாடு சில அட்டகாச முன்னுதாரணத்தை கொடுத்திருக்கின்றது, பாகிஸ்தானிடமிருந்து இப்படி நல்ல விஷயங்களை கற்பது ஒன்றும் தவறல்ல‌ ஒருமுறை திடீரென பாகிஸ்தானில் இறங்கி நவாஸை வாழ்த்தினார் மோடி, சென்டிமென்ட் வேலை செய்கின்றது சசிகலாவினையும் தலையில் கைவைத்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடதக்கது இந்த நவாஸ் சென்டிமென்ட் போலவே பழனிச்சாமியினை மோடி சந்தித்த சென்டிமென்டும் நடந்துவிட்டால் நன்றாக இருக்கும் […]

தமிழருக்கு தமிழ்புத்தாண்டு தைமாதம் என சொன்னவர் கலைஞர் அல்ல‌

தமிழருக்கு தமிழ்புத்தாண்டு தைமாதம் என சொன்னவர் கலைஞர் அல்ல‌ அவர் பிறக்கும் முன்பே இருந்த கருத்து அது. அக்கால தமிழறிஞர் பலர் அக்கருத்தை வற்புறுத்திகொண்டே இருந்தனர் தமிழருக்கு பருவகாலங்களை மாதமாக கண்டவர்கள் பருவ சுழற்சி வடிவிலே வருடத்தை சொன்னார்கள். தை என்றால் நாற்று அல்லது தொடக்கம் என பொருள். சித்திரை முதல் பங்குனி வரையான மாதங்களும். இந்த 60 சமஸ்கிருத பெயர்களும் தமிழ்பெயர் அல்ல‌ தைமாதம் தமிழ்புத்தாண்டு என்பது மறைமலை அடிகள் கூட்டம் போட்டு, பல தமிழறிஞர்கள் […]

இட ஒதுக்கீட்டை மறுபரீசீலனை செய்தே தீரவேண்டும்

“இட ஒதுக்கீடு இன்று தாழ கிடக்கும் குடும்பங்களை மேலே கொண்டுவரை செய்யபடும் முயற்சி. இது 3 தலைமுறைக்கு மேல் தொடர்ந்தால் குறிப்பிட்ட‌ இனமே தொடர்ந்து மே. எழும், மற்ற இனங்களுக்கு அவை சிக்கலை ஏற்படுத்தும் தாழ கிடக்கும் மக்கள் மேலேழும்பி வர இது ஒரு வாய்ப்பு, அப்படி எழும்பிவிட்டால் பின்னாளில் இட ஒதுக்கீட்டால் மட்டும் அவர்கள் வாழும் வாய்ப்பு இராது, எல்லா வாசலும் திறந்திருக்கும் அதனால் கொஞ்சகாலத்திற்கு பின் இட ஒதுக்கீட்டை மறுபரீசீலனை செய்தே தீரவேண்டும்” அம்பேத்கரின் […]

அங்கிள் சைமன் சீறுகின்றார்……

பழைய வீடியோக்கள் சுற்றுகின்றன அதில் அங்கிள் சைமன் சீறுகின்றார், “சிறை என்னை என்ன செய்யும்?, நான் படிச்சதே கம்பி எண்ணத்தான், சிறை சுகமானது” என கடும் முழக்கம் இப்பொழுது அழைத்தால் செல்லமாட்டேன் என்கின்றார் எதற்கு வழக்கு? காவல்துறையினரை இவர் தாக்கிய வழக்கு ஈழத்தில் இலங்கை அரசு காவலர்களை கொன்று வளர்ந்தவர் பிரபாகரன், வீரப்பன் கிட்டதட்ட 100 காவலர்களை கொன்றவன் இவர்கள் இருவரையும் குலசாமி இனசாமி என ஒருவன் சொன்னால் அவன் எப்படி இருப்பான்? இப்படித்தான் இருப்பான் ஆனால் […]

உதயநிதிபற்றி சொன்னால் மட்டும் குதிக்கின்றார்கள்

பெரியார் என்றால் ஆகா என்கின்றார்கள், அண்ணா என்றால் ஓஹோ என்கின்றார்கள், கலைஞர் என்றால் சூப்பர் என்கின்றார்கள் ஆனால் உதயநிதிபற்றி சொன்னால் மட்டும் குதிக்கின்றார்கள் டேய் பதர்களா, உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், பெரியார் அண்ணா கலைஞர் வரிசையில் அமர உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கின்றது? சொல்ல முடியுமா? திமுக என்பது நீதிகட்சியின் தொடர்ச்சி. இங்குள்ள சில சமூக அரசியல் அமைப்பிற்கு அதன் எழுச்சி குரல் கட்டாயம் தேவை கலைஞர் வரை அது சரியாக இருந்தது இப்பொழுது உதயநிதி […]

உதயநிதியால் உதய சூரியன் உதிக்காமலே போகலாம்

கொண்டாட்டம் என்பதும், வாரிசுகளை அறிமுகபடுத்துவது என்பதும் வெற்றிக்கும் , ஆட்சிக்கும் பின்னால் வந்தபின் நடக்க வேண்டிய விஷயங்கள் தாண்ட வேண்டிய நெருப்பாறு முன்னால் இருக்க, இப்பக்கம் நின்றுகொண்டு ஆனந்த‌ ஊளையிடுவது, முகஸ்துதி பாடுவது எல்லாம் கட்சியினை நெருப்பில் தள்ளிவிடும் அவர்கள் குடும்ப நிறுவணம் தான் அது, சந்தேகமில்லை ஆனால் சில விஷயங்களை காலம்பார்த்து, நேரம்பார்த்து செய்யவேண்டும் இல்லாவிட்டால் திமுக மீது வெறுப்பே பெருகும் திமுக நல்ல சித்தாந்தம் உள்ள கட்சி ஆனால் வாக்குவங்கி மிகபெரும்பான்மை என சொல்லமுடியாது, […]