பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மானமும் வெட்கமும் இல்லா தியாகிகள் அவர்கள்

தலைவர்கள் எந்நாளும் தியாகிகள், அவர்கள் எதனையும் கண்டுகொள்ளமாட்டார்கள். எல்லாவற்றையும் மறந்து பழகுவார்கள், யாரிடமும் மண்டியிடுவார்கள் வோட்டுக்காக , கூட்டணிக்காக‌ காக்காவிற்கு 4 வோட்டு உண்டென்றால் அதோடு கத்துவார்கள், சாக்கடை புழுவிற்கு 2வோட்டு உண்டென்றால் அந்த சாக்கடையிலும் நெளிவார்கள் மானமும் வெட்கமும் இல்லா தியாகிகள் அவர்கள் ஆனால் தொண்டர்கள் அப்படி அல்ல, அவர்கள் உணர்ச்சியும் வெறியும் கொண்டவர்கள். இது இப்போது திமுகவில் அது நன்றாக தெரிகின்றது? எப்படி? என்னதான் வைகோவினை திமுக தரப்பு வோட்டு கணக்கிற்காக கொண்டு சென்றாலும் […]

மீட்கப்படவேண்டிய நெல்லை மாவட்டம் நம்பியாறு

ஆளாளுக்கு காவேரி போயிற்று என பொங்குகின்றார்கள், காவேரி நிச்சயம் மீட்கபட வேண்டும் ஆனால் அப்படி தொலைந்து போன ஆறுகள் இங்கு நிரம்ப உண்டு அதில் ஒன்று நெல்லை மாவட்டம் நம்பியாறு ஒரு காலத்தில் அது மாபெரும் நதியாக இருந்திருக்கின்றது, வற்றாமல் ஓடியிருக்கின்றது , அதன் கரையில் பண்டை காலத்தில் மக்கள் பெரும் அடையாளங்களோடு குடியிருந்திருக்கின்றனர் சித்தூர் மகாராஜா சாஸ்தா ஆலயம் அதற்கு பெரும் எடுத்துகாட்டாய் இன்றும் நிலைத்து நிற்கின்றது, அதன் சந்ததிகள் என வரும் மக்கள் கூட்டம் […]

அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் கன்னடராக இருப்பது தவறாம்

ஏதோ தமிழகம் முழுக்க கலெக்டர்கள் எல்லாம் தமிழர் போலவும், இன்னும் உயர்பதவியில் இருப்பவர் 100% தமிழர் போலவும் இப்பொழுது அண்ணா பல்கலைகழகத்தில் மட்டும் கன்னடர் வந்து அமர்ந்ததை போலவும் பலர் கிளம்பியாயிற்று தமிழன் இந்தியா எங்கும் பல இடங்களில் கலெக்டராக இருக்கின்றான், பெங்களூர் மேயர் கூட தமிழர்தான் இன்னும் இந்தியாவின் பிரதான பல்கலைகழகங்களில் எல்லாம் தமிழனுக்கு பெரும் பதவிகள் இருக்கின்றன‌ மாநிலம் என்ன? உலகம் முழுக்க பல நாடுகளில் அவனால் பெரும் பதவிகளை அடைய முடிகின்றது. சுந்தர் […]

இதெல்லாம் சிரிப்பு என நினைக்காதீர்கள்

இதெல்லாம் சிரிப்பு என நினைக்காதீர்கள். எல்லாம் கோபம், மகா சீற்றம். “புன்னகை போராளி” என்பவர் அப்படித்தான் சிரித்துகொண்டே கடுமையாக‌ கோபபடுவார் இந்த மலர்கொத்துக்கு உள்ளேதான் காவேரி மேலான்மை வாரிய மனு ஒளித்துவைக்கபட்டிருக்கின்றது என நம்பிகொள்ளுங்கள் கங்காரு பல்லை காட்டி சிரித்தால் தாக்க தயாராகின்றது என பொருள் என்பார்கள், அப்படி இனி துள்ளி துள்ளி அடிக்க போகின்றார் பழனிச்சாமி

பாபாஜி என்னை ஏன் இப்படி சோதிக்கிறீங்க: ரஜினி

“போர் வரும்போது களத்தில் சந்திப்போம்னு சொல்லிட்டோம், தமிழ்நாட்டில நிஜமாவே போர் வந்துட்டு இனி களம் போகலைன்னா பிரிச்சிருவாங்க, 2 படமும் காலி நான் காலா படம் ரீலிஸை பார்ப்பேனா, எந்திரன் 2.0 பார்ப்பேனா? இல்ல போர் நடத்துவேனா பாபாஜி என்னை ஏன் இப்படி சோதிக்கிறீங்க..”    

ஜக்கிசாமி என்ன ஆனார்?

இந்த நதிகளை இணைப்போம் என கிளம்பிய ஜக்கிசாமி என்ன ஆனார்?, இப்பொழுது எங்கே இருக்கின்றார்? என்பதே தெரியவில்லை சாமி உங்க ஆசிரமத்துக்கு வந்த மோடி, இப்பொழுது நதி இணைப்பில் தமிழகம் வரமாட்டேன் என்கின்றார் கொஞ்சம் மோடிக்கு எடுத்து சொல்ல கூடாதா? Jack where are you??  

விஸ்வரூபம் படம் பெங்களூரில் ஓடவேண்டும்

இப்போ என்ன ஆண்டவரே, விஸ்வரூபம் படம் பெங்களூரில் ஓடவேண்டும் அவ்வளவுதானே அதை நேரடியாக சொன்னால் என்ன? எதற்கு இவ்வளவு சுற்றி வளைப்பு? “யாரென்று தெரிகிறதா .. இவன் சீ என புரிகின்றதா”

தமிழன் என்று ஒன்று சேர்வான்? கன்னடனின் பலமே அதுதானே

என்ன இருந்தாலும் தமிழகத்தில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் சக்தி உள்ள ஒரே கட்சி திமுக என்பதில் சந்தேகமில்லை மறுபடியும் அதனை நிரூபித்திருக்கின்றது திமுக‌ உறங்கி கொண்டிருந்த டிராகனை உசுப்பிவிட்டோமே என பலர் அரண்டு நிற்பது புரிகின்றது சிஸ்டமும், மய்யமும் இன்னும் சில திடீர் புரட்சியாளர்களும் ஒரு மாதிரி முழிப்பதும் தெரிகின்றது சிலிர்த்தெழுந்த சிம்மமாய் சீறி நிற்கின்றது திமுக. முக ஸ்டாலினும் அதிமுக தங்கள் போராட்டத்தில் பங்குகொள்ள பழனிச்சாமியினை அழைக்கின்றார், நல்ல விஷயம் அது ஆனால் பழனிச்சாமியின் சங்கிலி […]

உமா பாரதி ஸ்டைலில் தமிழிசை

அக்கா இனி உமா பாரதி ஸ்டைலில் சாமியாராக போகின்றது போல, அதனால் ஊட்டியில் இப்படி ஊர்வலம் போகின்றது காவேரி முதல் ஸ்டெர்லைட் வரை தமிழகம் அல்லோலபடுகின்றது, ஆனால் அக்காவினை எவனோ “பூ மிதிக்க” கவுண்டணி ஸ்டைலில் அழைத்திருக்கின்றான் அக்காவும் கிளம்பி சென்றுவிட்டது ஸ்டார் மியூசிக்