பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவேரி என்றால் வாட்டாள் நாகராஜ் குதிப்பார்

தமிழ்நாட்டில் ஈழ சர்ச்சை என்றால் அங்கிள் சைமன் கோஷ்டி குதிப்பதை போல கன்னடத்தில் காவேரி என்றால் வாட்டாள் நாகராஜ் குதிப்பார் இரண்டுமே ஒரே வகை, இரண்டுமே 4 வோட்டு வாங்காது, இரண்டுமே வெற்று சவுடாலில் காலம் தள்ளுபவை இப்போது தனக்கான நேரம் என்பதால் வாட்டாள் வந்துவிட்டார், ஏப்ரல் 5ம் தேதி ஆர்ப்பாட்டம் அப்படியே ரஜினி படத்தை விடமாட்டேன் என சவால் விட்டுகொண்டிருக்கின்றார் இதே வாட்டாள் நாகரஜிக்கு ரஜினி தீவிர ரசிகர், தனக்கு பிடித்த பேச்சாளர் (!) நாகராஜ் […]

உண்ணாவிரதம்

“பங்காளி நாம உண்ணாவிரதம் இருக்கோம் , ஆனா பூரா பயலும் டெல்லியில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்யவில்லை என கேட்கிறானே ஒழிய, ஒரு பயலாவது பழனிச்சாமி அரசு பதவி விலக வேண்டும் என கேட்கின்றானா? இதே கலைஞராக இருந்தால் எப்படி கொதிபார்கள் தெரியுமா ஆமாம் இதிலிருந்து என்ன தெரிகின்றது பங்காளி நம்மளை ஒரு பயலும் முதலமைச்சர் , துணைமுதலமைச்சர்ணு மதிக்கவே இல்லை, அப்படி நினைக்க்கவே இல்லைன்னு தெரியுது கை குடுங்க பங்காளி, கரெக்டா சொல்லிட்டீங்க” காவேரி சர்ச்சையால் […]

காமராஜர் காலம் வரை காவேரியில் சிக்கல் இல்லை

நிச்சயம் காமராஜர் காலம் வரை காவேரியில் சிக்கல் இல்லை கலைஞர் ஆட்சியில் முதல் சிக்கல் வந்தது, அவர் போராட தொடங்கியபொழுது ராமசந்திரன் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்றே பேசிகொண்டிருந்தார் வழக்கு தொடர்ந்தார் கலைஞர் அத்தோடு மிசாவும் வந்தது தேர்தலும் வந்தது அடுத்து வந்தார் ராமசந்திரன், காவேரி கரையில் சூட்டிங் எடுத்த நினைவுகள் அவரை விடவில்லை, காவேரி எல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை மாறாக உன்னை விடமாட்டேன் என லதாவுடன் ஒரு படம் எடுக்க முனைந்தார், மொரார்ஜி தேசாய் […]

இந்தியா என்ன மாபெரும் செல்வந்த நாடாகவா இருக்கின்றது?

ஏதோ இந்தியாவின் மொத்த வருமானமும் தமிழகத்தில் இருந்துதான் செல்வது போல பேசி கொண்டிருக்கின்றார்கள் இங்கிருக்கும் விமான நிலையம் முதல் , ரயில்கள் வரை யார் இயக்குகின்றார்கள்? தங்க நாற்கர சாலை எல்லாம் யார் திட்டம்? மத்திய அரசிற்கு நாம் கொடுக்கும் பணம் ஒன்றும் அப்படியே கடலில் கொட்டபடுவதில்லை அது பாதுகாப்பு, மருத்துவம், கல்வி என நமக்கே திரும்ப வருகின்றது, தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் இல்லை என சொல்லமுடியுமா? ஒவ்வொருவரும் அதனால் பலன்பெறுகின்றோம், நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் […]

சாதிய‌ வன்கொடுமை தடை சட்டம் என்றொரு சட்டம்

தாழ்த்தபட்டவருக்கு எதிராக செய்யபடும் கொடுமைகளை தடுக்க சாதிய‌ வன்கொடுமை தடை சட்டம் என்றொரு சட்டம் சுதந்திர இந்தியாவில் உண்டு அதன்படி தாழ்த்தபட்ட சாதியினை அச்சாதி அடையாளத்தோடு திட்டினால் உடனே திட்டியவரை கைது செய்யலாம் இதில் எவ்வளவு நன்மை உண்டோ அவ்வளவு ஆபத்தும் உண்டு, நியாயமான சில ஊழியர்களை யாரும் கண்டித்தால் என்னை சாதிபெயரால் திட்டுகின்றார்கள் என புகர் கொடுத்துவிடும் அபாயமும் உண்டு இதற்கு வழிகாட்டியவர் சாட்சாத் கலைஞர். முதலமைச்சாகும் பொழுதோ, மத்தியில் ஆட்சியில் பங்குபெறும் பொழுதோ ஒன்றும் […]

காவேரி போராட்டத்திற்காக 3ம் தேதி கடையடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஓபிஎஸ் இபிஎஸ் ஒரு நாள் உண்ணாவிரம் : செய்தி ஒருநாள் மட்டும்தானா? சாகும் வரை இல்லையா? தமிழகத்தில் காவேரி போராட்டத்திற்காக 3ம் தேதி கடையடைப்பு என்கின்றார் விக்கிரம ராஜா, இவரின் சங்கத்தில் உணவகம் எல்லாம் வரும் என்கின்றார்கள் இன்னொரு வியாபாரி சங்கமான வெள்ளையன் கோஷ்டி 11ம் தேதி கடையடைப்பு செய்யுமாம் மு.க ஸ்டாலின் 5ம் தேதி கடையடைப்பு என கோரிக்கை வைக்கின்றார் ஆக மூன்று நாட்கள் கடை அடைப்பு செய்ய […]

சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் நீதி வென்றது, உச்சநீதிமன்றம் உயர்வானது

சசிகலாவினை உள்ளே தள்ளினால் இந்திய நீதிதுறை மகா உன்னதமானது என போற்றுகின்றார்கள் கனிமொழியும், ராசாவும் விடுவிக்கபட்டால் நியாயம் வென்றது,நீதிமன்றம் மிக மிக சரியானது என கொண்டாடுகின்றார்கள் இப்பொழுது காவேரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் என தீர்ப்பில் சொல்லவில்லை செயல்திட்டம் என்றுதான் சொல்லபட்டது என்றால் கிளம்பிவிட்டார்கள் இது நீதிபடுகொலை, இது ஆரிய தீர்ப்பு, இது திராவிட விரோதம், இதெல்லாம் மோடி அட்டகாசம் என ஆர்ப்பாட்டம் கிளப்பியாயிற்று இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்தால் நீதி வென்றது, உச்சநீதிமன்றம் உயர்வானது இவர்களுக்கு ஆதரவில்லா […]

தீக்குளித்து சாவுகின்றவன் எல்லாம் தலைவனோடு சாவுங்கள்….

காவேரிக்காக மத்திய அரசினை கண்டித்து தீ குளிப்போர் எண்ணிக்கை பெருகுகின்றது ஒருவர் இறந்துவிட்டார், இன்னும் இருவர் தடுக்கபட்டிருக்கின்றானர் தீ குளித்து தன்னை மாய்த்துகொள்வதால் இங்கு ஒரு பலனும் ஏற்படாது, தற்காலிக பரபரப்புகள் ஏற்படுமே தவிர நிலமை உடனே மாறாது மத்திய அரசின் அடாவடியால் இங்குள்ள தமிழர்கள் சாகும் வரை சென்றுவிட்டனர் என்ற பழிச்சொல்லை தவிர எதுவும் உருவாகாது நிச்சயம் விரைவில் வாரியம் அமைக்கபடும், அட வாரியம் அமைந்ததோ இல்லையோ ஆடிமாதம் மழை கொட்டினால் காவேரி தானாக வந்துவிடும் […]

ஆ. ராசா பெரும் உத்தமர், சந்தேகமில்லை….

ஆ. ராசா பெரும் உத்தமர், சந்தேகமில்லை. அவர் மீது ஜோடிக்கபட்டது எல்லாம் பொய்வழக்கு. தலித் என்பதால் அவர் மீது வழக்கு தொடர்ந்தார்கள், தலித் என்பதால் அவரை முடக்க ஆரியரும் பிராமணரும் இன்னும் சகலரும் சதி செய்தார்கள் அவர் திமுகவின் அடுத்த வாரிசு, எடுத்த வாரிசு என எதுவாகவும் ஆகட்டும் இப்பொழுது ஆ. ராசா பெரும் உத்தமர், சந்தேகமில்லை. அவர் மீது ஜோடிக்கபட்டது எல்லாம் பொய்வழக்கு. தலித் என்பதால் அவர் மீது வழக்கு தொடர்ந்தார்கள், தலித் என்பதால் அவரை […]

இந்த பச்சை மண் குழம்பி நிற்கின்றது

ஆனாலும் மைசூரிலிருந்து வந்து இந்த நாளைய தமிழக முதல்வர் கட்சி ஆரம்பித்திருக்கும் நேரம் இப்படி காவேரி சோதனை வந்திருக்க கூடாது மைசூரில் விழும் அடியா?, இல்லை அத்தையின் கட்சியா? என இந்த பச்சை மண் குழம்பி நிற்கின்றது ஒரு மாபெரும் தலைவி உருவாகிவிட கூடாது என்ற சதிதான் இப்பொழுது காவேரி தீர்ப்பும் அதை தொடர்ந்த போராட்டமுமாக ஆகிவிட்டது . இன்னும் காவேரி பிரச்சினையில் இந்த பேபிம்மாவின் கருத்தை கேட்காத ஊடகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம்