பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காலத்திற்கேற்ப மாறவேண்டும் இந்த இந்திய கம்யூனிஸ்டுகள்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தான் நலமுடன் இருப்பதாக செய்தி மாறி மாறி கேரளாவினை காம்ரேடுகள் ஆண்டாலும் மருத்துவமனை என்றவுடன் தமிழகத்திற்குத்தான் ஓடிவர வேண்டி இருக்கின்றது அந்த அளவு கம்யூனிஸ்ட் ஆட்சியில் மாபெரும் முன்னேற்றம் கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இருக்க்கின்றது பின் எப்படி திரிபுராவில் வெல்லும்?, இதில் தோற்றுவிட்டோம் என ஒப்பாரி வேறு கம்யூனிசம் என்பது எதனையும் உருப்படவிடமாட்டோம்,  எந்த திட்டத்தையும் வரவிடமாட்டோம் கொடிபிடிப்போம், வயிற்றுக்கு சோறுபோட்டு மூளையினை […]

ஹலோ.. யாரு ஜக்கி சாமியா?

“ஹலோ.. யாரு ஜக்கி சாமியா? உன் ஆசிரமம் திறக்க வந்தேன், இப்போ தமிழ்நாடு குழுவினை காவிரி விவகாரத்திற்கு சந்திக்கவில்லைன்னும் சிலர் சொல்லிட்டு இருக்காங்களாம் உன்ன பிடிச்சி கூட்டிட்டி வந்தா, நான் கண்டிப்பா சந்திப்பேன்னு உறுதியா நம்பி உன்ன பார்க்க வாராங்களாம். நீ என்ன செய்ற? மவுன விரதம் 40 நாள் தியானம்னு இந்த கர்நாடாக தேர்தல் முடியிரவரைக்கும் இழுத்துரு சரியா?.”  

தும்பிகள் சிலருக்கு ஏன் கனடா மீது பாசம் பொங்குகின்றது

இந்த தும்பிகள் இன்னும் சிலருக்கு ஏன் கனடா மீது பாசம் பொங்குகின்றது என்றால் விஷயம் ஒன்றுமல்ல‌ வெளிநாட்டில் சென்று செட்டில் ஆகும் அளவு இவர்களுக்கு கல்வி கிடையாது, பெரும் படிப்பு படிக்கும் அளவிற்கு அறிவும் கிடையாது. ஆனால் ஆசை மிக அதிகம் மிஞ்சி போனால் வளைகுடா நாடுகளுக்கு இவர்கள் செல்லலாமே அன்றி கனடா போன்ற நாடுகள் சாத்தியமில்லை மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி என படித்து பலர் அமைதியான நாடுகளில் இருப்பது இவர்கள் கண்களை உறுத்திற்று, தாங்களும் எப்படி […]

அடுத்த வாரிசு ….

திமுகவின் கழுத்தை அறுத்து கொல்ல ஒருவருக்கு வாள் கொடுத்திருக்கின்றார்கள். அவ்வளவுதான் விஷயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைக்காவிட்டால்? தொடர்ந்து வற்புறுத்துவோம் அப்படியும் வாரியம் அமைக்கபடாவிட்டால் விடமாட்டோம், வற்புறுத்திகொண்டே இருப்போம். ஆட்சி எல்லாம் ராஜினாமா செய்யமாட்டீர்களா? ஆட்சியில் இல்லாவிட்டால் எப்படி வற்புறுத்துவது? வாரியம் அமைக்க வற்புறுத்த ஆட்சியில் இருந்தே தீரவேண்டும். ஆட்சியில் இருப்பது வாரியம் அமைக்க வற்புறுத்த மட்டுமே என்பதை எல்லோரும் நம்பிகொள்ள வேண்டும். ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன், நாளை முதல் ரஜினிகாந்த் […]

அங்கிள் சைமன் தும்பிகள் பூரிப்பு

“கலக்க போவது யாரு” நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றார் அங்கிள் சைமன் , தும்பிகள் பூரிப்பு பின்னே? இவரை டிரம்பும், புட்டீனுமா அழைத்து சிரிய விவகாரம் பற்றியா பேசுவார்கள்? சர்வதேச அணுசக்தி கமிஷன் இவரை அழைத்தா வடகொரிய அணுவுலை பற்றி பேசும்? அங்கிள் வேறு எங்கு செல்வார்? இங்குதான் செல்வார் ஒரு காமெடியன் காமெடி நிகழ்ச்சிக்குத்தான் செல்வார். மிக சரியாக அழைத்திருக்கின்றார்கள். இதிலென்ன ஆச்சரியம்  

என்ன பெரிய மகளிர் உரிமை? மகளிர் முன்னேற்றம்?

என்ன பெரிய மகளிர் உரிமை? மகளிர் முன்னேற்றம்? தமிழகத்தை விட பெண்களை கொண்டாடிய மாநிலம் உண்டா? உயரவைத்து காலில் விழுந்த சமூகம் உண்டா? ஊழல்வாதிகள் என தீர்ப்பு சொன்னபின்னும் பெண் என்பதற்காக அம்மா, சின்னம்மா தியாக தலைவி என சொல்லி கொண்டாடிய சமூகம் எங்கு உண்டு? உலகில் எங்கும் இல்லவே இல்லை, தமிழகம் தவிர சந்தேகம் இருந்தால் இந்த படத்தை பார்த்து தெளிவுபெறுங்கள். பெண் விடுதலை, பெண் முன்னேற்றத்தில் உலகிற்கே வழிகாட்டியாய் இருந்தவன் தமிழன்  

ஆஸ்கர் விருதும் அரசியல் நடிகர்களும்…

இந்த ஆஸ்கர் கமிட்டி என்பது அப்பட்டமான இனவெறி கமிட்டி என்ற சர்ச்சை முன்பே வந்தது. மொக்கை நடிப்பு என்றாலும் வெள்ளையருக்கே கொடுப்பார்கள், தவிர்க்கவே முடியாபட்சத்திலும் சில அரசியலுக்காகவுமே ஆசியர்களுக்கும், கருப்பர்களுக்கும் கொடுப்பார்கள் என்றேல்லாம் சர்ச்சை உண்டு அதில் மகா உண்மை இருக்கலாம் என்பது இப்பொழுது புரிகின்றது. எப்படி? சிறந்த துணை நடிகருக்கான விருதை சாம் ராக்வெல் என்பவருக்கு கொடுத்துவிட்டார்களாம் அப்படி என்ன துணை நடிப்பில் கிழித்துவிட்டார்? உலகின் மிகசிறந்த துணை நடிகர்களில் பன்னீரும், பழனிச்சாமியும் உண்டு, அவர்களை […]

கதிர் கொண்ட சூரியனே ஒரு முறை உதித்துவிடு, சதிரை விரட்டிவிடு

வைரமுத்துவின் பிடர் கொண்ட சிங்கமே எனும் கவிதை(?) அவரின் வார்த்ட்தை ஜாலங்களில் ஒன்று என்பது வேறு விஷயம் சாதாரண கற்பூரம் கோவில் சிலைமுன் எரியும்பொழுது வணக்கத்திற்குரியதாகின்றது போல, கலைஞர் முன் அவர் படித்தபொழுது கவனத்திற்குரியதாகின்றது வைரமுத்து அவரிடம் அக்கவிதையினை காட்டுகின்றார், முடியா நிலையிலும் புரிந்தும் புரியாமலும் , முடிந்தும் முடியாமலும், இயன்றும் இயலாமலும் முகத்து உணர்ச்சியால் பதில் சொல்கின்றார் கலைஞர் எவ்வளவு எழுதியவர் கலைஞர்? கவிதை என்றும், கட்டுரை என்றும், கடிதம் என்றும் அவர் எழுதியது கொஞ்சமா? […]

மகளிர் தினத்தை தன் மய்யத்து சார்பாக கொண்டாடுவாரம் கமலஹாசன்

மகளிர் தினத்தை தன் மய்யத்து சார்பாக கொண்டாடுவாரம் கமலஹாசன், அன்று அவர் கூட்டம் போட்டு பேசுவாராம் இதற்கான ஏற்பாட்டை மய்யத்தின் மகளிரான ஸ்ரீப்ரியா, கமலா நாசர் ஆகியோர் “தமிழக பெண்களே கமலஹாசன் அழைக்கின்றார்” என கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஆரம்பித்தாயிற்று மய்யம் கட்சி தொடக்க விழாவில் “இவன் யாரென்று தெரிகின்றதா?” என பாடல் ஒலிக்க கமல் மேடை ஏறினாராம் இப்பொழுது மகளிர் தினத்தில் கமலஹாசனின் “மன்மத லீலை”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற படம் ஒளிபரப்பபடுமா? சில்க் ஸ்மிதாவுடன் […]

கனிமொழிக்கு அது உற்சாகம் ஆகிவிடாதா?

மகராஷ்டிராவில் மாதம் 12 லட்சம் வருமானம் ஈட்டிய டீக்கடைகாரர் : பரபரப்பு செய்தி இதென்ன பிரமாதம்? தமிழக முன்னாள் டீக்கடைகாரர் முன்பு முதல்வராக இருந்து இன்று துணைமுதல்வராகி பல்லாயிரம் கோடி சம்பாதித்தாயிற்று குஜராத் டீக்கடைக்காரர் ஒருவர் பிரதமராகி சிலர் பில்லியன் கோடி டாலரில் புரள வழிசெய்தாயிற்று இதில் ஒரு டீக்கடைக்காரர் மாதம் வெறும் 12 லட்சம் சம்பாதிக்கின்றாராம், இது ஒரு செய்தியாம்   பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து மோடி அரசு பேசாதது ஏன்? : பெண்கள் […]