பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒக்கி புயல் ஓங்கி அடிக்குது…..

ஒக்கி புயல் பற்றி முன்கூட்டியே மத்திய அரசு எச்சரிக்கவில்லை: பினராயி விஜயன் குற்றச்சாட்டு குமரி போலவே தென் கேரளாவிலும் ஓக்கி புயல் அகதளம் செய்திருக்கின்றது, மழை கேரளாவிற்கு புதிது அல்ல‌ வெறும் கனமழை வரும் என எதிர்பார்த்த கேரளம் புயலை எதிர்கொள்ளமுடியாமல் திகைத்து நிற்கின்றது உண்மையில் மத்திய அரசு புயல் பற்றி எச்சரிக்கவில்லை, இதனை பிரணாய் விஜயன் அழுத்தி சொல்கின்றார். வானிலை இலாக்காவினை கட்டுபாட்டில் வைத்திருக்கும் அரசு மிக துல்லிய தகவல்களை கொடுத்திருக்க வேண்டும் என்கின்றார் அவர் […]

ஜெயாவிற்க்கு மகள் இருக்கிறார்.. அதிர்ச்சி கிளப்பும் அண்ணன்…

முன்பெல்லாம் சசிகலா குடும்பத்தில் இருந்துதான் புதிய புதிய ஆட்களாக அறிமுகம் ஆனார்கள் திவாகரன், பாஸ்கரன், தினகரன், ராவணன், சிவகுமார், வெங்கடேஷ், மகாதேவன் என வந்து வந்து குதித்தார்கள் மிகபெரிய அந்த வரிசை விவேக் வரை வந்து முற்றுபுள்ளி பெறும் நிலையில் இருக்கின்றது இது முடிந்ததால் இப்பொழுதுதான் ஜெயா பக்கத்து வரிசை தொடங்குகின்றது தீபா, மாதவன், தீபா கார் டிரைவர் காமெடிகளை தாண்டி அம்ருதா வந்து, இப்பொழுது ஜெயலலிதாவிற்கு ஒரு சகோதரி இருந்தார், அவர் பெயர் சைலஜா என்ற […]

திருக்குறுங்குடி புது பாலம் வெள்ளத்தில் உடைந்தது

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே கட்டபட்ட புது பாலம் வெள்ளத்தில் உடைந்தது அதே திருக்குறுங்குடி மலைமேல் கட்டபட்டுள்ள மன்னர்காலத்து கோவிலான நம்பியாண்டவர் கோவிலும் அதன் சுவர்களும் எத்தனையோ வெள்ளத்தை தாக்கு பிடித்து நிற்கின்றது ஏன் என்றால் அக்காலத்தில் தொழில் சுத்தம் அப்படி இருந்திருக்கின்றது, பொது காரியங்களை அவ்வளவு சிரத்தையோடு கவனமாக செய்திருக்கின்றார்கள். இதோ இந்த பாலம் கூட பொது சொத்துதான், ஆனால் சொத்தையாக கட்டியிருக்கின்றார்கள் இதற்கு ஆயிரம் காரணங்கள் எத்தனையோ செய்திகள் வருகின்றன, பொதுபணிதுறை கட்டிய எத்தனையோ […]

தேர்தலில் நிற்க நம்ம கட்சிக்கு ஒருத்தன் கூட கிடைக்கல‌

“ஆமாங்க.. தேர்தல்ல நிற்க நம்ம கட்சிக்கு ஒருத்தன் கூட கிடைக்கல‌ சென்னை கோட்டையில் காவி கொடி பறக்கும், தாமரை தமிழகத்தில் மலரும்ணு சொன்னதெல்லாம் தாமசுன்னு எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சி.. கடைசி வரைக்கும் உபியில் ஜெயிச்சிட்டோம், மபியில் ஜெயிச்சிட்டோம்னு லட்டு கொடுத்துட்டே கட்சி நடத்த வேண்டியதுதான் போல…..”  

தோண்ட தோண்ட விவகாரம் ஆவது ஜெயா மகள் விஷயம்தான்

தோண்ட தோண்ட விவகாரம் ஆவது ஜெயா மகள் விஷயம்தான் இப்பொழுது ஜெயா அண்ணன் வாய் திறந்திருக்கின்றான், மனிதர் 80 வயதை கடந்திருக்கின்றார், எங்கள் குடும்பத்தில் யாரும் 60 வயதினை கடக்கவில்லை என்பது ஜெயா சொன்ன கடைசி பொய்யாக இருக்கின்றது ஆம் ஜெயாவின் அப்பாவின் முதல் மனைவி மகன் வாசுதேவன் அவர்தான் விவகாரத்தை கிளப்புகின்றார். ((இதில் கிளைகதையும் வருகின்றது, சந்தியாவிற்கு சைலஜா என்று இன்னொரு மகளும் இருந்திருக்கின்றாராம் அதாவது உண்மையான உடன்பிறவா சகோதரியும் இருந்திருக்கின்றார்) அவர் என்ன சொல்கின்றார் […]

“குதிரை பேர அரசு” என சொல்லி கொண்டிருப்பது எரிச்சலை கொடுக்கின்றது

இந்த செயல் தலைவர் எதற்கெடுத்தாலும் இந்த பழனிச்சாமி அரசினை “குதிரை பேர அரசு” என சொல்லிகொண்டிருப்பது எரிச்சலை கொடுக்கின்றது குதிரை பேரத்திற்கு ஒரு காலம் இருந்தது, இப்பொழுது அதனை எல்லாம் கடந்து மத்திய அரசினை சுமக்கும் குதிரை வாகனமாக அது மாறிவிட்டது அது புரியாமல் இந்த செயல் தலைவர் அது குதிரை பேர அரசு என சொல்லிகொண்டே இருக்கின்றார் காலத்திற்கு ஏற்ப மாற்றி சொல்ல வேண்டாமா? முன்பு குதிரை பேர அரசாக இருந்த இந்த அரசு இப்பொழுது […]

நர்ஸிங் படித்துவிட்டு எங்கு செல்வார்கள்?

இந்த நாட்டில் அரசுபணி விவகாரங்களில் எல்லோருக்கும் இழைக்கபடும் அநீதி போல நர்சுகளுக்கும் இழைக்கபடுகின்றது, நர்சுகள் போராடுகின்றார்கள் நீதிமன்றமும் சம்பளம் போதவில்லை என்றால் கிளம்புங்கள் என சொல்லிவிட்டதாம், நர்ஸிங் படித்துவிட்டு எங்கு செல்வார்கள்? நீதிபதி பக்கம் அமர்ந்து தீர்ப்பா எழுதமுடியும் இந்நாட்டில் இந்த நீதிபதிகளும் அவர்கள் உரிமைக்காக போராட ஒரு காலம் வரும் அப்பொழுது கேட்க வேண்டிய கேள்விகள் நிரம்ப இருக்கின்றன, இப்பொழுது பேசினால் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள் அந்த நர்சுகள் ஒரு பக்கம் போராடுகின்றார்கள் என்றால், இப்பொழுது டாக்டர்களும் […]

தனிபட்ட வாழ்வு பற்றி ஏன் இப்பொழுது எழுதுகின்றீர்கள்?

எங்கள் புரட்சி தலைவி பற்றி, அவரின் தனிபட்ட வாழ்வு பற்றி ஏன் இப்பொழுது எழுதுகின்றீர்கள்? எங்கள் தலைவி உயிரோடு இருந்தபொழுது எவனுக்காவது தைரியம் இருந்ததா? என சிலர் கேட்கின்றார்களாம் ஏண்டா டேய், அந்த பெண்ணுக்கே இப்பொழுதுதான் பேச தைரியம் வந்திருக்கின்றது, அந்த லலிதாவிற்கே இப்பொழுதுதான் வந்திருக்கின்றது, அதை ஏன் ஒரு பயலும் சொல்லமாட்டேன் என்கின்றீர்கள்??

தெய்வம் நின்று கொல்லும்

தென்மாவட்டத்தில் வெள்ளமாம், மிக சரியாக எவனெல்லாம் ஓடைகளை அடைத்து வைத்திருக்கின்றான் என மிக தெளிவாக தெரியும் நேரமிது எவனெல்லாம் இது ஓடை அல்ல, என் நிலம் என அடைத்து வைத்திருந்தானோ, அவனெல்லாம் அய்யய்யோ இது ஓடைதான் என உடைத்து நீரை அனுப்பிகொண்டிருக்கின்றானாம் ஆக இந்த கோர்ட்கள், ஆவணங்களை எல்லாம் காட்டி ஏமாற்றும் மனிதனை இயற்கை மிக சரியாக காட்டிகொடுத்திருக்கின்றது கன்னியாகுமரி மாவடத்தில் எங்கெல்லாம் அனுமதிபெறாத செல்போன் கோபுரங்கள் எல்லாம் முறைகேடாக அமைக்கபட்டிருகின்றது என்பதெல்லாம் இப்பொழுதுதான் தெரிகின்றதாம் இந்த […]

இந்த தமிழ்நாடு பாஜகவினை வைத்து என்ன செய்ய?

“எத்தனை ரெய்டுகளை நடத்தி என்னாயிற்று ஒண்ணுமில்லை, இந்த தமிழ்நாடு பாஜகவினை வைத்து என்ன செய்ய, மண்ணுக்குள் இருந்தா தாமரை மலரும்? நாம் இவ்வளவுதான் செய்ய முடியும்? பழனிச்சாமி கோஷ்டியினை மிரட்டி நாங்கள் ஆர்.கே நகரில் நிற்போம் நீங்கள் ஆதரவு தரவேண்டும் என நிற்க வேண்டியது தமிழக பாஜகவினர் செய்ய வேண்டியது அவர்களோ இன்னும் வேட்பாளரை தேடிகொண்டிருக்கின்றார்களாம் ஒரு பயலும் கிடைத்ததாக தெரியவில்லை, கிடைத்தாலும் அதை வைத்து இவர்கள் என்ன கிழிக்க போகின்றார்கள் எனவும் தெரியவில்லை பழனிச்சாமி அரசை […]