பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாரதமாதா கோவில் கட்டகோரி உண்ணாவிரதம் இருந்த குமரி அனந்தன் கைது

பாரதமாதா கோவில் கட்டகோரி உண்ணாவிரதம் இருந்த குமரி அனந்தன் கைது, இன்னும் விடுதலை செய்யபடவில்லை இதுபற்றி இன்னும் தமிழிசை வாய்திறக்கவில்லை என்பதுதான் அவரின் கடமை உணர்விற்கு பெரும் சாட்சி தந்தையும் தன் அரசியல் ஆசானுமான அனந்தனின் கைதை கூட கண்டிக்கமுடியாமல் கடமை உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றார் அக்கா ஏம்மா, அவர் என ஜெயலலிதா கோவிலா கேட்டார்? பாரதமாதா கோவில்தானே அதை கட்ட ஒரு குரல் கொடுத்தால்தான் என்ன? மிஸ்டர் குமரி அனந்தன், இதென்ன கோரிக்கை? ராமர் கோவிலோ […]

மூதேவி, மூதி, மோதி, மோடி எல்லாம் ஒரே பெயரை குறிக்குமாம் !!!

உலகில் பலவிதமான ஆராய்ச்சி நடக்கின்றது, சிலர் புதிதாக ஆராய்வார்கள், சிலர் பழம் விஷயங்களை ஆராய்வார்கள் அப்படி பழம் விஷயங்களை ஆராயும் தமிழர், புது விஷயத்திற்குள் நுழைகின்றார்கள், அதாகபட்டது கிட்டதட்ட முப்பாட்டன் நரகாசுரன் கதைதான் அதாவது மூதேவி என்பவள் பெரும் தெய்வமாம், அவள் விரட்டபட வேண்டியவளே இல்லையாம். எல்லாம் பின்னாளில் வந்த திரிபாம் ஆனால் அவ்வையாரும், வள்ளுவனும் மூதேவியினை திட்டுகின்றார்களே என கேட்டால், அது அப்பொழுதே ஆரியன் புகுந்து திரித்துவிட்டான் என்கின்றார்கள் தமிழர் மழைகடவுள் மாரியாம், அது பின்னர் […]

நெல்லையில் தீ குளித்தவர்களில் 3 பேர் பலி

நெல்லையில் தீ குளித்தவர்களில் 3 பேர் பலி, ஆக இந்த காவல்துறையின் அஜாக்கிரதையால் ஒரு குடும்பம் அழிந்திருக்கின்றது. சந்தேகமே இல்லை, இது கொலை. கொலைக்கு தூண்டியது யாரெனில் அந்த கந்துவட்டி கும்பல் பாதி, அதை தடுக்க தவறிய காவல்துறை மீதி இவர்கள்தான் காரணம் காவல்துறைக்கு அமைச்சர் யார்? சாட்சாத் பழனிச்சாமி அவர் என்ன செய்கின்றார்? எங்கோ அவர் முன்னும் சிலர் கொளுத்தி சாக முயன்றார்களாம் மக்களை காக்க தவறும் இந்த அரசு பதவி விலக வேண்டும் என்றோ, […]

ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும்

என்ன சர்ச்சை இருந்தாலும், ஆயிரம் குறைகளை சொன்னாலும் கந்துவட்டி கொடுமையினை ஜெயா அடக்கி வைத்திருந்த விதம் பாராட்டுகுரியது. தன் வாக்குவங்கி பாதிக்கபடும் எனினும் அவர் மிக துணிச்சலாக அதனை அடக்கி வைத்திருந்தார் அதனால்தான் தமிழகத்தில் கந்துவட்டி கொடுமைகள் கட்டுபடுத்தபட்டிருந்தன‌, ஜெயாவினை நோக்கி சொல்லபடும் மிக சில‌ நல்ல விஷயங்களில் நிச்சயம் அதுவும் ஒன்று. அவர் இல்லாத காலத்தில் அது முளைக்கின்றது, பலி வாங்குகின்றது கந்துவட்டிக்கு பிராதான இடம் மதுரையும் அதற்கு தேற்கேயும் உள்ள பகுதிகள். அதுவும் நெல்லை […]

காசிமேட்டில் மீணவர்கள் போலிசார் மோதல்

காசிமேட்டில் மீணவர்கள் போலிசார் மோதல் சீன இயந்திரத்தில் இயக்கபடும் படகுகள் தொடர்பாக மீணவர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்திருக்கின்றது. மீணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஒன்றும் அதிமுகவிற்கு புதிதல்ல‌ கல்பாக்கம் ராமசந்திரன் காலத்தில்தான் அணுவுலை வளாகமாக மாறிற்று, இன்னும் ஏராளமான சம்பங்களை சொல்லலாம். மெரீனாவினை சுத்தமாக்கி எனக்கு கல்லறை கட்ட போகின்றேன் என ராமசந்திரன் அங்கிருந்த மீணவ குப்பங்களை வால்டர் தேவாரம் தலமையில் அடித்துவிரட்டியது எல்லாம் பெரும் கொடுமை கூடங்குள அணுவுலை விவகாரத்தில் ஜெயா காட்டிய கொடுங்கோலும் […]

ஏம்பா கோபிநாத், இந்த ஜெயா மரணம் இயற்கையானதா? செயற்கையானதா?

ஏம்பா கோபிநாத் இந்த ஜெயா மரணம் இயற்கையானதா? செயற்கையானதா? இரட்டை இலையினை பழனிச்சாமி வெல்வாரா? தினகரன் வெல்வாரா? சசிகலா வெளிவரும்பொழுது கட்சி இருக்குமா? இருக்காதா? அறிவில் சிறந்தவர் பழனிச்சாமியா? இல்லை பன்னீர் செல்வமா? டெங்கி ஒழிப்பில் முன்னால் நிற்பது மத்திய அரசா? மாநில அரசா? ஸ்டாலினின் அரசியல் திமுகவிற்கு சாதகமா பாதகமா? அன்புமணி அறிக்கைகளை அரசு கண்டு கொள்கின்றதா இலையா? தமிழக காங்கிரஸ் தலைவராக குஷ்பூவினை நியமித்தால் கட்சி வளருமா இல்லை சரியுமா? இப்படி எத்தனையோ தலைப்புகள் […]

மிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கதை உண்டு

மெர்சல் படத்திலே இவ்வளவு அரசியல் கருத்து இருந்தால், ரஜினியின் காலா படத்தில் எவ்வளவு இருக்கும்?, நிறைய இருக்கின்றது : பா.ரஞ்சித் ஆக ஒரு தயாரிப்பாளன் தெருவுக்கு வருவதோ அல்லது சாக போவதோ நிச்சயம் மிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கதை உண்டு போன் அடிக்கும்பொழுது போன் என நினைத்து அயர்ண்பாக்ஸால் காதை சுட்டுகொள்வான் ஒருவன், காது வெந்திருக்கும். டாக்டரிடம் ஓடி சென்று விவரத்தை சொல்வான் டாக்டர் கேட்பார், இன்னொரு காது எப்படி? அவன் சொல்வான், அந்த யழவு போன் […]

“நாடு சரியான பாதையில் பயணிக்கிறது’ : குஜராத்தில் மோடி பெருமிதம்

’சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கிறது’ – குஜராத்தில் மோடி பெருமிதம் இவர்தான் சமீபத்தில் நாட்டின் பொருளாதாரம் சரிகின்றது, அதனை சரி செய்ய குழு அமைக்கபடுகின்றது என அறிவித்தார் குஜராத்தில் நாட்டின் பொருளாதாரம் அமோகம் என்கின்றார் ஆக டெல்லியில் ஒரு மோடி, குஜராத்தில் ஒரு மோடி என பல மோடிகள் இருக்கின்றார்கள்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு?

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை யாருக்கும் கொடுக்க வேண்டாம் , அதனை அப்படியே குழி தோண்டி புதையுங்கள் அதனை யாரிடம் கொடுத்தாலும், ஏன் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் கொடுத்தாலும் தலைவன்(?) கொடுத்த சின்னம் என வோட்டுபோட ஏராளமானோர் தமிழகத்தில் உண்டு, அவர்களை திருத்தவும் முடியாது, கொல்லவும் முடியாது அதனால் தமிழகம் உருப்பட, அந்த சின்னத்தை கொல்வது ஒன்றும் பாவமல்ல..

26ம் தேதி தாஜ்மஹாலுக்கு செல்கின்றார் யோகி ஆதித்யநாத்

26ம் தேதி தாஜ்மஹாலுக்கு செல்கின்றார் யோகி ஆதித்யநாத், 500 பேருடன் தூய்மை பணிகளை மேற்கொள்கிறார். இது நாடகமோ இல்லை பரிகாரமோ ஆனால் வாழ்த்தபட வேண்டிய விஷயம் தாஜ்மகாலை தாங்கள் வெறுக்கவில்லை, மாறாக நேசிக்கின்றோம் என இக்காரியத்தில் இறங்கும் யோகிக்கு வாழ்த்துக்கள். இப்படி அன்றே பாபர் மசூதியிலும் நல்ல காரியத்தில் இறங்கி இருந்தால் நாட்டில் அப்பெரும் களங்கம் நிகழ்ந்திருக்காது. எல்லா விஷயங்களுக்கும் சேர்த்து தாஜ்மகாலை நன்றாக சுத்தபடுத்துங்கள் யோகி, அதில் தாஜ்மகால் அழுக்கு மட்டுமல்ல, எல்லா துவேஷ‌ அழுக்கும் […]