பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரதமர் மோடியை சந்தித்தார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்

“அட இரட்டை இலையினை எப்பவும் கொடுங்கங்க, இத படிங்க இதெல்லாம் நான் ரொம்ப விசுவாசமானவன்னு ஜெயலலிதா என்னை மும்முறை முதல்வராக்கிய கடிதமுங்க‌ என்னை முதல்வராக்கிட்டா, நா உங்களுக்கும் ரொம்ப விசுவாசமா இருப்பேனுங்க, அந்த பழனிச்சாமிக்கு விசுவாசம் கொஞ்சம் குறைவுங்க.. எசமான் உத்தரவு கொடுத்திட்டா நேரே அம்மா சமாதியில தியானத்த தொடங்கிரலாமுங்க.. ஏதோ பாத்து செய்ங்க, இது கூட முன்பு சசிகலாவிற்கு எழுதிகொடுத்த அடிமை சாசனமுங்க படிங்க‌ இத மாதிரி உங்களுக்கும் ஒண்ணு எழுதியிருக்கேன், வாசிக்கிறேன் கேளுங்க..” டெல்லியில் […]

மதுபான விலையேற்றத்தை ஏற்றுகொள்ள முடியாது : முக ஸ்டாலின்

மதுபான விலையேற்றத்தை ஏற்றுகொள்ள முடியாது : முக ஸ்டாலின் வழக்கமாக வெளியிடும் அறிவிப்பு போல அறிவித்துவிட்டார் மதுவிஷயத்தில் என்ன நடக்கின்றது? திமுக, அதிமுகவினர் இருவருக்குமே மது ஆலைகள் உண்டு. இருவர் கம்பெனி சரக்குகள்தான் டாஸ்மாக்கில் விற்கபடுபவை முன்பு விஜய் மல்லையா விற்றுகொண்டிருந்தார், இவர்கள் விற்க ஆரம்பித்தபின் அவர் தொழிலே படுத்து அவரும் அடுத்த நாட்டுக்கே ஓடிவிட்டார் அதாவது விஜய் மல்லையா அளவிற்கு இந்த கட்சிக்காரர்கள் சம்பாதிக்க ஆரம்பித்தாயிற்று விஜய் மல்லையாவினை சரித்ததில் தமிழக கட்சிகளுக்கு பெரும் பங்கு […]

அமித்ஷா மகன் பல்லாயிரம் கோடிகளை அமுக்கிவிட்டார் …

அமித்ஷா மகன் பல்லாயிரம் கோடிகளை அமுக்கிவிட்டார் என்றால் “ஏய் குழப்பவாதி , ஒழுங்காக பார் அது சில கோடிகள்..” என பொங்குகின்றார்கள் ஆனால் திமுக 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி அடிக்கவில்லை, அதெல்லாம் முடியாது என சொன்னால் “அல்ல அல்ல, அது நிச்சயமானது , திமுக அவ்வளவு பெரும் தொகை அடித்தது உண்மை ” என சூடமேற்றி சத்தியம் செய்து பூக்குழி இறங்கவும் தயாராகின்றனர் ஆக மற்ற கட்சிகள் மீது ஒரு பார்வை, திமுக என்றால் […]

பாசுமதி அரிசி விளைவிக்க தடை

பஞ்சாப் காஷ்மீர் போன்ற சில மாநிங்கள் தவிர வேறு மாநிலங்களில் பாசுமதி அரிசி விளைவிக்க தடை மிளகு, சந்தணம் போன்ற இந்திய அடையாளங்களில் ஒன்று பாசுமதி அரிசி. அது இமயமலை நீருக்கும் வட இந்திய மண்ணுக்கும் மட்டுமே நன்றாக விளையும் ரகம். கேரள மிளகு போல இமயமலை அடிவார, குறிப்பாக பஞ்சாப் பாசுமதிக்கு உலகெல்லாம் இன்றளவும் கடும் கிராக்கி. இந்திய பாகிஸ்தானிய பாசுமதி அரிசிக்கு இருக்கும் கிராக்கி உலகில் எந்த நாட்டு அரிசிக்கும் இல்லை, தாய்லாந்து,வியட்நாம் பர்மா […]

கனிமொழி மீது சுமத்தபட்டிருக்கும் குற்றசாட்டு

கனிமொழி மீது சுமத்தபட்டிருக்கும் குற்றசாட்டு, ராசாத்தி அம்மாள் மீது சொல்லபட்ட குற்றசாட்டு என்ன? கலைஞர் டிவி தொடங்கபட்டு கொஞ்ச நாளைக்குள் 200 கோடி லாபத்தில், டிவி தொடங்கபட வாங்கிய கடன் அடைக்கபட்டது என்பது. அதாவது அப்படி எல்லாம் வருமானம் வர வாய்ப்பே இல்லை, இதெல்லாம் முறைகேடு என சொல்லி பெரும் ஆர்பாட்டம் செய்து, வழக்குதொடுத்து அவரை சிறையில் அடைத்து இன்னும் தீர்ப்பு வரவில்லை. குற்றசாட்டு என்பது மேற்கண்டதுதான் ஆனால் பொத்தம் பொதுவாக ஸ்பெக்ட்ரம் ஊழல், கனிமொழியும் ராசாவும் […]

ஆண்ட பரம்பரை போஸ்டர்கள்

என்ன இருந்தாலும் பிராமண குறும்பு சோ ராமசாமி போல சிலருக்கு அதிகம்தான். “ஆண்ட பரம்பரை போஸ்டர்களை” கிண்டல் செய்து அட்டகாசமான பிராமண ஆண்ட பரம்பரை போஸ்டர் அடித்துவிட்டார்கள் அவனவன் ராஜராஜசோழன் எங்கள் சாதி என முழங்கிகொண்டிருக்க, பிராணர்களோ ஆர்னால்டு அளவிற்கே சென்றாயிற்று இந்த “ஆண்ட பரம்பரை” இம்சைகளை இதனை விட யாரும் கேவலபடுத்த முடியாது, கைதட்டலாம். (3000 ஆண்டு வரலாற்றில் பிராமண மன்னன் என எவனும் ஆண்டதில்லை, பிராமணர்கள் மந்திரிகளாக இருந்தார்கள் அவ்வளவுதான், அதனால் இது முற்றிலும் […]

அவரவர் நினைத்தபடி எழுதவேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்

எல்லோரும் அவரவர் நினைத்தபடி எழுதவேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள் நீங்கள் நினைத்தபடியெல்லாம் நான் என் பக்கத்தில் எழுத உங்களுக்கு எதற்கு முகநூலில் வீணாக ஒரு பக்கம்? அவர்களுக்கெல்லாம் சொல்லிகொள்வது ஒன்றுதான், உங்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை கொடுத்துவிடுங்கள், உங்கள் அக்கவுண்டில் நுழைந்து உங்களுக்காக எழுதிவிடுகின்றேன் டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை உயருகிறது: தமிழக அமைச்சரவை முடிவு அதானே, இன்று சட்டமன்ற கூட்டமாமே உருப்படியாக ஒன்றும் அறிவிக்கமாட்டார்களே, இந்த மாபெரும் அறிவாளிகள் என்ன விவாதிக்க போகின்றார்கள்? என்ற எண்ணம் இருந்தது. டாஸ்மாக் […]

ஹஜ் பயணிகளின் மானியம் ரத்து செய்யப்படும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சீமான்

ஹஜ் பயணிகளின் மானியம் ரத்து செய்யப்படும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சீமான் அவர்கள்தான் எதற்குமே இனி மானியமில்லை எனும் நிலைக்கு வந்தாயிற்றே, எல்லா மானியங்களும் வெட்டுபடும் பொழுது , ஹஜ் பயணிகள் மானியமும் ரத்தாகின்றது செல்வத்திலும், எண்ணேய் பணத்திலும் கொழிக்கும் வளைகுடா நாடுகள் குறிப்பாக சவுதி தன் நாட்டுக்கு வரும் மக்களின் பயணத்திற்கு மானியம் கொடுத்தால்தான் என்ன? இறைவன் கொடுத்திருக்கும் எண்ணெய் பணத்தினை, அவனின் புனித இடங்களை தரிசிக்கவரும் மக்களின் விமான செலவுக்கு […]

கேரளாவில் தலித் அர்ச்சகராகிவிட்டாராம்…

கேரளாவில் தலித் அர்ச்சகராகிவிட்டாராம், தமிழகத்தில் ஆளாளுக்கு பொங்குகின்றார்கள் அதில் திராவிடகழகத்தினரும், திமுகவினரும் பொங்குவதுதான் மகா ஆச்சரியம் அதாவது ” கடவுள் இல்லை, அதை நம்பாதே, கடவுளை வைத்து பிராமணன் நம்மை எல்லாம் சிந்திக்கவிடாமல் ஏமாற்றுவான்..” என்பதுதான் அவர்களின் முழக்கம் அந்த கோவிலில் எந்த சாதிக்காரன் அர்ச்சகராக இருந்தால் இவர்களுக்கென்ன? அவர்களுக்கு பிராமணன் அர்ச்சகரானால் கோவிலில் இருப்பது கல்லாகிவிடுகின்றது, தாழ்த்தபட்டவன் அர்ச்சகரானால் தெய்வம் வந்துவிடுகின்றது. தாழ்த்தபட்டவன் அர்ச்சகரானால் இவர்கள் எல்லாம் பெரியார் கொள்கைகளை துறந்துவிட்டு ஆலயபிரவேசம் செய்துவிடுவார்களா? அப்பொழுது […]

பிரபாகரனின் உடலை பார்க்க வேதனையாக இருந்தது : ராகுல் காந்தி

பிரபாகரனின் உடலை பார்க்க வேதனையாக இருந்தது : ராகுல் காந்தி “ஏ பிரபாகரா, உனக்கும் இரு பிள்ளைகள் உண்டு. அவர்கள் அமைதியான சூழலில் வளரட்டும். வருங்கால சந்ததி அமைதியாக உருவாகட்டும் உன் அடத்தினால் ஒரு நன்மையும் விளையாது, அழிவு மட்டுமே மிஞ்சும். அது பல ஆறா காயங்களை ஏற்படுத்தும்” என கெஞ்சிய அந்த இந்திய ராணுவ தளபதி நினைவுக்கு வருகின்றார்.