பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராகுல் .. சித்தராமைய்யா…

ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்: மன்மோகன் சிங், குஜராத் முதல்வர் கண்டனம் இது மிக வன்மையாக கண்டிக்கதக்கது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், பேசலாம் அதற்காக கல்லெறிவது எல்லாம் ஏற்றுகொள்ள கூடிய விஷயம் அல்ல‌ குஜராத்தில் வெள்ளம் ஏற்பட்டிருக்கின்றது, எதிர்கட்சி தலைவர் என்றமுறையில் ராகுல் பார்க்க சென்றிருக்கின்றார், அங்கு கல் எறிந்திருக்கின்றார்கள் இவ்வளவிற்கும் கடந்த 15 வருடமாக பாஜக ஆளும் மாநிலம் அது , கல் எரியவேண்டுமென்றால் அவர்கள் மீதுதான் எறிந்திருக்க வேண்டும், அதனைவிட்டு வெள்ளத்தை பார்வையிட […]

புலிகளின் இந்த மோசடிக்கு விகடன் பதில் சொல்லுமா?

இனி தேசபக்தர்கள் அலுவலகம் புகுந்து கேட்காமல் ஆனந்த விகடன் திருந்தாது ஆறிபோன விஷயங்களை மறுபடி தோண்டி எடுப்பதாக சொல்லிகொள்கின்றது, அதாவது ஆகஸ்டு 4, 1987ல்தான் பிரபாகரன் சுதுமலையில் பெரும் பிரகடனம் செய்தாராம். இப்பொழுது அந்த கதை எதற்கு என்றால்? எல்லாம் காசி ஆனந்தன், சீமான் வகைகளை வளர்த்து விடுகின்றார்களாம். அந்த சுதுமலை பிரகடனம் பற்றி யாருக்கு தெரியாது, இந்தியாவினை நம்பி நம் ஆயுதங்களை ஒப்படைக்கின்றோம் என சொன்னார் பிரபாகரன், கூட்டம் ஆர்பரித்தது. இதனை எதிர்பார்க்கா பிரபாகரன் முகம் […]

இந்த போஸ்டரை பாருங்கள் பல விஷயம் இருக்கின்றது

இந்த போஸ்டரை பாருங்கள் பல விஷயம் இருக்கின்றது அதாவது இதுவரை புலி ஆதரவு, காஷ்மீரிய யாசின் மாலிக்கிற்கு ஆதரவு என சொல்லிகொண்டிருந்த அங்கிள் சைமன் இப்பொழுது தமிழக சிறையில் இருக்கும், குறிப்பாக அல் உம்மா போன்ற தீவிரவாதிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றாராம் நன்றாக பாருங்கள், கோவை குண்டுவெடிப்பு போன்ற படுபயங்கர குற்றசாட்டில் உள்ளே இருக்கும் தீவிரவாதிகளை விடுதலை செய் என இஸ்லாமிய அமைப்புகளோடு முஷ்டி தூக்குகின்றார் இவருக்கு என்ன பிரச்சினை? கொலை கொள்ளை செய்தவன் எவன் சிறையிலிருந்தாலும் நான் […]

நீட் தேர்வு ஒரு வரப் பிரசாதம்: பொன்னார்

அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா? தினகரன் கெடு முடிவதால் பரபரப்பு : செய்தி ஏதோ பழனிச்சாமி அணி அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அடங்கிய அணிபோலவும், இந்த பன்னீர் அணி ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகள் போலவும் இந்த இருவரும் இணையாமல் இருப்பதால் தூரத்து கிரகத்தில் மனித இனம் குடியேறாமல் இருப்பது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்கள். இதில் தினகரன் புட்டீன் போல , இணையாவிட்டால் வானத்து செயற்கைகோளை எல்லாம் அழித்துவிடுவேன் என கெடு போட்டது போல செய்தி சொல்லிகொண்டிருக்கின்றார்கள். இந்த இரு […]

திசை காட்டும் தேவாங்கு…

திசைமானி எனப்படும் காந்த ஊசிபெட்டி கண்டுபிடிக்கும் முன்பே தமிழர் கடலில் மிக சரியாக திசைபார்த்து சென்றார்களாம் எப்படி? இந்த தேவாங்கு என்றொரு விலங்கு உண்டு, அதன் இயல்பு என்னவென்றால் எப்பொழுதும் மேற்கு நோக்கியே அமருமாம். என்ன நடந்தாலும் சரி, எப்படி சுற்றிவிட்டாலும் சரி, எங்கு குழப்பி விட்டாலும் , வாலில் சூடு போட்டாலும் அது மேற்கு நோக்கியே அமருமாம் அந்த தேவாங்கினை பெட்டியில் அடைத்து கப்பலில் போட்டு கொண்டு செல்வார்களாம், திசை தெரியாவிட்டால் தேவாங்கினை எழுப்பிவிட்டால் முடிந்த்து […]

சென்னையில் ஒரு புரட்சி ஆரம்பித்துவிட்டார்களாம் !

சென்னையில் ஒரு புரட்சி ஆரம்பித்துவிட்டார்களாம், அதாவது ஆங்கிலேயர் பெயரில் இருக்கும் தெருக்களை எல்லாம் வேறு பெயரில் அழைக்க பெயர் சூட்டும் விழா நடத்த போகின்றார்களாம் தமிழக சென்னையில் வெள்ளையன் பெயர் இருப்பது பெரும் குற்றமாம் கண்டுபிடித்துவிட்டார்கள். வரலாறுகள் என்பது காலத்தால் உருவாகுபவை, அந்த தடங்கள் முக்கியமானவை. எல்லாவற்றையும் அழித்துவிட்டால் வந்த பாதையே நமக்கு தெரியாது, பின் நாம் அடிமையான வரலாறும் தெரியாது, அடிமை வரலாறு தெரியாதவனுக்கு சுதந்திரவிழா எதற்கு? இவர்கள் ஆள்வார்களாம், அதனால் எல்லா பண்டைய அடையாளத்தை […]

கோவை அந்த கருப்பு நாட்களை ரத்த கண்ணீரோடு கடந்தது

கோவைவாசிகளின் ஆதங்கத்திலும் சில உண்மைகள் இருக்கலாம், செய்திகள் அதனைத்தான் சொல்கின்றன‌ செல்வராஜ் என்ற காவலர் கொல்லபட்டு பின் கலவரம் வெடித்து அதன் பின் நடந்த குண்டுவெடிப்புகளின் ரணங்கள் எல்லாம் கொஞ்சம் அல்ல‌ மிக அமைதியான கோவை அந்த கருப்பு நாட்களை ரத்த கண்ணீரோடு கடந்தது. மீண்டும் அந்த நாட்கள் இனி வேண்டாவே வேண்டாம், மிக கடுமையான பாதுகாப்பினை எடுத்து அமைதியினை கொண்டு வரவேண்டியது அரசின் கடமை..

வெல்ல பிறந்தவன் : 06

அலெக்ஸாண்டரின் முதல் அடி சிர்மஸ் மன்னனுக்கு விழுந்தது, டான்யூப் நதிக்கரையில் நடந்த யுத்தம் அது. அதுவரை அப்படிபட்ட வினோத யுத்தத்தை கிரேக்கம் அறியவில்லை, மோதினான், கொஞ்சம் அடிவாங்கியது போல் நடித்தான், பின் ஒரேபாய்ச்சல் மொத்த எதிரி சேனையும் அடங்கியது ராணுவம் என்பதற்கும், கும்பல் என்பதற்கும் உள்ள வித்தியாசம் அதுதான். போர் என்பதற்கும் வன்முறை என்பதற்குமுள்ள வித்தியாசமும் அதுதான் யுத்தம் என்று வந்தால் வியூகம் முக்கியம், படைகளின் பலத்தினை விட வியூகம் மகா முக்கியம். எதிரியின் வியூகத்தை நொடிபொழுதில் […]

அதீத மத சுதந்திரம் இந்நாட்டிற்கு ஆபத்து.

எல்லா தெய்வமும் ஒன்று, எல்லா ஆசிரியர்களும் ஒன்றே ஆசிரியரில் பாகுபாடு பார்த்தால் மாணவர் சமுதாயம் உருப்படாது ஒரு பிராமண அய்யரிடம் இந்த இஸ்லாமியன் படிக்கமாட்டேன் என கிளம்பியிருந்தால் அப்துல் கலாம் கிடைத்திருக்கமாட்டார். கிறிஸ்தவன் நாட்டில் படக்கமாட்டேன் என அடம்பிடித்தால் காந்தி கிடைத்திருக்கமாட்டார். அதீத மத சுதந்திரம் இந்நாட்டிற்கு ஆபத்து.  

டி.ஐ.ஜி ரூபா மீது வழக்கு தொடரப்படும் : டி.டி.வி.தினகரன்

டி.ஐ.ஜி ரூபா மீது வழக்கு தொடரப்படும்: பெங்களூருவில் டி.டி.வி.தினகரன் பேட்டி அப்படியே அந்த நீதிபதி குன்ஹா மீதும், டெல்லி நீதிபதிகள் மீதும் வழக்கு தொடுக்கும் எண்ணம் இருக்கின்றதா அய்யா? இப்பொழுதுதான் சிறை சென்று வந்தார், இன்னும் சில வழக்கில் சிறைசெல்லும் வாய்ப்பும் உண்டு, இதில் ரூபா மீது வழக்காம்? பெங்களூரில் சசிகலாவினை சிறையில் சந்தித்தபின்னர் தான் இப்படி எல்லாம் பேசுகின்றார் என்ன நடந்திருக்கும்? சின்னம்மா ஜெயா சமாதி மீது அடித்த சத்திய சபதம் நினைவுக்கு வருகின்றது, என்னா […]