பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காஷ்மீர் : என்னதான் நடக்குது ….

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் , பள்ளிகள் மூடபட்டன, இயல்பு வாழ்க்கை பாதிப்பு இப்பொழுது பாகிஸ்தானை மிரட்ட யார் செல்வார்? இந்திய ராணுவம்தான் செல்லவேண்டும் இந்திய ராணுவத்தை காஷ்மீரிலிருந்து வெளியேற்றவேண்டும் என சொல்பவன் எல்லாம் இப்பொழுது சத்தமே போடமாட்டான், பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து நீங்கள் செல்கின்றீர்களா? இந்திய ராணுவம் வெளியேறும் என கேட்டால் பதிலே இருக்காது. இனி எவனாவது / எவளாவது தமிழகத்தில் இருந்து கொண்டு காஷ்மீரில் இந்தியா அட்டகாசம் என சொல்லிகொண்டிருந்தால் அவனை பிடித்து எல்லையில் […]

தமிழகத்தில் தனிகொடியா….

ஒரு விஷயம் விவகாரமாகின்றது, அதாகபட்டது இந்தியாவில் நிறைய மாநிலங்கள் உண்டு, அவற்றிற்கொரு அரசு, சின்னம் இன்னபிற அடையாளம் எல்லாம் உண்டு ஆனால் தனிகொடி கிடையாது, அது காஷ்மீருக்கு மட்டுமே உண்டு. மாநில அரசுக்கு தனி முத்திரை இருக்கும்பொழுது ஏன் தனிக்கொடி இருக்க கூடாது எனும் சிந்தனை கன்னடா முதல்வர் சித்தராமையாவிற்கு வந்துவிட்டது என்ன இது? பரப்பான அக்ரஹாரா சிறையில் அரசுகொடி பறக்கும்பொழுது , சசிகலா கொடியும் பறக்கவில்லையா? அப்படி கன்னட கொடியும் பறந்தால் என சிந்துவிட்டார், கொடி […]

கமல் விவகாரம் : விரைவில் பேசுவார் குஷ்பூ

 தமிழ்நாட்டு அரசியலை பலப்படுத்த கமல்ஹாசன் அவசியம் இல்லை: தமிழிசை ஆமாம் அதற்கு அம்மணி அரசியலை விட்டு போனாலே போதும். ஊழலுக்கு எதிராக போர்க்கொடி: கமல்ஹாசனுக்கு கிரண்பேடி ஆதரவு சல்யூட் மேடம், தமிழ்நாட்டு கவர்ணர் பொறுப்பையும் சேர்ந்து கவனிக்க வாருங்கள், மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம் கமலஹாசனுக்கு ஆதரவாக குஷ்பூ இன்னும் ஏன் கருத்து சொல்லவில்லை என பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள். மாநில முதல்வரே கமலஹாசன் கோதாவில் குதித்து தன் சகாக்களுடன் குத்துசண்டைக்கு வந்துவிட்ட பின்னும் குஷ்பூ ஏன் […]

கமல் பிரச்சினை வெடித்தாலும் வெடித்தது …..

கமல் பிரச்சினை வெடித்தாலும் வெடித்தது ஆளாளுக்கு அபத்தமான கருத்துக்களை சொல்ல தொடங்கியாயிற்று கமல் நடிகர் என்றார்கள், ராமசந்திரன் என்ன‌ பேராசிரியரா? ஜெயலலிதா என்ன ராணுவ தளபதியா என்றபின் அதனை பேசவில்லை அதன் பின் கமலுக்கு ஒரு மனைவி அல்ல என்றார்கள், ஏன் ஜாணகி என்பவரின் முதல் கணவர் பெயர் என்ன? ஜெயலலிதா கோயிங் ஸ்டடி சமாச்சாரம் என்றபின் சரி சரி விட்டுவிடலாம் என்றார்கள் இப்பொழுது அடுத்த பாயிண்டாம், அதாவது ராமசந்திரன் அக்காலத்திலிருந்து அரசியல்வாதியாம், ஜெயலலிதாவும் அப்படியாம் ஆனால் […]

முரசொலி பவள விழாவில் ரஜினி கமல் பங்கேற்பு

முரசொலி பவள விழாவில் ரஜினி கமல் பங்கேற்பு இரு நாள் தூங்காமல் போர் நடத்தியதில் காயம்பட்ட நெப்போலியன் களத்திலிருந்து வெளியேறிவிட்டான், அவன் தூங்கியே ஆகவேண்டிய நிலை அந்த சேனைக்கோ என்ன செய்வதென அறியாத நிலை , அவனை எழுப்பியே ஆகவேண்டிய நிலை, சென்றார்கள் அவன் தூங்கும் அறைக்கு வெளியே ஒரு மேஜையில் சில குறிப்புகள் இருந்தனவாம் தான் வெளியேறிவிட்டாலும் என்னென்ன செய்யவேண்டும் என அவன் எழுதி வைத்துவிட்டுத்தான் ஓய்வெடுக்க சென்றான் அந்த மாவீரன் அப்படியே சேனையும் போரிட்டு […]

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 05

பெரும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது குழு. பட்சி சிக்கியாயிற்று இனி உயிரோடு இஸ்ரேல் கொண்டுசெல்லவேண்டும். பக்கத்து நாடு என்றால் பொதுவாக தொட்டி ஆட்டோவிலே கடத்துவார்கள். ஐரோப்பா என்றால் ஏதாவது ஒரு மீன்பாடி வண்டி அல்லது மினிலாரி அல்லது ஆம்புலன்ஸ்லில் கொண்டு சென்று ஆளில்லா கடல்கரை வழியாக படகில் நடுகடலில் நிற்கும் இஸ்ரேல் படகினை அடைவார்கள், நடுக்கடலில் எந்த குடியுரிமை சோதனையையும் கடல்மீன்கள் செய்யாது. ஐரோப்பா மற்றும் மேற்காசியாவில் இப்படித்தான் செய்வார்கள், குடியுரிமை சோதனை பாஸ்போர்ட் எல்லாம் அவர்களுக்கு தேவையே […]

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு அரசின் கடன் 4 லட்சம் கோடியாக இருக்கும் பொழுது இது அவசியமா? இவர்கள் கிழிக்கும் கிழிக்கி இந்த சம்பளம் எதற்காக? கூவத்தூரில் இருந்தற்கும், சின்னம்மா வாழ்க, தினகரன் வாழ்க என சொல்வதற்கும் அரசு சம்பளமா? நிச்சயம் எதிர்கட்சியும் இதனைபற்றி பேசமுடியாது அவர்களிடமும் 80 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள், பேச விடமாட்டார்கள். ஆக கூவத்தூரில் கொடுப்பதாக சொன்னதை சம்பளத்தை ஏற்றி கொடுத்து சரிசெய்கின்றார்கள், நெல்லுக்கு பாயும் […]

சசிகலாவை பொறி வைத்து பிடித்த மத்திய அரசு : செய்தி

சசிகலாவை பொறுமையாக காத்திருந்து பொறி வைத்து பிடித்த மத்திய அரசு : செய்தி இவர்களுக்கு இதுவே வேலையாகிபோனது, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுகொள்ளமாட்டார்கள், ரூபா போன்ற நேர்மமையான அதிகார்கள் உண்மையினை வெளிகொணர்ந்தால் நாங்கள் தான் பொறிவைத்தோம் என வந்து நிற்பார்கள் அப்படி பொறி வைப்பவர்கள், அப்பல்லோ மர்மத்தை வெளிகொணர்ந்தால் என்ன? செய்யமாட்டார்கள். இனி என்றொவது ஒரு நாளில் மர்மம் வெளிவந்தால் மோடி மேஜிக் என்பார்கள் எல்லா இடத்திலும் இதே அட்டகாசம், இதோ எல்லையில் சீனா மல்லுகட்டுகின்றது, நாளை அவர்களே […]

முதுகெலும்பு இல்லாத கோழை கமல் : ஹெச்.ராஜா

முதுகெலும்பு இல்லாத கோழை: கமலால் முதலமைச்சராக முடியாது –ஹெச்.ராஜா இப்பொழுது கமல் நான் முதலமைச்சராக போகிறேன் என எங்கு சொன்னார்???, சரி இந்த முதுகெலும்புள்ள மாவீரன் எத்தனை முறை முதல்வராகிவிட்டார்.. எங்கே? இந்த மாவீரன் ராமர்கோவிலை கட்டிவிடட்டும் பார்க்கலாம் அட அதுகூட வேண்டாம் முதுகெலும்புள்ள வீரனாக பாகிஸ்தான் எல்லையில் ஒரு கல்வீசி வந்துவிடுங்கள் பார்க்கலாம்.. TV பேட்டியில் தான் சொன்னதை கூட, உலகமே பார்த்த விஷயத்தையே பயத்தில், ” நான் அப்படி சொல்லங்கிறேன்” என பல்டி அடிக்கும் […]

வளர்மதி நக்சல் இயக்கம் என்றால் நிரூபிக்கட்டும்

அந்நிய நாட்டு தீவிரவாதி படம் பிடித்து அலையும் சீமானை விட்டுவிட்ட தமிழக அரசு, வீரலட்சுமி, வைகோ, நெடுமாறனை எல்லாம் விட்டுவிட்ட தமிழக அரசு… அப்பட்டமாக பிரிவினை பேசும், குதர்க்கம் விளைவிக்கும் பலரை விட்டுகொண்டிருக்கும் இந்த அரசு… சொந்தமாநில பிரச்சினைக்காக குரலெழுப்பிய வளர்மதியினை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கின்றது? அந்த புலி தொண்டர்கள் அல்லவா குண்டர்கள்? அவர்களை முதலில் பிடித்த்து போட்டிருக்கவேண்டாமா? வளர்மதி அவர்களை விட இந்த நாட்டிற்கு ஆபத்தானவரா? மாணவர்கள் மீது எந்த அரசும் கைவைக்காது, […]