பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிக் பாஸ் : “பரணியே உள்ளே போ” , “உள்ளே போ”

கிரிக்கெட்டில் பேட் செய்யும் பேட்ஸ்மேன் பாகிஸ்தானின் பவுலர்களின் பந்துக்கு பயந்து வெளியே வந்தால் விடுவோமா? கையினை பிடித்து முதுகில் மிதித்து உள்ளே போ என தள்ளி விடமாட்டோமா? அப்படி இந்த பரணி என்பவரையும் கதற கதற பிடித்து பிக்பாஸ் வீட்டுக்குள்ளே தள்ள வேண்டும், எல்லாவற்றிற்கும் ஒப்புகொண்டுதானே உள்ளே சென்றார்? இப்பொழுது தப்பி ஓடினால் எப்படி? விடலாமா? நாம் இன்னும் 80 நாட்கள் இந்த இம்சையினை பார்த்து தொலைக்கும் இம்சை இருக்கும்பொழுது இவர் எப்படி தப்பலாம் “பரணியே உள்ளே […]

சட்டமன்ற கூட்டதொடரை எளிதாக நடத்திவிட்டது அதிமுக அரசு

சட்டமன்ற கூட்டதொடரை எளிதாக நடத்திவிட்டது அதிமுக அரசு, திமுக பெரும் சவால் எல்லாம் கொடுக்கவில்லை, வெளிநடப்போடு சரி குட்கா விவகாரம் உட்பட பல விஷயங்களில் திமுக கோட்டை விட்டது, அடித்து ஆடவேண்டிய அந்த விவகாரத்தில் திமுக சமாளித்து ஒதுங்கியது எல்லாம் ஹிஹிஹிஹ் ரகம்.. இன்னும் என்னென்ன விஷயங்களில் சறுக்குமோ தெரியவில்லை , இந்த இத்துபோன அரசுக்கே சவால் கொடுக்க தெரியவில்லை என்றால் என்ன சொல்ல? அன்றைய கலைஞர் திருச்செந்தூர் வைரவேல் உட்பட பல பிரச்சினைகளில் நடைபயணம் செய்து […]

ராகுலின் செயல் வாழ்த்துகுரியது

எல்லையில் அட்டகாசம் செய்கின்றது சீனா, உண்மையில் அது மல்லுக்கு நிற்பது பூட்டானுடன், பூடான் எதிர்க்கின்றது அதன் பிண்ணனியில் இந்தியா இருக்கின்றது காரணம் இந்த டோல்கம் அல்லது தொங்லாக் சீன வசம் சென்றால், அதன் பின் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவோடு இணைக்கும் கோழி கழுத்து எனப்படும் முடிச்சினை சீனா நெருங்குவது மிக எளிது அதன் பின் யுத்தம் வெடிக்குமாயின் வடகிழக்கு மாநிலங்கள் துண்டிக்கபடும், அது மிக பெரும் குழப்பமாகும், இந்தியா அஞ்சுவது அதற்குத்தான், சீனா திட்டமிடுவதும் அதற்குத்தான் இது […]

பெரியார் கண்ட புதுமைபெண்ணாக கஸ்தூரி ….

நடிகை கஸ்தூரி மிக கீழ்தரமான விமர்சனங்களை எல்லாம் எதிர்கொள்கின்றார், கருத்துசொல்லும் பொழுது எம்மாதிரி வசவுகளை எல்லாம் சொல்லகூடாதோ அப்படி எல்லாம் அவரை நோக்கி நா கூசும் வார்த்தைகள் பிரயோகிக்கபடுகின்றன‌ அவரின் தனிபட்ட வாழ்வு யாருக்கும் தேவையில்லை, ஆனால அதற்காக அறவே சம்பதமில்லா விஷயங்களை சொல்வது சுத்த அபத்தம் முன்னாள் விடுதலைபுலி கருணாவினை அவருடன் தொடர்பு படுத்தி பேசுவது பற்றி அவரே கொதிக்கின்றார், இது நிச்சயம் சாத்தியமில்லாத ஒன்று புலிகளிடமிருந்து தன் உயிரை காக்க ஓடவேண்டிய நிலையில் இருந்த […]

என்ன பெரியார் பூமி இது?

எல்லோரும் சேர்ந்து எனக்கொரு கார் வாங்கி தாருங்கள் ,  ஊரெல்லாம் சென்று பார்ப்பான் என திட்ட வசதியாக இருக்கும் என்பதை அன்னார் மறைமுகமாக கேட்கின்றாராம் பெரியாரின் சொத்துக்களை வைத்து வீரமணி என்னவெல்லாமோ செய்யும் பொழுது, பெரியாரின் கொள்கைகளை வைத்து இவர் ஒரு கார் கூட வாங்க முடியவில்லை என்றால் என்ன பெரியார் பூமி இது? ஆக இது பெரியார் பூமி என்றால் இவருக்கு கார் வாங்கி கொடுத்து நிரூபிக்கட்டும். கார் கொடுத்தால் அடுத்து விமானத்தில் வெளிநாடுகளுக்கு பாதுகாப்பாக […]

பிக் பாஸ் வகையறா….

தினமும் இந்தியாவினை விட 2.5 மணநேரம் சூரியன் முன்னால் சூரியன் உதிக்கும் மலேசியாவில் இப்பொழுதுதான் கஞ்சா கருப்பினை வெளியே தள்ளுகின்றார்கள் ஏதோ அணுகுண்டு வீசிய அமெரிக்காவின் அதிகாரபீடத்தை கண்டித்து ஐன்ஸ்டீன் வெளிவந்த காட்சிகள் போல கஞ்சா கருப்பு வெளியேறும் அழிச்சாட்டியம். சீனாவும் இந்திய எதிர்ப்பு பாகிஸ்தானும் சந்தித்து ஒரு மாதிரி பேசிகொள்வது போல இந்த காயத்திரியின் இம்சை அரசியலில் வைகோ போல இந்த பரணி ஒரு மாதிரி தனியாக அலைகின்றார்.. ஏதோ ஒரு பாக்யராஜ் படத்தில் பைத்தியகார […]

தமிழிசைடா..

அட இந்த தமிழிசை கொஞ்சகாலம் எங்கே சென்றார்?? வங்கபக்கம் சென்றிருப்பாரோ, பரவாயில்லை உண்மை நிலவரம் கண்டறிய சென்றிருப்பார் என்றெல்லாம் தேடினால் அம்மணி இலங்கை சென்றிருக்கின்றார் பல இடங்களுக்கும் சத்தமில்லாமல் சென்றிருக்கின்றார், சீமான் போல மாறுவேடம் எல்லாம் அல்ல, தைரியமாக சுற்றியிருக்கின்றார் அவருக்கு முள்ளிவாய்க்காலை சுற்றிபார்க்கும் எண்ணம் இருந்திருக்கின்றது, ஆனால் செல்ல முடியவில்லை ஈழத்தில் பொதுமக்களை தமிழிசை சந்திக்கவில்லை, யாருடைய கட்டளைக்கோ அஞ்சி ஓடிவிட்டார் என்கின்றது செய்திகள் நாங்கள் தடுக்கவே இல்லை என்கின்றது இலங்கை அரசு, அப்படியானால் தடுத்தது […]

வங்கத்தின் அபாயங்கள் இங்கும் தொடரலாம் …

வங்கத்தில் மதத்தை சீண்டிவிட்டால் அதனை நாம் நினைத்த வழிக்கு கொண்டுவரலாம் என்பது அன்றே வெள்ளையன் கணித்தது கர்சன் எனும் ஆளுநர் அதனைத்தான் செய்தார் ஒருங்கிணைந்த வங்கத்தை அன்றே இரண்டாக பிரித்தது அவர்தான். அன்றே கலவரத்திற்கான பிரிவினை விதை விதைக்கபட்டது, நிர்வாக காரணம் என அவர் சொன்னாலும் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் விஷயம் என பலர் தலையில் அடித்ததை பிரிட்டன் கண்டுகொள்ளவில்லை பின்னும் ஒருங்கிணைந்த இந்தியாவில் வங்கம் சுதந்திரத்திற்கு பெரும் மக்களை கொடுத்தது சித்தரஞ்சன் தாஸ் , […]

இந்திய வெளியுறவு துறை இலங்கையில் தோற்றுவிட்டது : திருநாவுக்கரசர்

இந்திய வெளியுறவு துறை இலங்கையில் தோற்றுவிட்டது : திருநாவுக்கரசர் அதாகபட்டது இலங்கை அதன் பாராளுமன்றத்தில் அதன் நாட்டு எல்லைக்குள் மீன்பிடிக்க வரும் அந்நிய நாட்டினருக்கு எதிராக கடும் சட்டங்களை இயற்றியுள்ளது இதனை மோடி அரசு ஓடி சென்று தடுக்கவில்லையாம் ஒரு நாடு இயற்றும் சட்டங்களை இன்னொரு நாடு எப்படி தடுக்க முடியும்? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இவர்தான் தமிழக காங்கிரசின் தலைவராம் என்னவோ காங்கிரஸ் அரசில் இலங்கையினை காலுக்குள் வைத்திருந்தது போலவும், இன்று மோடி […]

சீமானை பற்றி எழுத என்ன இருக்கின்றது ?(காணொளி )

இனி சீமானை பற்றி எழுத என்ன இருக்கின்றது, இந்த ஈழ நண்பர் பின்னி எடுத்துவிட்டார் இதற்கு மேலும் சீமான் மைக் பக்கம் வராமலும், மேடை ஏறாமலும் இருப்பது நல்லது, ஆயிரம் சொல்லுங்கள், சில ஈழதமிழர்களிடம் இருக்கும் சுவாரஸ்யமான நக்கலும், கிண்டலும் தமிழகத்தாருக்கு சுட்டு போட்டாலும் வராது வீடியோவினை பார்த்தால், நாம் தமிழர் கட்சியினர் கொடியினை இறக்கி வங்க கடலில் வீசுவது உறுதி உங்கள் வீட்டில் காமெடி சேனல் ஓடிகொண்டிருந்தால் நிறுத்திவிட்டு இதனை பாருங்கள் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு […]