பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மாட்டை மற, மனிதனை நினை….

“மாடு வெட்டி உண்போம் முடிந்தால் தடுத்துபார்” என கேரளம் உரிமை கீதம் பாட தொடங்கிற்று, அட்டகாசமாக எதிப்பினை கேரளம் கொடுக்கின்றது இவ்வளவிற்கும் மலையாளம் மலையாளிக்கே, மலையாள மாடு மலையாளிக்கே என சத்தமிடும் கூட்டம் எல்லாம் இல்லை , தேசிய கட்சிகள் தான் ஆனால் எது தன் உரிமை? எது தேசியம்? என்பதில் மிக கவனமாக இருக்கின்றது தனிநாடு கோரிக்கையினை கைவிட்ட திமுகவின் போராட்டமும் இந்த அடிப்படையில்தான் இருந்தது, இன்று அந்த சிங்கம் ஓய்ந்தபின் அப்படியான உறுமல்கள் இல்லை […]

ரஜினியினை பார்த்து பயப்படுவது யார்?

இந்த டூப்ளிகேட் தமிழ் இன உணவாளர்களை சொன்னால், சில முட்டாள் அப்பாவி மூடர்கள் வந்து, ஏய் நீ தமிழன் இல்லையா என பொங்குகின்றார்கள், மிரட்டுகின்றார்களாம் உண்மையில் ரஜினியினை பார்த்து பயப்படுவது யார் என்றால் அதிமுகவும் அதன் ஜால்ராக்களும், சும்மாவே அதிமுக கோட்டை கீறி கிடக்கின்றது, கதவினை உடைத்து பாஜக ஆடுகின்றது இதில் ரஜினி எனும் யானை கோட்டையினை இடித்துவிட்டால் என்னாகும்? உள்ள மானமும் பொகும். அதனால்தான் இந்த அதிமுக தன் ரகசிய வேட்டை நாய்களை குரைக்க‌ விட்டிருக்கின்றது […]

தமிழகத்தில் தனியார் பாலில் ரசாயாணம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் தனியார் பாலில் ரசாயாணம், விசாரணை முடிவில் நிரூபிக்கபட்டால் அது தடை செய்யபடும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் என்ன நேற்று நள்ளிரவில் வந்ததா? இல்லை இவர்கள் இன்று காலைதான் அமைச்சர் பொறுப்பு ஏற்றார்களா? நல்ல அரசு என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?, விசாரணை முடிவு வரும் வரை இந்த பாலை தடை செய்கின்றோம் என சொல்ல வேண்டாமா? இது ஆபத்தான பால், ஆனால் முடிவு வரும் வரை குடியுங்கள் என எந்த முட்டாள் […]

வீரப்பன் படத்தினையும் மாட்டுவோம் : ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஜெய்லலிதா படத்தை சட்டசபையில் மாட்டினால், வீரப்பன் படத்தினையும் மாட்டுவோம் : ஈவிகேஎஸ் இளங்கோவன் மிஸ்டர் இளங்கோவன், என்ன பேசுகினறீர்கள், சும்மாவே அங்கிள் சைமன் வீரப்பன் படத்தை தூக்கிகொண்டு அலைகின்றார் நீர் இப்படி சொன்னால் இளங்கோவன் எங்களை ஆதரித்துவிட்டார், போராட்டம் மாபெரும் வெற்றி, புரட்சி வெற்றிஎன கிளம்பிவிடமாட்டாரா? அதனால் வேறு தலைசிறந்த கொலைகாரனை பற்றி சொல்லலாம், ஆட்டோ சங்கர், அட்டாக் பாண்டி, மணல்மேடு சங்கள், அயோத்தி குப்பம் வீரமணி போன்றோரை பரிசீலியுங்கள்.. கொசுறு ஆழி சூழ் உலகுதான், அப்படி […]

அரசு மாடுகளுக்கு விடுதலை கொடுத்திருக்கின்றது

அறியாமை, நோய், வறுமை,ஆயுத குவிப்பு, தீவிரவாதம் என பல விஷயங்களில் இந்நாடு விடுதலை அடைய வேண்டி இருக்கின்றது, ஆனால் இந்த அரசு மாடுகளுக்கு விடுதலை கொடுத்திருக்கின்றது, இனி அவைகள் இஷ்டம் போல திரியலாமாம், பால் மட்டும் கறந்துவிட்டு மக்கள் சத்தம் போடாமல் இருந்துவிடவேண்டுமாம் அவற்றை கட்டுதல், வர்ணம் பூசுதல் இன்னபிற தொந்தரவுகள் எல்லாம் செய்ய கூடாதாம், வயதான மாடுகளுக்காக நாடெல்லாம் முதிர்ந்த மாட்டு இல்லம் அமைக்கபட்டு, அங்கே மாடுகள் பாதுகாக்கபட்டு பின் அடக்கம் செய்யபடுமாம். இது மாட்டுகறி […]

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார் கலைஞர் ஏரளமானோரை கவர்ந்தார், அதில் ரசிகர்கள், தொண்டர்கள், கொள்கையாளர், என ஏராள வகை உண்டு, சில பச்சோந்திகளும் உண்டு பக்தர்கள் என்றொரு பிரிவும் உண்டு, அதிலொருவர்தான் இவர், இன்று மறைந்துவிட்டார் தன் சமகாலத்தில் யார் இறந்தாலும் மரியாதை செலுத்துவதில் கலைஞர் மகத்தானவர், தன் தள்ளாத வயதில் அவர் செல்லமுடியாமல் இருந்தது கலாமிற்கும், ஜெயாவிற்குமே, மற்றபடி அந்த இறுதிமரியாதை விஷயத்தில் கலைஞரை பாராட்டியே தீரவேண்டும் அப்படிபட்ட கலைஞரின் முரட்டு […]

இன்றைய அரசியல் துணுக்ஸ்

சீமானின் உருவபொம்மை எரிக்கும் ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை அதானே, ஒழுங்காக சென்று 2000 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் மட்டும் பாருங்கள், அந்த சீமான் தவறாக சொல்லிவிட்டான் என்று அந்த இரண்டாம் புத்தன் சீமானின் கொடும்பாவியினை எப்படி எரிக்கலாம்? ஒழுங்காக படம் பார்த்துவிட்டு அவர் அழைத்தால் சென்றுவிட்டு வந்துவிடவேண்டும்   எடப்பாடி ஓடி ஓடி மோடியினை சந்திப்பதை பார்த்தால் பன்னீர் சட்டையினை முன்பு யாரோ பிடித்து கையெழுத்து வாங்கியது போல வாங்கியிருப்பார்கள் போல தெரிகின்றது விரைவில் […]

புதுச்சேரி தமிழனை தமிழகத்தோடு இணைக்கட்டும் ….

இந்த தமிழுணர்வு இம்சைகள் முதலில் புதுச்சேரி தமிழனை தமிழகத்தோடு இணைக்கட்டும் அந்த சாதனையினை முதலில் செய்யட்டும், இந்த ஈழம் , தமிழனை தமிழன் ஆள்வது, இன விடுதலை எல்லாம் பின்னர் பார்க்கலாம் புதுச்சேரியினை தமிழ்நாடு சேர்ப்போம் என்றால் புதுவை மக்கள் செருப்பு பிய்ய பிய்ய அடிப்பார்கள் இதில் “இலக்கு இன விடுதலையாம்..”, அப்படி யாரிடம் அடிமைபட்டிருக்கின்றோம் என்றால் சொல்ல தெரியவில்லை, அவ்வளவு பரிதாபமாக திரிகின்றது அந்த கூட்டம் இந்தியாவில் நாம் அடிமையா? அப்படியானால் இங்கிருக்கும் 32 மாநிலமும் […]

வம்புக்கு இழுப்பதில் பல வகை உண்டு : குஷ்பு vs தமிழிசை

வம்புக்கு இழுப்பதில் பல வகை உண்டு, டிரம்ப் வம்பிழுப்பது, பாகிஸ்தான் வம்பிழுப்பது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் களத்தில் வம்பிழுப்பது ஒருவகை, கிராமத்து கிழவிகள் திண்ணையில் அமர்ந்துகொண்டு வருவோர் போவோரிடம் வம்பிழுப்பது இன்னொரு வகை தமிழிசை வம்பிழுப்பது கடைசி வகை இப்பொழுது அவரின் வம்பிழுப்பு எல்லோரையும் சீண்டிவிட்டு குஷ்பூ மீது சென்றிருக்கின்றது, ரஜினி அரசியல் குறித்து தமிழிசை ஏதோ சொல்ல அது குஷ்பூவின் டிவிட் வரை சென்றிருக்கின்றது வார்த்தைகள் எண்ணங்களை வெளிபடுத்தும் என குஷ்பூவினை தமிழிசை சாடியிருக்கின்றார், சொல்லியிருப்பது […]

இத்தேசம் ஒருநாளும் எம்மை கைவிடவே விடாது

புலிகளை யாரும் தமிழரின் மொத்த பிரதிநிதியாக ஏற்கவில்லை, அவர்களாக துப்பாக்கி முனையில் அடக்கி நாங்கள் ஈழதமிழர்களின் ஒரே அதிகாரம் என்றார்கள் அப்படி இங்கு சிலர் தான் மட்டுமே தமிழரின் நலனை குத்தகைக்கு எடுத்திருக்கின்றேன், நான் மட்டுமே தமிழினத்தை நேசிக்கின்றேன் , நான் மட்டுமே தமிழகம் காப்பேன் என் அனுமதி எல்லாவற்றிற்கும் முக்கியம் என சொல்லி கொண்டிருக்கின்றார்க‌ள் ஈழபுலிகளின் பாசிச பாணியினை இங்கும் கொண்டுவர பார்க்கின்றார்கள், யாராவது கொஞ்சம் பணமும் ஆயுதமும் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் இங்கும் முள்ளிவாய்க்காலை உருவாக்க […]