பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிறக்கபோகும் புதுவருடம் நிம்மதியாக பிறக்காது போல

ஈரான் தன் மக்களின் அதிருப்தி, தொடர்ந்து தன் கையினை கட்டும் நாடுகளை மிரட்ட வேண்டிய நிலை என இக்கட்டான நிலையில் இருக்கின்றது எங்களை வாழவிடாத நாடுகளை நாங்கள் வாழவிடமாட்டோம் என எச்சரித்துகொண்டிருக்கும் ஈரான் பெரும் போரில் இறங்கலாம் என்கின்றன செய்திகள் அமெரிக்கா ஒரு மாதிரியான படைகுவிப்பினை செய்கின்றது, இஸ்ரேல் அதன் அதிநவீன ஏவுகனையினை சோதிக்கின்றது அந்த ஏவுகனை ஈரானுக்கானது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை முடிந்தவரை போரை தவிர்த்த ஈரான் ஒரு ஆட்டத்துக்கு தயாராகிவிட்டது, சில பலத்த எச்சரிக்கைகளை […]

இந்தியாவிடம் இதுபற்றி வேறு ஏதோ திட்டமிருக்கின்றது

இந்தியா இனி செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகனைகள் சோதனையினை கொஞ்சநாளைக்கு செய்வதில்லை என அறிவித்திருக்கின்றது இந்தியாவின் ஏசாட் ஏவுகனை கடந்தவருடம் சோதிக்கபட்டு முன்னூறு கிமி தொலைவில் இருந்த டம்மி செயற்கோளை தகர்த்து உலகை அசத்தியது. இந்த ஏவுகனையின் மொத்த பலம் ஆயிரம் கிமீ என உறுதிபடுத்தபட்ட நிலையில் அச்சோதனை இன்னும் தொடரும் என எதிர்பார்த்தது இந்தியா இனி சோதனை தேவையில்லை எம் தொழிநுட்பம் மேல் நம்பிக்கை உண்டு இதனால் தொழில்நுட்ப மேம்படுத்தலுக்கு களமிறங்கிவிட்டோம் என சொல்லிவிட்டது சரி, […]

ஐம்பது பேருக்கு மேல் இறந்துவிட்டது பெரும் துரதிருஷ்டம்

டில்லியில் நடந்திருக்கும் தீ விபத்து பெரும் அசம்பாவிதமாக ஐம்பது பேருக்கு மேல் இறந்துவிட்டது பெரும் துரதிருஷ்டம் பைப் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர் கம்பெனி என அறியபட்ட அந்த தொழிற்சாலையில் இன்று காலை நடந்த அந்த விபத்து இந்த அப்பாவிகள் ஐம்பது பேரின் உயிரை பறித்திருக்கின்றது உயிரிழந்தவர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகின்றது, பிரதமர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து கொண்டிருக்கின்றார்கள் தென்னகம் கார்த்திகை தீபம் ஏற்றும் நேரத்திற்கு ஆயத்தமாகும்பொழுது, அக்னி வடக்கே பெரும் காவு வாங்கியிருப்பது சோகம்

அனுதாபம் தேடுவது அவர்களுக்கு கை வந்த கலை

நாம் அனுதாபத்துக்காக ஐடி முடக்கம் என சொல்லிதிரிவதாக திமுக இருநூறு ரூபாய் கோஷ்டிகள் சொல்லி திரிகின்றன. அனுதாபம் தேடுவது அவர்களுக்கு கை வந்த கலை “அய்யய்யோ கொலைபண்றாங்க”, “இதுதான் என் கடைசி தேர்தல்” என்ற அனுதாபம் தேடிய கட்சி எப்படி இருக்கும்? இவர்களை போலத்தான் இருக்கும் அவர்களை போலவே எல்லோரையும் எண்ணிகொள்கின்றன பதர்கள்

சோ ராமசாமி அழுத இடம் இதுதான்

சோவின் நாடகம் தடைசெய்யபடுகின்றது, கோர்ட்டுக்கு செல்கின்றார் சோ ஆட்சேபகரமான காட்சிகள் என சில காட்சிகளை சொல்லி தடை செய்ய சொல்கின்றார் நீதிபதி சட்டம் இதுவானால் அதை நீக்கி நாடகம் நடத்துவேன் ஆனால் நீதிமன்றம் தடை செய்த காட்சிகள் எது என எழுதிகொண்டே இருப்பேன் அப்பொழுது நீங்கள் தடை செய்ய நினைத்த விஷயம் உலகெல்லாம் தெரியும் அதற்கு மேல் நீதிபதி ஒன்றும் செல்லவில்லை, நாடகம் நடந்தது காமராஜர் வந்திருந்தார் நீதிமன்றம் செல்லும் நிலைவரை வந்தாயிற்று என்றார் சோ நீ […]

உண்மை பேசி கடைசிவரை சொத்து சேர்க்காமல் சென்ற அவன் உத்தமனே

சோ ராமசாமி சமூக விரோதி, சமூக நீதிக்கு ஆபத்தானவர் அயோக்கியர் என ஒரு கும்பல் சொல்கின்றது அந்த மனிதன் கடைசிவரை உன்மையினை சொன்னான், அது திராவிட மோசடியோ ஈழ மோசடியோ கடைசி வரை உண்மையினை சொன்னான் ஈழதமிழருக்கு துரோகம் செய்கின்றீர்கள் என ஜெயவர்த்தனேவிடம் வாதாடிய அவனேதான், ஈழபுலிகளின் அதிதீவிரவாதத்தையும் கண்டித்தான் காங்கிரசின் பல தவறுகளை கண்டித்த அவன், பாஜகவின் மறுபக்கத்தையும் சாட தயங்கவில்லை ஒரு விஷயம் கவனியுங்கள் எவ்வளவோ எழுதியவன் பேசியவன் அவன் ஆனால் சொத்து என […]

நாங்க ஆயுத அரசியலுக்குதாண்ணே சரி

நாம் தமிழர் தும்பிகளில் சில அடிக்கடி பேசுகின்றன, கட்சிக்கு அப்பாற்பட்ட நல் உறமை மேம்படுத்துகின்றார்களாம், அப்படி சில பேசவந்தன‌ ஏன் இந்த கட்சியில் இருக்கின்றாய் என்றால் அரைமணிநேரம் அழுகின்றன, அவை அழும்பொழுது விஷயம் தெரியவில்லை , அழுதுவிட்டு சொல்லும்பொழுது உண்மை தெரிகின்றது “அண்ணே, எங்களுக்கும் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய்ய ஆசை, ஆனால் திமுகவில் கடைசிவரை போஸ்டர் ஒட்டவேண்டும், அதிமுக காசு இல்லாதவனை மதிக்காது எங்களை போல வயதுகுறைந்தவர்களுக்கு ஒன்றுமில்லாதவருக்கு , கொஞ்சமும் அறிவே இல்லாதவருக்கு அண்ணன் கட்சிதான் […]

நாம் அவசியமே இல்லை

அடேய் உன்னை போன்றவர்களால் திராவிட இயக்கத்தையோ, திமுகவினையோ ஒருநாளும் அழிக்கமுடியாது : உபிஸ் நாம் ஏன் அழிக்க வேண்டும், உங்களுக்குள்ளே அதை அழித்து துடைத்தொழிக்க ஏகபட்ட பேர் இருக்கின்றார்கள், நாம் அவசியமே இல்லை

சோ கொஞ்சநாள் மிடாஸ் நிர்வாகத்தில் இருந்தது தவறாம்

சோ கொஞ்சநாள் மிடாஸ் நிர்வாகத்தில் இருந்தது தவறாம் . கொள்கையாளன் ஊழல்வாதி ஜெயாவின் ஆலையில் நிர்வாகியாக இருந்திருக கூடாதாம், பகுத்தறிவு கும்பல்கள் ஒரே அழிச்சாட்டியம் ஈரோட்டு ராம்சாமி என்றொரு நாத்திகர் இருந்தார், கடவுளையோ கோவிலையோ அவர் நம்பவில்லை ஆனால் கொஞ்சநாள் ஈரோட்டு கோவிலில் நிர்வாகியாக இருந்தார் நீர்தான் கடவுள் நம்பிக்கையற்றவராயிற்றே, எதற்காக இங்கே தர்மகர்த்தா என இருக்கின்றீர் என்ற கேள்வி எழும்பியது , ராம்சாமி இப்படி சொன்னார் “நம்ம நம்பிக்கை முக்கியமில்லீங்க. நம்மை நம்பி கொடுத்த வேலைய […]

எந்நாளும் நல்ல பத்திரிகையாளனுக்கு வழிகாட்டி அவர்

நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை எம்.ஆர் ராதா தொடங்கி வைத்தாலும், பின்னாளில் அதனை உச்சமாக்கினவர் சோ ராமசாமி அவர்தான் தொடங்கி வைத்தார் கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்றுவேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர் பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து சோ வெற்றிபெற்று […]